» 2011 » January .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Healthy life

Posted on Friday 28 January 2011

hair lossநோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள் - கே.எஸ்.சுப்ரமணி

முடி கொட்டுகிறதா?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் போதுமான அளவு சத்துணவு சாப்பிடாததினால்தான் பெரும்பாலும் முடி கொட்டுகிறது.

நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆகவும் கொழுப்பும், புரதமும் உடலில் நன்கு சேரவும் பைரிடாக்ஸின் என்னும் வைட்டமின் தேவை.

பால், ஈரல், அரிசி, கோதுமை, காரட், வேர்க்கடலை, கீரைவகைகள் முதலியவற்றில் இந்த வைட்டமின் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலின் எல்லா உறுப்புகளின் “செல்”களும் நன்கு வளரவும், ஆரோக்கியமாகத் திகழவும் ஃபோலிக் அமிலம் தேவை.

மேற்கண்ட உணவு வகைகளுடன் பட்டாணி, பீன்ஸ் முதலியவற்றையும் உணவில் தவறாமல் சேர்த்து வந்தால் முடிகொட்டுவது கட்டுப்படுத்தப்பட்டு, செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.

முடிகள் வெள்ளையும் கருப்புமாக கலந்து காணப்பட்டால் அதுவும் இள வயதிலேயே இக்குறை காணப்பட்டால் ; இது புரதச்சத்து குறைவால் ஏற்பட்ட நிகழ்வே.

இவர்கள் பால், தயிர், சோயா பீன்ஸ், முட்டை, சீஸ், மீன் முதலியவற்றை உணவில் நிறைய சேர்த்து வரவேண்டும்.

முடி கொட்டுவதுடன் செம்பட்டையாகவும் மாறிக் காட்சியளித்தால் இவர்கள் முருங்கைக் கீரை, வெல்லம், ஈஸ்ட் முதலியவற்றைத் தினமும் சேர்த்து வரவேண்டும். நீளமான கூந்தலுக்கு ஆசைப்படும் பெண்கள் வெல்லக்கட்டி, கருப்பட்டி முதலியவற்றைச் சாப்பிடலாம்.

முடியின் நிறம் தொடர்ந்து கறுப்பாக இருக்கப் பட்டாணியிலும், முட்டையின் மஞ்சள் கருவிலும் உள்ள செம்பு உலோகச் சத்து உதவுகிறது. இரும்புச் சத்துள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்து வந்தால் அதிலிருந்தே போதுமான அளவு செம்புச் சத்து நம் தோலுக்கும் தலைமுடிக்கும் கிடைத்து விடுகிறது.

முடி கொட்டுபவர்களும், செம்பட்டையான முடியை உடையவர்களும் “பி” வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு வருவது நல்லது.

குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கும், குடும்பக் கவலையால் ஆண்களுக்கும் முடிகொட்டும். இவர்கள் மீன், நண்டு போன்ற கடல் உணவுகளுடன் அன்னாசி, பேரிக்காய், டர்னிப் கீரை, வெள்ளைப் பூண்டு, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வரவும். இது உற்சாகமான மனநிலையைத் தரும். இரத்தம் சுத்தமாக மாறுதல், தலைமுடி, பற்கள், தோல் முதலியவை ஆரோக்கியமாக இருக்கவும் இவை உதவுகின்றன.

இரத்த சோகை, டி.பி, தைராய்டுக் கோளாறு ஆகியவை உள்ளவர்களுக்கு முடி சாம்பல் நிறத்திலோ அல்லது நரைத்தோ காணப்படும். இவர்களும் ஊட்ட உணவைத் திட்டமிட்டுச் சாப்பிட்டு வந்தால் நோய்களும் குணமாகி தலைமுடியும், முடி கறுப்பாகச் செழித்து வளரும். உணவில், கறிவேப்பிலை சட்னியை தினமும் சேர்த்தல் மிக நல்லது.

அம்லா ஆயில் என்ற சொல்லப்படும் நெல்லிக்காய்த் தைலம் முடிக்கு மிகவும் சிறந்தது. சூடான கடுகு எண்ணெயில் மருதாணி இலையைப் போட்டுச் சிறிது நேரம் கழித்து இறக்கி ஒரு பாட்டிலில் இந்த ஆறிய எண்ணெயை ஊற்றி வைத்துக் கொள்ளவும். மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் போல் தலையை நன்கு பிடித்து விடவும். சில வாரங்களில் இதன் மூலம் முடி நன்கு அபரிமிதமாக வளர ஆரம்பிக்கும்.

குறைந்த செலவில் ஃபேன்ஸி ஸ்டோர்களில் “காஷ்மீர் குசம்” என்ற பொருள் கிடைக்கிறது. சுண்டுவிரல் அளவில் ஒரு பாட்டிலில் சிவப்பு நிற எண்ணெயும், ஒரு கைப்பிடி அளவு எல்லா மூலிகைகளும் கலந்த பட்டைகளும் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்த காஷ்மீர் குசத்தை 1/4 அல்லது 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலக்கி வைத்துக் கொண்டு தினமும் தலையில் (குளித்த பிறகு) தேய்த்துத் தலைச் சீவிக் கொண்டால் போதும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் முடி நன்றாக வளர்ந்து விடும். முடி வளர்வதற்குக் குறைந்த செலவில் கிடைக்கும் இயற்கையான மருந்து இது. மிகவும் சக்தி வாய்ந்தது.

முடி கொட்டாமல் நரைக்காமல் செம்பட்டையாக மாறாமல் இருக்க முதல் அம்சமாக ஈரல், கோதுமை, ஈஸ்ட், பட்டாணி, முருங்கைக்கீரை ஆகியவற்றைப் போதுமான அளவு உணவில் சேர்த்து வாருங்கள்.

இரண்டாவது அம்சமாக இரும்புச் சத்து மிகுந்த திராட்சை, பேரீச்சை, பீட்ரூட், கிஸ்மிஸ் திராட்டை, ஸ்பினாஷ், கீரை முதலியவற்றுக்கு உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்.

அடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் காரட் சாறு அருந்தி வாருங்கள். நன்கு பயன் தெரியும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய பொதுவான நோய்களுக்கான உணவு முறைகள்

2011/01/13 ஜலதோஷமா?

2011/01/21 தலைவலியா?

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2011/01/07 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்…? - தொடர்ச்சி

2010/12/31 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 6:03 am
Filed under: Uncategorized
Home seeks personality

Posted on Friday 28 January 2011

writer-lena.jpgவீட்டில் அடைந்து கிடக்கும் விபரீத மனிதர்கள்!

இந்த உலகமே ஒரு கல்விச் சாலை. நம் சக மனிதர்களே அதில் ஆசிரியர்கள். வீட்டின் வெளியேதான் சவால்கள். அவையே அக் கல்விச் சாலையின் அங்கீகரிக்கப்படாத சோதனைச் சாலைகள் (Practical Labs) இவற்றை உணராதவர்கள் எந்த ராணுவமும் விதிக்காத தண்டையை ஏற்றுக் கொண்டு பர்மாவின் புரட்சித் தலைவியாம் ஆங்சூமி போல வீட்டுச் சிறைவாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.

அழைப்பிதழ் கொடுத்தால், எவன்போவான் அவ்வளவு தூரம் என்பார்கள். செலவுக்கு எவன் கொடுப்பான் என்பார்கள். என் வீட்டு விசேஷத்திற்கு இவன் வந்தானா என்பார்கள். மழை கொட்டுகிறது என முகம் சுளிப்பார்கள். வெயிலோ வெயில் என அலறுவார்கள். டிக்கெட் கிடைக்காது என்று அளப்பார்கள். போன இடத்தில் எனக்கு மரியாதை இருக்காது என்று கற்பனை செய்து கொள்வார்கள். எனக்கென்ன இலாபம் என்பார்கள்.

