Archive for the 'Uncategorized' Category
Friday, 3 Sep 2010
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி
வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்
அடிக்கடி காய்ச்சல், எப்போதும் சளித் தொந்தரவு, எந்த உணவையும் ருசித்துச் சாப்பிட்ட முடியாமை, நீரிழிவு, எப்போதும் உடலில் சூடு, ஜலதோஷம், சொறிசிரங்கு, பித்தக் கோளாறுகள் போன்ற குறைபாடுகளைக் களைவதில் முதலிடத்தில் இருக்கும் காய்கறிகளின் கோவைக்காயும் ஒன்றாகும்.
காரணம்?
இது கத்தரிக்காயை விடக் கசப்புச் சுவையுடையது. இந்தக் குணத்தால் மேற்கண்ட வியாதிகளைக் குணப்படுத்திவிடுகிறது.
கோவைக் காயைச் சமைத்தே சாப்பிடலாம். இல்லையெனில் நறுக்கப்பட்ட இக்காய்த் துண்டுகளை வெயிலில் காயப்போட்டு, அவற்றின் மீது உப்பு இட்டு மோரைத் தெளித்து மீண்டும் காயப்போட்டு வற்றல்களாக எடுத்துவைத்துக் கொண்டு பொரித்துச் சாப்பிடலாம்.
இந்தியாதான் இதன் தாயகம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வீடுகளில பயிர் செய்யப்படுகிறது.
கோவைக்காயின் வேர்கள், தண்டுகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றைத் தோல் வியாதிகள், நீரிழிவு, வாய்ப்புண், வயிற்றுப்புண், ‘பிரான்கைட்டிஸ்’ போன்ற நோய்களைக் குணப்படுத்த மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
கோவைக் கீரையும் கசக்கும். ஆனால், அது மருத்துவக் குணம் நிரம்பியது. மற்ற கீரைகளுடன் இதைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உணவுகள் விரைந்து ஜீரணமாகும்.
அடுத்த வேளை உணவு மிகவும் ருசியாய் இருக்கும். நாக்கு செத்துப்போனவர்கள் சர்க்கரையையும், உப்பையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வார்கள். கோவைக்காயையும், கோவைக் கீரையையும் இவர்கள் சாப்பிட்டால் இவர்கள் நாக்கு மீண்டும் சக்தியுடன் உயிர் பெற்றுவிடும்.
இக்கீரை கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். இக்கீரையின் கஷாயம் இருமல், நீரடைப்பு முதலியவற்றை உடனே குணமாக்கும். சீதபேதியைக் குணப்படுத்த இதன் இலைச்சாற்றை மிகவும் விருப்பத்துடன் அருந்த வேண்டும்.
வெட்டை நோயைக் குணப்படுத்த இக்காயின் இலைச் சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய், முதல் நாள் நீராகாரம் முதலியவற்றைச் சேர்த்து அருந்த வேண்டும். பத்து நாட்கள் இதுபோல் ஒரு வேளை அதிகாலையில் அருந்தி வந்தால் வெட்டை நோய் முற்றிலும் குணமாகும்.
இலைச் சாறுடன் நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சிய தைலத்தைப் படர்தாமரை மீது பூசி வந்தால் படர்தாமரை விரைவில் குணமாகும்.
கோவைக்கொடியின் வேரில் நீரில் கரையாத ஒரு வகை மரப்பிசின் இருக்கிறது. அதனால் இந்த வேரிலிருந்து எடுக்கப்படும் சாற்றை நீரிழிவு நோயாளிகளுக்குச் சித்த மருத்துவர்கள் கொடுக்கிறார்கள்.
கோவைப்பழம் மிகவும் ருசியானது. அதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து முதலியவை உள்ளன. சிந்தனையாளர்களும், ஊர் விட்டு ஊர் சென்று பணிபுரிபவர்களும் இதைப் பயன்படுத்தினால் மலச்சிக்கல் ஏற்படாது. மூளையும் உடலும் சுறுசுறுப்புடன் திகழும், நன்கு பசியெடுக்கும். நோஞ்சான் குழந்தைகள் நன்கு வளர இதில் உள்ள இரும்புச் சத்து பயன்படுகிறது.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நோய்க்கிருமிகளை அண்டவிடாதபடி செய்துவிடுவதால்தான் சித்த மருத்துவர்கள் கோவக்காய், கோவக்காய் இலை முதலியவற்றையும் பயன்படுத்திப் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தி, கைராசியான மருத்துவர் என்னும் பட்டத்தையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.
கோவக்காய், கீரை, பழம் முதலியவற்றை எல்லா வயதினரும் நன்கு உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழலாம்.
எந்த நோய்க்காரரும் விலக்கக்கூடாத காய் இது!
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!
2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்
2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!
2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்
2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு
2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்
2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!
2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்
2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!
2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்
2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி
2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்
2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்
2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்
2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2
2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு
2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3
2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2
2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1
2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்
2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது
2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?
2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
Tags: Uncategorized
Friday, 3 Sep 2010
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
வாணனை வண்ணனாக்கிய தூதர்!
வியட்நாமின் தலைநகரான ஹனாயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதரின் முதல் செயலர் சங்கர், எங்கே என்னை என் மாமா நடராஜன் சைகானில் இருந்த சொத்துக்களை மீட்பது பற்றி நீங்கள் பேசக்கூடாது என்று சொல்லிவிடுவாரோ என்று தயங்கிக் கொண்டிருக்க,
சங்கர் குனிந்த பார்வையை மாற்றி என்னைப் பார்த்தபடி பேசினார்.
