» Sangeetha .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Sangeetha walks on her own path

Posted on Tuesday 10 November 2009

க.மு., க.பி., நடிப்புக்கு இல்​லை : சங்கீதா ‘நச்’ பதில்

திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு சங்கீதாவிற்கு கி​டைத்திருக்கிறது.
தமிழில் நான் அவன் இல்லை - 2, குட்டிப்பிசாசு, ​தெலுங்கில் ஸ்ரீமதி கல்யாணம் என்று பிஸியாக இருக்கும் சங்கீதா, தன்னு​டைய காதல் கணவ​ரை கதாநாயகன் ஆக்க முயற்சிப்பதாகத் தகவல் ​வெளியாகியுள்ளது. இ​வை ​பற்றி​யெல்லாம் சங்கீதா தந்த விளக்கம் தான் கீ​​ழே.

“என்​னைப் பொருத்தவ​ரை சினிமாவில் நடிப்பதற்கு கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்கு பின் என எந்த ​வேறுபாடும் ​தே​வையில்​லை. அப்​போது இருந்த சங்கீதா தான் இப்​போதும். அப்​​போது மறுத்த கதாபாத்திரங்க​ளை இப்​போதும் மறுக்கி​றேன். நடிப்பில் என்னு​டைய ​கொள்​கை​யை திருமணத்திற்குப் பிறகு மாற்றிக்​கொள்ள ​வேண்டிய அவசியம் இல்​லை.

நான் அவனில்​லை - 2 இல் நான் கவர்ச்சியாக நடிக்கவில்​லை. நான் எந்தப் படத்தில் கவர்ச்சியாக நடித்​தேன்? உயிர், தனம் ​போன்ற படங்களால் ஏற்பட்ட இ​மேஜ் அது. அது, அந்த கதாபாத்திரங்களின் தன்​​மை. கமர்ஷியலுக்காக​வோ, க​தைக்கு ​தே​வையில்லாம​லோ நான் எப்போதும் கவர்ச்சியாக நடித்ததில்​லை.
நான் அவன் இல்​லை - 2 படத்தில கூட, கதாநாயகனால் ஏமாற்றப்படும் ​பெண்களில் ஒருவராக நடிக்கவில்​லை. அந்தப்​ பெண்கள் ஏன் ஏமாற்றப்பட்டார்கள் என்ப​தைக் கூறும் ​பெண்ணாக, வித்தியாசமான கதாபாத்திரத்தில்தான் நடிக்கி​றேன்.

தனம் ​போன்ற க​தைக​ளை நான் தவிர்க்கவில்​லை என்ப​தை விட அது ​போன்ற க​தை வரவில்​லை என்பதே உண்​மை. தனம் ​போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயார். துணிச்சலான க​தை​யோடு வந்தால் நானும் துணிச்சலாக நடிப்​பேன்.

என் கணவர் ஒரு சிறந்த பாடகர். அவர் நடிக்க நான் ஏன் தயாரிக்க ​வேண்டும்? நான் நடி​கை மட்டு​மே தயாரிப்பாளர் இல்​லை. அவரவர் ​வே​லை​யைத்தான் அவரவர் ​செய்ய ​வேண்டும். பாடகர் பணி​யை என் கணவர் நன்றாக ​செய்து வருகிறார். அவர் நல்ல நடிகராக ஆவது அவரு​டைய ​கையில் இருக்கிறது. அதிலும் அவர் ​வெற்றி ​பெறுவார் என்ற நம்பிக்​கை ம​​​னைவி என்கிற மு​றையில் எனக்கு இருக்கிறது” என்கிறார் சங்கீதா.

admin @ 4:16 am
Filed under: kollywood
Naan Avan Illai 2 Movie Gallery

Posted on Friday 17 April 2009

naan-avan-illai.jpg

Artist:  Jeeva,  , , Hema Malini, Shweta Menon and Rachana Maurya.
Director:  Selvah
Producer:  Nemichand Jhabak

naan-avan-illai-21.jpg

naan-avan-illai-2-film.jpg

naan-avan-illai-2-movie.jpg

naan-avan-illai-2-movie-gallery.jpg

naan-avan-illai-2-tamil-film.jpg

naan-avan-illai-2-tamil-move.jpg

admin @ 6:19 am
Filed under: movie
Saidapet double-murder mastermind Sangeetha arrested

