» Ravi Tamilvanan .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Ravi Tamilvanan’s Interview on Kalaingar TV

Posted on Thursday 21 January 2010

ravi-tamilvanan.jpg
‘சந்தித்த வேளை’யில் சிந்திக்க வைத்த ரவி தமிழ்வாணன்!

கலைஞர் தொலைக்காட்சியில் காலையில் மலரும் ‘சந்தித்த வேளை’ நிகழ்ச்சியில் கடந்த வாரம், மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாகி ரவி தமிழ்வாணனின் பேட்டி இடம் பெற்றது. சந்தித்த வேளை நிகழ்ச்சியை அவர் சிந்தித்த வேளையாக மாற்றினார். தமிழகத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தமிழை அதிகம் நேசிக்கிறார்கள்; வாசிக்கிறார்கள்; சுவாசிக்கிறார்கள் என்ற அவர், தமிழில் அதிகம் புத்தகம் வெளியிட்டாலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக தமிழ் கற்கலாம் என்கிற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கிட்டதட்ட 70 நாடுகளுக்கு தான் பயணித்திருப்பதாகவும், அங்கு  நடைபெறும் கண்காட்சியில் தங்கள் நிறுவன புத்தகங்கள்  இடம் பெறுவதாகவும் தகவலைப் பரிமாறிக்கொண்டார்.

இசைக்கருவிகளை வாசிப்பது குறித்த புத்தகங்கள் பற்றி பேசிய பேட்டியாளர் ரமேஷ்பிரபா, ‘இது ஏதோ கரஸ்பாண்டன்ஸில் கார் ஓட்ட கற்பது போலத் தெரிகிறதே’ என்றார். இதற்கு பதிலளித்த ரவி தமிழ்வாணன், நீச்சல் பழகுவது எப்படி என்ற புத்தகத்தை வைத்துத்தான் தானே நீச்சல் கற்றுக்  கொண்டதாக முத்தாய்ப்பாகக் கூறினார். இது போன்ற புத்தகங்கள் ஒரு விஷயம் குறித்த ஆரம்ப அறிவைத் தரும் என்றவர், குரு சிஷ்யன் இடையே ஒரு புரிதலையும் இவை ஏற்படுத்தும் என்றார். மேலும் அவர் படிப்பதும் பயிற்சிப்பதும் தான் தன்னுடைய வேலை என்று குறிப்பிட்டார்.

‘சந்தித்த வேளை’யில் நம்மை சிந்திக்க வைத்த ரவி தமிழ்வாணனின் பேட்டியைக் காணுங்கள்..

சந்தித்த வேளை விடியோ:
’s Interview on Kalaingar TV part 1

’s Interview on Kalaingar TV part 2

’s Interview on Kalaingar TV part 3

’s Interview on Kalaingar TV part 4


’s Interview on Kalaingar TV part 5

admin @ 3:09 am
Filed under: speech and video
Manimekalai Prasuram releases 32 books at a time

Posted on Monday 12 January 2009

சென்னை புத்தகக் காட்சி: மணிமேகலைப் பிரசுரத்தின் 32 நூல்கள் வெளியீடு: பிரமாண்ட விழா

                          manimekalai-invitation.jpg

                                                மணிமேகலைப் பிரசுரம் அழைப்பு

சென்னை: சென்னை செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றுவரும் 32ஆவது சென்னை புத்தகக் காட்சியில் ஸ்டால் அமைத்துள்ள மணிமேகலைப் பிரசுரம் வழக்கம்போல இவ்வாண்டும் பிரமாண்டமான நூல் வெளியீட்டு விழாவை நடத்துகிறது. வரும் 18.01.2009 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு நடக்கும் இவ்விழாவில் 32 நூல்கள் வெளியிடப்படுகின்றன.

இவ்விழாவிற்கு லேனா தமிழ்வாணன் வரவேற்புரை ஆற்ற, ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனத் தலைவர் ஹாஜி நூர்முகம்மது முன்னிலை வகிக்க, நடிகர் சேரன், கவிஞர் தமிழச்சி பாண்டியன், வாணியம்பாடி அக்பர் கவுஸர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

வெளியிடப்படும் 32 நூல்களின் முதல் பிரதியை ஹாஜி ரபியுதீன், எஸ்.பி.சிங்காரம், ஸ்ரீதர் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். மணிமேகலைப் பிரசுரத்தின் மேலாளர் ஆர்.மோகன் ராஜ் நன்றியுரை வழங்குகிறார்.

இந்த பிரமாண்டமான நூல் வெளியீட்டு விழாவிற்கான ஒருங்கிணைப்பை மணிமேகலைப் பிரசுத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் செய்துள்ளார்.

admin @ 1:02 am
Filed under: news