» 2010 » December .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Healthy life

Posted on Friday 31 December 2010

vegetables.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

ஆஸ்துமா குணமாக:
முட்டைக் கோஸ், முருக்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, தக்காளி, லெட்டூஸ், செலரி.

இருமல் குணமாக:
சுரைக்காய், வெண்டைக்காய், இஞ்சி, புதினா, வெள்ளைப்பூண்டு, முட்டைக்கோஸ்.

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு முதலியவற்றைக் குணப்படுத்த:
காரட், பச்சைப் பட்டாணி, காலிஃபிளவர், புடலங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், காளான், பூசணி, பசலைக்கீரை, லெட்டூஸ், சோயா, செலரி, கொத்துமல்லி.

இளமைத்துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் உடல் உறுதிபெற்று ஆரோக்கியமாய் வாழ:

வல்லாரைக் கீரை, சோயா, வெள்ளைப்பூண்டு, பீட்ரூட், முள்ளங்கி, காரட், முட்டைக்கோஸ், முருங்கைக்கீரை, பச்சைப்பட்டாணி, பசலைக்கீரை, புதினா.

உடலுக்கு உடனே சக்தி கிடைக்க:
சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, வள்ளிக்கிழங்கு.

உயர் இரத்த அழுத்தம் குணமாக:
பசலைக்கீரை, வெள்ளரிக்காய், அவரைக்காய், வாழைத்தண்டு, காரட், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், காளான், செலரி.

உமிழ்நீர் நன்கு சுரக்க, சுவை நரம்புகள் சக்தி பெற:
வாழைக்காய், புதனாக்கீரை, கொத்தமல்லி.

ஒல்லியானவர்கள் குண்டானவர்களாய் மாற:
பச்சைப்பட்டாணி, காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு.

இரத்த சோகை குணமாக:
காரட், பாகற்காய், முருங்கைக் கீரை, பீட்ரூட், சேப்பங்கீரை, கோவைக்காய், மணத்தக்காளி(சிறந்தது), பசலைக்கீரை (சிறந்தது), வெங்காயம், லெட்டூஸ், வல்லாரை.

உடல் பருமன் குறைய:
முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், புடலங்காய், வாழைத்தண்டு, கத்தரிக்காய், பூசணிக்காய், பசலைக்கீரை.

கண்பார்வை தெளிவாகத் தெரிய:
மணத்தக்காளி, காரட், முருங்கைக் கீரை, பச்சைப் பட்டாணி, பீட்ரூட், முட்டைக்கோஸ், அவரைக்காய், புதினா, பசலைக்கீரை, தக்காளி, காளான், கொத்துமல்லி.

காய்ச்சல் தணிய:
பாகற்காய், புடலங்காய், வள்ளிக்கிழங்கு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், கொத்துமல்லி.

காலரா குணமாக:
முருங்கைக் கீரை, வெள்ளரிக்காய், வெங்காயம்.

கருக்கலைப்பைத் தவிர்க்க (அபார்ஷனைக் தவிர்க்கவும், குழந்தை உறுதியுடன் வளரவும்):

பசலைக்கீரை, லெட்டூஸ் கீரை.

குழந்தை பிறப்பதைத் தாமதப்படுத்த (குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்):
பச்சைப் பட்டாணி, புதினாக்கீரை.

கொலாஸ்டிரல் குறைய:
உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சைப் பட்டாணி, அவரை, முருங்கைக்காய், கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், வல்லாரை, லெட்டூஸ், கொத்துமல்லி.

சளித்தொல்லை குணமாக:

காரட், புதினா, கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, வெங்காயம், பசலைக் கீரை.

சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் ஆக:
முருங்கைக்காய், காரட், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, இஞ்சி உட்பட மற்ற காய்கறிகளும்.

சிறுநீரகக் கோளாறுகள் குணமாக :
வெள்ளரிக்காய், பிட்ரூட், காரட், முள்ளங்கி, புதினா, முருங்கைக்காய், தக்காளி, வெண்டைக்காய், பறங்கிக்காய், சுரைக்காய், மணத்தக்காளி, கொத்துமல்லி.

தலைவலி குணமாக:
காலிஃபிளவர், மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம்.

தாய்ப்பால் நன்கு சுரக்க:
வெள்ளைப்பூண்டு, லெட்டூஸ், காரட், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, தாய்ப்பால் கெட்டியாகச் சுரக்க பசலைக்கீரை, தாய்ப்பாலை வற்றச் செய்ய கொத்துமல்லி.

தொற்றுநோய் பரவாமல் தடுக்க:
பாகற்காய், முட்டைக்கோஸ்.

தொந்தி கரைய:
வாழைத்தண்டு, பசலைக்கீரை.

தொழுநோய் குணமாக:
பாகற்காய், முள்ளங்கி, பாலக்கீரை, வல்லாரைக்கீரை, பீர்க்கங்காய்.

தொண்டையில் புண்:
முள்ளங்கி, வெள்ளைப்பூண்டு.

தொண்டைக்கட்டு குணமாகவும், இனிமையான குரல் வளத்தைப் பாடகர்கள் பெறவும்:
புதினாக்கீரை, பசலைக்கீரை, கத்தரிக்காய்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடப் பயன்படும் காய்கறிகள்:
கருணைக்கிழங்கு, பசலைக்கீரை, காரட், பச்சைப் பட்டாணி, பாகற்காய், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, சுரைக்காய், மணத்தக்காளி.

நாக்கு வறட்சி அகல:
புடலங்காய், வெள்ளரிக்காய், காரட், சுரைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய்.

எல்லாவிதமான புற்றுநோய்களும் குணமாக:
பலவிதமான காய்கறிகள் கீரைகள் கலந்த கலவையில் தினமும் 600 கிராம் பச்சையாக சாப்பிட வேண்டும். இதில் பாதியை சமைத்துச் சாப்பிடலாம்.

நீரிழிவு நோய் குணமாகப் பயன்படும் காய்கறிகள்:
அவரைக்காய், காரட், காலிஃபிளவர், பாகற்காய், முருங்கைக்காய், வாழைத்தண்டு, கோவைக்காய், காளான், சோயாபீன்ஸ், பீர்க்கன்காய்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க:
முட்டைக்கோஸ், அவரை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, காரட், முருங்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, கொத்துமல்லி.

நன்றாய்த் தூக்கம் ஏற்பட:
சுரைக்காய், முட்டைக்கோஸ், லெட்டூஸ், மணத்தக்காளி, கொத்துமல்லி, செலரி.

(தொடரும்)

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 2:51 am
Filed under: Uncategorized
Actions performed without unnecessary speech

Posted on Friday 31 December 2010

writer-lena.jpgபேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

ஏதோ அரசியல் விமரிசனம் கட்டுரை என்று எண்ணிவிடப் போகிறீர்கள்! இல்லை.

ஒரு பெரிய மனிதர் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு நாய்க்கு வயதாகிக் கொண்டிருந்தது. வீட்டில் சாப்பாட்டு அறையில் பலரும் சாப்பிடும்போது இந்த நாயைப் பற்றிய பேச்சு அடிக்கடி வரும். “இதைக் காப்பகத்தில் விட்டுப் பராமரிப்புச் செலவிற்குப் பணம் கொடுத்துவிடுவோம். பெரிய சுமையாகி விட்டது. இந்த நாயால் எந்தப் பயனும் இல்லை. அடிக்கடி நோயவாய்ப்பட்டுச் செலவு வேறு நிறைய வைக்கிறது” என்றார் மூத்த மகன்.

தாயோ, “போடா! நீயா அதைப் பாக்குறே, கவனிக்கிறே அதை? அது போயிட்டா நான் ஒரு மாதிரி ஆயுடுவேன்.” சில மாதம் கழித்து மறுபடி அதே பேச்சு, அதே சாப்பாட்டு அறை.