கண்காட்சி என்றால் கண்டு என்ன ஆகப்போகிறது என்பார்கள். பொருட்காட்சி என்றால் பொருட்செலவு என்பார்கள். இசை நிகழ்ச்சி என்றால் இசையமாட்டார்கள். நடன நிகழ்ச்சி என்றால் அசைய மாட்டார்கள். கலை நிகழ்ச்சி என்றால் களைத்துப் பேசுவார்கள்.

வீடு எதையும் பெரிதாகக் கற்றுத் தருவது இல்லை. வெளி உலகிற்கு வாருங்கள். அடிவாங்குங்கள். அவமானப்படுங்கள். புதுக்காற்று வாங்குங்கள் நுரையீரலில் இதுவரை புகாத ஆக்ஸிஜன் நுண்ணறைகளுக்கு உயிர் கொடுங்கள்.

உங்களை மதிக்கவில்லையா? வேகம் வரும். நீங்கள் சமுதாயத்தில் எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று விசேஷங்களின் போதுதான் உங்களுக்கே தெரியவரும்.

எல்லோரும் மதிக்கிறவர்களா? இதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேகம் வரும். வெளி உலக வலத்தால் உடலுக்கு கஷ்டமா? உள்ளம் உரம் பெறும் மனத்திற்குக் கஷ்டமா? மனம் பக்குவப்படும்.

வாருங்கள் நல்லது கெட்டதில் கலந்து கொள்ளுங்கள். கல்விச் சாலை கற்றுத் தருவதெல்லாம் அதிகபட்சம் 25 வருடங்களே! அதுவும் பணம் சம்பாதிக்கும் பாடங்களை மட்டுமே. வெளி உலகம் கற்றுத் தருவதோ வாழ்நாள் வழிமுறைகளை!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2011/01/21 நாமும் யந்திரன்களே!2011/01/13 அயர்வற்ற மனத்திற்கு உயர்வு தர என்ன வழி?

2011/01/07 ஐம்பது சதவிகித மனநிலையுடன் அணுகுவோம்!

2010/12/31 பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 5:57 am
Filed under: Uncategorized
Bill of Rights - Patient Guide

Posted on Friday 28 January 2011

doctor.jpgமருத்துவ ஏழைகள்

மருத்துவர்கள் நம் மரியாதைக்குரியவர்கள். கடவுளை நம்பாதவர்கள்கூட, ஓர் உயிரைக் காப்பாற்றுபவர்களாக மருத்துவர்கள் ஆகும்போது அவர்களை நடமாடும் கடவுளாகவே எண்ணி வணங்குகிறார்கள். வணக்கங்களைக் காலடியில் சமர்ப்பிப்பவர்களும் உண்டு.

புனிதத் தொழிலான மருத்துவம் இன்று கறைபட்டு வருவதை மறுப்பதற்கில்லை.

என் உடன்பயின்ற நண்பர் ஓர் ஆச்சரியமான தகவலைச் சொன்னார். ஸ்கேனிங் செயயப் பல ஆயிரம் வாங்குகிறார்கள் அல்லவா சோதனை மையங்களில் இந்த ஆயிரங்களில் நல்ல சதவிகிதப் மருத்துவர்களுக்குப் போகிறதாம்.

என் மருத்துவ நண்பர் கண்டபடி செல்போனில் பேசுவார். வெளிநாடுகளுக்குக் கூடப் பேசுவார். என்ன இப்படி சர்வசாதாரணமா வெளி நாடு பேசுறீங்க என்று கேட்டால் பில்லுக்கு நானா கொடுக்கிறேன் என்று கண் சிமிட்டுவார். இதற்கு எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளுங்கள்.

பெரிய விலைகளைக் கொடுத்து கோடிக் கணக்கில் மருத்துவ சோதனைக் கருவிகளை வாங்கிப் போட்டு அவற்றிற்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சில சாதாரண நோயாளிகள் படுக்கையாளிகளாக ஆக்கப்படும் அவலமும் நிகழ்கிறது.

மனிதர்களுக்காக இயந்திரங்களா? அல்லது இயந்திரங்களுக்காக மனிதர்களா? புதுக்கேள்வி ஒன்றையும் இதனோடு சேர்க்கலாம் போலிருக்கிறது. மருத்துவர்கள் சிலரே இயந்திரமயமாகிப் போனார்களா?

நீங்கள் காப்பீடா? அப்படியானால் 60,000 பில். நீங்கள் கொடுக்கப்போகிறீர்களா? அப்படியானால் 25,000 பில் என்று சொல்கிற மருத்துவ மனிதர் உண்டா இல்லையா? சாதாரணத் தலைவலி, நெஞ்சுவலிக்கெல்லாம் பல்லாயிரமும் ஐந்து இலக்கத் தொகையும் தீட்டுகிற மருத்துவமனைகள் சென்னையில் உண்டு. உள்ளே நுழைந்தாலே ஐந்து இலக்கத் தொகைக்குக் குறையாத பில்களை நீட்டுகிற மருத்துவமனைகள் உண்டா இல்லையா? நட்சத்திர ஓட்டல் போல நட்சத்திர மருத்துவமனைகள் கொழுத்த பர்ஸ் உள்ளவர்களை மட்டுமல்லாமல் அப்பாவிகளையும்கூட அல்லவா தண்டிக்கின்றன.

வைத்தியத்திற்கு பிளாஸ்திரிதான் டிரேட் மார்க். நோயாளிகளின் வாய்க்குமல்லவா இது போடப்படுகிறது? கேட்டால் பயங்கரமான மருத்துவ வார்த்தைகளைச் சொல்லி, மிரட்சி அடையச் செய்கிறவர்கள் உண்டா இல்லையா?

மத்திய மாநில அரசுகள் பெரிதாகப் பீற்றிக் கொள்கின்றனவே தவிர, இந்தியன் ஒருவனுக்கு அரசுகள் செய்கிற செலவு வருஷத்திற்கே 19 ரூபாய்தான். (மாலத்தீவுகூட 751 ரூபாய்) மருத்துவக் காப்பீட்டுக் கணக்கெல்லாம் மேலுக்குத்தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்தால் இன்றைய மருத்துவ உலகம் தன்னால் இயன்ற அளவு புதிய ஏழைகளை உருவாக்கி வருகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2011/01/21 மன்னித்து உயர்ந்த முதல்வர்!

2011/01/13 கண் திறக்கும் கல்விப் படப்பிடிப்பு!

2011/01/07 வெங்காயம் விதைத்த புதிய விதை

2010/12/31 அரசு இயந்திரத்தை எதிர்பார்க்கும் தனியார் இயந்திரங்கள்!

2010/12/24 ஜனநாயகம் தழைப்பது யார் கையில்?

2010/12/17 தெரியவில்லை புரியவுமில்லை!

2010/12/10 தோற்ற போதிலும் இது வெற்றியே!

2010/12/03 வெள்ளியையும் வெண்கலத்தையும் தங்கங்களாக்குவோம்!

2010/11/26 அரசியல் நாடகத்தின் இடைவேளை!

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 5:19 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 28 January 2011

red-dragon-halong-bay.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

குண்டுகளின் மழை நடுவே தரப்பட்ட கல்வி!

