Posted on Saturday 7 January 2012
35ஆவது புத்தகக் காட்சி: மணிமேகலைப் பிரசுரத்தின் 25 நூல்கள் வெளியீடு: பிரமாண்ட விழா

சென்னை செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றுவரும் 35ஆவது சென்னை புத்தகக் காட்சியில் ஸ்டால் அமைத்துள்ள மணிமேகலைப் பிரசுரம் வழக்கம்போல இவ்வாண்டும் பிரமாண்டமான நூல் வெளியீட்டு விழாவை நடத்துகிறது. வரும் 14.01.2012 சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடக்கும் இவ்விழாவில் 25 நூல்கள் வெளியிடப்படுகின்றன.இந்த பிரமாண்டமான நூல் வெளியீட்டு விழாவிற்கான ஒருங்கிணைப்பை மணிமேகலைப் பிரசுத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் செய்துள்ளார்.

