இப்போது பேசியவர் குடும்பத் தலைவர். “ஏய்! சொன்னாக் கேளுடி! அதைக் கொண்டுபோய் விட்டுவோம்டி. கழிஞ்சு வெச்சு வீடு முழுக்க நாசம் பண்ணுதடி.”

“நீங்களா பாக்குறீங்க?” மறுபடி இல்லத்தரசியின் அதே வசனம்.

ஒரு நாள் ஆச்சா போச்சா என்று ஆகி அனைவர் வேலையையும் கெடுத்து, எல்லோருமாய் வேப்பேரி மிருக மருத்துவமனைக்குத் தூக்கிப் போக அறுவை சிகிச்சை, அங்கேயே சேர்ப்பு எனக் கலவரம் செய்து, பெருஞ் செலவு வைத்துவிட்டு வீடு வந்து சேராமல் போயே சேர்ந்து விட்டது.

இப்படி, நாய் விவகாரம் மட்டுமா? பல விஷயங்களில் பேசிப் பேசியே பொழுதை ஓட்டி, ஒரு பிரச்னையின் தன்மை பேசிப் பேசிக் கூர்மை பெறாமல் எந்த முடிவிற்கும் வராமல் அறைகுறையாய் விடுபட்டு, மோசமான முடிவுகளுடன் சேதாரம் விளைவிப்பதைக் காண்கிறோம்.

இழுத்தடிக்கிற ஒரு விஷயம் குறித்துச் சாப்பாட்டு அறையில் பேசுவது அவ்வளவு சரியல்ல. சாப்பிட்டு முடிந்ததும் கையை மட்டுமல்ல, விஷயத்தையும் அந்தக் கணமே கை கழுவிவிட்டு நழுவி விடுவார்கள்.

“வாருங்கள் இன்று இரவு அனைவருமாக அமர்ந்து வரவேற்பு அறையில் பேசி நல்ல முடிவிற்கு வருவோம்” என்று தீர்மானித்தால் தீர்வும் உறுதியாகக் கிடைக்கும்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 2:42 am
Filed under: Uncategorized
Static electricity problems

Posted on Friday 31 December 2010

electricity.jpgஅரசு இயந்திரத்தை எதிர்பார்க்கும் தனியார் இயந்திரங்கள்!

அண்மையில் நான் ஏற்காடு சென்றிருந்தபோது அங்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருக்கக் கண்டேன். அந்த ஞாயிற்றுக் கிழமையில் காலையில் போன மின்சாரம் மாலை வரை வரவே இல்லை. விசாரித்தபோது பொறுப்பற்ற பதிலும் வந்தது. நாம் ஏற்காட்டில் இருக்கிறோமா அல்லது தென்னாப்பிரிக்கக் காட்டில் வசிக்கிறோமா என்கிற சந்தேகமே வந்தது.

இந்த ஆதங்கத்தில் இதை நான் எழுதவில்லை. மின்வெட்டுக் குறித்த சிந்தனையில் என் மனம் வலம் வந்த வேளையில் மின் துறையின் இன்னொரு விதமான அலட்சியமும் மின் திருட்டுகளைப் பற்றிய சிந்தனைதான் அது. மின் திருட்டால் தமிழக மின் வாரியத்திற்கு ஆண்டுதோறும் பெருங்கோடிகள் நஷ்டம் என்பதை அறிவீர்கள் அல்லவா?

பலர் மின்வெட்டால் அவதியுறும்போது சுரண்டல்காரர்கள் பலர் சுகமான முறையில் செலவின்றி மின்சாரத்தை ஆண்டு அனுபவித்து வருகிறார்கள்.

மின் திருட்டுகள் முழுக்க மின்துறையின் அதிகாரிகள் - ஊழியர்களுக்கு அறியாமலேயே நடக்கிறதுன்னு சொல்ல முடியவில்லை.

நான் அந்தப் பக்கம் திரும்பிக்கிறேன். நீ என்னவோ பண்ணிக்கோ என்னை மட்டும் கவனிச்சுடு என்கிற நடைமுறைகளும் உண்டு. இதை மீறி மின் திருட்டுப் பற்றிய புகார்களின் அடிப்படையில் மட்டும் கடந்த 8 மாதங்களில் மட்டும் 24 கோடி ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஓரளவு கண்கொத்திப் பாம்புகளாக மாறிக் கவனித்தாலே ஆண்டிற்கு 150 கோடி ரூபாய் அபராதத் தொகையாக மட்டும் வசூல் செய்துவிட முடியுமாம்.

ஆக, இதையும் தாண்டி மின் திருட்டு நடப்பது நமக்குப் புரிகிறது.

மின் துறையில் விழிப்புணர்வுப் பிரிவு என்று ஓர் அமைப்பு உண்டு. இதன் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தவர் கூடுதல் டி.ஜி.பி பாலச்சந்திரன்.

இவரைக் கடந்த மே மாதம் மாற்றல் செய்தார்கள். மாற்றலானவருக்கு மாற்றாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டாமா இல்லையா? இதுவரை இல்லை. சி.பி. சிங் என்பவர் பொறுப்பில் (incharge) இருக்கிறார். இது போதுமா? இது இவருக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பே தவிர, பிரதானப் பொறுப்பு அல்ல.

தமிழக மின் நிலைமை தடுமாறிக் கொண்டிருக்கிற இந்த வேளையில் இப் பொறுப்பிற்கு எவரும் நியமிக்கப்படாதது எவர் நிலையில் நிகழும் தவறு?

எல்லாவற்றிற்கும் முதல்வரை நோக்கியே சுட்டுவிரல் காட்டுவது சரியா எனத் தெரியவில்லை.

புதிய தலைமையின் கீழ் மின் துறையின் விழிப்புணர்வுப் பிரிவு முடுக்கி விடப்பட்டால் திருட்டும் குறைந்து வருமானமும் பெருகுவதோடு எவ்வளவோ இல்லங்கள் ஒளி பெறும் என்பதோடு, இயந்திரங்களும் இயங்கத் தொடங்கும்!

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/12/24 ஜனநாயகம் தழைப்பது யார் கையில்?

2010/12/17 தெரியவில்லை புரியவுமில்லை!

2010/12/10 தோற்ற போதிலும் இது வெற்றியே!

2010/12/03 வெள்ளியையும் வெண்கலத்தையும் தங்கங்களாக்குவோம்!

2010/11/26 அரசியல் நாடகத்தின் இடைவேளை!

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 2:33 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 31 December 2010

sapa-trekking.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!

கடுமையாக உழைக்கிற வியட்நாமியர்கள், வேலை நிறுத்தமே செய்யாத வியட்நாமியர்கள் நிர்வாகத்தோடு இயைந்து போகிற வியட்நாமியர்கள் திடீரென வேலையைவிட்டு நின்றுபோக என்ன காரணம் என்று மதுசூதனன் சொன்னபோது எனக்கு அது வியப்பாக இருந்தது.

பெற்றோருக்கு ஏதும் உடல் நலக்குறைவு என்றால்தான் இப்படிச் செய்வார்களாம்.

ஆம். பெற்றோரை உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களைவிட எங்களுக்கு வேலை ஒன்றும் முக்கியமில்லை என்று சொல்லிவிட்டு வேலையையே இராஜினாமா செய்துவிடுவார்களாம்.

“வேலையை ஏன் இராஜினாமா செய்ய வேண்டும்? பேசாமல் நீண்ட விடுப்பில் போகலாமே?”

“மாட்டார்கள். எதை நம்பி நாங்கள் நீண்ட விடுப்பு எடுப்பது? பெற்றோருக்கு அதற்குள் குணமாகாவிட்டால் என்ன செய்வது என்று கேட்பார்கள்.”

“என்ன மது சார்! பெரிய ஆச்சரியமாக இருக்கிறதே இது. வேலை போய்விட்டால் அப்புறம் எப்படிக் கிடைக்கும் புது வேலை?”