கூ சி கிராமத்தை வியட்நாமே கதாநாயகர்களின் கிராமம் என்றே அழைக்கிறது.
காரணம் அமெரிக்கா குண்டு மழை பொழிந்தபோது கொல்லப்பட்ட பொதுமக்கள் ஏராளம். வெளியே நடப்பது அறிந்தும் குகையில் வாழ்ந்தவர்கள் வெளியேறவில்லை.

குகைகளின் சில பகுதிகளைத் துளைத்த குண்டுகள் ஓரளவு குகைவாசிகளைக் கொன்றபோதும் பிணங்களை உள்ளேயே அடக்கம் செய்துவிட்டு மூன்று மாத காலம்கூட வெளியேறாமல் இருந்திருக்கிறார்கள்.

இந்தப் பொறுமை, சகிப்புத்தன்மை, சுதந்தர வேட்கை இந்தக் கிராம மக்களையே நாயகர்களாக்கிவிட்டது.

குகைக்குள் இருக்கும் மக்களுக்கு இரவு நேரத்தில் உதவும் எண்ணத்தில் குண்டு மழை பொழிந்தபோதும் கிராமத்தை விட்டுக் காலி செய்ய மறுத்துவிட்டனர். குகை இரகசியங்களை அமெரிக்க வீரர்கள் கழுத்தறுத்தாலும் சொல்வதில்லை என்று பிடிவாதம் காட்டினர்.

அமெரிக்கப் போர் வரலாறுகளில் கூ.சி.மக்களைப் போல் காண்பதரிது என்பதால் ஜான் டைசன் என்கிற அமெரிக்க இராணுவ மேஜர் குறிப்பிட்டது மிகைப்படுத்தப்படாத உண்மை.

கூ சி மக்கள் மட்டும் எங்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் நாங்கள் வியட்நாமை எப்போதோ பிடித்திருப்போம் என்று எழுதிச் சொல்கிறார் இந்த டைசன்.

வேறு வழியில்லாததால் குகை வழியே இரசாயனக் கலவைகளை உள்ளே புகை வடிவில் செலுத்தினோம். இதற்கெல்லாம் பெரிய பலன் கிட்டவில்லை. குகைவாழ் கொரில்லாக்கள் இதற்கு மசியவும் இல்லை என்று தம் நூலில் குறிப்பிடுகிறார் டைசன்.

“1993 இல் 9 மாடிகள் கொண்ட Benduce என்கிற ஆலயத்தை இங்கு அமைத்தோம். இது கூ சி மக்களுக்கு நாங்கள் அளித்த கெளரவம். இதனைச் சுற்றி மலர்த்தோட்டங்கள் உண்டு. இதைக் கடைசியாகக் காண்போமா?” என்று கேட்ட எங்கள் வழிகாட்டிக்கு, நான் தான் பதில் சொன்னேன்.

“எல்லாம் பார்த்து முடிந்தபின் நேரமிருப்பின் ஆலயம் பார்க்கிறேன்.”

காலங்காலமாக அமில மழையும் குண்டுகளுமாய் அமெரிக்கப் படைகள் வீசித் தொலைத்ததால் இன்று கூ சியின் தண்ணீரே கெட்டுவிட்டது. மண் தன் இயல்புத் தன்மையை இழந்துவிட்டதால் விவசாயமும் சரியில்லை” என்றார் வழிகாட்டி.

“போர் முடிந்து இரு தலைமுறை தாண்டியும் வாழ்வதற்கு இலாயக்கற்ற பகுதியாக கூ சி ஆகிவிட்டதும் இது இன்னும் ஒரு தலைமுறைக்கு வாழ்வதற்குத் தகுதியற்ற பூமியாக இருப்பதும் பெரிய சோகங்கள்” என்பதும் வழிகாட்டியின் கருத்து.

நடந்து, உடல் குனிந்து, நெளிந்து, வளைந்து நீண்ட தூரம் சென்றதும் ஒரு வாழும் அறை வந்தது. “இதுதான் சமையலறையாக அந்தக் காலத்தில் இருந்தது” என்றார் வழிகாட்டி.

ஒரு சாப்பாட்டு மேடை இருக்க, இதனைச் சுற்றி நாற்காலிகள் பல போடப்பட்டிருக்க ஒரு வியட்நாமியப் பெண்மணி கைகளில் நிறையத் தட்டுகளுடன் வந்து எங்கள் அனைவர் முன்னிலையிலும் அவற்றுள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார்.

எல்லாமே சிறு தட்டுகள். மையத்தில் அவிக்கப்பட்ட ஒரு வகைக் கிழங்குகளை வைத்தார்.

“எடுத்துக்குங்க” என்றார் ஜவஹர். எடுத்தேன், ருசித்தேன்.

நம்மூர் மரவள்ளிக் கிழங்கு போன்றது அது. நல்ல பசி. ஒரு வெட்டு வெட்டலாம் என்றால் இரு விஷயங்கள் தடுத்தன.

முதலாவது ருசி. தொண்டையைத் தாண்ட மறுத்தது! இரண்டாவது பரவாயில்லை உள்ளே தள்ளிவைக்கலாம் என்றால்கூட வைக்கப்பட்ட தட்டின் அளவு, டேய் ஏகமாய்த் தின்னே - அசிங்கம்டா! என்று சொல்லாமல் சொன்னது.

இந்த அடுப்பில் சமைத்தால் புகை வெளியே வராது. புகை, வெளியானால் இரண்டு கஷ்டம். ஒன்று மூச்சடைப்பு வரும். இரண்டாவது எதிரிகளுக்கு இருப்பிடத்தை அடையாளம் காட்டிவிடும்” என்றார் வழிகாட்டி.

“அதெப்படி புகை வராத சமையல்?” கேட்க நினைத்து விட்டு விட்ட கேள்வி இது.

புகை வரா அடுப்புக்கூட ஏதோ போர்க் கருவி போலத்தான் இருந்தது.

மறுபடியும் ஏரிப்பாதையில் நடந்து ஓர் அறையை அடைந்தோம். “இதுதான் இராணுவக் கலந்தாலோசனைக் கூடம்” என்றார் வழிகாட்டி. இந்தக் கூடத்தின் படம் இந்த இதழில் வெளியாகியுள்ளதைப் பாருங்கள்.

இந்த அறையின் சுவர்கள் செதுக்கி வைக்கப்பட்டபடி இன்னமும் அப்படியே இருக்கிறது. சிமெண்ட் பூச்சு இல்லாமலே அப்படி ஓர் உறுதி காட்டுகிறது. பெயர்ந்து விழும் மண்ணாகவும் செதுக்க முடியாப் பாறையாகவும் இல்லாமல் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு அப்படியே இருக்கிறது.

படத்தின் முன்பகுதியில் இருப்பவை சிலைகள். அவர்களின் உடைகள், நெற்றிப் பட்டைகள், தொப்பிகள் அந்தக் காலத்து வியட்நாம் கொரில்லாக்கள் எப்படித் தோற்றமளித்தார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாய் எங்களுக்கு விளக்கியது.

என்னையும் என்னருகில் அமர்ந்திருக்கும் மதுசூதனனையும் தவிர அனைவரும் பொம்மைகள். மூலையில் வியட்நாமிய - கம்யூனிசக் கொடிகள் இவற்றினை ஒட்டி ஏதோ வரைபடங்கள்.

