» Uncategorized .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Archive for the 'Uncategorized' Category


Tuesday, 26 Jul 2011

Contact Details

மணிமேகலைப் பிரசுரம்

தபால்பெட்டி எண்: 1477, 7(ப.எண்.4),

தணிகாசலம் சாலை,

தியாகராயநகர்,

சென்னை- 600017.

தொலைபேசி: 044-24342926

தொலைநகல்: +91-44-24346082

மின் அஞ்சல்: manimekalai1@dataone.in

Tags:


Friday, 4 Mar 2011

healthy life

milk.jpgநோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள்

நீங்கள் ஒல்லியா?

பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

ஏனெனில் மேற்கண்ட காரணங்களாலும் சிலர் தொடர்ந்து ஒல்லியாக இருப்பார்கள்.

இவர்கள் அனைவருமே ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற்று சற்றுப் பூசினாற்போல குண்டாக மாற வாய்ப்பு உள்ளது. உடலைச் கொழுக்க வைப்பதிலும் எடையை அதிகரிப்பதிலும் பால், சோயாபால், அத்திப்பழம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முதலில் பால் வைத்தியத்தைப் பின்பற்றலாம். காலை முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இது இரவு எட்டு மணி வரை தொடர வேண்டும். அடுத்த நாளும் காலை எட்டு மணிக்கு இந்தப் பால் வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டும். வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.

பாலை லேசாகக் சுட வைத்தால் போதும். சர்க்கரை வேண்டாம். மூன்றாவது நாள் முதல் மணி நேரத்திற்கு ஒரு கப் வீதம் அருந்த வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர வேண்டும். சிலருக்கு இந்த முறையில் தொடர்ந்து பால் சாப்பிடுவது திகட்டும். இவர்கள் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். ஸ்டிரா மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலை உறிஞ்சலாம். பசும் பாலுக்குப் பதிலாக சோயா பாலையும் பயன்படுத்தாம். ஆறு நாட்களுக்குப் பிறகு பாலும் அத்திப்பழமும் கலந்து மூன்று வேளையும் சாப்பிட ஆரம்பியுங்கள். நீங்கள் சதை போடுவதை உணர முடியும்

மாற்று முறை :
வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியாக உணவில் இடம் பெற்றால், பஞ்சாபியர்களைப் போல வாட்டசாட்டமாக வளர முடியும். கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், மக்னீஷியம் அதிகம் உள்ள முள்ளங்கி, பீட்ரூட் வைட்டமின் டி (D) அதிகமுள்ள பால், மீன், எண்ணெய் முதலியவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகம் உள்ள ‘சோயாபீன்ஸையும் உணவில் சேர்க்க வேண்டும்.

ஒல்லியானவர்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எண்பது சதவிகிதம் திரவமாகவும், மீதி திட உணவாகவும் இருக்க வேண்டும். இதுவே உடல் எடை சரிவிகிதத்தில் அதிகரிக்க உதவும். உணவில் உள்ள வைட்டமின்கைளுயம், தாது உப்புக்களையும் நன்கு உறிஞ்சிக் கொண்டு, கழிவுகளையும் தாமதமின்றி வெளிேற்ற பி வைட்டமின்கள் அவசியம் தேவை திட உணவான கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, பருப்பு, கடலை முதலியவற்றில் “பி” வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

தாவர எண்ணெய் வகைகளில் வைட்டமின் “ஈ” உள்ளது. இவற்றில் சமைத்தால் உடல் எடை அதிகரிக்கும்.

டர்னிப், கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, பீட்ரூட், காரட் முதலியவற்றை காய்கறி சாலட் போல் சாப்பிட வேண்டும். பச்சையாகச் சாப்பிட முடியாதவர்கள் லேசாக வேக வைத்துச் சாப்பிடலாம். குண்டாக மாற விரும்புகிறவர்கள் கர்பபி, தேநீர், புகைப்பழக்கம் முதலியவற்றை உடனே நிறுத்த வேண்டும்.

மூன்று வேளை உணவை ஆறு வேளையாகப் பிரித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டால் போதும். குண்டாக விரும்புகிறவர்கள் எப்போதும் சாப்பிடுவதைவிடக் கூடுதலாக 500 கலோரி மட்டும் சாப்பிட்டால் போதும். இதனால் வாரத்துக்கு 650 கிராம் வீதம் உடல் எடை அதிகரித்து வரும்.

சோயா மாவில் பூரி, சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும். நோஞ்சான் குழந்தைகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் உயர்ந்த சத்துணவு இது. சோயா மாவில் செய்யப்பட்ட முறுக்கு, பக்கோடா முதலியவை நல்ல நொறுக்குத் தீனிகள்.

ஒல்லியானவர்களும் குழந்தைகளும், பெரியவர்களும் இந்த நொறுக்குத் தீனியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நன்கு வளர்ந்து குண்டாகிவிடுவார்கள்.

* (குண்டாக மாற விரும்புகிறவர்கள் மாம்பழம், அத்திப்பழம் பற்றி மேலும் அறிய மணிமேகலைப் பிரசுரத்தின் ‘பழங்களின் மருத்துவக் குணங்கள்’ என்ற நூலையும் பார்க்கவும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய பொதுவான நோய்களுக்கான உணவு முறைகள்

2011/02/25  உடல் நடுக்கம் தரும் காய்ச்சலா?

2011/02/18  காய்ச்சலை குணமாக்கும் உணவு முறை!

2011/02/11 ஒற்றைத் தலைவலியா?

2011/01/28 வழுக்கையா?

2011/01/21 தலைவலியா?

2011/01/13 ஜலதோஷமா?

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2011/01/07 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்…? - தொடர்ச்சி

2010/12/31 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Tags:


Friday, 4 Mar 2011

Will it happen?

swiss.jpgவரும்; ஆனா வராது!

நம்முடைய எத்தனையோ கோடிச் சகோதர சகோதரிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில் நம் அரசியல்வாதிகள் பலர் பல இலட்சம் கோடிகளை சுவிஸ்வங்கிகளின் இரகசியக் கணக்கில் போட்டு வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயலே தவிர, வேறு என்ன?

விக்கி லீக்ஸ் நிறுவனமும் ஏன் சுவிஸ் வங்கிகளுமேகூட இந்திய அரசியல்வாதிகள் மட்டுமல்லாது தொழிலதிபர்களுமேகூட எவ்வளவு கோடிக்கோடியாய் வரி ஏய்த்தும், ஊழல் புரிந்தும், இலஞ்சம் வாங்கியும் போட்டு வைத்துள்ளனர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.

ஒரு பகுதியை இப்படி சமர்ப்பித்த அத்வானியேகூட, சோனியா தம் பெயரை இதில் சேர்த்தற்காக விளக்கம் கேட்கவே உங்கள் பெயர் தவறுதலாக இதில் சேர்ந்துவிட்டதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்று பின்வாங்கிவிட்டார்.

ஆனால் இந்த விஷயத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி உறுதியாக இருக்கிறார். நான் தருகிறேன் ஆதாரபூர்வமான பட்டியலை. என்மீது வழக்குத் தொடரட்டும் என்று சவால் விடுத்திருக்கிறார்.

ஆளும் மத்திய அரசிடம் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பட்டியல் இருந்தும் அதனை ஏன் வெளியிடவில்லை என்று பாரதிய ஜனதா வேறு ஒரு புறம் குடைந்து கொண்டிருக்கிறது.

ஆக காங்கிரஸால் வெளியிடமுடியாத ஒரு பட்டியல் இருப்பதும் பாரதிய ஜனதாவுக்கு இப்படி பட்டியலை வெளியிடுவதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்பதால் பாரதிய ஜனதா தலைவர்கள் சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கவில்லை என்பதும் ஓரளவு தெளிவாகத் தெரிகிறது.

சுவிஸ் வங்கியில், இந்தியர்களால் போடப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற முடியுமா என்கிற கேள்விக்கு, நேரிடையாக விடைகூற முடியாது என்றாலும் அமெரிக்கா தம் நாட்டவர்கள் 12,000 பேர் போட்டிருந்த கள்ளப்ப ணத்தை மீட்கும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியடைந்திருப்பதை பார்க்கும்போது இது சாத்தியமே என்கிற பதில் மறைமுகமாகக் கிடைத்திருக்கிறது.

சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்கள், போட்ட பணத்திற்கு நியாயமான கணக்கைக் காட்டாவிட்டால் அதைக் கேட்டுப் பெறுவதற்கு உரிய நாட்டிற்கு உரிமை உள்ளது என்கிற விதி இருப்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

சுவிஸ் அரசு ஒரு நியாய அரசு. உலகப் போரில் எந்த அணியுடனும் சேராமல் நெருக்கடியான நிலைமையிலும் நடுநிலை வகித்த நாடு. இந்திய அரசு கோரினால் சுவிஸ் வங்கிகள் உடன்பட்டே தீரும். இந்த நாட்டில் 1948இல் அமல்படுத்தப்பட்ட இரகசியம் காக்கும் சட்டங்களை இன்று தளர்த்தப்பட்டுவிட்டன என்கிறார்கள்.

ஆனால் நம் அரசியல்வாதிகள் சுவிஸ் பணக் குவியல்கள் இந்தியாவை அடையாமல் எப்படியும் பார்த்துக் கொள்வார்கள்.

சுவிஸ் வங்கிகளின் இந்தியக் கறுப்புப் பண விவகாரத்தைப் பார்க்கும்போது ஒரு படத்தில் வடிவேலுவிடம் என்னெத்த கன்னையா சொல்வாரே, “இந்தக் கார் வரும் ஆனா வராது” என்று! இந்த வசனம்தான் என் நினைவிற்கு வருகிறது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2011/02/18  ஏதேது நிகழ்ந்தேவிடுமா?

2011/02/11 கண் துடைப்பாகக் கருதலாமா?

2011/01/28 மருத்துவ ஏழைகள்

2011/01/21 மன்னித்து உயர்ந்த முதல்வர்!

2011/01/13 கண் திறக்கும் கல்விப் படப்பிடிப்பு!

2011/01/07 வெங்காயம் விதைத்த புதிய விதை

2010/12/31 அரசு இயந்திரத்தை எதிர்பார்க்கும் தனியார் இயந்திரங்கள்!

2010/12/24 ஜனநாயகம் தழைப்பது யார் கையில்?

2010/12/17 தெரியவில்லை புரியவுமில்லை!

2010/12/10 தோற்ற போதிலும் இது வெற்றியே!

2010/12/03 வெள்ளியையும் வெண்கலத்தையும் தங்கங்களாக்குவோம்!

2010/11/26 அரசியல் நாடகத்தின் இடைவேளை!

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Tags:


Friday, 4 Mar 2011

Look at life

writer-lena.jpgபார்வைகளின் நான்கு பிரிவுகள்

பார்வைகள் என்றால் கண்பார்வைகள் அல்ல. வாழ்க்கைப் பார்வைகள் முதல் பார்வை பின்னோக்கிப் பார்த்தல்.

ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது பார்வை எப்போதும் இருக்க வேண்டும். வந்த வழி தெரியாவிட்டாால் போகிற பாதை புரியாது என்பார்கள். பழையதை நினைத்துப் பார்க்காவிட்டால் வாழ்வில் நிதானம் என்பதே பிடிபடாது. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்காவிட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப் போக வேண்டியதுதான். நல்ல வளர்ச்சியிலும் வளர்வதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர்கள் முதல் பத்துப் பேர்கள் வரை அவ்வப்போது நினைவுக்கு வரவேண்டும். நன்றியின் வெளிப்பாடு மட்டுமல்ல. நம்மால் பிறருக்கு இப்படி உதவ முடியுமா என்கிற உந்து சக்தியாகவும் இருக்கும்.

அடுத்து முன்னோக்கிப் பார்த்தல், தீர்க்க தரிசனங்களும் வருங்காலத் திட்டங்களும் இல்லாதவர்களே நம்மில் பலராக இருக்கிறார்கள். முன்னோர்க்குப் பார்வை இல்லாதது எண்ணெய் இல்லாத விளக்கிறகுச் சமம். முன்னோக்கிய பார்வைகளே நம்மை உற்சாகம் குன்றாமல் ஓடியாடி உழைக்கும் ஊக்க மருந்தாகும்.

அடுத்து நம்மைச் சுற்றிய பார்வை நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்கிற பார்வை இல்லாதவர்கள் தம் சுயங்களை இழந்து போகிறார்கள். கூடவே ஓடி வருகிறவனின் வேகத்தைப் பார்த்துதான் ஒருவனது ஓட்டப் பந்தய வேகம் அதிகரிக்கும். தனியாக ஓடும்போது எப்படி வரும் வேகம்? சூழ்நிலை அறிதலே நம்மைச் சுற்றிய பார்வையின் நோக்கம்.

இறுதியில் முக்கியமாக வருகிறது நமக்குள் பார்க்கவேண்டிய பார்வை (look within) நாம் யார்? நம் ஆற்றல் என்ன? நம் பலவீனங்கள் என்ன என்பதைக் கணித்தறியாதவர்கள் மூடர்களே. know thyself என்பார்கள் ஆங்கிலத்தில். கலைகளுள் கடினமான கலை ஒருவன் தன்னைத்தானே உணர்வதுதான்.

கண்களை மூடியபடி சிந்திக்கச் சிந்திக்க நமக்குள் நாம் ஆழமாகப் பயணிக்கமுடியும். இந்தப் பயணமே எத்தகைய சூழலிலும் வாழ்வைச் சுகமாக்க வல்லது!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2011/02/25  நான் ஏதோ அரசியலில் தலையங்கம் பற்றி எழுதப் போகிறேன் என்று..

2011/02/18  பரிசீலனை செய்யும் பண்பு!

2011/02/11 நம் நேரங்கள் எப்படிக் கசிகின்றன?

2011/01/28 கேள்வி கேளாத கீழ்ப்படிதல்

2011/01/21 நாமும் யந்திரன்களே!2011/01/13 அயர்வற்ற மனத்திற்கு உயர்வு தர என்ன வழி?

2011/01/07 ஐம்பது சதவிகித மனநிலையுடன் அணுகுவோம்!

2010/12/31 பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Tags:


Friday, 4 Mar 2011

vietnam travel

sapa-treking.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

பஞ்சுமிட்டாய் கேட்ட பிள்ளைகளுக்குப் பிழுக்கை மிட்டாய்!

கூசி துப்பாக்கி சுடும் மையத்தில் நான் சரியாக இலக்கு நோக்கிச் சுட்டதற்காகத் தரப்பட்ட பரிசு வெறும் ஒரு சாவிக் கோர்வை என்றதும் வெறுத்துப் போயிற்று எனக்கு.

ஆனால் பரிசு என்பது பரிசுதான். அது எதுவாக இருந்தால் என்ன என்கிற பக்குவம்கூட எனக்கு ஏற்படாதது ஏன் என்பது புரியாத புதிர். நான் என்ன இன்னும் சிறு பிள்ளையா? ஒன்றைச் சாதித்து விட்ட பிறகு ஒரு பெரிய கோப்பைையை எதிர்பார்த்து நிற்கும் போது ஒரு சோப்பு டப்பாவைத் தந்தால் ஏமாறுவார்களே பள்ளிப்பிள்ளைகள், அப்படியல்லவா நானும் நடந்து கொள்கிறேன்! ஏன் இப்படி?

என்னுள் அக்கேள்வியைத் நினைத்துப் பார்த்தபோது விடை வெளியேறிய மாதிரித் தெரிந்தது.

என் இந்த விடை சரியா தவறா என்கிற கேள்வியை உங்களிடையே விட்டுவிடுகிறேன்.

கூசி துப்பாக்கி சுடும் மையத்தின் அதிகாரி ஒரு விண்ணப்பப் பாரத்தைக் கொடுத்ததுமே பரிசைப் பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டிருக்க வேண்டும். ஓர் எழுத்துக்கூட ஆங்கிலத்தில் இல்லாதபோதும் அதை என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ, பூர்த்தி செய்தாலே ஆச்சு என்று அவர் காட்டிய பிடிவாதமும் பரிசுப் பொருளின் அகலத்தை - உயரத்தை எனக்குள் அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.