“அதெல்லாம் தேடிக் கொண்டுவிடுவார்கள். இந்த நாட்டிலா வேலைக்குப் பஞ்சம்?”

“நம் நாட்டில்கூட இப்படி இல்லை. பெற்றோரைக் கவனித்துக் கொள்பவர்கள்; அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய்விட்டுவிடுகிறவர்கள் என்று இரு பிரிவினர் உண்டே தவிர, உடம்பிற்கு முடியாத ெப்றறோருக்காக அவர்களை உடனிருந்து பார்த்துக் கொள்வதற்காக வேலையை உதறுகிற இரகத்தினர் என்று நம் நாட்டில்கூட இல்லையே மது சார்!”

“உண்மைதான். இங்கே இருப்பவர்கள் நம்மவர்களைவிடக் குடும்ப உறவிற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ரொம்பப் பாசமான கட்டமைப்பைக் கொண்டவை வியட்நாமியக் குடும்பங்கள் உலகில் வேறு எங்குமே இப்படிப் பார்க்க முடியாது எனக்குத் தெரிந்தவரை.”

“நான் அறிந்தவரையும் இதுதான் உண்மை. இந்த நவீன யுகத்திலும் இப்படி இருக்கிறார்களே!”

“இத்தனைக்கும் பணத்தின்மீது அதிக ஆசை” ஏன் பேராசை கொண்டவர்கள் என்றுகூட நான் சொல்வேன்.”

“ஏன் பேராசை என்று குறிப்பிடுகிறீர்கள்?”

“ஒரே நபர் மூன்று நான்கு நிறுவனங்களில் வேலை செய்து சம்பாதிக்க நினைக்கிறார்களே, இது ஒன்று போதுமே!”

“ஓ! அதைச் சொல்கிறீர்களா?”

நாங்கள் குசியை (kuchi) அடைய இன்னும் பாதித் தூரம் இருந்தபோது ‘இளநீர் சாப்பிடுவோமா?’ என்றேன் சாலையோரமாக இருந்த சில கடைகளைப் பார்த்து.

இளநீரா அவை? இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சிஷெல்ஸ் போன்ற தீவுகளில் விளையும் கொகொடிமெர் எனப்படும் காய்களைப் போல் படுமுரடாக இருந்தன. வாசகர்களுக்கு கொகொடிமெர் பற்றிச் சொல்லிவிடுகிறேன். சந்நியாசிகளும் பிச்சையெடுப்பவர்களும் பயன்படுத்துவார்களே திருவோடு, இதுதான் கொகொடிமெர். கொகெடிமெரைப் பாதியாகப் பிளந்தால் இரண்டு திருவோடுகள் கிடைக்கும்.

இப்போதெல்லாம் திருவோடுகளை அதிகம் காணமுடிவதில்லை என்பது வேறு விஷயம்.

இவ்வளவு பெரிய இளநீரைக் குடிக்க முடியுமா? சந்தேகம்தான்.

இந்த ஐயத்தை ஜவஹரோ மதுசூதனனோ என்னிடம் எழுப்பவில்லை. காரணம் இந்தக் கேள்வியை என்னிடம் இவர்கள் கேட்டால் இளநீரை வாங்குவதற்காக வண்டியை நிறுத்தத்தான் வேண்டுமா என்று இவர்கள் தயங்குவதாக எனக்கு ஐயம் வந்துவிடுமாம்.

பட்டுத் தெரிந்துகொள் என்று என்னைவிட்டுவிட்டார்கள்.

குடித்து முடிப்பதற்குள் மூச்சிரைத்து நாக்கு வெளித்தள்ளிவிட்டது. ஆனால் இதன் சில்லென்ற நீர் குடல் பகுதியைக் கடந்து போவதைக்கூட என்னால் நன்கு உணர முடிந்தது. நல்ல ருசியும்கூட.

“குடித்து முடிக்க முடியாமல் நான் திணறியதைப் பார்த்துவிட்டு காரில் வைத்துக் கொள்வோம். வேண்டுமென்கிறபோது தொடருங்கள்” என்றார் மது.

“கொட்டிவிடாதா? அதெல்லாம் பார்த்துக்கலாம். ஒருத்தர் ஓர் இளநீரைச் சாப்பிட்டு முடித்தால் அது சாதனைதான்!”

“இளநீர் வெட்டிக் கொடுத்த பெண்மணியின் பின்னால் ஒரு வயதான அம்மாளைக் கவனித்துவிட்டுக் கேட்டேன். “அந்தப் பாட்டி வெற்றிலை போடுவது போல் தெரிகிறதே, இந்த நாட்டிலும் இந்தப் பழக்கம் உண்டா என்ன?”

“எதையும் உன்னிப்பாகக் கவனிக்கிறீங்க லேனா சார். அவுங்க போடுறது வெற்றிலைதான். இந்தப் பழக்கமே இந்தியாவுலேர்ந்து வந்தவுங்க கிட்டக் கத்துக்கிட்ட பழக்கம்தான் என்று என் வியட்நாமிய நண்பரின் அம்மா என்னிடமே சொல்லியிருக்கிறார்.”

“நம்மவங்ககிட்டேர்ந்து நல்ல பழக்கமா ஏதும் கத்துக்கிட்டிருந்தா பெருமை இருக்கும். இது பெருமைக்குரிய விஷயமா எனக்குத் தெரியலையே!”

“வயசான கிழவிங்ககிட்டதான் இந்தப் பழக்கம் இன்னமும் இருக்கு. இளைய தலைமுறை இந்தப் பழக்கத்தை வெறுக்கிறாங்க. யாரும் வெற்றிலை போடறது இல்லை.”

“ஏன் அப்படி?”

“சொன்னேன்ல? வியட்நாமியர்கள் அசாத்திய உடல்நல உணர்வு கொண்டவர்கள். மூத்த தலைமுறையால விட முடியலை. இளைய தலைமுறை அப்படி இல்லை. இந்தப் பக்கம் எட்டியே பார்க்குறது இல்லை.”

“உங்கள் சன் பார்மா என்பது அலோபதி இரகத்தைச் சேர்ந்தது. இவர்கள் அலோபதி இரக மருந்துகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்களா?”

“60 சதவிகிதம் பேர் அலோபதிதான். பெரும்பாலானர்களுக்கு இங்கு மருத்துவக் காப்பீடு இருப்பதால் அலோபதி வைத்தியம் மேற்கொண்டால்தான் மருத்துவத்திற்காகச் செய்த பணம் திரும்பக் கிடைக்கும். பிற வகை வைத்தியங்களையும் அவற்றின் செலவுகளையும் காப்பீட்டு நிறுவனங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லையே!”

“அதுவும் சரி. மீதி 40 சதவிகிதம் பேர் என்ன செய்கிறார்கள்?”

“பழைய முறையில் சீன மூலிகை மருத்துவம்தான்.”

“பலனளிக்கிறதாமா?”

“பின்னே? என்ன நவீனங்கள் வந்தாலும் பழைய வைத்திய முறைகளை நம்புகிறவர்களை மாறவே மாட்டார்கள். நவீனங்களில் வேறு என்னென்னவற்றை வியட்நாமியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்?”

“ஆங்கிலத்தின் அருமையை உணர்ந்து அதிகமாகக் கற்க ஆரம்பித்திருக்கிறார்கள். நீங்கள் மாரியம்மன் கோவிலில் பார்த்தீர்களா தெரியாது. அங்குவந்த பல இந்தியர்கள் இந்த நாட்டில் ஆங்கிலம் அல்லது கணிணி கற்பிக்கிற ஆசிரியர்கள்.”

சில இந்தியர்களைப் பார்த்தேன். சிலர் தமிழர்கள் போலவும் தெரிந்தார்கள். நான் அவர்களிடம் போய்ப் பேசவில்லை. வந்தவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் தாம் என்கிறீர்கள். அப்படித்தானே?”