“நீங்கள் உங்கள் மாமாவின் சொத்துக்களைப் பற்றிப் பேசுவதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை. நேற்று இதைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்லாததால் அவர் உங்கள் சந்திப்பை ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கருதிக் கொண்டிருக்கிறார். ஒன்று செய்யுங்கள, வியட்நாமில் இந்தியர்கள் இழந்த சொத்து என்று பொதுவாகப் பேசுவது நல்லது” என்றார்.
சங்கர் சொன்னதும் சரிதான். பொதுவாக அப்படிப் பேசும்போது இந்தியத் தூதர் ஏதும் பிடிப்புக் கொடுத்தால் மாமா விஷயத்தைப் பேசலாம் என்று முடிவிற்கு வந்தேன்.
நானும் மணியும் தூதரால் அழைக்கப்பட்டபோது மணி 3.05.
“நாங்கள் தாமதமாக வந்ததாகத் தூதர் நினைக்கப் போகிறார்” என்றேன் சங்கரிடம்.
“அதற்கு வாய்ப்பு இல்லை. சரியாக 2.58 மணிக்கு நீங்கள் வந்த தகவல் உள்ளே தெரிவிக்கப்பட்டுவிட்டது. அப்போது தூதர் ஒரு வேலையாக இருந்தார். ஐந்து நிமிடம் கழித்து அழைத்து வாருங்கள்” என அவர்தான் சொன்னார்.
“அப்படியானால் சரி.”
என், மணி ஷுக்கள் மரப்படிகளில் நடக்க எங்கள் வேகத்தைக் குறைத்து சத்தத்தை அடக்கினோம்.
சங்கர் எங்கள் முன்னே நடந்து அறைக்குள் அழைக்க, உள்ளே நுழைந்ததும் இருக்கையை விட்டு எழுந்து கைகூப்பி கை குலுக்கி வரவேற்றார் தூதர்.
“வாருங்கள்அஙகே உட்கார்ந்து பேசுவோம்” என்றார். நம் இருக்கையில் அமர்ந்து தூதர் தோரணியில் பேசாமல் நட்பு ரீதியால் அந்த மிகப் பெரிய அறையின் பக்கவாட்டில் இருந்த சோபாவுக்கு வந்தது அவரது எளிமையைச் சொன்னது.
என் ஊகம் ஒன்றைச் சொல்கிறேன். சரியா என்று உறுதி செய்யுங்கள். தூதருக்கான இருக்கையில் அமர்ந்து பேசினால் வந்த வேலையை முடித்து விட்டுப் புறப்படுங்கள் என்று மிரட்டுவதாக அர்த்தம்.
எதிரே உள்ள சோபாக்களுக்கு வந்துவிட்டால் நீங்கள் இருக்க விரும்பும் வரை இருந்துவிட்டுப் போங்கள் என்று அர்த்தம்.
அளவான சிரிப்பு மென்மையான ஒரு கைகுலுக்கல் கண்ணியமான தோற்றம். தூதரின் இந்த விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
இந்தியத் தூதர் லால் முன்னாவிடம் ஒரே ஒரு கஷ்டம் என்ன என்றால் அவர் பேசுகிற ஆங்கிலம் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவே இல்லை. மிகவும் மெதுவாகவே பேசுகிறார். பாதி கேட்கவில்லை. கால்வாசி புரியவில்லை. ஒருசில வார்த்தைகளை வைத்து அவர் இன்னது பற்றிப் பேசுகிறார் என்பது பிடிபடுகிறதே தவிர, ஒருவித ஊகம் அனுமானத்தோடு, நான் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் புரிந்தவரைக்கும் சொல்கிறேன். முன்னா இந்தப் பதவிக்கு மிகக் தகுதியானவர்தான்.
நான் முழுக்கத் தமிழ் பயின்று வளர்ந்தவன். ஆங்கிலம் எனக்கு இரண்டாவது பாடமே.
ஆனால் நான் தூதரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவது கண்டு சங்கரும் மணியும் சற்றே வியந்து போனார்கள்.
சங்கர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே தவிர, மணி, வெளியே வந்ததும் “என்ன லேனா சார்! ஒங்க கிட்டப் பேசும்போது ஆங்கிலம் படிக்காதவர் போலத் தூய தமிழ் பேசறீங்க! தூதரைப் பார்த்ததும் ஆங்கிலத்துல பொளந்து கட்டுறீங்க. ஆங்கில மீடியமா நீங்க?” என்றார்.
“இல்லையில்ல! நிறையப் பயணம் செய்யுறதால சற்று முயற்சி எடுத்துக் கொண்டேன். ஆங்கில இதழ்களைப் படிப்பேன். ஆங்கிலச் செய்திகளைக் கேட்பேன். எல்லாத்தையும் விட என் ஆங்கிலத்தை வளர்த்தது என் கிரிக்கெட் கமெண்ட்ரிக் கேட்கும் ஆர்வம்தான்.”
வாசகர்களே! தேவையில்லாமல் உங்களைத் தூதர் அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தவிட்டேன். வாருங்கள், வாருங்கள் நாம் தூதர் அறைக்குள் மறுபடி போவோம்.
லால் முன்னாவுக்குத் தெரியாத விஷயமே இல்லை போலிருக்கிறது. வியட்நாம் போராகாட்டும், இதன் விளைவாக இந்தியவர்களுக்கு ஏற்பட்ட கதியாகட்டும். இந்தியா விவகாரங்களாகட்டும் அனைத்தும் வருட வாரியாக அத்துப்படி.
மெல்ல நான் சேட்டையை ஆரம்பித்தேன்.
என்ன இருந்தாலும் இந்தியாவுடன் அதிக நட்புக் கொண்டிருந்த வியட்நாம் இங்கே இருந்த இந்தியர்களை இந்தியாவுக்கு விரட்டியது நியாயமில்லை. அதுவும் சொத்துக்களைப் பறித்துக்கொண்டு என்று குற்றச்சாட்டாகவே ஆரம்பித்தேன்.