பரிசுப் பொருள்களுக்கு அவர் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதும், பொருள் சிறுசோ பெருசோ அது எதுவாக இருந்தாலும் நடைமுறை என்னவோ சம்பிரதாயங்கள் என்னவோ அதைப் பின்பற்றியாக வேண்டும் என்பதும், ஒரு பரிசுப் பொருள் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கான முட்டுக்கொடுத்த (லாக) இருக்க வேண்டுமா என்ன? இது ஏன் எனக்குத் தோன்றாமல் போயிற்று?

ஏதேது? ஏதோ ஒரு பக்கக் கட்டுரை போலல்லவா விஷயம் போகிறது என்கிறீர்களா?

பஞ்சுமிட்டாய் கேட்ட பிள்ளைக்குப் பிழுக்கை மிட்டாய் கிடைத்த கதையாய் ஆகியதில் என் முகம் வாடிப் போனதில் ஜவஹரும் மதுவுமேகூட ஒரு மாதிரியாக ஆகி, என்னைச் சமாதானப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

என்னிடம் ஒரு நல்ல இயல்பு உண்டு. முடிந்தால் என்னை நேசிக்கிற என் எழுத்தை வாசிக்கிற உள்ளங்களும் இதைப் பின்பற்றிப் பாருங்கள்.

எந்த எதிர்மறை உணர்வானாலும் அதில் வெகு நேரம் ஊறிக் கிடக்கமாட்டேன். ஆனால் ஆக்க பூர்வமான நல்ல ஆரோக்கியமான மனநிலை உருவானால் அதில் வெகு நேரம் மனம் இலயிப்பேன். எல்லாம் நம் உள்ளத்தின் அணுகு முறையில் இருக்கிறது.

போட்ட சட்டைகளையே போட்டுக் கொண்டு படம் எடுத்துக் கொள்கிறோமே, வந்த இடத்தில் ஏதும் சட்டை வாங்கினால் என்ன என்று ஓர் ஆசை வந்தது.

என் இந்தக் குறிப்பிட்ட கிழக்காசிய பயணத்தின் கடைசி நாடு இது என்பதால் இனி எடை சேர்ந்தால்கூட பிரச்னை இல்லை. இனி நேராய்த் தாய் நாடுதான்.

இன்று இங்கே; நாளை அங்கே; நாளை மறுநாள் எங்கே என்று ஓடு ஓடு என்று ஓடிய பயணம் இது. ஓய்வு என்பதே கிடையாது. காலை புறப்பட்டால் அப்படி அப்படியே வெவ்வேறு இடங்கள். இல்லத்திற்குக்கூடத் திரும்புவது இல்லை. கண்ட இடங்களில் வயிற்றை நிரப்பிக் கொள்வது என்று ஓடிக் கொண்டே இருந்த பயணம் இந்தப் பயணம்.

குருவி எங்கு பறந்தாலும் அதற்குக் கூட்டு (கூட்டில்) நினைப்பு என்பதுபோல் நாடு திரும்பி இதழ்ப் பணிகளில் அமரவேண்டும் என்கிற அவசரம்.

இந்த நேரப் போராட்டத்தில் துணிகளைத் துவைத்துப் போடவே மனம் இல்லை. இரவு வீடு திரும்பினால் ஆளையே துவைத்து எடுத்த துணிபோல் ஒட்டத் தளர்ந்து காணப்படும் நிலை.

திருமதி ஜவஹரிடம் கொடுத்தால் நிச்சயம் உதவியிருப்பார்கள். ஆனால் ஏனோ என் பயண வாழ்க்கையில் உடைகளை வற்புறுத்திக் கேட்டுப் பெற்ற இல்லத்தரசிகளைத் தவிர எவரிடமும் துணிகளைத துவைக்கக் கொடுக்காத எனக்கு நினைவே இல்லை.

குறிப்பாக உள்ளாடைகளை எவரிடமும் துவைக்கத் தருவது இல்லை. ஆனால் நானறிய பல விருந்தினர்கள் தங்கள் உள்ளாடைகளை வேலையாட்கள் இல்லாத வீட்டில் இல்லத்தரசிகளிடம் துவைக்கத் தந்த சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன்.

உங்கள் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று மைக் வைத்து ஸ்பீக்கர் பொருத்திக்கூட அவர்களிடம் சொல்லலாம் என்பதுபோல் எனக்கு வேகம் வரும்.

என்ன செயல் இது? யார் உள்ளாடையை யார் துவைப்பது? கணவன் தன் உள்ளாடைகளை மனைவியிடம் துவைக்கத் தரலாம். தங்கை, அக்காவாக இருந்தால்கூடத் தரலாம். வேலைக்குப் பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கிற வீட்டில் கூட யோசிக்கத்தான் வேண்டும்.

இந்த இங்கிதம் தெரியாத சில வெட்கமற்ற ஆண்கள் உள்நாட்டுத் தாங்கலில்கூட ‘இந்தாருங்கள் துவையுங்கள்’ என்று உள்ளாடைகளை நீட்டுகிறார்கள். நாகரிகமற்ற ஜென்மங்கள்!

அடடே! இன்னமுமா கீ செயின் டென்ஷனில் இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, இல்லையில்லை, இங்கிதம் தெரியாத பயணாளி (பயனாளி அல்ல!)களுக்குச் சில செய்திகளை உலகை நன்கு வலம் வந்தவன் என்ற முறையில் இந்த நாகரிகத்தைச் சொல்ல விரும்பி, விஷயத்தை நீட்டி முழக்கிச் சொல்லிவிட்டேன்.

பயன்படுத்திய சட்டைகள் சேர்ந்துவிட, புகைப்படக் கோணத்தில் புதிய சட்டைகள் தேவைப்பட, ‘சும்மா இப்படிக் காலாற நடந்துவிட்டு வருகிறேன்’ என்று ஜவஹரிடம் சொல்லிவிட்டுக் கம்பி நீட்ட முனைந்தேன்.

ஏதும் வேணும்னாச் சொல்லுங்க. “உங்களுக்கு ஏதோ வேணும்னு தோணுது” என்று நாகரிகமாக ஒரு பிடி பிடித்தார். நான் என்ன வயசுப் பொண்ணா? இப்படி என்ைத் தனிமையில் இயங்கவிடவே மாட்டேன் என்கிறாரே? எங்கு போனாலும் எவரும் கூடவே வரவேண்டுமா? சுயமாகச் சில அனுபவங்களைப் பெறக் கூடாதா என்று எனக்குள் தோன்றியதைச் சொல்லாமல்,

“பரவாயில்லை ஜவஹர் சும்மா இப்படி நடந்துவிட்டு வருகிறேன்”!”

“ஆட்சேபணை இல்லை. ஆனா ஒண்ணு எது வேணும்னாலும் கேளுங்க.”

“சரி சொல்கிறேன்” என்றேனே தவிர, என்னிடம் இருந்தவை சிறிய எண்ணிக்கை கொண்ட வியட்நாம் டாலர்களே. சட்டை வாங்க இவை போதா இருப்பவை அமெரிக்க டாலர்கள். பணம் மாற்றச் சில இடங்களில் பாஸ்போர்ட் கேட்பார்கள். அசல் தேவையா? நகல் போதுமா? நகலை எடுத்துக் கொண்டேன்.

ஹோ சி மின் சிட்டி எனப்படும் சைகானில் திருட்டுப் பசங்க அதிகம். நண்பர் அழகப்பன் இரு பெண்களிடம் திருட்டுப் பொண்ணுங்க! பாஸ்போர்ட், பர்ஸ், செல்போன் என எல்லாவற்றையும் இழந்தது நினைவிற்கு வந்தது.

அட சட்டை வாங்குவது கூடவா இந்த வியட்நாமில் இவ்வளவு சிரமம் என்பதுபோல் ஆயிற்று நான் பெற்ற அந்த அனுபவம்!