அறையில் மூக்கைத் துளைக்கிற விரும்பமுடியாத பூஞ்சக் காளான் நெடி. எப்படா வெளியில் எழுந்து ஓடலாம் என்கிற மனநிலையையே வளர்ந்தது. இதற்குள்ளே இதனைச் சகித்துக் கொண்டு மாதக் கணக்கில் வாழ்ந்திருக்கிறார்கள்! ஐயோ! மகத்தானவர்கள்தாம் இந்த வியட்நாமியர்கள்.

வெளியில் வந்த நடந்தால் ஓர் ஓலைக் குடிசை முழுக்கக் கண்ணி வெடிகளின் காட்சியரங்கம் “இவை இன்னமும் வெடிக்கத் தக்கவையா?”

“தெரியாது. தொடக்கூடாது என்றுதான் கம்பால் தடுத்திருக்கிறார்கள். வெடித்தாலும் வெடிக்கலாம் யார் கண்டார்கள்?”

“இதென்ன வகுப்பறை போல?”

‘வகுப்பறையேதான். இளைய தலைமுறை போரின் காரணமாகக் கல்வியறிவை இழந்துவிடக்கூடாது என்று போர்க்களங்களுக்கு நடுவே வகுப்பறைகளும் நடந்திருக்கின்றன!” என்றார் எங்கள் வழிகாட்டி.

கூ சி யில் அந்தக் காலத்து வகுப்பு எப்படி நடந்தது என்பதற்கு ஆதாரமாக ஒரு படத்தை இங்கே தந்திருக்கிறேன். மழைநடுவே வகுப்பு நடந்திருக்கலாம். குண்டு மழை நடுவே வகுப்பு நடந்த கோலம் உலகில் எங்கேனும் உண்டா?

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2011/01/21 வயது கூடிப்போன இரகசியம்!

2011/01/13 கீழுலகம் பார்த்தேன்

2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!

2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!

 2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 2:24 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 28 January 2011

sangamam.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எல்.மகேந்திரன், கும்பகோணம்.

தலைமைச் செயலக நிர்வாகம் எப்படியிருக்கிறது?

தீபாவளி சீசனில் ஜவுளிகளில் பெண்கள் கலைத்துப்போட்ட புடவைகள் மாதிரி இருக்கிறது. அம்மாவின் மதுரைக் கூட்டம் இவர்களுக்கு தீபாவளியானது. அந்தத் தீபாவளிக்குப் பின் எந்த ஃப்ளோரிலும் ஒழுங்கில்லை. எல்லாமே கலைந்து கிடக்கிறது.


நா.நாச்சியப்பன், கரூர்.

இன்றைய அப்பா மகன் உறவு?

பல வீடுகளில் இதுதான் நிலைமை! கஞ்சி போட்ட ஒரு காடா துணி இஸ்திரி போடாமல் இருந்தால் எப்படி இருக்கும்? அது மாதிரி இருக்கிறார்கள். முறுக்கிக் கொண்டு அவ்வளவு சுருக்கமாய்.


ஆர்.அசோகன், கோயமுத்தூர்.

கணக்கில் நீங்கள் எப்படி?

நானா? நாலில் ஒன்று போனால் இரண்டு சைபர் என்று சொல்லும் அளவிற்கு இராமானுஜத்திற்கு எதிர்த்த வீட்டுக்காரன்.


எம்.ஞானம், தேவகோட்டை.

இன்றைய கட்டுமானத் தொழிலாளர்கள்?

இவர்கள் பிட்டுக்கு மண் சுமக்கும் தொழிலாளர்கள் அல்ல. நாளொன்றுக்கு ஐநூறு கட்டுக்கு மண் சுமக்கும் தொழிலாளர்கள். நமது வீடு உயரம் ஏறுகிறதோ இல்லையோ இவர்களின் ஊதியம் அன்றாடம் ஏறுகிறது.


மு.பரமசிவம், தூத்துக்குடி.

எந்த மேடையிலும் ஸ்டாலின் புள்ளி விவரங்களாக அடுக்குகிறாரே?

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? புள்ளிக்குப் பிறந்தது அதுவும் புள்ளியாகத்தான் இருக்கும்.


எஸ்.அஞ்சலி, மதுரை-1.

மன்மோகன்சிங் புனிதமான அரசா?

இவர் அரசில்தான் உத்திராட்சப் பூனைகள் அதிகம். சொல்லப்போனால், அமைச்சர்களுக்கு எட்டாதபடி அனைத்துக் கோப்புகளையும் உறியில் வைத்தால்கூடத் தேவலைன்னு ஆயிடுச்சு.


ஆர்.மெளலி, பொள்ளாச்சி.

சங்கமம் நிகழ்ச்சிகளின் பின்னணியில் என்ன நடக்கிறது?

தெரியாது. ஆனால் மறக்கப்படும் எத்துணையோ நாட்டுப்புறக் கலைகள் புத்துயிர் பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல நாட்டுப்புறக் கலைஞர்களின் முகத்தில் மட்டுமல்ல அவர்களது இல்லங்களும் களை கட்டி வருகின்றன. பார்வையாளர்களின் மகிழ்ச்சிக்கும் கவலை மறப்பதற்கும் கலைகள் காரணமாகின்றன என்கிறபோது பின்னணி என்னவாக இருந்தால் என்ன? யார் என்ன சாதித்துக் கொண்டால் நமக்கென்ன என்று தோன்றுகிறது.


பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.

தமிழகத்தில் வரும் தேர்தல்கள் எவ்வாறிருக்கும்?

எல்லா கட்சிகளும் இப்போதுதான் புள்ளிகளைப் போடுகின்றன. இவற்றில் கோலங்களைப் போட்டால்தான் எந்தக் கோலம் பரிசுக்குரியது என்று சொல்ல முடியும்.


ச.மெய்யநாதன், இராமனாதபுரம்.

ஓட்டுக்குப் பணம் தர யார் காரணம்?

அரசியல்வாதிகள் ஆரம்பித்தார்கள். மக்கள் இன்று கேட்கிறார்கள். ‘கடை விரித்தேன்; கொள்வாரில்லை’ என்று புலம்பும் வள்ளலாராக இன்று எந்த அரசியல்வாதியும் இல்லை ‘கடை விரிக்கும் முன்பே ஈயாக மொய்க்கிறார்கள் மக்கள்.


ஏ.ஏகம்பை, திருச்சி.

சுயநலம் எப்போது காணாமல் போகும்?

கல்யாணமானபின் ஆணுக்குப் போகும். கல்யாணமாகி குழந்தை பெற்ற பிறகு ஆண் பெண் இருவருக்கும் காணாமல் போகும். அதுவரை தனக்கு தனக்கு என்று இருந்தவர்கள், அதன் பிறகு பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று அலைவார்கள்.


எஸ்.பாண்டியன், விருத்தாசலம்.

டாக்டர் ராமதாஸ்?

நேற்று செய்தியாக இருந்தவர் இன்று செய்திச் சுருக்கமாக இருக்கிறார். அதுவும் கூட்டணி தெரியாததால் கூட்டணி தெரிந்தால் நாளையே இவர் ஒரு துணுக்காகலாம்.


டி.கெளசல்யா, சேலம்.

தமிழகத்தில் இனி வாரிசு அரசியல்கள்தானா?

அதை ஏன் கேட்கிறீங்க? இனி நேரடி வாரிசுகளோடு, சின்ன மாமனுடைய மூன்றாவது மருமகளுக்கு அக்கா கணவருக்கு தங்கை மாப்பிள்ளைக்கு மைத்துணி மகன்கூட வாரிசு என்று வரலாம். எல்லாம் நம்ம தலையெழுத்து!


எம்.அஷரப்அலி, தொண்டி.