என் இருக்கையில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தூதரின் பதில் வேறாக இருந்திருக்கமோ என்னவோ! நான் பத்திரிகைத் துறையிலிருந்து வருகிறேன் என்பதாலோ என்னவோ பொறுப்புடன் பேசினார்.
“அப்படியில்லை மிஸ்டர் தமிழ்வண்ணன்! (ஐயகோ!) இங்கேயே துணிவாக தங்கிவிட்ட இந்திய வம்சா வழியினருக்கு வியட்நாம் அரசு பிரஞ்சுக் குடியுரிமை வாங்கிக் தந்திருக்கிறது. போர்க் காலத்தில் வேண்டாம் இந்த விஷப் பரீட்சை என்று தாய்நாடு திரும்பிவிட்ட இந்தியர்களின் சொத்துகளைத்தான் அரசு எடுத்துக் கொண்டது. அதுவும் தனக்கு என வைத்துக் கொள்ளாமல் வியட்நாம் போரில் கணவர்களை இழந்தவர்களுக்கும் மனைவிகளை இழந்தவர்களுக்கும் அச்சொத்துக்களை உரிமையாக்கிக் கொடுத்துவிட்டது.
“அத்தகைய இந்தியர்களின் வாரிசுகள் தகுந்த ஆதாரங்களுடன் வந்தால் அந்தச் சொத்துகளை வியட்நாம் அரசு மீட்டுத் தருமா?”
“அது கடினமில்லையா? எல்லாம் முடிந்துவிட்டது. உங்களுக்கு ஓர் உண்மை சொல்லட்டுமா? அமெரிக்கர்களுக்கு உரிமை உடைய வியட்நாமியர் சொத்துக்களையே அமெரிக்கர்களால் மீட்க முடியவில்லை. தக்க ஆதாரங்களுடன் நம்மவர்கள் வந்தால் அதே சொத்துக்களை மீட்க முடியாது என்றாலும் அதற்கு இணையாகத் தங்கம் தர நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடியும்.
“உண்மையாகவா?”
“ஆமாம். வியட்நாம் அரசை ஒரு தலைப்பட்சமான அரசு என எண்ணாதீர்கள். இங்கும் நியாயங்கள் எடுபடும்.
என் மாமாவின் சொத்துக்களை மீட்க முடியுமா என்தற்கு இவர் சொன்னதில் மறைமுகமான பதில் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் என் மாமாவின் வாரிசுகளிடம் சில கடிதப் போக்கவரத்துகளும் சில வீட்டு வரி இரசீதுகளுமே இருந்தனவே அன்றி சொத்து உரிமத்திற்கான பத்திரங்கள் ஏதும் இல்லை. காரணம் மாமா இந்தியாவிற்கு வந்து தன் சிகிச்சையை முடித்துக் கொண்டு வியட்நாம் திரும்ப எண்ணியிருந்ததால் அவர் பத்திரங்கள் எதையும் இந்தியாவுக்கு எடுத்துவரவில்லை. அங்கேயே விட்டுவிட்டு வந்ததால், சொத்துகளை ஆக்கிமித்த வியட்நாமியர் குடும்பங்கள் நிச்சயம் பத்திரங்களை துவம்சம் செய்திருப்பார்கள் என்பது தெரியும்.
நீங்கள் மற்ற விஷயங்களைவிடஇந்த விஷயத்தைப்பற்றி அதிகம் அக்கறை காட்டுவதால் உங்கள் உறவினர் எவரேனும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஊகிக்கிறேன்.” (யப்பா சாமி!)
“உண்மைதான். (இதைப் பற்றிப் பேச அவரே உரிமம் தந்துவட்டார்!) பாதிக்கப்பட்டவர் என் மாமா.”
கையிலிருந்த ஆதாரங்களைத் தூதரிடம் காட்டலாமா? வேண்டாம். இதற்காகவே நான் சந்திக்க வந்ததாகச் சரியாக ஊகித்து விடுவார் இந்த கற்பூர மூளை முன்னா. எனவே இது அறிமுகச் சந்திப்பாக இருக்கட்டும் என்று அடக்கி வாசித்தேன்.
இந்தத் தலைப்பில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது இந்தியத் தூதர் ஒரு பெருமைப்படும்படியான விஷயத்தையும் ஒரு சிறு அதிர்ச்சி தரும்படியான விஷயத்தையும் சொன்னார்.
ஆச்சரியப்படும்படியான செய்தி என்ன தெரியுமா? “இந்தியர்களிலேயே தூரக் கிழக்கு நாடுகளுக்குக் கடலில் பயணித்துப் போர்களை நடத்தியும் தொழில்களை நடத்தியும் சாதித்தவர்கள் தமிழர்களே” என்றார்.
பெருமையின் பூரிப்பில் பெருமிதக் கண்ணீரே வெளிப்பட்டுவிட்டது.
இரண்டாவதாக அவர் சொன்ன சற்றே அதிர்ச்சிச் செய்தி”
வரும் வாரம் சொல்கிறேனே!
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
Tags: Uncategorized
Friday, 3 Sep 2010
பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!
சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இரண்டாவது விமான நிலையம் (கிரீன் ஃபீல்ட்) அமைப்பது பற்றிய கருத்துப் பரிமாற்றங்களில் தமிழகத்தின் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
2007இல் பேசப்பட்ட இந்த ஆரம்பகட்டப் பேச்சுகள் இப்போதுதான் மண் ஆய்வு என்கிற கட்டத்திற்கு வந்திருக்கிறது.