Posted on Tuesday 6 January 2009

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொலைகாரி ஆனேன்:
இரட்டைக் கொலை சங்கீதா பரபரப்பு வாக்குமூலம்

commissione-radhakrishnanshows-sangeetha-photo.jpg

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வயதான தம்பதியின் கொடூரக் கொலைக்கு காரண கர்த்தாவான சங்கீதா செவ்வாய்க்கிழ​மை காவல்துறையினரிடம் சிக்கினார். இரட்டைக் கொலைக்குத் திட்டமிட்டது குறித்து சங்கீதா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் உள்ள டெம்பிள் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த அனந்தகிருஷ்ணன் (59), அவரது மனைவி யமுனா (50) ஆகிய 2 பேரையும் மர்ம கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறி்த்து விசாரணை நடத்த 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

அனந்த கிருஷ்ணனின் செல்போனுக்கு, கடைசியாக சங்கீதா என்ற பெயரில் போன் வந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், சங்கீதாவின் நான்காவது கணவர் தினேஷ், அவரது நண்பர்கள் புகழேந்தி, செந்தில்நாதன் ஆகியோர் சிக்கினர்.

அனந்தகிருஷ்ணனின் சொத்துக்களைப் பறிக்கும் நோக்குடன் சங்கீதா சொல்லித்தான், தினேஷும், அவரது நண்பர்களும் கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சங்கீதா தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந் நிலையில் அரக்கோணத்தில் வைத்து காவல்துறையினரிடம் சங்கீதா சிக்கினார்.

சங்கீதா காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலம்:

”எனக்கு வேலூர் மாவட்டம் சோளிங்கர் பூர்வீகம். அப்பா அழகர் தேசிகனுக்கு கண் பார்வை சரியாகத் தெரியாது. 2 அண்ணன்கள், மூத்த அண்ணன் ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரது மனைவியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இளைய அண்ணன் திட்டாவுக்கு கை கால் செயல் இழந்து உடல் நலம் பாதிக்கப்பட்டார். இவர்கள் கோவிலில் பூஜை செய்து என்னை வளர்த்தனர். அர்ச்சனை தட்டில் விழும் எட்டனா, ஒத்த ரூபாய்தான் எங்களது வயிற்று பசியை போக்கியது.

15 வயதிலேயே கண்ணன் என்ற 35 வயதுகாரருக்கு என்னைத் திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு இல்லறத்தில் அவ்வளவாக நாட்டமில்லை. இதனால் அவருடன் நரக வாழ்க்கை வாழ்ந்தேன். 8 ஆண்டுகளாக தவித்தேன். குழந்தை பாக்கியமும் இல்லை.

இந் நிலையில் இரயில்வே ஊழியர் ஜெகதீசன் (40) என்பவரை இரயில் பயணத்தில் சந்தித்தேன். அவர் மனைவியை பிரிந்து வாழ்வதாகத் தெரிவித்தார்.

எனக்கு கண்ணனுடன் வாழ்வதை விட இவருடன் வாழ்வதே மேல் என தோன்றியது. இதையடுத்து கணவருக்குத் தெரியாமல் ஜெகதீசனுடன் ஓடி வந்து விட்டேன்.

அரக்கோணத்தில் குடித்தனம் நடத்தினேன். ஜெகதீசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அதனால் என்னுடன் சேர்ந்து இருப்பதைவிட மது பாட்டிலுடன் மயங்கி கிடக்கும் நேரம் தான் அதிகம். இதனால் எனக்கு சலிப்பு ஏற்பட்டது.

இந் நிலையில், எங்கள் வீட்டுக்கு 3 வீடு தள்ளி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் ஒருவர் என்னுடன் பழகினார். இதை தவறாக நினைத்து ஜெகதீசன் ஆபாசமாகத் திட்டினார். நான் கர்ப்பமானேன். இதனால் அடிக்கடி சந்தேகப்பட்டு அடித்து உதைக்க ஆரம்பித்தார்.

இதனால் அவருடன் வாழ்வது வீண் என முடிவு செய்தேன். இதனால் எனது கர்ப்பத்தை கலைத்து விட்டேன். ஒரு நாள் ஜெகதீசனுக்கு தெரியாமல் ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காஞ்சீபுரம் வந்து வீடு எடுத்து தங்கினேன். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

அதே நிறுவனத்தில் வேலை பார்த்த உமாசங்கர் என்ற வாலிபர் என்னை காதலித்தார். நாங்கள் இருவரும், அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வந்தோம். இதனால் உமாசங்கர் என் மீது பைத்தியம் பிடித்தவர் போல் ஆகிவிட்டார்.

திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதால் வேறு வழியில்லாமல் 3வதாக உமா சங்கரை திருமணம் செய்ய வேண்டியதாகி விட்டது. சோளிங்கர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

அங்கு சாமி கும்பிட வந்த அனந்தகிருஷ்ணன், யமுனா தம்பதியினரிடம் தற்செயலாக ஆசீர்வாதம் வாங்கினோம். அவர்களிடம் எங்களுக்கு அப்பா, அம்மா இல்லை. இதனால் வயதில் பெரியவர்களான உங்களிடம் ஆசீர்வாதம் வாங்கினோம் என்றோம்.

இந்தப் பேச்சு, அவர்களை கவர்ந்தது. அவர்களும் எங்களுக்கு இதுவரை வாரிசு இல்லை. இதுபோன்ற பாக்கியம் கிடைக்காது என்று எண்ணினோம். ஆண்டவன் உங்கள் மூலம் எங்களது ஆசையை நிறைவேற்றி விட்டான் எனப் பெருமையாகக் கூறினர்.

அப்போது முதல் அனந்தகிருஷ்ணனுடன் நெருங்கி பழகினேன். உமாசங்கரும், நானும் அவரது வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டோம். நான் ஐயங்கார் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அனந்தகிருஷ்ணனும், அவரது மனைவியும் என்னிடம் நெருங்கி பழகினர்.

அனந்தகிருஷ்ணன் பேச்சில் இருந்து அவருக்கு இசை மற்றும் யோகாவில் ஆர்வம் அதிகம் என தெரிந்து கொண்டேன். அவர் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்த அனைவரும் வெறுத்தாலும், நான் அவரது இசையை ரசிப்பது போல் காட்டிக்கொண்டேன். இதனால் அவரும் என் மீது அளவு கடந்த பாசம் வைத்தார். அடிக்கடி வந்து செல்வேன்.

அப்போது அவரது வீட்டில் ஏராளமான நகை, பணம் இருப்பதை தெரிந்து கொண்டேன். எப்படியாவது அதை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். அதற்கு சரியான நேரம் பார்த்து காத்திருந்தேன்.

ஒருநாள் இவரது இசை இம்சை தாங்க முடியாமல் குடியிருப்பில் உள்ளவர் ஒருவர் தகராறு செய்தார். காவல்நிலையம் வரை போய் அவரை எச்சரித்து அனுப்பினர்.

இதற்கிடையே நான் மற்ற ஆண் நண்பர்களுடன் பேசுவதை உமாசங்கர், சந்தேகத்துடன் பார்த்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் அவரை பிரிந்தேன்.

எனது நண்பர் ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருடன் அவரது வீட்டில் தங்கினேன். அவர் மூலமாக தினேஷ் அறிமுகமானார். அவரும் வழக்கம் போல் என்னுடைய அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினார். 6 மாதத்துக்கு முன்பு தினேசை பதிவு திருமணம் செய்து கொண்டேன்.

சிறுவயதில் இருந்தே வறுமையுடனும், ஏமாற்றத்துடனும் போராடி வாழ்க்கையை ஓட்டிய எனக்கு சொகுசு வாழ்க்கை வாழ ஆசை ஏற்பட்டது. எப்படியாவது அனந்தகிருஷ்ணன், யமுனா தம்பதிகளின் லட்சக்கணக்கான நகை, பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அதற்கு தினேசை பகடைக்காய் ஆக்க முடிவு செய்தேன்.

அதன்படி வாரிசு இல்லாத தம்பதியரை தினேஷ் மூலம் கொலை செய்ய திட்டம் வகுத்தேன். நான் கூறியபடியே தினேஷ் அவரது கூட்டாளிகள் புகழேந்தி, செந்தில்நாதன் ஆகியோருடன் அனந்தகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று இசை கற்பதற்காக வந்திருக்கிறோம் எனக்கூறி வீட்டிற்குள் நுழைந்தனர்.

தம்பதிகள் 2 பேரையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் எடுக்காமல் 20 பவுன் நகையையும், ரூ. 25,000 மட்டுமே எடுத்து வந்து விட்டனர். அங்கு திருடிய செல்போன்கள், எங்களை காட்டிக்கொடுத்து விட்டது.

சொகுசு வாழ்க்கை ஆசை என்னை கொலைகாரி ஆக்கி விட்டது” என்று கூறியுள்ளார் சங்கீதா.