“ஆமாம். இங்குள்ள சில தமிழர்களை ஒன்று சேர்த்து உங்களுக்கு ஓர் இரவு உணவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதில் நீங்கள் சந்திக்கப் போகிற பலர் ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள்.

“என்ன காரணம்?”

“இந்தியர்களுக்கு ஆங்கிலமும் கணினியும் அத்துபடி அல்லவா? இந்த இரு பிரிவினருக்குத்தான் இங்கு தேவையும் அதிகம்.”

எங்களைக் கடந்து போன ஒரு பெரிய ஆறு மீது என் கவனம் திரும்பவே “இதுதான் சைகான் ரிவர்” என்றார் ஜவஹர்.

இதை ஹோ சி மின் ரிவர் என்று மாற்றவில்லையாக்கும்?”

மதுவும் ஜவஹரும் இதையும் ஜோக்கென்று சிரித்தார்கள். சைகானை ஹோசிமின் சிட்டி என்று மாற்றியதோடு சரி. எல்லா நாடுகளிலும் நகரங்களின் பெயர் மாறலாம். ஆற்றின் பெயரை எந்த நாடும் மாற்றியதாக எனக்குத் தெரியில்லை.”

“ஆமா இல்லே?” என்றபடி நானும் யோசிக்கலானேன். ஜவஹர் சொன்னது சரிதான் என்று தோன்றியது.

குசி-க்குப் போகும் பாதை மையச் சாலையிலிருந்து விலக ஆரம்பித்து ஒரு கிராமத்திற்குள் புகுந்தது.

Welcome to ku chi என்ற அலங்கார வளைவு எங்களை வரவேற்றது. உள்ளே போனால் ஒரே இராணுவக் களை!

சரக் சரக் பூட்சுகளும் இராணுவ உடைகளுமாய் சட்டென்று புதுக்கோலம் காட்டியது.

அமெரிக்கர்களைத் தங்களது அபார இராணுவத் தந்திரங்களால் தண்ணீர் காட்டிய இடம் இதுதான்.

“உள்ளே உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன” என்றார் மது.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

 2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 2:24 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 31 December 2010

sachin-ponting.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

கே.எம்.பழனியப்பன், மதுரை.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதால் அங்கு மனிதன் உயிர் வாழ முடியுமா?

உயிரோடு இருக்கலாம். ஆனால் வாழமுடியுமான்னு தெரியலே.


நா.குமார், புதுச்சேரி.

ஐம்புலனை அடக்கினால் சித்தர் ஆகலாமா?

ஐம்புலனை அடக்கினால் இன்று ஆம்புலன்ஸ் தான் வரும்! சித்து வராது.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

பொதுத் தேர்வில் நானூறு மதிப்பெண்கள் பரவாயில்லைதானே?

பத்தாம் வகுப்பு என்றால் பரவாயில்லை. ப்ளஸ் டூ என்றால் படுமோசம். மார்க்கைச் சொன்ன நீங்கள் கூடவே வகுப்பையும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


எம்.மதன், வடநெம்மேலி.

உங்களையே நினைத்து உருகும் என்னைப் பற்றி?

என்னை நினைத்து உருகுவீர்களா? எத்தனை டிகிரி செல்சியஸில்? இதெல்லாம் வேண்டாமே! என்னை நினைத்து உறைந்து போகிறவர்களைவிட உருகுகிற நீங்கள் எவ்வளவோ தேவலை.


வெங்கட் சுப்பிரமணியன், கோவை-1.

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது பற்றி?

பரவாயில்லை. இரண்டாம் இன்னிங்ஸில் சுதாரித்தால் சற்றே கெளரவமாக இருந்தது. ஆனால் பந்து வீச்சை இந்தியா பலப்படுத்தியே ஆக வேண்டும். புது உத்திகளைப் பந்து வீச்சில் காட்ட வேண்டும். உலகின் முதல் அணி என்கிற பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வேகம் ஆடும் 11பேர்களுக்கும் வர வேண்டும்.


எம்.முகமது அலி, வேலூர்.

டெண்டுல்கரின் சாதனையை (50 செஞ்சுரிகள்) பாண்டிங் நெருங்கி வருகிறாரே?

அதற்குள் இவர் கடந்துவிடுவார். பாண்டிங்கின் தோற்றத்தில், ஆட்டத்தில் அசதி தெரிகிறது. டெண்டுல்கரின் ஆட்டத்தில் புதிய உத்வேகம் தெரிகிறது.


டி.நடராஜன், புதுச்சேரி.

காங்கிரஸ் மாநாட்டில் இலஞ்சம் ஊழல் பற்றி சோனியா சூளுரைத்திருக்கிறாரே?

கருணாநிதி சொன்னது நினைவிற்கு வருகிறது. ‘ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஜெயலலிதா ஊழல் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார். இது சோனியாவுக்குப் பொருந்தாதா எனகிற கேள்வி எழுகிறது. சுப்பிரமணியன் சுவாமி சோனியாவுக்கு ஸ்பெக்ட்ரத்தில் பங்கு போயிருக்கிறது என்கிறார். இந்த நேரத்தில்கூட சோனியா துணிச்சலாக இவை பற்றிப் பேசுகிறார் என்பதால் இதை நேர்மையின் துணிவு என்று எடுத்துக் கொள்ளலாமோ?


ஏ.வெற்றிகொண்டான், திருச்சி.

‘நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’ ஆட்சி எப்படி உள்ளது?

நானிலம் திரிந்து ஐந்நிலமாக உள்ளது. அய்யனின் ஐந்தாவது ஆட்சியில் அதிகம் தெரிவது பாலைதான் என்று பப்ளிக் சொல்கிறார்கள். அதுவும் பப்ளிக்காக!


என்.சின்னத்தமபி, சேலம்.

கலைஞர் மீது உங்களுக்குத் தாகம் உண்டா?

மோகமே உண்டு. அவர் ஒரு முதுபெரும் எழுத்தாளர். இதனால் அவரை ராஜாதிராஜ, ராஜகுல திலக, ராஜ மார்த்தாண்ட என்று வரவேற்கவும் ஆசை. ஆனால், எனது இந்த ராஜ ஆசையை ஒரு ராசா மாற்றிவிட்டார்.


வி.கோபால், மதுரை.

ராசாவுக்கு ஆதரவாக தொடர்ந்து அறிக்கை விடும் கலைஞர் பற்றி?

எந்த நிலையிலும் கட்சிக்காரரை விட்டுக் கொடுக்காத கடமை, கண்ணியம் கட்டுப்பாடு எனக்கு வியப்பைத் தருகிறது.


ஏ.ஜெயராமன், திருப்பூர்.

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது பற்றி?

எந்தத் தமிழ்ப் படைப்பாளர் கெளரவிக்கப்பட்டாலும் அதில் பெருமிதப்படுகிறவன் நான். நாடன் நல்ல படைப்பாளர். சமூக உணர்வு நிறைய உள்ளவர். காலம் கடந்த அங்கீகாரம் என்பதைத் தவிர அனைத்தும் மகிழ்ச்சியான விஷயம்தான்!


ப.வேலன், சிங்காநல்லூர்.

வாசனை மட்டும் நம்பும் சில காங்கிரஸ்காரர்கள் பற்றி?

காங்கிரஸின் வாசனையை அறியாதவர்களே வாசனை மட்டும் நம்பியிருப்பார். அதன் வாசனையை அறிந்தவர்கள் அங்குள்ள பிற வாசனைகளையும் அறிந்திருப்பர்.


எம்.சேகர், பொள்ளாச்சி.

நன்கொடை என்று வந்தால் கட்டில் போட்டு உட்காருவீர்களா அல்லது காத தூரம் ஓடுவீர்களா?

தங்கம் வெல்வேன். காரணம், பல நன்கொடைகள் உரியவர்களைப் போய் அடைவதே இல்லை! தவறான கடைகளுக்கு வேறு போகின்றன.


எஸ்.செந்தில், திருவேற்காடு.

