Posted on Saturday 20 June 2009
‘பஞ்ச்’ பாலு
மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது; இதை மன்னிக்க முடியாது. இதை நான் பாராளுமன்றத்தில் பேசினேன். நான் தொடர்ந்து பேசுவேன். விருப்பமிருந்தால் கூட்டணியில் வைத்துக்கொள்ளுங்கள்.
-தொல்.திருமாவளவன்.
இதையே நீங்க தேர்தலுக்கு முன்பாகச் சொல்லியிருந்தால் பாராட்டியிருக்கலாம். இப்போ சாதா அரசியல்வாதியின் பேச்சாக இருப்பதால் பாராட்ட முடியவில்லை.
சட்டசபைக் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படவேமண்டும். அடிக்கடி வீண் வேலையாகவும், வெற்று விளம்பரத்திற்காகவும் வெளிநடப்பு, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பக்கூடாது.
-அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா
அப்போ இதுவரைக்கும் நடந்துகொண்ட முறையெல்லாம் தப்புதான்னு ஒப்புக்கறீங்களா மேடம். ஆனாலும் உங்கள் கட்சி உறுபபினர்கள் பழக்கதோஷத்தை கைவிட முடியாம தவிக்கறாங்கப் போலிருக்கே!
புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்பட்ட பொருட்களை திருப்பி அனுப்பிய இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும், முதல்வர் கருணாநிதி யின் அலட்சியப் போக்கிற்கும் அதிக வேறுபாடில்லை.
-பழ நெடுமாறன
கண்ணை மூடிக்கொண்டு கண்டதையும் ஆதரிக்கும் உங்களுக்கும், தமிழனைக் கண்டாலே வெறுக்கும் ராஜபக்சேவின் நடவடிக்கைக்கும் அதிக வேறுபாடு தெரியவில்லையே. ஐரோப்பிய தமிழர்களால் லண்டனில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண கப்பலின் பெயர் வணங்காமண். வணங்காமண் என்ற வார்த்தையைக் கேட்டதும், இலங்கை அதிபருக்கு வெறுப்பேறாதா? அதுமட்டுமல்ல அந்த கப்பலின் முதுகுகளில் தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் வார்த்தைகளும், ஈழக்கொடியும் இருந்ததாகக் கேள்வி. இதையெல்லாம் எதிரிகள் சும்மா வேடிக்கையா பார்ப்பார்கள்? உதவி செய்பவர்கள் முதலில் அந்த அரசிடம் அனுமதி பெற்றார்களா என்பது கூட தெரியவில்லை.
ஒவ்வொரு வீட்டிலும் என்னை மகனாகவும், அண்ணன் தம்பியாகவும் நினைக்கும் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்பட்டேன் அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டது.
-நடிகர் விஜய்
அதையெல்லாம் நம்பி கைக்காசை விட்டுறப் போறீங்கண்ணா!
Punch Balu’s Old punches

































‘பஞ்ச்’ பாலு
‘பஞ்ச்’ பாலு
‘பஞ்ச்’ பாலு