|

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
எம்.பரமேஸ்வரன், பொழிச்சலூர்.
|
 |
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
|
 |
வெள்ளைத் தாளில் வண்ணம் சேர்க்காமல் தகவல் தருவது. இந்த அறிக்கைியல் ‘நடந்தது என்ன?’ என்கிற நிஜம் இருக்கும். ஆனால் இன்றைய மைகளில் இரசாயனக் கலவை இருப்பதால் இந்த நிஜத்திலும் சிலரின் புஜங்கள் கலந்து விடுகின்றன.
|
|
 |
‘டென்ஷன்’ பாலு, அமைந்கரை.
|
 |
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை பெற்றவர்களுக்கெல்லாம் வீடு கிடைக்குமா?
|
 |
அடையான அட்டை என்பது ஒரு நிச்சயதார்தம். நிச்சயதார்த்தமெல்லாம் கல்யாணமல்ல.
|
|
 |
எஸ்.ரமணி, மதுரை.
|
 |
பதினோரு வயதிற்கு ஓட்டுரிமை வந்தால்?
|
 |
பள்ளியிலேயே தொழிற்சங்கங்கள் வரும். டீச்சரும், மாணவர்களும் மாறுபட்டு நிற்பர். தலைமையாசிரியர் இந்த இரண்டு பேரையும் எதிர்த்து ஒரு மதிய நேர உண்ணாவிரதம் இருப்பார்.
|
|
 |
பி.பரத், ஓசூர்.
|
 |
தே.மு.தி.க.விலும் இப்போது நிர்வாகிகள் மாற்றப்படுகிறார்களே?
|
 |
தே.மு.க.வும் இப்போது அ.தி.மு.க.மாதிரி ஆகிவிட்டது. இங்கேயும் உள்ளே வெளியே என்று பலர் மாற்றப்படுகிறார்கள். மொத்தத்தில் இரண்டு கட்சிகளும் இப்போது பிரணாயாமம் மாதிரி எதையோ செய்து கொண்டிருக்கின்றன.
|
|
 |
சி.பத்மப்ரியா, சென்னை-32.
|
 |
காய்கறிக் கடைகளில் ரெய்டு நடத்தினார்களே என்ன ஆனது?
|
 |
அதை நடத்தியவர்களின் வீட்டில் தடபுடல் அசைவம் இல்லை என நம்புவோம்!
|
|
 |
இருதயராஜ், தேவகோட்டை.
|
 |
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் அதிகாரிகள்தாம் குளறுபடிகள் செய்திருக்கிறார்கள் என்று சொல்லும் நீதிபதி சிவராஜ் படேலின் அறிக்கை பற்றி?
|
 |
இநத அறிக்கையின் மூலம் சில குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள். இனி ஸ்பெக்டரம் தேசிய நெடுஞ்சாலையின் தங்க நாற்கரச் சாலையில் பயணிக்காது. ஏதோவொரு கிராமத்து மணல் தெருவில், அதுவும் அதன் சந்து பொந்துகளில் பயணிக்கும். இதைத்தான் இங்குள்ள தமிழ்நாட்டவர் சிலர் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
|
|
 |
ஆர்.பொன்னுரங்கம், திண்டிவனம்.
|
 |
இனி செல்போன் கட்டணம் உயரும் போலிருக்கிறதே?
|
 |
அந்த ஒரு இலட்சத்து எழுதாயிரம் கோடியே அறுநூற்று நாற்பத்தைந்து ரூபாயை நம்மிடம் கறக்கிற வரைக்கும் இந்த உயர்வு அப்படியே இருக்குமா? யப்பா, வேண்டாம்ப்பா! லேண்ட் லைனே போதும். ஓல்ட் ஈஸ் கோல்ட்டுதான்.
|
|
 |
பி.சபேசன், சேத்துப்பட்டு.
|
 |
அறுபதில் கூட அரசியலுக்கு வராத ரஜினி இனி எப்போது அரசியலுக்கு வருவார்?
|
 |
எப்போதும் வரலாம் ராஜாஜி சுதந்திரக் கட்சியைத் துவங்கிய பொழுது அவருக்கு வயது 81. அந்த வயதில் தொடங்கி, ஒரிசா மாநிலத்தில் ஆட்சியையே பிடித்தார். நம்ம ரஜினி ஏன் இன்னொரு ராஜாஜியாக இருக்கமாட்டார்?
|
|
 |
ஏ.மாணிக்கம், ஆலந்தூர்.
|
 |
தமிழகக் காங்கிரசாருக்கும் ஆட்சி ஆசை வந்துவிட்டதே?
|
 |
எவ்வளவு காலம்தான் இவர்களும் ‘பா, பா, ப்ளாக் ஷிப் சொல்லிக் கொண்டிருப்பது? அதனால்தான் அந்த எல்.கே.ஜி.யிலிருந்து மாற நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பில் தப்பில்லை.
|
|
 |
டி.பாஸ்கரன், பம்மல்.