சமீபத்தில் அடைவெள்ளம் பற்றி…?

விவசாயிகளுக்கு இது ரணம். கட்சிக்காரர்களுக்கு இது நிவாரணம்.


ஆ.செங்குட்டுவன், சென்னை-2.

உங்களுக்கு கெளரவ ‘டாக்டர்’ பட்டம் கொடுத்தால்?

போளிகளைக் கொடுங்கள்; ஜீரணிக்கிறேன். போலிகளைக் கொடுக்காதீர்கள்; ஜீரணிக்க முடியாது என்பேன்.


ஆர்.மாரியப்பன், கடலூர்.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் காங்கிரஸிடம் எதிர்பார்ப்பது என்ன?

காகிதப் பூவில் நறுமணத்தையும், காகிதக் கப்பலில் பயணத்தையும்! இல்லாவிடில் காங்கிரஸில் இந்நேரம் கொஞ்சமாவது மணம் வீசியிருக்கும். பார்லிமெண்ட்டில் கொஞ்சமாவது அது பயணித்தும் இருக்கும்.


பி.எல்.சிவகாமி, தேவகோட்டை.

காய்கறிகளின் விலையேற்றம் (குறிப்பாக வெங்காயம்) கவலை தருகிறதே!

வேண்டியதில்லை.இது தற்காலிகக் காட்சியே. மத்திய அரசு தன் தவறை உணர்ந்து வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்துவிட்டது. (பாவம் நம் அண்டை நாடுகள், நம் நாட்டு வெங்காயம்தான் சூப்பர் என்று இலங்கை, சிங்கப்பூர், துபைத் தமிழர்கள் சொல்லக் கேள்விப்ட்டிருக்கிறேன். மற்ற நாட்டு வெங்காயங்கள் வெள்ளரிக்காய் போல ருசியின்றி காரசாரமில்லாமல் இருக்குமாம். இந்திய வெங்காயம் அப்படி இல்லையாம்!) இனி நிலைமை சீரடையும். கடுமையான மழை காய்கறிகளின் உற்பத்தியையும் போக்குவரத்தையும் பாதித்துவிட்டது. விலை உயரும்போது அதனை வாங்காமல் தவிர்த்து விலகி நிற்க வேண்டும். எது விலை மலிவோ அதனைப் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால் காய்கறி விலையேற்றம் கொசுக்கடிதான்!


எஸ்.விக்டர், திருநெல்வேலி.

நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடர்?

யானைச் சவாரிக்கு ஆசைப்பட்டன எதிர்க்கட்சிகள். ஆனால் அவற்றுக்கு கழுதைச் சவாரிகூட கிடைக்கவில்லை.

24 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 2:16 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 24 December 2010

celery.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம்.

செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது.

காளானைப் போலவே இதுவும் ஓர் அரிய காய்கறியாகும். 1994 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மின்க்லீ என்பவர் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார். தினமும் அவர் இரண்டு செலரித் தண்டுகள் வீதம் ஒரு வாரம் வரை சாப்பிட்டு, அத்தொல்லையிலிருந்து குணமாகி இயல்பான நிலைக்கு வந்துவிட்டார். இவர் மகன் குலாங் டிலீ, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் செலரியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வித இரசாயனப் பொருளை ஊசி மூலம் எலிகளுக்கு ஊட்டினார். அந்த எலிகளின் இரத்த அழுத்தம் 12 முதல் 14 சதவிகிதம் வரை குறைந்திருந்தது. இரத்த அழுத்தம் குறைகிறதே என்று இதை அதிகமாகச் சாப்பிடவும் கூடாது. இந்த உண்மையையும் இவர் கண்டுபிடித்துள்ளார். அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

குணமாகும் நோய்கள்!
உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன.

‘திடீர்’ நெஞ்சுவலி இனி இல்லை!
இதில் உள்ள மக்னீசியமும், இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்கவை. அவ்விரண்டும் அதிக அளவில் இருப்பதால் இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன. இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது.

இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.

100 கிராம் செலரியில் கிடைக்கும் கலோரி 37 ஆகும். இதன் இலைகளில் 88% ஈரப்பதமாகும்; புரதம் 6.3%, கொழுப்பு 0.6%, நார்ச்சத்து 1.4%, கார்போஹைடிரேட் 1.6%, தாது உப்புகள் 2.1% ஆகும். தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின் - ‘ஏ’, வைட்டமின் - ‘பி’ வைட்டமின் - ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது.

உடல் வளர்ச்சிக்குப் புரதம் தேவை. பிற காய்கறிகளில் அதிக பட்சம் 2% முதல் 3% வரை புரதம் உள்ளது. ஆனால், அது செலரியில் 6.3% ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரணங்களால் (தாது உப்புகளால்) இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

நரம்புக் கோளாறுகளுக்கு….
வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். இதற்காகச் செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறையில் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.

புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

யுனானி வைத்தியத்தில் செலரி வேரைச் சிறுநீரகக் கற்களைக் கரைக்க மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

சத்துணவு டானிக்!
உடல் பலவீனமானவர்களுக்கும் சத்துணவுக் குறைவால் ஊட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் எளிய டானிக் ஒன்று இருக்கிறது.

அது இதுதான்.

செலரியின் வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலன் பெறும்.

‘சாலட்’ செய்வது உண்டா?
மிகவும் நறுமணமுள்ள காய்கறி இது. எனவே, இதை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும்.

வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் (Salad) செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.

செலரியின் கொட்டைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக் குணமாக்குகின்றன. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நரம்புத் கோளாறுகளைக் குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட செலரியின் தாயகம் சீனாதான். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான்.

செலரியை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் உறுதி பெறுவோம்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 3:40 am
Filed under: Uncategorized
Who is responsible for democracy?

Posted on Friday 24 December 2010

congress.jpgஜனநாயகம் தழைப்பது யார் கையில்?

எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை இயங்கவிடாமல் செய்வது பற்றியும் வருங்காலப் பாராளுமன்றச் செயல்பாடுகள் பற்றியும் ஜெர்மானியப் பயணத்தின்போது நம் பிரதமர் கவலை வெளியிட்டிருக்கிறார்.

அண்மையில் தம் இல்லத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய சோனியாவும் தம் பங்கிற்கு எதிர்க்கட்சிகளைக் குறை கூறியிருக்கிறார். தெகல்கா ஊழலை பாரதிய ஜனதா மறந்துவிட்டதா என்று கேட்டிருக்கிறார்.

கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி வாசனும் தம் பங்கிற்குத் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் நடந்து கொள்ளும் விதம் ஜனநாயகமே அல்ல என்பார். பாராளுமன்றத்தை இயங்கவிடாமல் செய்யும் குற்றத்திற்காகவும், ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாத நிலைமைக்காகவும், பாராளுமன்றத்தின் ஒட்டு மொத்தக் காலக் கூட்டத்தொடர் முழுமையையும் அர்த்தமற்றதாகச் செய்த குற்றத்திற்காக இன்னும் எவ்வளவு சேற்றை வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சி இறைக்கட்டும்.

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும். குளிர்காலக் கூட்டத்தொடர் முழுக்கப் பாராளுமன்றம் இயங்காமல் போனதற்கு எதிர்க்கட்சிகளின் வறட்டுப் போக்கு மட்டுமே 100 சதவிகிதம் காரணமாகிவிடுமா?

ஒவ்வொரு விஷயத்திலும் முரண்பட்டு நிற்கும் எதிர்க்கட்சிகளின் போக்கினால் காங்கிரஸ் குளிர்காய்ந்த சம்பவங்கள் ஒன்றா இரண்டா? எவ்வளவோ அல்லவா?

ஆனால் எல்லா மனமாச்சரியங்களையும் தூரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு அத்துணைக் கட்சிகளும் கைகோர்த்துச் செயல்படுவது காங்கிரசின் இந்தக் கூட்டணி ஆட்சிக்கு முற்றிலும் புதிய ஒன்றல்லவா?