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2011/02/25  “மொழியால் அடிக்கிறாங்க இவங்க!”

2011/02/18  ஒருத்தனாவது சுடுறானா பார்ப்போம்!

2011/02/11 துப்பாக்கி சுடப் பழகிக் கொடு!

2011/01/28 குண்டுகளின் மழை நடுவே தரப்பட்ட கல்வி!

2011/01/21 வயது கூடிப்போன இரகசியம்!

2011/01/13 கீழுலகம் பார்த்தேன்

2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!

2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!

 2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Tags:


Friday, 4 Mar 2011

Junior kelvi pathil

atchi.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எம்.பரமேஸ்வரன், பொழிச்சலூர்.

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

வெள்ளைத் தாளில் வண்ணம் சேர்க்காமல் தகவல் தருவது. இந்த அறிக்கைியல் ‘நடந்தது என்ன?’ என்கிற நிஜம் இருக்கும். ஆனால் இன்றைய மைகளில் இரசாயனக் கலவை இருப்பதால் இந்த நிஜத்திலும் சிலரின் புஜங்கள் கலந்து விடுகின்றன.

‘டென்ஷன்’ பாலு, அமைந்கரை.

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை பெற்றவர்களுக்கெல்லாம் வீடு கிடைக்குமா?

அடையான அட்டை என்பது ஒரு நிச்சயதார்தம். நிச்சயதார்த்தமெல்லாம் கல்யாணமல்ல.

எஸ்.ரமணி, மதுரை.

பதினோரு வயதிற்கு ஓட்டுரிமை வந்தால்?

பள்ளியிலேயே தொழிற்சங்கங்கள் வரும். டீச்சரும், மாணவர்களும் மாறுபட்டு நிற்பர். தலைமையாசிரியர் இந்த இரண்டு பேரையும் எதிர்த்து ஒரு மதிய நேர உண்ணாவிரதம் இருப்பார்.

பி.பரத், ஓசூர்.

தே.மு.தி.க.விலும் இப்போது நிர்வாகிகள் மாற்றப்படுகிறார்களே?

தே.மு.க.வும் இப்போது அ.தி.மு.க.மாதிரி ஆகிவிட்டது. இங்கேயும் உள்ளே வெளியே என்று பலர் மாற்றப்படுகிறார்கள். மொத்தத்தில் இரண்டு கட்சிகளும் இப்போது பிரணாயாமம் மாதிரி எதையோ செய்து கொண்டிருக்கின்றன.

சி.பத்மப்ரியா, சென்னை-32.

காய்கறிக் கடைகளில் ரெய்டு நடத்தினார்களே என்ன ஆனது?

அதை நடத்தியவர்களின் வீட்டில் தடபுடல் அசைவம் இல்லை என நம்புவோம்!

இருதயராஜ், தேவகோட்டை.

ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் அதிகாரிகள்தாம் குளறுபடிகள் செய்திருக்கிறார்கள் என்று சொல்லும் நீதிபதி சிவராஜ் படேலின் அறிக்கை பற்றி?

இநத அறிக்கையின் மூலம் சில குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள். இனி ஸ்பெக்டரம் தேசிய நெடுஞ்சாலையின் தங்க நாற்கரச் சாலையில் பயணிக்காது. ஏதோவொரு கிராமத்து மணல் தெருவில், அதுவும் அதன் சந்து பொந்துகளில் பயணிக்கும். இதைத்தான் இங்குள்ள தமிழ்நாட்டவர் சிலர் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஆர்.பொன்னுரங்கம், திண்டிவனம்.

இனி செல்போன் கட்டணம் உயரும் போலிருக்கிறதே?

அந்த ஒரு இலட்சத்து எழுதாயிரம் கோடியே அறுநூற்று நாற்பத்தைந்து ரூபாயை நம்மிடம் கறக்கிற வரைக்கும் இந்த உயர்வு அப்படியே இருக்குமா? யப்பா, வேண்டாம்ப்பா! லேண்ட் லைனே போதும். ஓல்ட் ஈஸ் கோல்ட்டுதான்.

பி.சபேசன், சேத்துப்பட்டு.

அறுபதில் கூட அரசியலுக்கு வராத ரஜினி இனி எப்போது அரசியலுக்கு வருவார்?

எப்போதும் வரலாம் ராஜாஜி சுதந்திரக் கட்சியைத் துவங்கிய பொழுது அவருக்கு வயது 81. அந்த வயதில் தொடங்கி, ஒரிசா மாநிலத்தில் ஆட்சியையே பிடித்தார். நம்ம ரஜினி ஏன் இன்னொரு ராஜாஜியாக இருக்கமாட்டார்?

ஏ.மாணிக்கம், ஆலந்தூர்.

தமிழகக் காங்கிரசாருக்கும் ஆட்சி ஆசை வந்துவிட்டதே?

எவ்வளவு காலம்தான் இவர்களும் ‘பா, பா, ப்ளாக் ஷிப் சொல்லிக் கொண்டிருப்பது? அதனால்தான் அந்த எல்.கே.ஜி.யிலிருந்து மாற நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பில் தப்பில்லை.

டி.பாஸ்கரன், பம்மல்.

இந்த அரசியல்வாதிகளை மூட்டை முடிச்சுகளோடு ஓட்டும் நாள் வருமா?

மூட்டை முடிச்சுகள் யாருடையவை? அதனுள் ஏதும் பெரிதாக இருக்கப்போகிறது. அவை நம்முடையவை. எனவே அவற்றை வைத்துக்கொண்டு இவர்களை மட்டும் அனுப்புவோம். இது நடக்குமா? ஏதாவது கனவில் கினவில் எழுதுகிறேனா?

எஸ்.தேவராஜன், மன்னார்குடி.

‘நான்’ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. ‘நாம்’ என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் என்ற கலைஞரின் சொல்நயம் பற்றி?

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனில் இலன்’ என்ற குறளை சொல்லிப் பாருங்கள். நம் உதடுகள் ஓட்டா. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்று பற்றி விடற்கு’ என்ற குறளை சொல்லிப் பாருங்கள். நம் உதடுகள் ஒட்டும். அப்படியானால் இக்கலைஞருக்கு முன்பே இன்னொரு கலைஞர் இங்கிருந்தார் என்றுதானே அர்த்தம்?

எஸ்.சுரேஷ், கோவிந்தாபுரம்.

தி.மு.க.விற்கு இலட்சம், கோடியெல்லாம் சுண்டைக்காயாக உள்ளதே?

பூஜ்யங்கள் என்ற ராஜ்யத்தையே பூஜ்யத்தில் வைக்க இவர்களால் மட்டுமே முடியும். இவாகள் அரசின் கடனும் இப்போது ஒரு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இப்போது சொல்கிறேன், பூஜ்யங்களில் மிஞ்ச இவர்களை விட்டால் ஆளே இல்லை.

மு.முஸ்தபா, கும்பகோணம்.

பார்வதி அம்மாவின் மரணம் பற்றி?

தமிழக முதல்வரின் பெருமுயற்சியால், உள்துறை அமைச்சகத்தின் மூலம் இவர் இந்தியா வந்து சிகிச்சை பெற வழிவகுப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் பார்வதியம்மாவின் ஆயுள் நீண்டிருக்கும். இந்த விஷயத்தில் தமிழக எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகள்அபாண்டமானவை.

எஸ்.இசக்கி, மதுராந்தகம்.

தமிழ் இணைய பல்களைக் கழகம் உருவானதால் என்ன இலாபம்?

வரவேற்கத்தக்க இம் முயற்சியால் தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு, தமிழ்மொழியின் வளர்ச்சி ஆகியவை பரவும். பட்டயப்படிப்பும் பட்டமேற்படிப்பும் தமிழுக்கு நல்லது. 1999இல் கனியவேண்டிய இம் முயற்சி மகாத் தாமதமாகக் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறது.

கே.மீனா, ஈரோடு-2.

‘இளைஞன்’ படம் வெற்றியா?

முரட்டு முதலீடு என்பதால் தோல்விப் படமாகிப் போன படங்களுள் இதுவும் ஒன்று. காலத்திற்கு ஒவ்வாத கதை; வசனங்கள்!