இளவட்டங்கள் கல்லைத் தூக்கினால்தான் திருமணமென்றால்?

பல கல்யாணங்கள் நடவா! எல்லா கல்யாண மண்டபகங்களும் மீண்டும் சினிமாத் தியேட்டர்களாகிவிடும்.


எஸ்.இருதயராஜ், பாளையங்கோட்டை.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி உறுதிதானே?

கலைஞரின் ரக்ஷாபந்தன் கயிறு அவ்வளவு சீக்கிரத்தில் அறாது. இதுவரை எப்போதாவது தூங்குகிறவர் இப்போது இதற்காகவே தூங்காமல் இருக்கிறார்.


மா.முருகவேல், திண்டிவனம்.

மணல் தட்டுப்பாடு, மணல் விலையேற்றம் - நிலைமை மாறுமா?

தமிழகம் மணல் வளம் படைத்த மாநிலம். (கேரளத்தில் இருப்பவர்களைக் கேளுங்கள் சொல்வார்கள்) 185 மணல் குவாரிகள் இருந்தும் மணலுக்குத் தட்டுப்பாடு; அநியாய விலை. மணல் வரவரத் தங்கப் பொடியாக ஆகிவருகிறது. கிடைக்காத சிரமத்தால் கட்டட வேலைகள் பாதிப்பு ஏற்பட்டு, அப்படியப்படியே நிற்கின்றன. கட்டுமானத் தொழிலாளர்கள் வருமானமின்றி சிரமப்படுகிறார்கள். இந்நிலையை உருவாக்கியவர்கள் அரசியல் பின்புலம் உடையவர்கள், சுயநலப்போக்கினர். இவர்களிடமிருந்து மீள உயர் பொறுப்பில் இருக்கிறவர்கள் மனம் வைத்தால்தான் உண்டு.


கா.செல்வி, ஆத்தூர்.

புகளூர் காகித ஆலை பார்த்திருக்கிறீர்களா?

இல்லை. நான் மதிக்கும் மகத்தான தொழிற்சாலை. இலாபம் ஈட்டும் மிகச் சில அரசு ஆலைகளுள் ஒன்று. சாதனைச் சாலை, புகளூர் என்பது பொருத்தமில்லை புகழூர் என்பதே பொருத்தம்.


எஸ்.புவனேஸ்வரி, தேனி.

குளிர் இந்த ஆண்டு அதிகம் என்ன சொல்கிறீர்கள்?

சென்னை ஏற்காடாகிவிட்டது. ஏற்காடு கொடைக்கானலாகிவிட்டது. கொடைக்கானல் ஊட்டியாகிவிட்டது. ஊட்டி இமயமாகிவிட்டது. மனித இனம் இயற்கைக்குப் பகைமையாய் நடக்கிறது. இயற்கை பதிலுக்குப் பழிவாங்குகிறது.


சி.ராமதாஸ், முகப்பேர்.

தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் ஒரே கூட்டணிக்குள் வந்தால்?

காக்டெய்ல் பார்ட்டியில் புளியோதரையையும் உப்புமாவையும் சேர்த்த கதைதான்!

21 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
13 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
07 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 2:18 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 21 January 2011

headache.jpgநோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள்
ஆசிரியர் : கே.எஸ்.சுப்ரமணி

பொதுவான நோய்களுக்கான உணவு முறைகள்

தலைவலியா?

தலைவலி பல்வேறு காரணங்களால் வருகிறது. குறிப்பாக எளதில் கோபமடைகிறவர்களுக்கும், எதிர்மறையாகச் சிந்திக்கிறவர்களுக்கும் வருகிறது.

பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தி முடிவில் தலைவலியாக வந்துவிடுகிறது. குடியின் பின்விளைவாகவும் தலைவலி வரும்!

தொற்றுநோய், சத்துணவுக் குறைவு, இரத்தசோகை முதலியவற்றாலும் தலைவலி வரும்.

ஒற்றைத் தலைவலி உட்பட எல்லாவிதமான தலைவலிகளையும் உணவுப் பழக்கத்தில் மூலம் குணப்படுத்தலாம். வலி நிவாரணிகளை விடச் சிறந்தமுறை இதுதான்.

தொடர்ந்து தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் பத்து நாட்கள் ஆப்பிள் வைத்தியத்தைப் பின்பற்றவும். காலையில் வெறும் வயிற்றில் தோல் சீவிய ஆப்பிள் துண்டுகளை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். பி1, பி12, பி6 ஆகிய வைட்டமின்களின் குறைவால்தான் தலைவலி வருகிறது. ஆப்பிளில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் தக்க அளவில் உள்ளன.தொடர்ச்சியாக இப்படிச் சாப்பிட்டு நாள்பட்ட தலைவலியிலிருந்து விடுபடலாம். ஆனால் இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த வைத்தியம் வேண்டாம்.

காலையில் எழுந்ததும் தலையின் பின்பக்கம் தலைவலி வந்தால் அது அதிக இரத்த அழுத்தத்தினால் வரும் தலைவலி. இவர்கள் ஆப்பிள் சர்பபிடுவதுடன் இருபது நிமிடங்கள் கால்களை வெந்நீர்த் தொட்டிக்குள் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். இதன் மூலம் தலைவலி குணமாகும்.

“திடீர்திடீர்” என்று தலைவலியால் தாக்கப்படுபவர்கள் முளைக்க வைத்த கோதுமை, ஆட்டு ஈரல், கைக்குத்தல் அரிசி, நிலக்கடலை, சூரியகாந்தி எண்ணெய், வாழைப்பழம், பட்டாணி முதலியவற்றைத் தங்கள் உணவில் அடிக்கடி இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சாறாக ஆப்பிள், காரட், வெள்ளரிக்காய் முதலியவற்றையும் பருக வேண்டும்.

அலுவலகத்தில் இருக்கும்போது தலைவலி வந்தால்?

பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாம். உங்கள் உடல் பற்றி நன்கு தெரிந்த டாக்டரிடம் இதுபற்றி ஆலோசனை பெற வேண்டும். இரண்டாவதாக சுக்குக் காபி அல்லது இஞ்சிக் சாறு சாப்பிடலாம். இந்த இரண்டில் எதைப் பயன்படுத்தினாலும் தலைவலி குணமாகும்.

தலைவலியுடன் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் ஆகியவை இருந்தால் அன்றைய தினம் மூன்று வேளையும் ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய்ச் சாறு சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஏதாவது ஒரு கீரையும் சேர்த்து வரவேண்டும். இதன் மூலம் தலைவலியுடன் ஜலதோஷமும் காய்ச்சலும்கூடப் பறந்து போய்விடும்!

இரத்த சோகை நோயாளிகள் தங்கள் உணவில் இரும்புச் சத்து உள்ள உணவைச் சேர்ப்பதில் கவனமாக இருந்தால் தலைவலியைத் தவிர்க்க முடியும்.

ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு நல்ல காற்று அவசியம் தேவை. புதுக் காற்றுக்கு ஒற்றைத் தலைவலியைக் குணமாக்கும் ஆற்றல் உண்டு. தக்காளி, தயிர், எண்ணெய்ப் பதார்த்தங்களை இத்தகைய நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

தலைவலிக்காகக் கண்ணாடி அணிந்துள்ளவர்கள் கண்களை மேலும் கீழும் சுற்றிப் பயிற்சி செய்வது நல்லது. வைட்டமின் பி, வைட்டமின் சி உள்ள உணவுகளையும் சேர்த்து வர வேண்டும். இதன் மூலம் விரைவில் தலைவலிக்காகக் கண்ணாடி அணிவதைத் தவிர்க்க முடியும்.