ஓரிரு கட்சிகளின் பிடிவாதம் தவறாக இருக்கலாம். எல்லாக் கட்சிகளும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில் அகில மகா இந்திய ஊழல் நடத்தியிருக்கிறது என்று மனப்பூர்வமாக நம்புகின்றனவே!

இதற்குப் பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை ஒன்றே தீர்வாக இருக்க முடியும் என்று எல்லாக் கட்சிகளும் நம்பும்போது அதற்கு வடிகால் அமைத்துக் கொடுத்தால் என்னவாம்?

சி.பி.ஐ. விசாரணை சரியில்லை என்று உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு விரலைக் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நீட்டிவிட்ட பிறகு நீங்கள் இப்போது மேற்கொண்டிருக்கும் விசாரணை முறையும் சரிவர இருக்க முடியாது என்று எதிர்க் கட்சிகள் நம்புவதில் தவறு என்ன?

பாராளுமன்றத்தை இயங்க விடாமல் செய்யும் காலசாரத்தை இந்த மண்ணுக்குக் கற்றுத் தந்த கட்சி எது என்பதை காங்கிரஸ் கட்சி மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்.

மத்திய அரசின் ஆசியுடன் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த தவறு உண்மையில் நடந்திருக்கவில்லை என்றால் பாராளுமன்றக் கூட்டுக் குழு நன்கு விசாரித்துவிட்டுப் போகட்டுமே.

காஷ்மீர் விவகாரத்திற்கு மட்டும் உங்களுக்குப் பாராளுமன்றக் கூட்டுக் குழுவேண்டும்; இதற்கு வேண்டாம் என்றால் எப்படி?

ஜனநாயக அரசியல் தழைப்பது என்பது, எதிர்க் கட்சிகளைவிட இப்போது காங்கிரஸின் கையில் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/12/17 தெரியவில்லை புரியவுமில்லை!

2010/12/10 தோற்ற போதிலும் இது வெற்றியே!

2010/12/03 வெள்ளியையும் வெண்கலத்தையும் தங்கங்களாக்குவோம்!

2010/11/26 அரசியல் நாடகத்தின் இடைவேளை!

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 3:35 am
Filed under: Uncategorized
Nobody’s perfect!

Posted on Friday 24 December 2010

lena.jpgகுறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

அவன் சரியில்லை; இவன் சரியில்லை; இவுங்க சரியில்லை; அவர் சரியில்லை; என்று ஏராளமான தள்ளுபடிகளைச் செய்து நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சுருக்கிக் கொண்டு, தங்கள் உலகத்தை மிகச் சிறியதாக ஆக்கிக் கொள்கிறவர்களைப் பார்க்கிறோம்.

இவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பாகவே வரும். குறைகள் இல்லாதவர் யார்? சகிக்க முடியாத குறைகள் உள்ளவரா? எல்லையோடு நட்பு வைத்துக் கொள்ளுங்கள். தாங்க முடியாத குறைகளா? விலகி நில்லுங்கள்; மாறாக, வெறுத்து ஒதுக்கி வெட்டிக் கொள்ளாதீர்கள்.

கடையில் தள்ளுபடி விலையில் ஒரு பொருளைத் தருகிறபோது, “இதில் சின்னக் குறை இருக்கு சார். அதனால்தான் சார் தள்ளுபடி” என்கிறார் கடைக்காரர். “அதனாலென்ன சார்! பரவாயில்லை!” என்று ஏற்றுக் கொள்கிறோம். எவரும், “என்ன இதைப் போய் வாங்கியிருக்கீங்க?” என்று குறையாய்ச் சொன்னால், “இதெல்லாம் ஒரு குறையா? போங்க சார்?” என்று சேதப்பட்ட ஒரு பொருளுக்கு வக்காலத்து வாங்குகிறோம்.

வாழ்க்கையிலும் இதே பார்வை உண்டா அனைவருக்கும்?

குறைகள் தெரிந்தோ, தெரியாமலோ வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்கிறோம். ஆனால் இவற்றை ஜீரணிக்காமல் அடிக்கடி அதைக் குத்திக் காட்டியும் நினைத்து நினைத்து நெஞ்சை ரணப்படுத்தியும் அவதிப்படுகிறோம். இது ஏன்?

பிள்ளைகள் பிறக்கின்றன. அவர்களுக்கும் குணக் குறைபாடுகளோ, பண்பு நலனில் சேதங்களோ, உடற் குறைகளோ இருக்கின்றன என்றாலும் ஜீரணக்கிறோமா? இல்லை.

காலமெல்லாம் செரிமானம் செய்து கொள்ளாமல் வயிற்று வலியாய் உணர்கிறோம்.

நண்பர்களை உருவாக்கிக் கொள்கிறோம். இவர்கள் ஒன்றும் வானத்துத் தேவர்கள் அல்லர். இவர்களோடு ஏற்படும் அனுபவங்களில் மனம் நொந்து கொள்வதில் பயன் உண்டா? அவர் அப்படித்தான் நன்கு தெரிந்ததுதானே? என்று விட்டுவிடுகிறோமா? இல்லையே!

தள்ளுபடியுடன் ஒரு பொருளை வாங்கி அதன் குறைபாடுகளை ஜீரணித்தோம் அல்லவா? உறவில், நட்பில் ஒரே ஒரு வித்தியாசம் என்ன தெரியுமா, வாங்கிய பிறகே தெரிய வரும் தள்ளுபடிகள் இவர்கள்.

இந்தத் தாமதத் தள்ளுபடிகளையும் ஜீரணிப்போம், குறைகளுடன் இவர்களை ஏற்போம்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 3:30 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 24 December 2010

laos-vietnam.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

சைகான் நண்பர் மதுசூதணன் சொன்ன அந்தத் தகவல் உண்மையிலேயே சற்றுப் புதுமையான தகவல்தான்.

வியட்நாமில் பணிபுரிகிற ஆண்கள் பெண்கள் எவரும் ஒரே நேரத்தில் எத்தனை நிறுவனங்களில் வேண்டுமானாலும் பணிபுரியலாமாம்.

இதுபற்றி எவருமே ஆட்சேபிக்க முடியாதாம். இது ஏதோ தனியார் நிறுவனங்களுக்கான விதி என்று எவரேனும் கருதினால் அது தவறு. அரசு ஊழியர்களுக்கே இது பொருந்துமாம்.

அட! எப்படியிருக்கிறது பார்த்தீர்களா இங்குள்ள வேலை கலாசாரம்!

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிற ஒருவர், இந்நிறுவனத்திற்குக் கழுத்தறுப்பு நிறுவனமாகப் போட்டியிடுகிற நிறுவனத்திலும் வேலை செய்வார்களாம். இதைப்பற்றி இரு நிறுவனங்களும் ஆட்சேபிக்க முடியாதாம். கண்டுக்காமல் இருந்து விடுவார்களாம்.

அதே நேரத்தில் ஓர் ஊழியரிடம் போட்டி நிறுவனம் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவும் முடியாதாம் போட்டுக் கொடுக்கிற வேலை; இரகசியத்தைக் கக்குகிற வேலை; மூன்றாம் படை வேலை ஆகிய எதுவும் நடக்காதாம். எந்த நிறுவனத்தில் எந்த நேரத்தில் புணிபுரிகிறார்களோ, அந்த நிறுவனத்திற்கு உண்மையாக உழைப்பார்களாம்.

“வியட்நாமியர்கள் ஏன் இப்படி ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை பார்க்கவேண்டும். அப்படி என்ன நிர்ப்பந்தம்?” என்று கேட்டேன்.

அதற்கு மது (செல்லமாய்) ஒவ்வொன்றாக மூன்று விரல்களை நீட்ட ஆரம்பித்தார்.

“முதலாவது, ஆசை சார். நிறையச் சம்பாதிக்கணும். வாழ்க்கையை நல்லா அனுபவிக்கணும்.