ஞா.செல்வன், தஞ்சை-1.

அண்மையில் வந்த படங்களுள் எதைப் பார்க்கலாம் என்று சிபாரிசு செய்வீர்கள்?

ஊகும்! இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை. பயணம், யுத்தம் செய், சிறுத்தை ஆகியவை மக்களின் வரவேற்பைப் பெற்ற படங்கள் என்கிறார்கள். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பூ.செல்வம், வடக்கன்குளம்.

தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்க யார் காரணம்?

எல்லோருடைய பங்களிப்பும்தான். வழக்கறிஞர்கள் மனம் வைத்தால் வழக்குகள் குறையும் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்யாதிருந்தால் விரைந்து பைசலாகும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்திற்குப்போகும் மக்களின் மனநிலையும் மாற வேண்டும். நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட நியாயவான்களைக் கொண்டு சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள முன்வரவேண்டும். நீதியரசர்கள் விரைந்து விசாரித்து காலத்தை வீணடிக்கும் வழக்கறிஞர்களிடம் கண்டிப்புக்காட்டி விரைந்து தீர்ப்பளிக்கவேண்டு. ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி வருடத்திற்கு 5000 வழக்குகளை முடிந்த காலம் உண்டு. இப்போது இதுவும் வெகுவாகக் குறைந்து போனது!

எஸ்.குணா, சென்னை-41.

தமிழக மன்னர்களைப் போல் தமிழக வாலிபர்கள் கடல் கடந்து போய் நாட்டைப் பிடிப்பார்கள் என்று வைகோ பேசியுள்ளாரே?

வைகோ இன்னமும் தனித் தமிழீழக் கனவில் இருக்கிறார். வைகோ மிகச் சிறந்த பேச்சாளர். இவர் பேச்சில் நகைச்சுவையே இல்லையே என நான் ஏங்கியது உண்டு. இது மெல்லத் தீர்ந்து வருகிறது!

கே.ராஜ்குமார், வடநெம்மேலி.

லிபியா, கடாஃபி பற்றிய பல்வேறு வதந்திகள் பற்றி…?

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அவர் நாட்டைவிட்டு ஓடவில்லை என்றே அறிவிக்கின்றன. விரைவில் உண்மை வெளியாகிவிடும் (இவர் என்ன?) ஆனால் ஒன்று ஜனநாயக ஆட்சி இல்லாத நாடுகளில் உள்ள மக்கள் எப்படி நெஞ்சுக்குள் நெருப்பை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

எஸ்.தேவி, ஒட்டப்பிடாரம்.

பேருந்து நாள் கொண்டாடுவதைப் பற்றி உயர்நீதி மன்றம் கண்டித்துள்ளதே?

பேருந்து நாள் உயரிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இதுவே வரவரப் பொது மக்களுக்கான இடைஞ்சல் நாளாக ஆகிவருவது கண்கூடு. வருடம்தோறும் சீரற்ற உறவு இருந்தாலும் ஒரு நாளாவது மாணவர்கள், போக்குவரத்து ஊழியர்களைத் தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் இப்பழக்கம் உயர்நீதி மன்றத்தையே உறுத்துமளவு ஆகிவிட்டது. பேருந்து நாளை நாகரிகத்துடனும் கண்ணியத்துடனும் கொண்டாடும் நாள் வரவேண்டும்.

வி.கருணாகரன், செங்கல்பட்டு

இன்றைய குழந்தைகளுக்குச் சிறுசேமிப்பை சொல்லிக் கொடுக்கலாமா?

ஓ! ஆனால் ஒன்று. இவர்களை குருவி போல் சேர்க்க விட்டு நீங்கள் கழுகு போலானால் அது சரிபட்டு வராது.

ப.ஆதிமூலம், இடைப்பாடி.

தி.மு.க. - அ.தி.மு.க. தேர்தல் பிரசார மேடைகள் வித்தியாசம் என்ன?

தி.மு.க.வில் தேர்தலில் நிற்க இடம் கிடைக்காது. ஆனால், அதன் மேடையில் உட்கார இடம் கிடைக்கும். அ.தி.மு.க.வில் தேர்தலில் நிற்க இடம் கிடைக்கும். ஆனால், அதன் மேடையில் உட்கார இடம் கிடைக்காது.

மெ.சுபாஷ், பூனே.

ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற சட்டம் தமிழகத்தில் உண்டா இல்லையா?

இந்த ஐயம் உயர்நீதி மன்றத்திற்கே வந்துவிட்டது. தமிழக அரசு சட்டம் போட்டதே தவிர, இது நடைமுறைக்கு வராதபடி பார்த்துக் கொள்கிறது. பாவம் காவல்துறை செயல்படுத்த முடியாதபடி உயர்நீதிமன்றத்திற்கும் அரசிற்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

பா.செல்லமுத்து, ஆரணி.

தி.மு.க.விடம் இதன் தோழமைக் கட்சிகள் முன்னிலும் அதிகமான இடங்களைக் கோருகின்றனவே, தி.மு.க. சமாளிக்குமா?

இதன்படி பார்த்தால் தி.மு.க.வுக்கு 214 இடங்களுக்குப் பதிலாக 334 இடங்கள் தேவை என நினைக்கிறேன். கூடுதலாகக் கேட்டால்தான் குறைக்கப்பட மாட்டாது என்பது தோழமைக் கட்சிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எப்படியும் அடங்கிப் போகவும் நல்லபடி (சிறுசிறு வருத்தங்களுடன்) முடியவும் வாய்ப்பு உண்டு. காரணம், எந்தப் பெரிய கட்சிக்கும் தனித்து நிற்கும் திராணி ஒருபோதும் இல்லை.

25 February 2011 ஜூனியர் கேள்வி-பதில்
18 February 2011 ஜூனியர் கேள்வி-பதில்
28 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
21 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
13 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
07 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
Tags:


Friday, 25 Feb 2011

healthy life

cool-fever.jpgநோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள்

உடல் நடுக்கம் தரும் காய்ச்சலா?

நுரையீரல்களில் திடீரென ஏற்படும் தொற்று நோய், நிமோனியா கிருமிகள், தூசு, காற்று இவற்றின் மூலம் பலவும் நோய் இது.

நெஞ்சில் குத்துவது போல் வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல், ஜலதோஷம், தலை - தொண்டை ஜில்லென்று இருத்தல் ஆகியவை நிமோனியா காய்ச்சலில் அறிகுறி. இந்நோய் இருந்தால் சளி பழுப்பு அல்லது துருப்பிடித்த இரும்பு போன்ற நிறத்தில் இருக்கும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும்.

நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு உடனே நவீன மருத்துவ முறைப்படி விரைந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இத்துடன் இயற்கை உணவுமுறைத் திட்டத்தைப் பின்பற்றினால் இந்த நோயை முற்றிலும் விரைந்து குணமாக்க முடியும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வந்தால் நுரையீரல்களில் அழச்சி ஏற்படுவதும், நிமோனியா நோய் தாக்குவது முன்கூட்டியே தடுக்கப்படும்.

முதல் மூன்று நாட்கள் ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாம்பழம், சாத்துக்குடி, தக்காளி, பப்பாளி - இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து சாறாக அருந்த வேண்டும். ஒரு கப் சாறு என்றால் அதே அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மொத்தம் ஐந்து வேளைகள் தினமும் அருந்தலாம். பிறகு ஒரு வாரம் பழங்கள், காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள் முதலியவற்றைச் சாப்பிட வேண்டும்.

இப்படிச் செய்தால் நிமோனியாக் காய்ச்சல் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும் இந்தக் காலகட்டத்தில் டீ, காபி, மது, சிகரெட், ஊறுகாய், இறைச்சி முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும், எண்ணெயில் பொறித்த உணவுகள் வேண்டாம்.

மணல்வாரி, கக்குவான், இருமல், ப்ளு, ப்ராங்க் டைஸ், ஆஸ்துமா ஆகிய நோய்களைத் தொடர்ந்து இந்த நோய் ஏற்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய் இது. எனவே, சுகாதாரமும், கவனமும் முக்கியம்.