நீண்ட நேரம் படிக்க மேன்ச விளக்கை உபயோகியுங்கள். டியூப் லைட் அடியில் நீண்ட நேரம் படிப்பதால் தலைவலி வருகிறது. குப்புறப் படுத்துக்கொண்டு படிப்பதாலும் சிலருக்குத் தலைவலி வருகிறது.

சரியான சத்துணவுத் திட்டத்துடன் மனத்தில் எப்போதும் நல்ல சிந்தனைகளே இருந்தால் தலைவலியே வராது!

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய பொதுவான நோய்களுக்கான உணவு முறைகள்

2011/01/13 ஜலதோஷமா?

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2011/01/07 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்…? - தொடர்ச்சி

2010/12/31 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 1:04 am
Filed under: Uncategorized
Keep in touch!

Posted on Friday 21 January 2011

kalkandu-lena.jpgநாமும் யந்திரன்களே!

நட்பிலும் உறவிலும் தொழில் தொடர்புகளிலும் அன்பாய், பாசமாய் உயிருக்குயிராய்ப் பழகிவிட்டு, திடீரென்று விலகிப் போய்விடுகிறவர்கள் நம் வட்டத்தில் உண்டா இல்லையா?

புது நட்பில் அறிமுகங்களும் தொடர்புகளும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியிலோ, அல்லது வாழ்வின் தேவை அல்லது அவசர ஓட்டத்திலோ இவர்களைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ, இவர்களைத் தேடிக் கொள்வதோ இல்லை. அந்த அளவிற்கு நாம் யந்திரர்களாக ஆகிப்போனோம். சிலரோ ‘நிம்மதி’ என்று எண்ணும் தந்திரர்களாகவும் ஆகிப்போனார்கள். இவர்கள் மீது சற்றே கவனம் செலுத்தினால் குறைந்தா போய்விடுவோம்?

இவர்களுக்கு நம்மீது என்ன வருத்தம்? நம்மைப் பொறுத்தவரை ஏன் இப்படி உருவமாய் இருந்து மாறிப் போனார்கள் என்கிற கேள்விகளை எழுப்பிக் கொண்டு முகவரி, தொலைபேசி எண் பெற்றுப் பேசி நேரில் தேடிப் போய்ப் பார்த்துப் பேசினால் வலுவான காரணங்களோ வலுவற்ற காரணங்களோ தெரிய வரும்.

நாம் அணுகிய அன்பால் நெகிழ்ந்துபோய் வலுவான காரணங்களைக் கூட மறந்துவிட முன்வருவார்கள். வலுவற்ற காரணங்கள் இருப்பின் இந்த நட்பு உறவு அந்தக் கணமே புதுப்பிக்கப்பட்டுவிடும்.

இதைச் சாக்காக வைத்துக் கொண்டு சிறுசிறு நல் நிகழ்வுகளுக்கு இவர்களை அழைக்கலாம். இதற்கிடையில் பழங்கதைகளைப் பேச வேண்டி வரும். இது வாழ்வின் சுவையைக் கூட்டும்.

‘மீண்ட சொர்க்கம்’ என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அது வேறு ஒன்றுமில்லை. இதுதான்.

இப்படிப்பட்ட மீண்ட சொர்க்கங்களுள் சில, ஏன்தான் புதுப்பித்துத் தொலைத்தோமோ என்றும் வரும். இதற்கும் தயாராகுங்கள்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2011/01/13 அயர்வற்ற மனத்திற்கு உயர்வு தர என்ன வழி?

2011/01/07 ஐம்பது சதவிகித மனநிலையுடன் அணுகுவோம்!

2010/12/31 பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 1:00 am
Filed under: Uncategorized
TN Assembly revokes suspension of AIADMK members

Posted on Friday 21 January 2011

karunanadhi.jpgமன்னித்து உயர்ந்த முதல்வர்!

ஆரோக்கியம் குறைவான தமிழக அரசியலில் ஆரோக்கியமாகச் சில அபூர்வ நிகழ்வுகளும் நடக்கின்றன என்பதற்கு அண்மைச் சம்பவம் ஒன்று உதாரணமாகத் நிகழ்கிறது.

தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றியபோது அதைத் தடுக்கும் விதத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் நடந்து கொண்டது மிகவும் தவறான செயல்.

இதற்கென இவர்கள் இந்தச் சட்டசபைக் கூட்டத் தொடர்வரை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை மறுபரீசீலனை செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) சிவபுண்ணியம் (இ கம்யூனிஸ்ட்), நன்மாறன் (மார்க்சிஸ்ட்) சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.) போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் தமிழக முதல்வர் இந்த ஆணையை இரத்து செய்திருக்கிறார்.

சட்டமன்றத்திற்கு இவர்கள் வராததே நல்லது; சட்டமன்றத்தில் இவர்கள் இல்லாமல் இருப்பதே நிம்மதி என்று எண்ணாமல் சரி சரி வாருங்கள் என்று தமிழக முதல்வர் சொல்லியிருப்பது அரசியல் நாகரிகத்தில் ஒரு மணி மகுடம்.

வேறு சில காரணங்களுக்காக இதற்கு முன்னர் க.அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டபோது, சட்டமன்ற வாயிலை மறிக்கவில்லை; போட்டிச் சட்டமன்றம் ஏதும் வெளியே நடத்தப்படவில்லை. கேலியும் கிண்டலும் செய்ததாகத் தெரியவில்லை. தி.மு.க.வினர் இந் நிலைக்கு ஆளானபோது மற்ற சகோதர அரசியல் கட்சிகளால் ஆதரித்துப் பேசப்படவில்லை.

ஆளுநர் கண்ணியத்திற்கு உரியவர். தமிழகத்தின் முதல் மனிதர்; தலையாய மனிதர். இவருக்கே இந்தக் கதி என்றால்? ஏதோ திட்டமிட்டு நடந்தது போலத் தானே?

நம் சட்டமன்றமும் அதன் செயல்பாடுகளும் தமிழக மக்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டே இயக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளோ துணைக்கட்சிகளோ, ஆளுங்கட்சியோ இவர்கள் அனைவரின் நோக்கமும் இலக்கும் மக்களின் நன்மைதான்.

இந்த அடிப்படைக் கருத்தில் தெளிவு இல்லாதவர்களோ விருப்பம் இல்லாதவர்களோதான் முட்டி மோதிக் கொண்டு காரியத்தைக் கெடுப்பார்கள். ஆனால், ‘மைனாரிட்டி தி.மு.க. அரசு’ என்று வாக்கியத்திற்கு வாக்கியம் சேர்த்துக் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிற ஜெயலலிதா, இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்களையும் இயக்கமின்றி நடந்து கொள்ளச் செய்வது அரசியலில் வரவேற்கப்படவேண்டிய அம்சம் அல்ல.

தமிழக அரசியலில் நம் முதல்வர் ஆரம்பித்து வைத்திருக்கும் இந்த நாகரிக அரசியல் போக்கை வண்ணம் பூசிவிடாமல் புரிந்து கொண்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப நல்ல தூண்டுகோல் என்பேன்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2011/01/13 கண் திறக்கும் கல்விப் படப்பிடிப்பு!

2011/01/07 வெங்காயம் விதைத்த புதிய விதை

2010/12/31 அரசு இயந்திரத்தை எதிர்பார்க்கும் தனியார் இயந்திரங்கள்!

2010/12/24 ஜனநாயகம் தழைப்பது யார் கையில்?