இரண்டாவது, உழைக்க அஞ்சாதவர்கள் வியட்நாமியர்கள். எட்டு மணி நேரம் அங்கே, எட்டு மணி நேரம் இங்கே. இடையில் இரண்டு மணி நேரம் ஒரு புது நிறுவனம் என்று பிரித்துப் பிரித்து பறந்து பறந்து வேலைக்குப் போவார்கள்.

மூன்றாவது இந்த நாட்டில் இடம் கொடுக்கும் இத்தகைய செயல்களை அனுமதிக்கும் சுதந்தரமான சட்டங்கள்.”

“எப்படிசார் முடிகிறது இவர்களால்?”

“கையில் கிடைக்கிற காசும், வாழ்க்கைச் சுகங்களும் சனி, ஞாயிறு விடுமுறைகளும் இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றன.”

“கம்யூனிஸ்டு நாடாக இருக்கிறதே இதனால் தொழிலாளர் பக்கம்தான் அரசு சாதகமாக நடந்து கொள்ளுமோ?”

“அப்படி நினைக்காதீங்க லேனா சார்!”

“ஒரு தொழிலாளி சரியா வேலை செய்யலைன்னா, அடிக்கடி விடுமுறை போட்டா திருட்டு வேலை செஞ்சா, சும்மா தகராறு பண்ணிக்கிட்டிருந்தா அவரைப் பற்றி தொழிலாளர் நலத்துறையில் புகார் செஞ்சா போதும். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து அந்த ஆள்மீது நடவடிக்கை எடுத்து வேலையைவிட்டே தூக்கிவிடுவாங்க. இதனால் சக ஊழியர்கள் வேலை நிறுத்தமும் செய்ய முடியாது.”

“பிரமாதமா இருக்கே!”

“இதுமட்டும் இல்லே! ஒரு தொழிலாளர், நிர்வாகம் பற்றியோ தன் முதலாளி பற்றியோ மனக்குறையை வெளியிட்டால் போதும். தொழிலாளர் நலத்துறை அதிகாரி உடனே அலுவலகத்திற்கு வந்து ஊழியரது புகாரில் உண்மை இருக்கிறதா என்று விசாரித்து நிர்வாகத்தை எச்சரித்து நடவடிக்கையும் எடுத்துவிடுவார்.”

“ஆச்சரியமா இருக்கு மது சார்! இந்த நாட்டில் வேலை கலாசாரம் பிரமாதமா இருக்கு. கம்யூனிச நாடா இருக்கே, வேலை நிறுத்தம்லாம் உண்டா?”

“கிட்டத்தட்ட இல்லைன்னு சொல்லிடலாம். அரசாங்கம் தலையிட்டு இரு தரப்புக் குறைகளையும் பேசி சரி பண்ணிடும்.”

“அரசின் செயல்பாடு இங்கே அற்புதமா இருக்கு. நம்மூர்ல ஊழியர் சங்கத் தலைவர்களின் செயல்பாடுகளால் ஏகப்பட்ட வேலை நிறுத்தம் சாதாரணமா நடக்கிறது வருத்தமா இருக்கு. வியட்நாம் அரசு போல இடைப்பட்ட மனிதர்களின் தலையீடு இல்லாம அரசே அக்கறையா செயல்பட்டு வேலை நிறுத்தமற்ற தமிழகத்தை உருவாக்க முடியும். என்ன சொல்றீங்க.” முடியாது லேனா சார்! சின்ன நாடு இது. மக்கள் அரசாங்கத்திற்கு, சட்டத்திற்கு பயப்பட்டு நடக்கிறவங்க, பிரச்னைகள் அதிகமில்லை. குறைவு தொழிற்சாலைங்க. பலரும் மீன்பிடித் தொழில்ல சுயமா இயங்கிட்டிருக்காங்க. எனவே நான் சொன்னதெல்லாம் சாத்தியமாகுது. இவற்றையெல்லாம் ஒரு பெரிய நாட்டுல சாத்தியப்படுத்துகிறது கஷ்டம் சார்.”

“நீங்க சொல்றது சரி. ஆனால் நீங்க சொல்றதைக் கேட்கக் கேட்க மனசு ஏங்குது.”

“இருக்காதா பின்னே? எதுக்கெடுத்தாலும் கதவை இழுத்துச் சாத்திட்டு வெற்றி வெற்றி என்று குதிக்கிற அரசியல் கட்சிகள் இருக்கிறவரைக்கும் நாம பேசுறது எல்லாம் வெறும் கனவுதான்.”

“எல்லாவற்றையும் மீறி ஏதேனும் வேலை நிறுத்தம் நடந்தா?”

“அரசு அதிகாரிகள் வந்து இறங்கிடுவாங்க,” அதுவும் விபத்து நடந்த இடத்துக்குப் போக்குவரத்துப் போலீசார் வந்து சர்சர்னு இறங்குவார்களே (அப்படீங்களா?) அந்த மாதிரி வந்து இறங்கிடுவாங்க. யார் வேலை நிறுத்தத்திற்குக் காரணன்னு விசாரிச்சு உடனே நடவடிக்கைதான். அடுத்த நாளே அந்த அலுவலகம், தொழிற்சாலை இயங்கியாகணும். சும்மா அர்த்தமில்லாம வேலை நிறுத்தம் செய்யுறதெல்லாம் இந்த நாட்டுல நடக்காது.”

“வியட்நாமியர்கள் உழைப்பாளிகள், சரி. கெட்டிக்காரர்களா?”

“என்ன சார் இப்படிப் பொட்டிலடிக்கிற மாதிரிக் கேக்குறீங்க?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் மது.

“கேட்டேன்ல சொல்லுங்க.”

“சொல்றதைச் செய்வாங்க. அவ்வளவுதான்.”

“அப்படிச் சொல்லுங்க. நம்மாளுங்க சொல்லாததையும் செய்வாங்களே”

இதற்கு மது கிண்டலாகச் சிரித்தார்.

“சார்! சார்! இதை நல்ல அர்த்தத்துலதான் சொல்றேன்.”

“சரி. நல்ல அர்த்தத்துலயே நானும் எடுத்துக்கறேன். வயிட்நாமியர்கள்கிட்டே ஒரு வேலை சொல்லி, அந்த வேலையில் ஒரு தடங்கல் ஏற்பட்டா அப்படியே நின்னுடுவாங்க. அட ஏன்யா நிறுத்தினேன்னு கேட்டா, இந்த மாதிரி ஆனா அப்போ என்ன பண்றதுன்னு நீங்க சொல்லவே இல்லயேம்பாங்க. நம்ம ஆளுங்க கில்லாடிங்க. வேலையை முடிச்சுட்டு இந்த மாதிரி ஆச்சு. இப்படிப் பண்ணி சமாளிச்சு வேலையை முடிச்சிட்டேன்னு வந்து சொல்லுவாங்க. இந்த விஷயத்தில நம்ம ஆளுங்க மாதிரி வராது. இவங்க சுயமா சிந்திக்கத் தெரியாத ஆளுங்க.”

“இவ்வளவு நேரம் வியட்நாமியர்களைப் பாராட்டினதுக்கு இப்பச் சொன்ன ஒண்ணு போதும். வெறும் உழைப்புப் போதாது. அது புத்திசாலித்தனத்தோட இணைஞ்சு இருக்கணும்.”

“ஒப்புக்குறேன்!”

“60 வியட்நாமியர்கள் உங்க நிறுவனத்துல உங்களுக்குக் கீழே பணிபுரிகிறார்கள். அவர்களைப் பற்றி மேலும் ஏதாச்சும் சொல்லுங்களேன்”

“லேனா சார்! என்னைப் பார்க்க இந்தியாவுலேர்ந்து பலர் வந்திருக்காங்க. ஆனா உங்க அளவுக்கு யாருமே இவ்வளவு கேள்வி கேட்டது இல்லை.”