நிமோனியா காய்ச்சல் வந்துவிட்டால் இஞ்சிச் சாறு எலுமிச்சை சாறு இவற்றில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும் அல்லது வெள்ளைப் பூண்டு, வெங்காயம் இவற்றைச் சாறாக்கி அருந்தவும். மூன்றாவதாக, துளசிச் சாறு, ஆரஞ்சுச் சாறு, காரட் சாறு இந்த மூன்றையும் மாற்றி மாற்றி அருந்தவும்.

நிமோனியா காய்ச்சலை கட்டுப்படுத்த எள்ளுருண்டை சாப்பிடலாம் அல்லது எள்விதைகளைக் கஷாயம் வைத்து இறக்கி, ஆறியதும் உப்பும் தேனும் சேர்த்து அருந்தலாம்.

தினமும் நான்கு வேளை வெந்தயக் காப்பி அருந்த வேண்டும். வெந்தய விதைகள் உடலில் நன்கு வியர்வையை உண்டு பண்ணி விஷப் பொருட்களை வெளியேற்றி விடும். இப்படிச் செய்தால் நிமோனியாக் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். இந்தக் காபியின் அளவைக் காய்ச்சல் குறையக் குறைய குறைத்துக் கொள்ளலாம். இந்தக் காப்பியில், விரும்பினால் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.

நிமோனியாக் காய்ச்சலை முன் கூட்டியே தடுக்க விரும்புகிறவர்கள் வெள்ளைப் பூண்டு, வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி, நல்லெண்ணெய், ஆரஞ்சு, ஆப்பிள், காரட் முதலியவற்றை அவ்வப்பேது சேர்த்து வந்தால் போதும். இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.இந்த எதிர்ப்புச் சக்தி மற்ற நோய்களையும் எதிர்க்கும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய பொதுவான நோய்களுக்கான உணவு முறைகள்

2011/02/18  காய்ச்சலை குணமாக்கும் உணவு முறை!

2011/02/11 ஒற்றைத் தலைவலியா?

2011/01/28 வழுக்கையா?

2011/01/21 தலைவலியா?

2011/01/13 ஜலதோஷமா?

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2011/01/07 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்…? - தொடர்ச்சி

2010/12/31 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Tags:


Friday, 25 Feb 2011

Head of Everyone

writer-lena2.jpgநான் ஏதோ அரசியலில் தலையங்கம் பற்றி எழுதப் போகிறேன் என்று எவரும் அவசரப்பட்டு முடிவிற்கு வந்துவிட வேண்டாம்.

பொதுவான தலைமைகள் என்று சொல்லப்படுகின்ற இல்லத் தலைமையையோ, நிறுவனத் தலைமையையோ ஒரு நிகழ்வின் தலைமையையோ பற்றியே குறிப்பிட இருக்கிறேன்.

பொறுப்பில் இருப்பதால் இவர்கள் சொல்லும் சொற்களுக்கு மதிப்பு அதிகம். பாராட்டி நான்கு வார்த்தை சொன்னால் கூட ‘அவரே சொல்லிட்டாரு’ என்று பலரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். தவறாகவோ, கடுமையாகவோ ஏதும் சொல்லி விட்டால், இருக்கும் பதவியின் எடை காரணமாக அதற்கும் வீரியம் அதிகம். இதன் கெடுதலான பலன்கள் பல மடங்கு அதிகம் என்கிறேன். மற்றவர்கள் இதே வார்த்தைகளைச் சொல்லியிருந்தால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிறேன். எனவே வார்த்தைகளில் வரையறை தேவை. தந்தை சொன்னால் மறுவார்த்தை பேசாத மகன்கள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். ‘ஏம்பா அப்படிச் சொன்னீங்க?’ என்று விளக்கம் கேட்ட நடுத்தரத் தலைமுறையும் இருந்தது. இன்று ‘முடியாது போ!’ என்று சொல்லுகிற மகன்கள் முளைத்துவிட்டார்கள்.

கேள்வி கேளாத கீழ்ப்படிதலை இங்கு உள் ஆன்மிகத் தலைமைகள் தங்கள் பக்தர்களிடம் எதிர்பார்க்கின்றன. நான் இளைஞனாக இருந்த காலத்தில் ஓர் ஆன்மிகத் தலைவர் அழைத்தார் எனறு போனேன். நாங்கள் ஒரு விஷயம் குறித்து உரையாடியபோது, ஒரு பெரிய மனிதர் வந்தார். அவரிடம் இந்த ஆன்மிகத் தலைவர், ஓர் ஊர்க் கோயிலைக் குறிப்பிட்டு, ‘அந்தக் கோயில் கும்பாபிஷேகம் உன் பொறுப்பு’ என்றார். பெரிய மனிதரின் தலை ஆடியதே தவிர, அவர்கள் சொன்ன செய்தி (ஐயோ! என் தலையில் கட்டிட்டீங்களே சாமி!’) எனக்குத்தான் தெரியும்.

தாய், தந்தை, ஆசிரியர், மரியாதைக்குரியவர்கள் என எவர் சொன்னாலும் நமக்கும் சரி என்று பட வேண்டும். கேள்வி கேளாத கீழ்ப்படிதல் யாருக்குப் பொருந்தும் என்றால்… மற்றவர்களின் இதயம் நுழைந்து அதில் ஆழ்ந்து தோய்ந்து அதன் அடிப்படையில் மனித நேயத்தோடும் சீர்தூக்கியும் செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும். இந்தக் குணம்தான் பல தலைமைகளிடம் இல்லையே!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2011/02/18  பரிசீலனை செய்யும் பண்பு!

2011/02/11 நம் நேரங்கள் எப்படிக் கசிகின்றன?

2011/01/28 கேள்வி கேளாத கீழ்ப்படிதல்

2011/01/21 நாமும் யந்திரன்களே!2011/01/13 அயர்வற்ற மனத்திற்கு உயர்வு தர என்ன வழி?

2011/01/07 ஐம்பது சதவிகித மனநிலையுடன் அணுகுவோம்!

2010/12/31 பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Tags:


Friday, 25 Feb 2011

vietnam travel

hanoi-temple.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

“மொழியால் அடிக்கிறாங்க இவங்க!”

கூசி போர்க்களத்தின் துப்பாக்கிச் சுடும் மையத்தில் எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சிக் காத்திருந்தது என்று குறிப்பிட்டு அதை உங்கள் ஊகத்திற்கு விட்டிருந்தேனே, நினைவிருக்கிறதா?

நம் நாட்டில் சரியாகச் சுட்டால் தண்டனை. வியட்நாமில் சரியாகச் சுட்டால் பரிசு!

ஆம். என் ஊகம் சரி! நான் சரியாகச் சுட்டேன் என்பதற்காகப் பரிசு கொடுக்கத்தான் என்னை அழைத்தார்கள்.

ஒரு பெரிய விண்ணப்பத்தாளை நீட்டினார்கள். அதில் மருந்திற்குக்கூட ஆங்கிலம் இல்லை. “இதைப் பூர்த்தி செய்யுங்கள்” என்றார்கள்.

“யோவ்! என்ன கிண்டலா பண்றீங்க? என்று கேட்கலாம் போலத் தோன்றியது. ‘வேண்டாம்யா உங்கள் பரிசும் கிரிசும் என்று சொல்லலாம் போல இருந்தது. அந்த விண்ணப்ப பாரத்தை மலங்க மலங்க விழித்தபடி மதுவிடம் பரிதாபமாக நீட்டினேன்.

‘மொழியால் அடிக்கிறாங்க இவுங்க. என்னைக் காப்பாத்துங்க மது சார்’ என்பது போல் இருந்தது என் பார்வை.

மதுவிடம் நீட்டக் காரணம் இருந்தது. இவர் வியட்நாமில் வெகு காலமாய் இருக்கிறார். வியட்நாமிய மொழியைக் கொஞ்சமாவது படிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.

இவரும் என்னைப் போலவே பார்வை பார்த்துவிட்டு, அந்த அதிகாரியிடம் வியட்நாமிய மொழியில் பேசினார். அவர் பேசியதை என்னால் ஊகிக்க முடிந்தது.