ஆனால் கர்நாடகமும் ஆந்திராவும் முந்திக் கொண்டு கிரீன்ஃபீல்டு விமானநிலையங்கள் உருவாக்கிச் செயல்படுத்திவிட்டன. இவற்றுள் பெங்களூரின் புதிய விமான நிலையத்தைப் பார்க்க நேர்ந்தபோது மிகவும் ஏக்கமாகிவிட்டது. கையில் காசு இல்லாத பையன் திருவிழா மிட்டாய்க் கடையின் வாசலில் ஏக்கத்தோடு நிற்பானே, இதற்கு இதை ஒப்பிடலாம்.
இதற்குத் தடையாக இருப்பவர்கள் வெளிமாநிலத்தவரா என்றால், இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவே இதற்கு எதிர்ப்பாக இருக்கிறார்.
கருணாநிதி அறிவித்த தரிசுநிலங்களை விமான நிலையத்திற்குத் தரட்டும்; ஸ்ரீபெரும்புதூரை ஒட்டிய நிலைகளைக் கையகப்படுத்தினால் வீடுகள், விளை நிலங்கள், பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள் பறிபோகும். எனவே இதுகூடாது. இது நடந்தால் போராட்டம்தான் என்கிறார். ஜெயலலிதா, இது ஒரு பொருந்தா வாதமே. 4821 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தினால் விவசாயம் இருண்ட போய்விடுமா என்ன? நாட்டின் நலனின் முன்னே இவை பெரிய இழப்பாகுமா என்ன? எவ்வளவோ இலட்சம் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டால் சிறு பகுதியினரின் சேதம் பெரிதா என்ன?
மருத்தவர் ராமதாஸ் சற்றுப் பரவாயில்லை. மகாராஷ்டிராவில் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஆரம்பிக்க நிலம் கையகப்படுத்தப்பட இருந்தபோது மக்களின் கருத்துக் கணிப்பை ஏற்று அது கைவிடப்பட்டதே, அதே பாணியில் மக்களின் கருத்தை அறியுங்கள் என்கிறார். இதுவும் ஓர் ஆகாத வேலையே, பாதிக்கப்பட இருக்கும் மக்கள் ஒருவரும் இந்தா எங்கள் நிலம் என்று ஒருபோதும் சொல்லப்போவது இல்லை. நாட்டுப்பற்று மிகுந்த ஜப்பானிலேயேகூட புதிய விமான நிலையங்களுக்கும், பழைய விமான நிலையங்களில் விரிவாக்கத்திற்கும் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தங்கள் சொத்து பறிபோகிறது என்றால் எதிர்க்கவே செய்வார்கள். ஒரு தனியார் நிறுவனத்தின் தொழிற்சாலை போன்றதா ஒரு மாநிலத்தின் விமான நிலையம்? பொருந்தாத வாதமிது.
மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிட வெகு நாள் ஆகாது. நீங்கள் அடித்து முடித்துக் கொண்டு வாருங்கள். இப்போதைக்குக் கைிவட்டு விட்டு வேறுமாநிலத்தில் கவனத்தைச் செலுத்துகிறோம் என்று சுலபமாகச் சொல்லவிடும்.
இதனால் பாதிக்கப்பட இருப்பது தமிழகத்தின் வளர்ச்சியே.
ம்! ஒரு மாநிலத்திற்கு நல்ல முதல்வர் மட்டுமல்ல, நல்ல எதிர்க்கட்சித் தலைவர்களும் வாய்க்க நல்ல கொடுப்பினை வேண்டும் என்பது இப்போதுதான் புரிகிறது!
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!
2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்
2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!
2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!
2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!
2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!
2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!
2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்
2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?
2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?
2010/06/18 எது அசல்!? எது போலி?
2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!
2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!
2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?
2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!
2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!
2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?
2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!
2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!
2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!
2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!
2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?
2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?
2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!
2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!
2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!
2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!
2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!
2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!
2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!
2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!
2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!
2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!
2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…
2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!
2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!
2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்
2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்
2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!
2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?
2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!
2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?
2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!
2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!
2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!
2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!
2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!
2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!
2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!
2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!
2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்
2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி
2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?
2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!
2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!
2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!
2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!
2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!
2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?
2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!
2009/04/10 தீயினும் கொடியது காமம்!
2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!
2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!
2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?
2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?
2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
Tags: Uncategorized
Friday, 3 Sep 2010
அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!
அரைக்கிணறு தாண்டி என்ன பயன்? எனறு நம்மவர்கள் கேலி செய்வது உண்டு.
சில நேரங்களில் நம்மால் முடியாத காரியங்களை நம்மிடம் ஒப்படைக்கிறவர்கள் உண்டு. “ஐயோ! இது என்னாலாகாது ஆளை விடுங்கள்!” என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கக் கூடாது. காரணம் இதைப் பொறுப்பற்ற செயலாகவும் ஆர்வமற்ற அணுகுமுறையாகவும் கழட்டலாகவும் புரிந்துகொள்ள கூடியவர்களே நம்மவர்கள்.
எனவே நான் நிச்சயம் முயற்சி எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி ஏற்றுக்கொண்டு அதில் இறங்கி, அதில் வேலைகளை, முயற்சிகளை, முன்னேற்றங்களை அவ்வப்போது உரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, நீளமான நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்து “நீங்க இதில் இவ்வளவு ரூபாய் வசூல் எண்ணிக் கொடுத்திடுங்க” என்று மறுக்க முடியாத நாம் எவரேனும் சொன்னால் நான் ஒரு வழி ஆகிவிடுவது உண்டு.
முயன்று பார்க்கிறேன்; முடிந்தவரை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு என்னாலியன்ற தொகையை நிர்வாகம் செய்துவிட்டு என் வட்டத்துப் பெயர்களை எழுதி அடிக்கட்டையில் பாதிவரை பூர்த்தி செய்துவிட்டு இந்தாருங்கள் என்னால் முடிந்தது என்று கொடுத்துவிடுவேன்.
