Posted on Friday 5 December 2008
![]() |
||||||||
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் | ||||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
|
||||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
||||||||
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் | ||||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
|
||||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
இலங்கையில் போர்நிறுத்தம் நிச்சயம்!:
உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு

சென்னை: தமிழர்களின் தொடர்போராட்டங்களின் விளைவாக இலங்கையில் நிச்சயம் போர்நிறுத்தம் வரும் என்று நடிகர் விஜய் பேசினார்.
இலங்கைத் தமிழர்களுக்காக தனது தாய் ஷோபனா, தந்தை சந்திரசேகரன், மனைவி சங்கீதா, இயக்குநர் பேரரசு மற்றும் தனது ரசிகர்களுடன் சென்னை அரசினர் விருந்தினர் இல்லம் எதிரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் நடிகர் விஜய்.
அப்போது அவர் பேசுகையில்,
”இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை. சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் 37 நகரங்களில் இந்த உண்ணாவிரதம் நடந்துவருகிறது. அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
இலங்கையில் நடக்கும் பிரச்னைகளை சிறிய வயதில் இருந்தே கேள்விப்பட்டு வருகிறோம்.
பள்ளி,கல்லூரிகளில் படிக்கையில் பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
பிரச்னை இல்லாத நாடே இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்னை, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரச்னை, அமெரிக்காவுக்கும் வியத்நாமுக்கும் பிரச்னை. அந்தப் பிரச்னைகள் எல்லாம் யுத்தம் நடந்து முடிவுக்கு வந்தது.
ஆனால் 25 ஆண்டுகளாக நம் தமிழ் மக்கள் அகதிகளாக ஓடிவரும் பிரச்னை இலங்கையில் மட்டும் தான் உள்ளது. மேலே விமானம் பறந்தால் நாம் டாட்டா காட்டுகிறோம். இலங்கையிலோ மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறார்கள். நமது வீடுகளில் கல் விழுந்தால் யார் எறிந்தார்கள் என்று விசாரிக்கிறோம். இலங்கையில் குண்டு விழுந்தமாதிரி அலறுகிறார்கள். நாம் இலங்கைக்குச் சென்று சண்டை போடமுடியாது . இப்படித்தான் நமது உணர்வுகளைக் காட்டமுடியும்.
இலங்கையில் உள்ளவர்கள் மூன்று வேளை சாப்பிட்டுவிட்டு தூங்கவேண்டும் என்பதற்காகவே நாம் சாப்பிடாமல் இருக்கிறோம். திரைப்பட நடிகர்கள் போராட்டம், உண்ணாவிரதம், பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம், டி.வி. நடிகர்கள் உண்ணாவிரதம், அரசியல் கட்சிகள் போராட்டம் என எல்லா தமிழர்களும் போராடி வருகிறோம். நிச்சயம் அங்கே போர்நிறுத்தம் வரும். தமிழர்களைக் கொல்வது நிறுத்தப்படும்” என்றார்.
நடிகர் விஜயின் தாய் ஷோபா பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அதனை அங்கிருந்த சிறுவனுக்குக் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் விஜய்.

விஜய் நடிக்கும் வில்லு, அஜீத் நடிக்கும் ஏகன் இவ்விரண்டு படங்களுமே முழுக்க முழுக்க ரிலீசுக்கு தயார்தான். ஆனால் ஏகன் தீபாவளி அன்று ரிலீசாகிறது. வில்லு பொங்கலுக்குத்தானாம். ஏனாம்? இந்த இரண்டு திரைப்படங்களையுமே தயாரித்திருப்பது ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம். அதனால் சொந்த பேனரிலேயே போட்டி வேண்டாமே எனக் கருதி வில்லு ரிலீசை தள்ளிப் போட்டுவிட்டார்களாம்.
Link for Aegan Gallery
வேட்டைக்காரன்: அசின் சம்பளம் ரூ.2 கோடி?

விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடிக்க அசினுக்கு ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏவி.எம். பேனரில் விஜய் நடிக்கும் திரைப்படம் வேட்டைக்காரன். விஜய்யுடன் அசின் ஜோடி போட்ட சிவகாசி, போக்கிரி திரைப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன. இதனால் அசினுடன் மீண்டும் நடிக்க விஜய் விரும்பியுள்ளார். இதையடுத்து, வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடிக்க அசினிடம் பேசப்பட்டது. தற்போது அசின் இந்தியில் பிசியாக உள்ளதால், அவருக்கு சம்பளமாக ரூ.2 கோடி பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்குமுன் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டதுதான் தமிழ் நடிகைகளுக்கு தரப்பட்ட அதிக சம்பளமாகும். இப்போது அதை அசின் விஞ்சிவிட்டார்.
இதுகுறித்து அசின் கருத்து கூறுகையில், ”விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். லண்டன் ட்ரீம்ஸ் திரைப்படத்திற்காக லண்டனில் இருந்த என்னிடம், தயாரிப்பாளர் தரப்பில் பேசினார்கள். மும்பை வந்ததும் வேட்டைக்காரன் கதையைக் கேட்பேன். பிப்ரவரியில் இன்னொரு இந்திப் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். இடையில நேரமிருந்தால் விஜய்யுடன் வேட்டைக்காரனில் நடிப்பேன்” என்றவர், சம்பளம் குறித்து எதுவும் கூறவில்லை.
தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு நடிகர் மனோபாலா கைது!
விஜய் நடிக்கும் வில்லு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் மனோபாலா, தீவிரவாதி எனக் கருதபட்டு கைது செய்யப்பட்டார் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
விஜய் நடிக்கும் வில்லு திரைப்படத்தில் வடிவேலு இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளில் அவருடன் நடிகர் மனோபாலாவும் நடிக்கிறார்.
வில்லு கதைப்படி வடிவேலு தனது தம்பியைத் தேடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு வருகிறார். அஙகே அவரை தீவிரவாதியான மனோபாலா கடத்தி விடுகிறார். காவல்துறையினரிடம் இருந்து தப்புவதற்காக மனோபாலா, அப்பாவியான வடிவேலுவை மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்தி செல்வது போலவும், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களில், கார்களில் துரத்துவது போலவும் நகைச்சுவையாகக் காட்சியை ஒரு அமைத்திருந்தார்கள்.
இந்தக் காட்சியை பாங்காக்கில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள பட்டயா என்ற தீவில் படமாக்கினார்கள். மனோபாலாவுடன் டூப் நடிகர் ஒருவரும் அமர்ந்திருந்தார்.
மனோபாலா சென்ற மோட்டார் சைக்கிளை சினிமா காவல்துறை துப்பாக்கியால் சுட்டபடி, மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் துரத்தி செல்வதுபோல் காட்சி படமாக்கப்பட்டபோது, இதைக் கவனித்த பாங்காக் காவல்துறை உண்மை என்று நம்பிவிட்டது. உடனே நிஜ காவல்துறை மனோபாலாவை துரத்த ஆரம்பித்தது. அங்கிருந்து 8ஆவது கி.மீட்டரில் மனோபாலாவவை மடக்கிய பாங்காக் காவல்துறையினர் கேள்வி மேல் கேள்வி கேட்க விழித்திருக்கிறார் மனோபாலா.
தான் ஒரு நடிகர் என்றும், இது படப்பிடிப்பு என்றும அவர் ஆங்கிலத்தில் விளக்கினாலும் ஆங்கிலம் புரியாத பாங்காக் காவல்துறையினர், ‘உன் விளக்கத்தைப் பிறகு சொல்லலாம். இப்போது கைது பண்றோம்’ என்று சொல்லிவிட்டு, மனோபாலாவை கைதும் செய்துவிட்டனர்.
மனோபாலா தனது விக்கை கழற்றிபோட்டு, தான் ஒரு நடிகன் என்பதை சைகையால் விளக்கப் பார்த்தார். அதையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்த காவல்துறையினர் தங்கள் விசாரணைத் துருவலை அதிகரித்துள்ளனர்.
மனோபாலா கைது செய்யப்பட்ட விவரம் அறிந்ததும் இயக்குநர் பிரபுதேவா, சயாமி மொழி தெரிந்தவரை அழைத்து வந்தார். சயாமி மொழியில் விளக்கம் கொடுக்கப்பட்டதும் மனோபாலாவை விடுவித்தனர் பாங்காக் காவல் துறையினர்.
என்றாலும் அவரை மேக்கப்புடனும், மேக்கப் இல்லாமலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுதான் விட்டார்கள். கூடவே ஒரு விளக்கக் கடிதமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.
இதனால் வில்லு படப்பிடிப்பு 3 மணிநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.
மனோபாலா கைது செய்யப்பட்ட விவகாரம் அந்நாட்டு தொலைக்காட்சிகள் சிலவற்றில் தீவிரவாதி கைது என்று ஒளிபரப்பப்பட்டது. இதனால் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை புறப்பட்ட மனோபாலாவுக்கு பாங்காங் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினர்.