|
 |
இந்த அரசியல்வாதிகளை மூட்டை முடிச்சுகளோடு ஓட்டும் நாள் வருமா?
|
 |
மூட்டை முடிச்சுகள் யாருடையவை? அதனுள் ஏதும் பெரிதாக இருக்கப்போகிறது. அவை நம்முடையவை. எனவே அவற்றை வைத்துக்கொண்டு இவர்களை மட்டும் அனுப்புவோம். இது நடக்குமா? ஏதாவது கனவில் கினவில் எழுதுகிறேனா?
|
|
 |
எஸ்.தேவராஜன், மன்னார்குடி.
|
 |
‘நான்’ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. ‘நாம்’ என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் என்ற கலைஞரின் சொல்நயம் பற்றி?
|
 |
‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனில் இலன்’ என்ற குறளை சொல்லிப் பாருங்கள். நம் உதடுகள் ஓட்டா. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்று பற்றி விடற்கு’ என்ற குறளை சொல்லிப் பாருங்கள். நம் உதடுகள் ஒட்டும். அப்படியானால் இக்கலைஞருக்கு முன்பே இன்னொரு கலைஞர் இங்கிருந்தார் என்றுதானே அர்த்தம்?
|
|
 |
எஸ்.சுரேஷ், கோவிந்தாபுரம்.
|
 |
தி.மு.க.விற்கு இலட்சம், கோடியெல்லாம் சுண்டைக்காயாக உள்ளதே?
|
 |
பூஜ்யங்கள் என்ற ராஜ்யத்தையே பூஜ்யத்தில் வைக்க இவர்களால் மட்டுமே முடியும். இவாகள் அரசின் கடனும் இப்போது ஒரு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இப்போது சொல்கிறேன், பூஜ்யங்களில் மிஞ்ச இவர்களை விட்டால் ஆளே இல்லை.
|
|
 |
மு.முஸ்தபா, கும்பகோணம்.
|
 |
பார்வதி அம்மாவின் மரணம் பற்றி?
|
 |
தமிழக முதல்வரின் பெருமுயற்சியால், உள்துறை அமைச்சகத்தின் மூலம் இவர் இந்தியா வந்து சிகிச்சை பெற வழிவகுப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் பார்வதியம்மாவின் ஆயுள் நீண்டிருக்கும். இந்த விஷயத்தில் தமிழக எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகள்அபாண்டமானவை.
|
|
 |
எஸ்.இசக்கி, மதுராந்தகம்.
|
 |
தமிழ் இணைய பல்களைக் கழகம் உருவானதால் என்ன இலாபம்?
|
 |
வரவேற்கத்தக்க இம் முயற்சியால் தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு, தமிழ்மொழியின் வளர்ச்சி ஆகியவை பரவும். பட்டயப்படிப்பும் பட்டமேற்படிப்பும் தமிழுக்கு நல்லது. 1999இல் கனியவேண்டிய இம் முயற்சி மகாத் தாமதமாகக் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறது.
|
|
 |
கே.மீனா, ஈரோடு-2.
|
 |
‘இளைஞன்’ படம் வெற்றியா?
|
 |
முரட்டு முதலீடு என்பதால் தோல்விப் படமாகிப் போன படங்களுள் இதுவும் ஒன்று. காலத்திற்கு ஒவ்வாத கதை; வசனங்கள்!
|
|
 |
ஞா.செல்வன், தஞ்சை-1.
|
 |
அண்மையில் வந்த படங்களுள் எதைப் பார்க்கலாம் என்று சிபாரிசு செய்வீர்கள்?
|
 |
ஊகும்! இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை. பயணம், யுத்தம் செய், சிறுத்தை ஆகியவை மக்களின் வரவேற்பைப் பெற்ற படங்கள் என்கிறார்கள். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
|
|
 |
பூ.செல்வம், வடக்கன்குளம்.
|
 |
தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்க யார் காரணம்?
|
 |
எல்லோருடைய பங்களிப்பும்தான். வழக்கறிஞர்கள் மனம் வைத்தால் வழக்குகள் குறையும் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்யாதிருந்தால் விரைந்து பைசலாகும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்திற்குப்போகும் மக்களின் மனநிலையும் மாற வேண்டும். நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட நியாயவான்களைக் கொண்டு சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள முன்வரவேண்டும். நீதியரசர்கள் விரைந்து விசாரித்து காலத்தை வீணடிக்கும் வழக்கறிஞர்களிடம் கண்டிப்புக்காட்டி விரைந்து தீர்ப்பளிக்கவேண்டு. ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி வருடத்திற்கு 5000 வழக்குகளை முடிந்த காலம் உண்டு. இப்போது இதுவும் வெகுவாகக் குறைந்து போனது!
|
|
 |
எஸ்.குணா, சென்னை-41.
|
 |
தமிழக மன்னர்களைப் போல் தமிழக வாலிபர்கள் கடல் கடந்து போய் நாட்டைப் பிடிப்பார்கள் என்று வைகோ பேசியுள்ளாரே?