‘என் இந்திய நண்பருக்கோ எனக்கோ வியட்நாமிய மொழி தெரியாது. நானோ கொஞ்சம் பேசுவேன் என்று மது சொல்லியிருக்க வேண்டும்.

அவரோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. பூர்த்தி செய்து கொடுத்தால்தான் பரிசு. இல்லாவிட்டால் பரிசு கிடையாது. நடையைக் கட்டுங்க என்று பேசியதுபோலத் தெரிந்தது.

“என்ன மது சார்! இவனுங்க சரியான கிறுக்கனுங்களா இருக்கானுங்க! இங்கு சுட வருகிறவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கக் கூடாதா? வியட்நாமியர்களுக்கு மட்டும்தான் சரியாகச் சுடத் தெரியுமா? அவர்களுக்கு மட்டும்தான் பரிசா? இந்த அநியாயத்தை எங்க சார் போய்க் கேட்குறது?”

“இருங்க வர்றேன்.” என்று போனவர் வெகு தொலைவில் இருந்த எங்கள் கார் ஒட்டுநரிடம் போனார்.

போய்விட்டு, அவரை அழைத்து வராமல் வெறுங்கையுடன் வந்தார்.

“என்ன சொல்றார் நம்ம ஓட்டுநர்? அவரும் சரியாக இலக்குத் தப்பாம சுட்டாரே. அவராவது வந்து இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துப் பரிசு வாங்கிக்கலாமா? நமக்கும் பூர்த்தி செய்து தந்து உதவலாம்ல? அவர் உள்ளூர்காரர்தானே?”

“இதையேதான் நான் கேட்டேன்.”

“என்ன சொல்றார்?”

“அவருக்கு இவங்க தரும் பரிசெல்லாம் வேண்டாமாம்.”

“அடப் பாவி மனுஷா! எனக்காவது விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தந்து பரிசு வாங்க உதலாம்ல?” என்றேன்.

“இதையும் கேட்டேனே!”

“அதற்கு என்ன சொன்னார்?”

“அந்த விண்ணப்பப் படிவத்தைத் தூக்கி எறிஞ்சுட்டு வாங்க! நான் இராணுவத்தில ஆளுங்களையே சுட்டு வீரமெடல் வாங்கினேன். இவனுங்க தர்ற பரிசு எல்லாம் ஜுஜுபிங்கிறான்.”

“அவருக்கு ஜுஜுபியாக இருக்கலாம். வந்த இடத்தில் பழக்கமில்லாத முரட்டுத் துப்பாக்கியைத் தூக்கி இரண்டு குண்டுகளுள் ஒன்றைச் சரியாக இலக்கு நோக்கித் தைத்திருக்கிறேன். எனக்கு இந்த விருது பெரிசு இல்லையா?”

“இதையும் சொன்னேனே!”

“அட! என் மனசு அறிஞ்சு ஒண்ணு விடாமப் பேசியிருக்கீங்க.”

“பின்னே?”

“இதுக்கு என்ன சொன்னார்?”

“சிரிக்கிறான். இதெல்லாம் ஒரு பரிசுன்னு வாங்குறதுக்கு மெனக்கெடுறீங்களே வாங்க பேசாம! எவன் போய் இதுக்கெல்லாம் நேரம் செலவழிக்கிறதுங்குறான்.”

“ஆனாலும் உங்க ஓட்டுநருக்கு என் மனசு புரியமாட்டேங்குது. பரிசை வீட்டிற்கு வாங்கிட்டுப் போய் என் வட்டத்திலெல்லாம் காண்பிச்சுப் பெருமையடிக்கணும்போல இருக்குன்னு சொல்லுங்க.”

இல்லை. எங்க ஆளு சரிப்பட்டு வரமாட்டான். நான் சாட்சிக்காரனுக்குப் பதிலா சண்டைக்காரன் கிட்டேயே போகிறேன்.”

“என்னமாவது செய்து எனக்கு உரிய பரிசை வாங்கிக் குடுங்க.”

“சரி போறேன்” என்றவர் துப்பாக்கி குண்டுகள் விற்கும் கெளன்டருக்குள்ளேயே நுழைந்து பெரிய இரகளை செய்யாத குறைதான்.

மொழி தெரியாவிட்டால் நிச்சயம் நாங்கள் வீடு திரும்பியிருப்போம். மது வியட்நமிய மொழி பேசக் கூடியவராகைால் பெரிய விவாதத்தில் இறங்கிவிட்டார்.

ஒரு வழியாய் அந்த விண்ணப்பப் படிவத்துடன் வெளியில் வந்தார். என்னிடம் நீட்டி இதில் ஒரு கையெழுத்துப் போடுங்க என்றார்.

“பூர்த்தி செய்வது யார்?”

“அதெல்லாம் வேணாம். அவனுங்க பார்த்துப்பானுங்க. நீங்க ஒரு கையெழுத்து மட்டும் கடைசியில் போடுங்க” என்றார். மது குரலில் சற்றே பதற்றம் தெரிந்தது. உள்ளே சூடான விவாதம் போதும்.

கையெழுத்தை வாங்கிக் கொண்டு உள்ளே போனவர் நான் கணித்ததைவிட அதிக ரேம் எடுத்துக் கொண்டுவிட்டு வந்தார்.

ஏதோ பெரிய பரிசு உள்ளே இருந்து வரப்போகிறதாக்கும். துப்பாக்கி சுடும் மையத்தின் தலைவரே அதைக் கொண்டுவந்து பலர் முன்னிலையில் வழங்க, மது, ஜவஹர் மையத்தின் பொறுப்பாளர்கள் மத்தியில் பலத்த கரவொலியுடன் வாங்கப் போகிறேன் என்று கற்பனை செய்து பார்த்தால் - ஒன்றும் நிகழவில்லை.

“வாங்க போலாம்.” என்றார் மது.

“பரிசு?”

“குடுத்தானுங்க குடுத்தானுங்க!”

“என்ன மது சார் சலிப்பாப் பேசுறீங்க? குடுத்தாங்கன்னு சொல்றீங்க. வெறும் கையோட வர்றீங்க?”

“இந்தாங்க அந்தப் பரிசை நீங்களே பாருங்க” என்று மகாப் பொடிசான ஓர் அட்டை டப்பாவைக் கொடுத்தார். பிரித்துப் பார்த்தால் - அடச் சை! இதுக்குத்தானா இவ்வளவு போராட்டம் என்று தோன்றியது அந்தப் பரிசு”.

வெறும் ஒரு சாவிக் கோர்வை!

எப்படி இருந்திருக்கும் எனக்கு!

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2011/02/18  ஒருத்தனாவது சுடுறானா பார்ப்போம்!

2011/02/11 துப்பாக்கி சுடப் பழகிக் கொடு!

2011/01/28 குண்டுகளின் மழை நடுவே தரப்பட்ட கல்வி!

2011/01/21 வயது கூடிப்போன இரகசியம்!

2011/01/13 கீழுலகம் பார்த்தேன்

2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!

2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!

 2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Tags:


Friday, 25 Feb 2011

Junior kelvi pathil

thalaivar.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

நா.சிதம்பரம் நாச்சியப்பன், கல்லல்.

இன்றைய காதலர்கள்?

காதலிக்காக தாஜ்மகால் கட்டுவதாகச் சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் வேண்டாம். தாலிமட்டும் கட்டுங்கள் என்று சொன்னால் இந்த ஷாஜஹான்கள் காணாமல் போய்விடக் கூடும். இவர்கள்தாம் இன்றைய காதலர்கள்.

ஏ.அப்பு, கல்கி நகர்.

புதுச்சேரி அரசியலும் சூடு பிடித்திருக்கிறதே?

அங்கே இரண்டு சாமிகள் இருக்கிறார்கள். நாராயணசாமி, ரங்கசாமி. இருவருக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் இருவரில் யாருக்குக் கிடா வெட்டுகிறார்கள், யார் கிடாவாகிறார்கள் என்பது விரைவில் தெரியும்.