அப்பாவுக்காக பந்தயம் திரைப்படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்துக் கொடுத்த விஜய், தனக்காக எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று கட்டளை இட்டிருந்தாராம். ஆனால் அவர் உருவத்தை அச்சிட்டு 10 ஆயிரம் போஸ்டர்கள் தயாராகிவிட்டதாம். என்ன, குசேலன் கதி ஏற்படனுமா? என்று கேட்டு, அந்தப் போஸ்டர்களை கிழித்துப்போடச் சொல்லிவிட்டாராம் விஜய். நல்ல பாலிசிதான்.
பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் விஜய்

பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் விஜய் நடிக்கிறார்.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
”தமிழில் வில்லு, இயக்குநர் ஜான் இயக்கும் திரைப்படம், அபியும் நானும், ராடன் நிறுவனம் தயாரிக்கும் படம், இந்தியில் சல்மான்கானுடன் ஒரு படம் என நடித்துக் கொண்டிருக்கிறேன்.
அபியும் நானும் பாடல் வெளியிட்டு விழா வரும் 27ஆம் தேதி நடக்கிறது. முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார். கனிமொழி பெற்றுக்கொள்கிறார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்துள்ள காஞ்சீவரம் படம் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அதில் பங்கேற்க நான் செல்கிறேன். நியூஜெர்சியில் நடக்கும் போட்டியிலும் கலந்துகொள்கிறது. கொரியா படவிழாவிலும் திரையிடப்படுகிறது.
நடிப்புக்கு தீனி போட்டால் நன்றாக நடிக்க முடியும். நான் ஒரு கல்தான். இயக்குநர்கள்தான் சிற்பிகள். அவர்கள் எப்படி செதுக்குகிறார்களோ அப்படி ஆகிறேன்.
தோஸ்த் திரைப்படத்திற்குப் பிறகு எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் பந்தயம் திரைப்படத்தில் நடித்துள்ளேன். அபியும் நானும் வெளியிட்டப்பின் மயிலு வரும். இனிது இனிது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
டூயட் மூவிஸுக்காக விஜய் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறேன். அதுபற்றி விரைவில் அறிவிப்பேன்” என்றார்.

பந்தயம் திரைப்படத்தில் தான் நடித்துள்ள காட்சிகள் வெளியே வராமல் இருக்க படாத பாடு படுகிறார் விஜய். அவை வெளிவந்து எங்கே குசேலன் கதை அதற்கும் நேர்ந்துவிடுமோ என்ற பயம்தான் காரணமாம்.

விஜய் நடிக்கும் வில்லு திரைப் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிகிறது. உடனே ஏவி.எம். பேனருக்காக வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை இயக்குநர் தரணியின் உதவியாளர் இயக்குகிறார்.

விஜய்யின் வில்லு திரைப்படம் கிராமப்புற இளைஞர்களை கவரும் திரைப்படம் என்கிறது கோலிவுட். அதற்காக கரகாட்டம், ஒயிலாட்டம் என கிராமியக் லைஞர்களை வைத்து பழனி அருகே பாட்டொன்றை காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் பிரபுதேவா. அது முடிந்ததுதான் தாமதம். விஜய்யையும் நயன்தாராவையும் விமானத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டார் பிரபுதேவா. அங்கே போனால்தான் டூயட்டுகளுக்கு அர்த்தமே கிடைக்கும்.