
வட்டாரம் திரைப்பட நாயகி கீரத் பாட்டீல் வசிப்பது டெல்லியில் என்றாலும் பிறந்தது ஆப்பிரிக்காவில். பி.பி.ஏ. படித்துள்ள இந்தக் கிளி வட்டாரம் திரைப்படத்திற்குப் பின் தமிழில் காணவில்லை என்றால் காரணம் இருக்கிறது. கீரத், கன்னட தெலுங்கு திரையுலகில் பிசியாம். அங்கம் தெரியாமல் நடிப்பதில்தான் இருக்கிறது கிளாமர் என்கிறது இந்தத் தங்கம். புத்தக வாசிப்பிலும், சைக்கிள் ஓட்டுவதிலும், ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வமிக்க கீரத்திடம் காதல் பற்றி கேட்டால், ”இன்னும் விழவில்லையே… விழுந்ததும் கருத்து சொல்கிறேன்” என்கிறார்.


