மேலும் வலியுறுத்தினால் இவரை அணுகிப் பாருங்கள்; அவரைத் தொடர்பு கொள்ளுங்கள் என்பேன். சேச்சே! இதெல்லாம் என் கொள்கைக்கு விரோதமானது. இதுக்கெல்லாம் வேறு ஆளைப்பாருங்க என்பதெல்லாம் உறவுக் கயிற்றை மெல்ல அறுக்கும் கத்திகளே!
வாழ்க்கையில் வறட்சியும் வளர்ச்சியும் வார்த்தைகளில்தான் இருக்கின்றன.
Relay race கேள்விப்பட்டிருப்பீர்கள். பாதி வழி ஓடிப்போய் இன்னொருவரிடம் கொடுப்பது இது. இதைக்கூடச் செய்ய மனம் இல்லாவிட்டால் எப்படி?
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/08/27 பத்தும் தொண்ணூறும்!
2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!
2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!
2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…
2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?
2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!
2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?
2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!
2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!
2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?
2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?
2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?
2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்
2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!
2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..
2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!
2010/04/16 வருந்தியா திருந்துவது?
2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!
2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்
2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?
2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்
2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?
2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?
2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?
2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!
2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!
2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!
2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!
2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!
2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
Tags: Uncategorized
Friday, 3 Sep 2010

![]() |
|||||
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் | |||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
Tags: Uncategorized
Friday, 27 Aug 2010
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி
புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும் காய் சுரைக்காய்.
சுரைக்காய் எவரும் பச்சையாக சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் வயிறும், குடற் பகுதியும் பாதிக்கப்படும்.
சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். பித்தத்தை வெளியேற்றும். புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது.
சுரைக்காயை விடச் சுரைப்பிஞ்சும், சுரைக்காய்ப் பழமும் உடலுக்கு நல்லவை. இவை இரண்டையும் நன்கு பயன்படுத்தலாம்.
100 கிராம் சுரைக்காயில் கிடைக்கும் கலோரி அளவு 12 தான். அதில் சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 10 மில்லி கிராமும், இரும்புச் சத்து 0.7 மில்லி கிராமும், வைட்டமின் பி போன்றவை சிறிதளவும் உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் உள்ளன.
எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.
அதிக தாகத்தைக் கட்டுப்படுத்த வழி!
கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.
கோடைக் காலத்தில் சுரைக்காய்ச் சாம்பார், பச்சடி தயாரித்துச் சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.
தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் (இரவில்) நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்க்க வேண்டும். இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு மசாஜ் செய்வது போல் தலையைப் பிடித்துவிட வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேரும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும்.
சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்.
கோடை காலத்திலும், நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.
வாத நோயாளிகள், காய்ச்சலில் உள்ளவர்கள், தொந்தி வயிறு உள்ளவர்கள் (தொந்தியை அதிகப்படுத்தும் காய் இது) பாடகர்கள் முதலானோர் சுரைக்காயைப் பயன்படுத்தக் கூடாது. ஆசையெனில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம்.
பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பாக சுரைக்காயைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
இந்தியச் சமையலில் பொதுவாக இடம் பெறும் சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று நம்பப்படுகிறது. ஆதிமனிதன் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இது இப்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.
சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் Bottle Gourd என்று வழங்குகின்றனர். (சுரைக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், லாஜனேரியா வல்காரிஸ் என்பதாகும்). முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய்ச் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர்.
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!
2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்
2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!
2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்
2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு
2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்
2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!
2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்
2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!
2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்
2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி
2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்
2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்
2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்
2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2
2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு
2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3
2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2
2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1
2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்
2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது
2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?
2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
Tags: Uncategorized
Friday, 27 Aug 2010
எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!
தமிழகத்திற்குக் கிடைத்த சரியான எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா.
திரளான திருச்சிக் கூட்டத்தில் இதுவரை பேசாத அளவுக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறார்.
தொண்டர்களும் இவரை நேரில் கண்டும், உரை கேட்டும் புது உற்சாகம் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
கோவையில் இவர் போட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கே அரசுத் தரப்பில் இன்னும் முழுமையாகப் பதில் வராத நிலையில் திருச்சிக் கூட்டத்தில் ஜெயலலிதா முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் இடிபோல் இறங்கியுள்ளன. உலகில் எந்தப் பகுதியிலிலாவது தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், பேரன் மற்றோர் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று உண்டா? என்கிறார்.
ஆயிரம் ரூபாய்க்கு உங்கள் வாக்குகளை விற்றுவிடாதீர்கள் என்று சொன்னதன் மூலம் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் என்ன நடந்தது என்று வெட்ட வெளிச்சமாக்க முயன்றிருக்கிறார்.
தி.மு.க.வின் நான்கு ஆண்டு ஆட்சியில் நான்கு மடங்கு விலையேற்றம் என்கிறார்.
மக்களின் பர்ஸ் காலி; அவர்களின் வயிறும் காலி. காரணம் கேட்டால் மத்திய அரசின் மீது பழி போடுகிறார் என்றும் ஜெயலலிதா சுட்டு விரல் காட்டியிருக்கிறார். தமிழகத்தில் மறைமுகமாகப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விஷயத்திலும் கருணாநிதி தமிழகத்திற்குக் கெடுதல் செய்திருக்கிறார் என்கிறார்.
2007இல் தமிழகத்திற்கு 195 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் தந்த தீர்ப்பை அரசு இதழில் (கெஸ்ட்) இடம் பெறத் தமிழக அரசு முயற்சி செய்திருக்க வேண்டும். செய்யாததால் கர்நாடக அரசைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது என்று ஒரு புதுக் கோணம் தந்திருக்கிறார்.