|
 |
வைகோ இன்னமும் தனித் தமிழீழக் கனவில் இருக்கிறார். வைகோ மிகச் சிறந்த பேச்சாளர். இவர் பேச்சில் நகைச்சுவையே இல்லையே என நான் ஏங்கியது உண்டு. இது மெல்லத் தீர்ந்து வருகிறது!
|
|
 |
கே.ராஜ்குமார், வடநெம்மேலி.
|
 |
லிபியா, கடாஃபி பற்றிய பல்வேறு வதந்திகள் பற்றி…?
|
 |
உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அவர் நாட்டைவிட்டு ஓடவில்லை என்றே அறிவிக்கின்றன. விரைவில் உண்மை வெளியாகிவிடும் (இவர் என்ன?) ஆனால் ஒன்று ஜனநாயக ஆட்சி இல்லாத நாடுகளில் உள்ள மக்கள் எப்படி நெஞ்சுக்குள் நெருப்பை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
|
|
 |
எஸ்.தேவி, ஒட்டப்பிடாரம்.
|
 |
பேருந்து நாள் கொண்டாடுவதைப் பற்றி உயர்நீதி மன்றம் கண்டித்துள்ளதே?
|
 |
பேருந்து நாள் உயரிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இதுவே வரவரப் பொது மக்களுக்கான இடைஞ்சல் நாளாக ஆகிவருவது கண்கூடு. வருடம்தோறும் சீரற்ற உறவு இருந்தாலும் ஒரு நாளாவது மாணவர்கள், போக்குவரத்து ஊழியர்களைத் தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் இப்பழக்கம் உயர்நீதி மன்றத்தையே உறுத்துமளவு ஆகிவிட்டது. பேருந்து நாளை நாகரிகத்துடனும் கண்ணியத்துடனும் கொண்டாடும் நாள் வரவேண்டும்.
|
|
 |
வி.கருணாகரன், செங்கல்பட்டு
|
 |
இன்றைய குழந்தைகளுக்குச் சிறுசேமிப்பை சொல்லிக் கொடுக்கலாமா?
|
 |
ஓ! ஆனால் ஒன்று. இவர்களை குருவி போல் சேர்க்க விட்டு நீங்கள் கழுகு போலானால் அது சரிபட்டு வராது.
|
|
 |
ப.ஆதிமூலம், இடைப்பாடி.
|
 |
தி.மு.க. - அ.தி.மு.க. தேர்தல் பிரசார மேடைகள் வித்தியாசம் என்ன?
|
 |
தி.மு.க.வில் தேர்தலில் நிற்க இடம் கிடைக்காது. ஆனால், அதன் மேடையில் உட்கார இடம் கிடைக்கும். அ.தி.மு.க.வில் தேர்தலில் நிற்க இடம் கிடைக்கும். ஆனால், அதன் மேடையில் உட்கார இடம் கிடைக்காது.
|
|
 |
மெ.சுபாஷ், பூனே.
|
 |
ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற சட்டம் தமிழகத்தில் உண்டா இல்லையா?
|
 |
இந்த ஐயம் உயர்நீதி மன்றத்திற்கே வந்துவிட்டது. தமிழக அரசு சட்டம் போட்டதே தவிர, இது நடைமுறைக்கு வராதபடி பார்த்துக் கொள்கிறது. பாவம் காவல்துறை செயல்படுத்த முடியாதபடி உயர்நீதிமன்றத்திற்கும் அரசிற்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.
|
|
 |
பா.செல்லமுத்து, ஆரணி.
|
 |
தி.மு.க.விடம் இதன் தோழமைக் கட்சிகள் முன்னிலும் அதிகமான இடங்களைக் கோருகின்றனவே, தி.மு.க. சமாளிக்குமா?
|
 |
இதன்படி பார்த்தால் தி.மு.க.வுக்கு 214 இடங்களுக்குப் பதிலாக 334 இடங்கள் தேவை என நினைக்கிறேன். கூடுதலாகக் கேட்டால்தான் குறைக்கப்பட மாட்டாது என்பது தோழமைக் கட்சிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எப்படியும் அடங்கிப் போகவும் நல்லபடி (சிறுசிறு வருத்தங்களுடன்) முடியவும் வாய்ப்பு உண்டு. காரணம், எந்தப் பெரிய கட்சிக்கும் தனித்து நிற்கும் திராணி ஒருபோதும் இல்லை.
|
|
 |
|
|
April 12th, 2011 at 7:01 am
நீதியரசர்கள் விரைந்து விசாரித்து காலத்தை வீணடிக்கும் வழக்கறிஞர்களிடம் கண்டிப்புக்காட்டி விரைந்து தீர்ப்பளிக்கவேண்டு. ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி வருடத்திற்கு 5000 வழக்குகளை முடிந்த காலம் உண்டு. இப்போது இதுவும் வெகுவாகக் குறைந்து போனது!best words also true