கே.வினோத்குமார், சென்னை-83.

நீங்கள் எதை நேசிக்கீறீர்கள்? தொலைக்காட்சியையா, வானொலியையை?

வானொலியை! கண்களுக்கு மூடும் வசதியும், காதுகளுக்கு மூடாத வசதியும் பிறவிலேயே இருப்பது கண்டு நீங்களே இதைத் தெரிஞ்சுக்கிட்டு இருக்கணும்.

ஜே.பிரகாஷ், சென்னை.

வாழ்க்கை எப்போது இனிக்கும்?

ஐம்பதுக்குப் பின்னால். அப்போதுதான் பலருக்கும் சர்க்கரை வருகிறது. அதுவும் ரேஷன் இல்லாத சர்க்கரை.

டி.கஜா, என்.எஸ்.கே.நகர்.

காதலர் தினம் தேவையா?

தேவை. 365 நாட்களுக்கும். இதற்காக ஒரு நாள் என்பது அது டுபாக்கூர் காதல்.

டி.மதன், கோயமுத்தூர்

வெங்காய விலை குறைத்துவிட்டதே?

ஒரு ஓட்டு வைத்துக் கொண்டு இந்த அரசாங்கத்தை நீங்கள் ரொம்பவே பாடாய்ப் படுத்துகிறீர்கள். இல்லாவிட்டால் வெங்காயம் போல இவர்களும் இவ்விஷயத்தில் அவர்கள் தோலை உரித்துக் கொள்ள வேண்டி வந்திருக்காது.

கே.சாமிநாதன், காட்டாங்கொளத்தூர்.

எகிப்து அதிபர் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறாரே?

எகிப்துக்கும் நான்கெழுத்து. இந்தியாவுக்கும் நான்கெழுத்து. பிரமிடுகளின் ஊர்க்காரர்களுக்கு உள்ள தைரியம் பிரமாண்டங்களுக்கு இல்லையேன்னு யோசிக்கிறேன்.

டி.ராஜா, சென்னை-60.

செல்போன் கட்டணங்கள் உயர்ந்தால்?

நிறுவனங்களுக்குள் போட்டி வராது. மிஸ்டு கால்களுக்குள் போட்டி வரும்.

பி.சுரேஷ்பாபு, காஞ்சிபுரம்.

மேடைகளில் இன்று முட்டைகள் வீசுவது குறைந்து வருகிறதே?

முட்டை விலை எகிறிப் போச்சு! அதனால் வார்த்தைகளையே அழுகவிட்டு அதை வீசுகிறார்கள். எப்படியோ - அழுகல்தான் மற்றவர்கள் மீது வீசுகிறார்கள்.

என்.கார்த்திக், அம்பத்தூர்.

தி.மு.க.வின் இன்றைய அரசியல்?

அண்ணா சொன்ன மல்லிகைகளுக்கு இன்று ஏகக் கிராக்கி! அதாங்க, மாற்றான் தோட்டத்து மல்லிகைகளுக்கு குளிர்பதனக் கிடங்குகளையே இப்போது ஏற்படுத்தி இருக்கிறார்கள். எவ்வளவு நாளானாலும் இவற்றைக் கெடாமல் வைத்திருக்க ஓரு ஐடியா!

எஸ்.பி.சீனிவாசன், சென்னை-24.

சோனியாவிடம் மன்னிப்புக் கேட்ட அத்வானி பற்றி?

ஸ்விஸ் கணக்கு விவகாரத்தில்தானே. இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும். அரசியலில் ஓர் அரிய மனிதர் அத்வானி!

எஸ்.வள்ளிசாய்ராம், சிங்கப்பூர்.

2 ஜி பிரச்சனை எப்போது அடங்கும்?

ஏ.கே. கங்குலிஜி, ஜி.எஸ்.சிங்விஜி என்ற இரண்டு ‘ஜி’க்கள் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வரை இந்த 2 ஜியானது 4ஜி, 8ஜி, 16 ஜி, 32 ஜி என்று பெருத்துப் போகுமே தவிர சிறுத்துப் போகாது. இதற்கு இந்த ஜூனியர் (ஜி) பொறுப்பு!

பி.ராஜசேகர், திருப்த்தூர்.

பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியிருக்கிறதே?

நாம் சாப்பிட்ட பாலைவிட, சாலைகள் சாப்பிட்ட பாலில் புரதச் சத்து கூடியது கண்டு மகிழ்ச்சி.

அந்தோனிராஜ், நாகை.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது பற்றி?

நம் மீனவர்கள் நமக்கு மனிதர்கள். ஆனால் இலங்கைக்கோ இவர்கள் மீன்களாகத் தெரிவது வேதனைக் காட்சி!

கே.எஸ்.லக்ஷ்மிநாராயணன், சென்னை-118.

காங்கிரஸில் சோனியாவை அடுத்து?

சோனியாஜிக்கு அடுத்து ஆர்.ஜி.தான்! அதில் என்ன சந்தேகம்? எதைச் சொன்னாலும் அதை ‘ஜி’யில் சொன்னால்தான் இப்போது மனசிலே நிக்குது.

வைகை பாலு, மதுரை-1.

இந்தியாவின் இன்றைய நடப்பு?

விலைவாசிகளும், ஊழல்களும் இன்று மாரத்தானில் உள்ளன. இந்த ‘ஜெயிக்கப் போவது யாரு?’ சீரியலைப் பார்த்துப் பார்த்தே நமது இந்தியர்கள் பசியாறிக் கொண்டிருக்கிறார்கள்.

பி.முருகன், கூடுவாஞ்சேரி.

மாயாவதியின் ஷூக்களைத் துடைத்த டி.எஸ்.பி., பதம்சிங்கின் சேவையைப் பற்றி?

ஏற்கெனவே காவல் துறையின் சிறந்த சேவைக்காக ஜனாதிபதியின் விருதைப் பெற்ற இவர், இந்த சேவைக்காகவும் அதே விருதை இன்னொரு முறை பெறலாம். பரிந்துரைக்க மாயாவதி தயார்! வாங்கிக் கொள்ள பதமும் ரெடி! பார்ப்பதற்குத்தான் நாம் இல்லை.

அப்துல் ஹமீது, வேலூர்.

‘ஆட்சியில் பங்கு’ என்ற தமிழக காங்கிரஸின் கோரிக்கை நியாமானதா?

நியாயமானதே. ஆனாலும் ஏற்பது இகழ்ச்சி என்பதை அறியாதவர்கள் ‘ஐயமிட்டு உண்’ என்பதையும் அறியாமல் இருப்பது நூற்றுக்கு நூறு சாத்தியமே.

சி.கே.மூர்த்தி, தஞ்சாவூர்.

கூட்டணித் தொகுதி உடன்பாடுகள் எப்போது முடியும்?

எந்தச் கடையிலும் சூட்கேஸ் விற்பனைகள் இன்னும் சூடுபிடிக்கவில்லை. அவை சூடு பிடித்தால்தான் தொகுதி உடன்பாடுகள் கைமாறிய மாதிரி அதுவரை இந்த கேள்வி கேட்கிற, இந்த பதில் சொல்கிற கைமாற்று எல்லாம் நமக்குள் வேண்டாம்.

எஸ்.மணிகண்டன், கோலடி.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்மோகன்சிங்கின் பேட்டியைப் பார்த்தீரா?

பார்த்தேன். எறும்பு ஒன்று தன் உள்ளங்கையில் பல குட்டி யானைகளைத் தாங்குகிற மாதிரி பல பிரச்னைகளை அவர் தாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த எறும்பைப் பார்த்தால், ஆச்சரியமாய் இருக்கு.

எஸ்.சுப்பிரமணி, பொன்னமராவதி

இப்போது டெலிபோன்கள் குறைந்து வருகின்றனவே!

ஆமாம். டெலிபோன்களை இப்போது ‘செல்’கள் அரித்து வருகின்றன.

2011/02/18  ஜூனியர் கேள்வி-பதில்2011/02/11  ஜூனியர் கேள்வி-பதில்

28 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்

21 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
13 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
07 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
Tags:


Page 1 of 10012345»...Last »