அ.தி.மு.க போராட்டம் அறிவித்த பிறகுதான் கர்நாடகத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்கிறார். கர்நாடகத்தைப் பொறுத்தவரை கடந்த நான்கு ஆண்டுகளாக என்ன செய்தார் முதல்வர் என்கிறார் ஜெயலலிதா.
என்மீதான பொய் வழக்குகளில் 12ஐ வென்றுவிட்டேன் இன்னும் ஒன்றுதான் பாக்கி என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் தக்க ஆதாரங்கள் இன்றி வழக்குப் போட்டதால்தான் எதிர்க்கட்சித் தலைவி இப்படி எக்காளமிடுமளவிற்கு ஆகிவிட்டது. அது இவருக்கு சாதமாகிப்போனது.
முதல்வர் அனைத்திற்கும் தக்க பதில் தருவார் என நம்புவோம்.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்
2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!
2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!
2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!
2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!
2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!
2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்
2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?
2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?
2010/06/18 எது அசல்!? எது போலி?
2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!
2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!
2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?
2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!
2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!
2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?
2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!
2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!
2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!
2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!
2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?
2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?
2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!
2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!
2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!
2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!
2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!
2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!
2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!
2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!
2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!
2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!
2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…
2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!
2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!
2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்
2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்
2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!
2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?
2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!
2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?
2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!
2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!
2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!
2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!
2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!
2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!
2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!
2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!
2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்
2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி
2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?
2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!
2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!
2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!
2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!
2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!
2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?
2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!
2009/04/10 தீயினும் கொடியது காமம்!
2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!
2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!
2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?
2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?
2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
Tags: Uncategorized
Friday, 27 Aug 2010
பத்தும் தொண்ணூறும்!
என் தந்தை தமிழ்வாணன் சொல்வார், “வாழ்வின் தொண்ணூறு சதவிகிதக் கவலைகள் பொருளாதாரம் சார்ந்தவையே. எனவே பொருளாதாரத்தை வென்றெடுத்தால் வாழ்வின் எண்ணற்ற கவலைகள் ஓடிவிடும் என்று!
தொண்ணூறு சதவிகித வாகன பஞ்சர்கள் டயர்களின் கடைசி பத்து சதவிகிதத் தேய்மானங்களின்போதுதான் ஏற்படுகின்றன.
வாழ்வின் 90 சதவிகிதப் பொருளாதாரக் கவலைகள் நம் வருமானத்தில் பத்து சதவிகிதத்தையேனும் சேர்த்து வைக்காததால்தான் ஏற்படுகின்றன.
வாழ்வின்90 சதவிகிதச் சிக்கல்களை நாம் பெற்ற முன் அனுபவத்தைக் கொண்டே தீர்த்துவிட முடியும். ஆனால் அவற்றை ஏதோ புதுப் பிரச்னைகளைப் போல எண்ணிப் பார்ப்பதுதான் நல்ல வேடிக்கை. 10 சதவிகிதச் சிக்கல்கள் மட்டுமே நம் அனுபவத்திற்கும் சக்திக்கும் அப்பாற்பட்டவை. இவற்றை நம்மைவிட மூத்தவர்களிடமும் பழுத்த அனுபவச்சாலிகளிடமும் பகிர்ந்துகொண்டு தீர்த்துவிடலாம். முடியாவிட்டால் ஏற்றுக்கொண்டு ஜீரணித்துவிடலாம்.
உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பிறர் சுட்டிக் காட்டும் குறைகள், உங்கள் மீது விழுந்த பழிகள் ஆகியவற்றுள் 80 சதவிகிதம் உண்மையே. “ஐயோ! இது அடுக்கவே அடுக்காது!” என்று நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில்கூட நீங்கள் சிறிதேனும் சம்பந்தப்பட்டவர்களே. பத்து சதவிகிதம் மட்டுமே உங்கள் பக்கம் நியாயம் இருக்கப் போகிறது. எவர் ஒருவரும் உங்கள் மீது வீண்பழி சுமத்தப் போவது இல்லை. எனவே வீணே கலங்காமல் விலகி ஓடாமல் குற்றச்காட்டுகளை எதிர்கொண்டு விளைவுகளைச் சந்தியுங்கள். இதைச் செய்தால் 90 சதவிகித வீரியத்தை உங்களால் 10 சதவிகிதமாக ஆக்கவிட முடியும்.
90 சதவிகிதப் பணிகளை நாம் கடைசி நிமிடத்தில்தான் முடிக்கிறோம். 10 சதவிகிதத்தை மட்டுமே உரிய நேரத்திற்குள் முடிக்கிறோம்.
நம்முடைய 90 சதவிகித டென்ஷன்கள் நம்முடைய 10 சதவிகித அலட்சியத்தால் உருவானவையே! என்ன நான் சொல்பவை சரிதானே. நாம் மாறுவோமா?
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!
2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!
2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…
2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?
2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!
2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?
2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!
2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!
2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?
2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?
2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?
2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்
2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!
2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..
2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!
2010/04/16 வருந்தியா திருந்துவது?
2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!
2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்
2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?
2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்
2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?
2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?
2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?
2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!
2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!
2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!
2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!
2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!
2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
Tags: Uncategorized
Friday, 27 Aug 2010
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
இந்தியத் தூதர் லால் முன்னாவைச் சந்திப்பில் எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்து, அவரது முதற்செயலர் (First Secretary) சங்கரை எனக்கு அறிமுகம் செய்துவைக்க மணி மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டார்.