2010/12/17 தெரியவில்லை புரியவுமில்லை!

2010/12/10 தோற்ற போதிலும் இது வெற்றியே!

2010/12/03 வெள்ளியையும் வெண்கலத்தையும் தங்கங்களாக்குவோம்!

2010/11/26 அரசியல் நாடகத்தின் இடைவேளை!

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 12:30 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 21 January 2011

mighty-mekong.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

வயது கூடிப்போன இரகசியம்!

ஏதடா வம்பு இது! இப்படி வந்து ஏடாகூடமாய் இந்தக் கூ சி சுரங்கத்தில் வகையாக மாட்டிக்கொண்டோமே என்று தோன்றியது.

என் பின்னால் தொடர்ந்து வருவதாக ஜவஹரையும் மதுவையும் நானாக எண்ணிக்கொண்டது தவறாகப் போயிற்று. அவர்கள் உள்ளூர் மனிதர்கள். இந்தக் கூ சி போர்க்களச் சுரங்கத்தைச் சில தடவையோ பல முறைகளோ பார்த்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கென்ன தலைவிதி? உடம்பைக் குறுக்கி, உடம்பில் சிராய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள இது என்ன வேண்டுதலா?

ஏதோ சமையல்கட்டு வரும் சமைத்த கிழங்குகளைக் கொடுப்பார்கள் என்றார்களே மதுவும் ஜவஹரும் அது எப்போது வரும்? அவித்த கிழங்குகளைத் தராவிட்டால் கூடப் பரவாயில்லை. சமையல் கட்டு வந்தாலாவது சற்று நிமிரலாமே! அது சற்று உயரமாக இருக்குமே!

ஆனால் இந்தப் பாதை என்னடாவென்றால் இப்படிக் குறுகிக் குறுகிச் சிறு குழந்தை போலத் தவழும் நிலைக்கு நம்மை ஆக்கிவிடும் போலிருக்கிறதே!

இது என்ன மனிதர்கள் பயன்படுத்திய குகைகள் தானா இல்லை நரிகளின் வளைகளா? இப்படியா மகாச் சிறியதாய் ஆகிக்கொண்டே போகும்?

இப்படித்தானே சிந்தித்து என் சிந்தனை சிதறிச் சிதறி விதவிதமாய் விலக ஆரம்பித்தது இந்த கூ சி பாதையைப் போலவே!

இந்த சிறு நேர நடையே (நடையா இது இப்போதே 80 வயது ஆன மாதிரி ஆகிப் போனேனே) படாதபாடு படுத்துகிறதே எப்படித்தான் இந்தச் சுரங்கங்களிலேயே வாழ்ந்து சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பதற்காக வியட்நாமிய மக்கள் பெரும் போரை ஒரு வல்லரசுக்கு எதிராக நிகழ்த்தினார்களோ தெரியவில்லை! அடேங்கப்பா!

அதுவும் இப்படியே 200 கிலோ மீட்டர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையே!

இதனாலேயே இந்த இடத்திற்கு ‘The steely land and the bronge citadel’ என்று ஒரு பெயர் உண்டாம். இதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள் வியட்நாமியர்கள். என் தாய் மாமா நடராஜனிடம் வியட்நாம் கதைகளை நிறையக் கேட்டேனே! பல சொன்னவர் ஏன் இந்தக் கூ சி பற்றிச் சொல்லவே இல்லை.

70 கிலோ மீட்டர் தூரத்தில்தானே இருந்திருக்கிறார்? ஒருவேளை அவரே பார்த்தது இல்லையோ அல்லது இந்தச் சின்னப் பையனுக்கு (எனக்குத் தாங்க!) இந்தக் கதையெல்லாம் எதற்கு என்று சொல்லாமல் விட்டிருப்பாரோ அல்லது இந்தப் பேச்சு வந்தும் நினைவில் வந்திருக்காதோ? இப்படி நெஞ்சில் பலவிதக் கேள்விக் கொக்கிகள்.

திடீரென ஒருவித ஒளி இயற்கையான சூரிய ஒளிதான்.

அட! வெளி வாயில் தெரிகிறதே! ஓ! பாதை கூடப் பெரிதாகிறதே!

ஆம்! பாதை விசாலமடைய வெளிவாயில் வந்தே விட்டது!

அப்பாடா! மெல்லப் பாதை உயரமாகிறது. அட! நிமிர முடிகிறது. இடுப்புக் கடுத்த பெண்ணைப் போல இடுப்பைப் பிடித்துக் கொண்டு முனகாத குறைதான்!

வெளியே வந்தால் -

ஜவஹரும் மதுவும் ஒருமித்த குரலில் கேட்கிறார்கள், சிரித்த படி எப்படி இருந்தது டனல்”?

“டனாலா இது? முதுகு, இடுப்பு பணால்! பேசாமல் உங்களைப் போலவே நிலப்பரப்பின் வழியாகவே வந்திருக்கலாம் போலிருக்கிறது.

இதை அன்று ஒப்புக்குச் சொன்னேனே தவிர, பிறகு எண்ணிப் பார்த்தபோது இன்று இதை எழுதும்போது இந்த அனுபவம் கட்டாயம் பெறப்பட்டிருக்கத்தான் வேண்டும் என்று தோன்றியது.

மது, ஜவஹரிடம் உரையாடியபோது மேலும் சில தகவல்கள் கிடைத்தன. எங்கள் வழிகாட்டியும் சில தகவல்களைச் சொன்னார்.

ஒரு காலத்தில் ஹோ சி மின்னின் மக்கள் தொகை 2 இலட்சமாக இருந்ததாம். இவர்களுள் 80,000 பேர் இந்த கூ சி குகைக்குள்தான் மறைந்து வாழ்ந்து போரிட்டிருக்கிறார்கள்.

“எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லையே” நிலத்திற்கு அடியில் 80,000 பேர் வாழ்வதா எப்படிச் சாத்தியம்?.

“போரிடும் குணமும் சுதந்தர தாகமும் இருந்தால் எதுவும் சாத்தியம்!”

“200 கிலோ மீட்டர் நீளமே தவிர, குகையின் பரப்பளவு 420 சதுர கிலோ மீட்டர்”.

“யப்பா”.

“உலகிலேயே அதிகமான அமிலக் குண்டுகள் வீசப்பட்ட பகுதி இதுதான். அமெரிக்கர்கள் தங்களால் நுழைய முடியவில்லை என்று இந்தக் குகைக்குள் மோப்ப நாய்களை அனுப்பியிருக்கிறார்கள். போன நாய்கள் திரும்பியதே இல்லையாம். சில தினங்கள் கழித்து அவை வெகுதூரத்தில் பிணமாக வீசப்படுமாம்!

“அடேயப்பா!” இந்தச் சுரங்கப்பாதைகள் தோண்டப்பட்ட காலம்

“1940களில்” சரிவும் பாதிப்பும் எற்படவே 1960 இல் மறுபடி புதுப்பிக்க ஆரம்பித்தனர்”

“இந்தப் போராட்டமெல்லாம் இளைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கிறதா”

“வியட்நாமிய மாணவ மாணவியர் தங்கள் வாழ்நாளில் தங்கள் நாட்டில் காண விரும்பும் இடத்தில் தலையாயது இதுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2011/01/13 கீழுலகம் பார்த்தேன்

2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!

2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!

 2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 12:20 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 21 January 2011

children-cellphone-talking.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

தேவி இந்திரா, பட்டாபிராம்.

அதிகம் பேசுகிறவர்களைப் பற்றி?