சங்கீதா செவ்வாய்க்கிழ​மை மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

admin @ 2:57 am
Filed under: news
Setback for Sangeetha

Posted on Friday 3 October 2008

sangeetha.jpg

உயிர், தனம் திரைப்படங்கள் மூலம் தனக்குக் கிடைத்த நெகட்டிவ் இமேஜை சோப்பு போட்டுக் கழுவ நினைக்கிறாராம் சங்கீதா. பாடகர் கிரீஷ் உடன் ரகசியத் திருமணம் என்று வந்த செய்தியும் அவரை அப்செட் ஆக்கியிருக்கிறது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவங்க நல்லா இருக்கும்போதே எனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்க விரும்புகிறார்கள். அந்தப் பேச்சு ரகசியத் திருமணம் அது, இது என்று கிளம்பி விட்டதாக புலம்புகிறாராம் சங்கீதா. சரி சரி சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க சங்கீ.

admin @ 5:10 am
Filed under: kollywood
Dhanam Film Review

Posted on Tuesday 16 September 2008

தனம்

dhanam.jpg

தனம் திரைப்படம் குறித்து வந்த செய்திகளை நம்பி திரையரங்கத்திற்குள் நுழைந்தீர்களானால் நி்ச்சயம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

தனம் ஏதோ கனமான கதையை தாங்கி வருகிறது என்று பார்த்தால் இலவம் பஞ்சு கணக்காக இருக்கிறது நிஜத்தில்.

பாலியல் தொழிலாளியான சங்கீதாவை (தனம்) சுகம் காணவரும் பிரேம் விரும்புகிறார். திருமணம் செய்யவும் முடிவு செய்கிறார். சங்கீதா முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக் கொள்கிறார். ஆனால் பிரேம் வீட்டில் எதிர்ப்பு வலுக்கிறது.

அக்குடும்ப ஆஸ்தான ஜோதிடர் கோட்டா சீனிவாச ராவ், ‘தாசி மருமகளாக வந்தால் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்’ என்று கூறுவதை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

கோட்டா சீனிவாசராவுக்கு சங்கீதா மீது பல கண். அவரை அடையும் முயற்சியில் தோல்வியடையும் அவர், ‘சங்கீதாவுக்குப் பிறக்கும் குழந்தையால் குடும்பத்துக்கு ஆபத்து’ என்று அவிழ்த்துவிடுகிறார்.

ஆருடத்தை அமோகமாக ஆதரிக்கும் பிரேம் குடும்பம், அந்தக் குழந்தையை எப்படியாவது ஒழிக்க முற்படுகிறது. கடைசியில் கள்ளிப்பால் (இன்னுமா?) கொடுத்து குழந்தையை காலி செய்கிறார்கள்.

வெகுண்டெழும் சங்கீதா செய்யும் அதகளம்தான் திரைப்படத்தின் கடைசிக் கதைக்களம்.

ஆச்சாரமான குடும்பத்தில், பாலியல் தொழிலாளி மருமகளாகும் கதை என்ற விதத்தில் ஆரம்பத்தில் அசத்தினாலும் இயக்குநர் தடம் மாறி தடுமாறுகிறார்.

ஐந்நூறு ரூபாய் இருக்கா என்று பார்ப்பவர்களை எல்லாம் கேட்டு சுண்டி இழுக்கும் சங்கீதா தனம் என்கிற கதாபாத்திரத்தின் கனம் தாங்காமல் சில நேரம் தவிக்கிறார்.

பிரேம் அப்பாவியாக இருந்தாலும், சங்கீதாவை அடைவதில் மட்டும் ரொம்பவே அடப்பாவியாக அலைகிறார்.

பிரேமின் மாமா கருணாஸ், அண்ணன் சசி என அவரது குடும்பமே சங்கீதாவின் மீது காமப் பார்வை வீசுவது காணச் சகிக்கவில்லை.

சங்கீதாவை அடைய முடியாததுக்கு கோட்டா சீனிவாச ராவ் சொல்லும் காரணம் சரியான கொட்டாவி.

கிரீஷ் கர்னாட், கோட்டா சீனிவாசராவ், ஆசிஷ் வித்யார்த்தி, சங்கீதா, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர் என்று பெரிய கைகளை தனத்திற்காக இழுத்துப் போட்டதெல்லாம் சரிதான். அவர்களுடைய நடிப்புக்கு சரியான தீனி போடாதது சரியில்லை.

எல்லோரையும் போல இசைஞானி இளையராஜாவும் ஏமாற்றியதுதான் கஷ்டமாக இருக்கிறது.

தனம் கனமில்லை,

-கி.சே.

Artist: , , , , , , , , , , , , ,
Direction: G
Production:
Music:

admin @ 3:59 am
Filed under: Review
Sangeetha Actress

Posted on Thursday 26 June 2008

admin @ 9:24 am
Filed under: Uncategorized
Actress Sangeetha Gallery

Posted on Thursday 26 June 2008

admin @ 3:43 am
Filed under: actress