சங்கர் தமிழ்நாட்டவர் என்றாலும் இந்தியத் தூதரங்கள் உள்ள பல நாடுகளில் பணியாற்றியதால் தமிழ்ப் பத்திரிகைகளைப் பிடித்ததில்லையாம். இதனால் அவருக்கு என்னை மட்டுமல்ல தமிழ்வாணனையும் தெரியவில்லை. ஒரு முறை ஒரு பெரியவருக்கு நடிகர்திலகம் சிவாஜி கணேசனை அறிமுகம் செய்து வைத்தார்கள். பெரியவர், செங்கல்பட்டிற்கு அருகில் பாலாற்றங்கரையில் விவசாயம் செய்துவந்தவர். இவருக்கு வெளி உலகமே தெரியாது. சிவாஜி கணேசனிடம் இவர் கேட்டாராம் “என்ன தொழில் பண்றேள்?” என்று! இச் சம்பவம் ஒரு செவிவழிச் செய்திதான். இதைச் சம்பந்தபடப்டவர்கள்தாம் உறுதி செய்ய வேண்டும்.
சிவாஜிக்கே இந்தக் கதி என்றால் மற்வர்களெல்லாம் எம் மாத்திரம்?
எனவே கல்கண்டை தமிழ்வாணனை அறியாதவர்களைப் பற்றிக் கவலை கொள்வதில் பொருள் இல்லை என்று தோன்றியது.
ஆனால் சங்கரின் மனைவி அப்படி அல்ல. கல்கண்டைத் திருமணத்திற்கு முன்பாக நிறைய வாசித்தவர். ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் லேனா தமிழ்வாணனின் இரசிகை.
இது எனக்கு மிக நல்லதாகப் போயிற்று!
லேனா தமிழ்வாணன் இந்தியத் தூதரைப் பார்க்க என்னை மணி மூலம் அணுகுகிறார் என்று சொன்னதும் கணவரை ஒருவழி பண்ணிவிட்டாராம்.
“என்னது! லேனா தமிழ்வாணன் வியட்நாம் வந்திருக்கிறாரா? அதுவும் ஹனாயில் இருக்கிறாரா? அவரைப் பார்க்கணுமே! அவருக்கு நாம ஒரு வேளையாவது விருந்து கொடுக்கணுமே” என்றதும் சங்கர் அதிசயித்துவிட்டாராம்.
“லேனா இந்தியத் தூதரைப் பார்க்க நானாச்சு. ஆனா மணி சார்! என் மனைவி லேனாவைப் பார்க்க நீங்க வழி பண்ணணுமே! அவருக்கு ஒரு வேளை விருந்து கொடுக்கணுமே நாங்க!” கடலில் தவிக்கிறவனுக்கு, கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்கு கப்பலே வந்து அழைத்துக் கொண்ட கதையாயிற்று என் கதை!
மணி சொன்னாராம். “சங்கர் சார்! தனி விருந்திற்கு லேனா ஒப்புக் கொள்வாரா தெரியலை. அவர் சுத்து சுத்துன்னு சுத்தணும்கிறார். கிடைக்கிற இடத்தில் எதையும் (?) சாப்பிட்டுக்கிறார். விருந்துக்கு ஒப்புக் கொண்டால் ஒரு மாலை இரவு வீணாகிவிடும்னு நினைக்கிறார். அவர் வந்து இறங்கிய நாளாய் வியட்நாம் தமிழர்கள் பலரும் அவரோட சட்டையைப் பிய்க்காத குறைதான். அதனால் நாங்க ஒரு முடிவு பண்ணியிருக்கிறோம். ஹனாய்த் தமிழர்கள் எல்லோருமா ஒன்று சேர்ந்து நம்மோட இந்திய உணவகம் ஒன்றில் ஓர் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கு நீங்க வந்துடுங்க. உங்க மனைவியையும் அழைச்சிட்டு வாங்க. உங்க மனைவி, லேனாவை அங்கு சாவகாசமாச் சந்திக்கலராம். நேரமும் இடமும் சீக்கிரமே சொல்லிடறேன்.”
“சரிசரி இதுவும் நல்ல யோசனைதான் என்றாராம் சங்கர்.
மறுநாள் சங்கரே தொலைபேசியில் பேசினார். உங்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. என் மனைவி நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார். தூதர் அவர்களைச் சந்திக்கச் சில சம்பிரதாயங்கள் உண்டு.
“அப்படியா? நான் என்ன செய்யணும்?”
“நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். நான் தான் செய்யணும்?
உங்களைப் பற்றிய குறிப்புகளை அவரது பார்வைக்கு வைத்து இவர் உங்களைச் ச்நதிக்கப் பிரியப்படுகிறார். பார்க்க வரலாமா? என்று அனுமதி கேட்க வேண்டும்.”
“ஓ! அப்படியா?”
“ஆமாம். இதற்காக googleலும் tamilvanan.comலும் உங்களைப் பற்றிய விவரங்களை எடுத்து அவர் மேசையில் வைத்துவிட்டேன்” சங்கரின் சாதுரியம் என்னை வியக்க வைத்தது. என்னிடம் பேசி விபரம் எதுவும் கேட்காமல் எல்லாவற்றையும் முடித்துவிட்டு என்னிடம் அந்தத் தகவலை மட்டும் சொல்கிறாரே! இவ்வளவு திறமையெல்லாம் இல்லாவிட்டால் இந்தியத் தூதரகத்தில் பணிபுரிய முடியுமா? என்று வியந்தேன்.
“வளவளவென்று நிறைய இருக்குமே!”
“சேச்சே! சுவையாக இருந்தது. சுருக்கமாக மட்டும் கொடுத்திருக்கிறேன். படித்ததுமே ஒப்புதல் சொல்லிவிடுவார். அவ்வளவு நன்றாக இருக்கிறது உங்களைப் பற்றிய செய்திகள்.”
“மகிழ்ச்சி”
“மதியமே மறுபடி பேசி நாளை 3 மணிக்கு உங்களுக்கு நேரம் தந்துவிட்டார் தூதர்” என்றார்.