எப்போதும் இன்-கமிங் என்றால் ஃப்ரீ அவுட்கோயிங் என்றால் காசு. இது இன்றைய சின்னக் குழந்தைகளுக்கும் தெரியும். எனவே அதிகமாய்க் கேட்டு கொஞ்சமாகப் பேச வேண்டும். இது ஏனோ பலருக்குப் புரிவது இல்லை.


டி.முருகன், சேலம்.

உங்களிடம் பிடித்தது உங்களின் சிரிப்பு என்று சொல்பவர்களைப் பற்றி?

இதைக் கேட்டு நான் சிரித்தால் அது காமெடியாகும். எனவே காமெடிக்குப் பல்கட்ட நான் விரும்பவில்லை.


எல்.வெங்கிட்டு, பள்ளப்பட்டி.

மன்மோகன்சிங் ஸ்பெக்ட்ரமில் கரையேறுவாரா?

அவர் பேக் ஸ்ட்ரோக்கில் இருக்கிறார். பேக் ஸ்ட்ரோக்கில் இருப்பவர் எப்படி கரையேற முடியும்? முகத்துவாரத்திற்குத்தான் போக முடியும்.


ஸ்ரீராம்.பி, பொழிச்சலூர்.

இன்றைய அவசர உணவுகள்?

இவை பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது செரிக்கும்படியாக இல்லை. நமது உடம்மை இவை மருந்துக் கிடங்குகளாக்கி விட்டிருக்கிறது.


நா.நாச்சியப்பன், திருநெல்வேலி.

தி.மு.க.வில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக தி.மு.க. பேச்சாளர்கள் மிகப்படுத்துகிறார்களே?

செங்கல்பட்டு பாலாற்றையும் புதுக்கோட்டை தேனாற்றையும் பற்றிச் சொல்லியிருப்பார்கள். நீங்கள் ஏன் வேறு விதமாகப் புரிந்து கொள்கிறீர்கள்?


ஏ.அப்துல்ரசாக், வாணியம்பாடி.

ஒரு பக்கம் சி.பி.ஐ.க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன் என்கிறார் ராசா. மறுபக்கம் பொதுக்கணக்கு குழு முன் தோன்றத் தயார் என்கிறார் மன்மோகன்சிங். இவையெல்லாம் என்ன இரகங்கள்?

இவர்களின் நாடகம் நம்மூர் பொங்கல் பொருட்காட்சி நாடகம் போல ஆகிவிட்டது. கொஞ்ச நேரம் பார்க்கலாம்.


எம்.அப்துல்காதர், வாணியம்பாடி.

நள்ளிரவுக்கு மேல் உறங்கி, மதியம்வரை தூங்கும் இன்றைய இளைஞர்கள் சிலரைப் பற்றி….

இங்கிலாந்தில் இவர்கள் இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். இங்கிலாந்தில் நம்மைவிட 5-1/2 மணிநேரம் குறைவு. கணக்குப் போட்டுப் பாருங்கள். சரியாக வரும்!


எம்.பாபு, வேலூர்-1.

வேலூருக்கு காவிரித் தண்ணீர் வரப் போகுதாமே?

வந்தால் மகிழ்ச்சி. எனக்கென்னவோ இது கானல் நீரில் விடப்போகும் காகிதக் கப்பலாகப்படுகிறது.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி தொடருமென்று டெல்லியில் அடிக்கடி சொல்கிறார்களே, ஏன்?

விழியிழந்தவரின் முதுகில் காலிழந்தவர் அமர்வது இயல்புதான். யார் எதை இழந்தவர்கள் என்று மட்டும் பிரித்துக் கேட்காதீர்கள்.


அ.சாமிநாதன், வில்லிவாக்கம்.

பெட்ரோல் தொடர்ந்து உயர்கிறதே?

ஏதோவொரு வகையில் இரு அரசுகளும் சேர்ந்து நமக்கு ஆயில் தண்டனையைக் கொடுத்திருக்கின்றன. பழக வேண்டியதுதான். பயணத்தைக் குறைக்க வேண்டியதுதான்.


கே.கந்தசாமி, சென்னை-40.

இன்றைய ஊழல்களைப் பற்றி?

இவை எல்லாமே விஞ்ஞான ஊழல்கள் என்பதால் வெட்ட வெளிச்சத்திற்கு எளிதில் வராது.


எஸ்.சந்திரிகா, கோவை-1.

நான் எப்போது ஒரு படைப்பாளியாவேன்?

குழந்தை பெற்றவர்தானே நீங்கள்?


எஸ்.சீதாராமன், கும்பகோணம்.

காம்பிர் 11 கோடி என்று வலை நிர்ணயிக்கிறார்களே, இத்தொகை யாருக்குப் போகும்?

ஏன் சந்தேகம்? வரிப்பிடித்தம் போக, மீதம் காம்பிரின் கைக்குத்தான் போகும். இந்தியாவில் இன்று விலைமதிப்பற்ற விளையாட்டாக கிரிக்கெட் ஆட்டம் ஆகிவிட்டது. வயது போய் விட்டது. தெரிந்திருந்தால் பேனாவுக்குப் பதில் மட்டையைப் பிடித்திருப்பேன்.


எஸ்.மோகன், திண்டிவனம்.

பிறரது வாழ்வில் நந்தியாக இருப்பவர்களைப் பற்றி?

தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில் நந்தியாக இருந்தால் இவர்களுக்கு பாலாபிஷேகம் நடக்கும். சாதாரண நந்தியாக இருந்தால் இவர்களுக்கும் சொல்லாபிஷேகம் நடக்கும். எந்த நந்தியென்பது அவரவர் சாய்ஸ்.


ஏ.முருகேசன், வேலூர்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இப்போது இருக்கிறதா?

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? இவற்றிற்கு வாதம், பித்தம், கபம் வந்து எவ்வளவு நாட்களாச்சு? அலோபதிகள் இதைக் கைவிட்டு இப்போது சித்த வைத்தியர்கள் இதைக் கைபிடித்திருக்கிறார்கள். இருந்தும் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போனதாகக் கேள்வி.


மு.சொக்கலிங்கம், திருச்சி-1.

விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார் என்கிறீர்கள்?

ஆரம்பத்தில் இரு கட்சிகளையும் சகட்டுமேனிக்கு விமரிசித்தார். அ.தி.மு.க.வைத் தாக்க ஆரம்பித்த இவர் இன்று அதை அடியோடு நிறுத்திவிட்டதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? பேரம் வெற்றிகரமாக முடிந்தால் அ.தி.மு.க.வுடன் இல்லாவிடில் தனித்து நின்று பிறகு பலம் நீரூபித்துப் பிறகு கூட்டணி பேரம் என்பதற்கு நீங்கள் வேறு பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைச் சொன்னேன்.


பே.திருமாமுருகன், உடுமலைப்பேட்டை.

கூட்டணி முடிவை என்னிடம் விட்டு விடுங்கள் என்கிறாரே விஜயகாந்த், இதன் பொருள் என்ன?

விஜயகாந்த் வெளிப்படையானவர். நம் ஜனநாயக அமைப்பில் ஒரு சில கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகளிலெல்லாம் தலைவர் என்ன முடிவு செய்கிறாரோ அதுதான் இறுதி; உறுதியும்கூட. செயற்குழு; பொதுக் குழு என்பனவெல்லாம் வெறும் கண் துடைப்புகள். விஜயகாந்த் உண்மையை மறைக்காமல் பேசுகிறார்.

13 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
07 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:17 am
Filed under: Uncategorized