“ரொம்ப மகிழ்ச்சி லேனா எதற்காக என்னைப் பார்க்க நினைக்கிறார் என்று கேட்டாரா ஹிஸ் எக்ஸலன்சி?”
“ஆமாம். சரியாகக் கேட்கிறீர்களே! இதே கேள்வியைத் கேட்டார். ஒரு மரியாத நிமித்தமாகச் சந்திக்க நினைக்கிறார் என்றேன். சரிதானே?’
“சரியில்லை. ஒரு காரணத்தோடுதான் சந்திக்கப் போகிறேன்” என்று எப்படிச் சொல்வது? எனவே நான் தயங்கித் தயங்கிப் பேசினேன்.
“அதுவும் சரிதான். ஆனால் வேறு ஒரு விஷயமாகவும் அவரை நான் சந்திக்கிறேன். அதை உங்களிடம் நேரில் சொல்லட்டுமா?”
“சரி சொல்லுங்கள்?”
மதியம் 3 மணி என்பது வேலை நேரம். விடுமுறையில் இந்திய தூதரைச் சந்திக்க இயலாது. மணி உடன் வந்தால்தான் தடுமாறிப் போகாமல் நேரத்திற்கு இந்திய தூதரகத்தை அடையலாம். மணி அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று என்னுடன் வந்தார்.
சரியாக 2.45க்கெல்லாம் இந்தியத் தூதரகத்தில் இருந்தோம். ஏன் அவ்வளவு சீக்கிரம் என்கிறீர்களா? தூதரகங்களில் சம்பிரதாயங்கள் அதிகம். பாதுகாப்பு என்ற பெயரால் கெடுபிடிகள் அதிகம் இருந்தால் என்ன செய்வது? இந்திய தூதரகம் என்றால் பார்க்கச் சற்றுப் பாவமாய் இருக்கும் என்று நான் கணிக்கப் போக அட்டகாசமாய் இருந்தது. இது எனக்கு மிகுந்த பெருமையாய் இருந்தது.
“பரவாயில்லை மணி சார்! இந்தியத் தூதரகம் அமைந்திருக்கும் இடம், கட்டடம் எல்லாம் அந்தஸ்தாய் இருக்கின்றன. ஏன் மதியம் மூன்று மணிக்கு வரச் சொல்லியிருக்கிறார் என்று புரிந்துகொண்டிருக்கிறீர்களா?”
“இல்லை என்னால் ஊகிக்க முடியலை.”
“காலையில் இந்த இடம் சற்றுக் கூட்டமாய் இருக்கும்.”
“அப்படியா?”
“ஆமாம். இந்தியாவிற்கு விசா வாங்க வருகிறவர்கள் இங்கெல்லாம் நிறைந்து காணப்படுவார்கள்.”
“அப்படியா?”
“பின்னே? வியட்நாமியர்களுக்கு இந்தியா ஒரு புனித பூமியல்லாவா? புத்தர் தோன்றிய நாடு என்றல்லவா நம் நாட்டைப் பார்க்கிறார்கள்!”
“உண்மைதான்.”
சங்கருக்கு நாங்கள் வந்திருப்பதைத் தெரிவித்ததும் கீழிறிங்கி வந்து நன்கு வரவேற்றார். சங்கர் மகா சிவப்பாய் அழகாய் இருந்தார்.
“பரவாயில்லை. நேரத்திற்கு வந்துவிட்டீர்கள். மகிழ்ச்சி.
“தூதர் எப்படி நன்றாகப் பேசுவாரா? சகஜமாய்ப் பழகுவாரா?”
“அதை ஏன் கேட்கிறீர்கள்? ரொம்ப நல்லவர். மிக எளிமை. ஒரு முறை என் வீட்டு விசேஷம் ஒன்றிற்கு அழைத்தேன். நேரில் வந்து அசத்திவிட்டார்!”
“ஓ! அவ்வளவு எளிமையா?”
“ஆமாம். பார்க்கத்தானே போகிறீர்கள்! சரி மரியாதை நிமித்தமாய்ப் பார்க்க இருப்பது தவிர வேறு ஒன்றிற்காகவும் பார்க்க வந்திருக்கிறேன் என்றீர்கள். அதுபற்றிச் சொல்கிறீர்கள்?”
“சொல்கிறேன். என் மாமா இங்கு. இங்கு என்றால் ஹனாயில் அல்ல, இப்போது ஹோசிமின் சிட்டி என அழைக்கப்படுகிற சைகோனில் (சைகோன் அல்லவாம்! சைகானாம்) வட்டிக் கடைகளை நடத்தி வந்தார். அவரை வியட்நாம் அரசு சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பிவிட்டது. சொத்துக்களையும் பிடுங்கி வைத்துக் கொண்டு தரவும் மறுத்துவிட்டது. அவரது சொத்துக்களை மீட்டு எடுக்க வழி உண்டா எனக் கேட்க வேண்டும். இதற்கு இந்திய தூதர் உதவ முடியுமா என்று கேட்க வேண்டும்” சங்கர் தரையத் குனிந்து பார்த்தபடி தாடையில் கையை வைத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
நேரமோ ஓடிக் கொண்டிருக்க அவரது மெளனமோ, சிக்கலான ஆளாக இருப்பான் போலிருக்கிறதே, ஏண்டா இவனுக்குத் தூதரிடம் அப்பாயின்மெண்ட் வாங்கித் தந்தோம் என்று யோசிக்கிறாரோ என்று எனக்கு எண்ணத் தோன்றியது.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
Tags: Uncategorized
Friday, 27 Aug 2010

![]() |
|||||
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் | |||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||
|
|||||
![]() |
|||||

