“ரொம்பக் குடைகிறேனோ?” அப்படியில்லை. இந்த நாட்டைப்பற்றி நாங்க எத்தனையோ வருஷமா நெஞ்சில சேகரிச்சு வச்சிருக்கிற பல செய்திகளை அப்படியே மதகுகளை எடுத்துவிட்ட மாதிரிக் கொட்ட வச்சு செய்திகளை வாங்கிடுறீங்க.”

“என் தொழிலே இதுதானே மது சார்! இதுல என்ன ஆச்சரியம் இருக்கு. சரி சொல்லுங்க, வியட்நாமியர்களின் தொழில் கலாசாரம் பற்றி?”

“சொன்னா ஆச்சரியப்படுவீங்க. இவ்வளவு உழைக்கிற வியட்நாமியர்கள் திடீர் திடீர்னு வேலையை விட்டு நின்னுடுவாங்க.”

“அப்படியா? ஏன்?”

இதற்கு மது சொன்ன காரணம் எனக்கு மேலும் ஆச்சரியத்தை அளித்தது.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 3:24 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 24 December 2010

aiswariya-iswariya.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

முத்துமாணிக்கம், கோவை-1

வைரமுத்துவின் பாடல்கள் நூல் தொகுதியாக வருவது பற்றி?

கெட்டிக்காரக் கவிஞர் காற்றில் கரைந்து விடக்கூடிய பாடல்களுக்கு நூல் வடிவம் தந்தால் அது காலம் கடந்து பேசப்படும் என்பதை உணர்ந்திருக்கிறார். வாலியின் எத்துணையோ பல நல்ல பாடல்கள் கண்ணதாசனுடையவை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. 7000 பாடல்களுள் 1000 மட்டும் நூலாகின்றன. பண்பலை நிலையங்கள் வேறு தங்கள் பங்கிற்கு இது யார் எழுதிய பாடல் என்று அறிவிக்காமல் இருட்டடிப்புச் செய்கின்றன. இந்நிலையில் இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி.


எம்.செந்தில்நாதன், தூத்துக்குடி.

புத்தாண்டு முதல் கார்களின் விலை உயர்கிறதாமே?

இதைப் ப்றறிக் கவலைப்பட வேண்டியவர்கள் மேல்தட்டு மக்கள். தங்கத்தின் விலை உயர்வுதான் அக்கறைக்குரியது. (கவனியுங்கள், கவலைக்குரியது என நான் சொல்லவில்லை) பாமரர்களையும் பாதிக்கக்கூடியது.


எஸ்.செந்தில்குமார், திருவேற்காடு.

பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரமில்லாத என்னைப் பற்றி?

அலெக்சாண்டர் அன்று சொன்னது இன்று நடக்கிறது. இப்போதுதான் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். அதே நேரம் ஏதோ இழந்து கொண்டும் இருக்கிறீர்கள் என்றும் அர்த்தம்!


எம்.பன்னீர், திருச்செந்தூர்.

திருச்செந்தூரில் விருந்தினர் மாளிகை ஒன்று கட்ட ஒரு கோடி ரூபாய் அளித்துள்ள எடியூரப்பா பற்றி?

இது கர்நாடக மாளிகைக்குங்க! எப்போதும் சூரசம்ஹார பூமி மீது பற்று இருப்பது ஆச்சரியமான விஷயமல்ல. அதே நேரத்தில் இதுவொரு மாநிலப்பற்று.


மு.திருப்பதி, கோவை-1.

பீகார்-தமிழகம் ஒப்பிடுக?

குழம்பியிருந்த பீகார் இப்போது தெளிந்துள்ளது. தெளிந்திருந்த தமிழகம் இப்போது குழம்பியுள்ளது.


தேவி இந்திரா, பட்டாபிராம்.

வயதில் மூத்த பெண்ணைக் காதலிக்கிறவர்களைப் பற்றி?

வேண்டாங்க! நீங்கள் அந்த அபிஷேக் - ஐஸ்வர்யாராய், தனுஷ் - ஐஸ்வர்யா, சச்சின் அஞ்சலி வரிசையில் இடம்பிடிக்க வேண்டாம் என்று சொல்லிவையுங்கள். “ஏம்மா! சாப்பாடு எடுத்துவை; நீங்களே போட்டு சாப்பிடுங்க. மாடிக்குப் போய் அந்தப் பையை எடுத்துவா. என்னால முடியாதுங்க. முழங்கால் வலிக்குது. கால் வலிக்குது பிடிச்சுவிடேன். முதல்ல எனக்கு நீங்க முதுகைப் பிடிச்சுவிடுங்க” இவையெல்லாம் புரிந்திருக்குமே! இளம் கணவனின் வேண்டுகோள்களும் வயதில் மூத்த மனைவியின் பதில்களும்!


ஏ.வெற்றிகொண்டான், திருச்சி-2.

பள்ளி, கல்லூரிகளைத் திறம்பட நடத்த வேண்டிய ஒரு அரசு மதுக்கடைகளை நடத்தலாமா?

அட! நீங்க வேற! மதுக்கடை ஸ்டடியா நடந்தாத்தான் இன்று அரசே தள்ளாடாம நடக்கும் என்கிற நிலை!


ஜி.எஸ்.கொடுங்கையூர்.

ஒபாமா இந்தியா வந்தபோனபிறகு அவரைப் பற்றி நிறைய சர்ச்சைகள் கிளம்புகின்றனவே, இதைப்பற்றி அவர் என்ன நினைப்பார்?

அமெரிக்கனிடமே இந்தியர்கள் இப்படி அமெச்சூர் பண்ணுகிறார்களே என்று நினைப்பார். நாம் வந்து போகும் வரை காத்திருந்து பிறகு கச்சேரியை வைத்துக் கொண்டிருக்கிறார்களே எனறு வலியச் சிரிப்பார். இந்த வெள்ளை மாளிைக்காரர் மீது குத்தப்பட்ட கறுப்புப் புள்ளிகள் பற்றி அவர் அதிகம் பொருட்படுத்த மாட்டார் என்றே நம்புகிறேன்.


ஆர்.ஆண்டியப்பன், திருச்சி.

ஊழல் அதிகாரிகள் பற்றிப் புகார் தெரிவிக்க இலவச ஹாட்லைனாமே?

மனித உயிர்களுக்கு 108 போல மாமிச உயிர்களுக்கு 1800 11 1180 வந்துவிட்டது. இனி உடல் காயம்பட்டால் 108; உள்ளம் காயம்பட்டால் 1800 11180! ஞாபகம் வைத்திடுங்கள். ஹாட்லைன் தேவைப்படுகிற அளவிற்கு இந்தியாவில் ஊழல் இன்று ‘ஹாட்’டாகப் போய்விட்டது.


எஸ்.கருப்பையா, தாராபுரம்.

ராமதாஸின் இன்றைய அவதாரமென்ன?

தெரியாது. நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ‘ராம்தாஸ் எத்தனை ராமதாஸடி’ என்று இசைக்கத் தோன்றியது.


எஸ்.சீதாராமன், கும்பகோணம்.

கலைஞரைப் போல் அவரது மந்திரிகளும் சொத்துக் கணக்கு காண்பிப்பார்களா?

எல்லாப் புகழும் கலைஞருக்கே என்று இருப்பார்கள். மறந்துகூட அவர்கள் உயிலை இந்த உலகுக்கு உணர்த்த மாட்டார்கள்.


ஆர்.ரகு, கோபி.

நீராராடியா டேப்பால் மக்கள் அறிந்து கொண்டது என்ன?

மந்திரி பதவிகள் ‘நாட் ஃபார் சேல்! என்று நினைத்தவர்களுக்கு அது ஃபார்சேல்’ தான் என்பதை உணர்த்தியது இந்த டேப்தான்! இந்த கைங்கர்யம் போதாதா?


டி.ஆர்.டேவிட், மதுரை-2.

பாராளுமன்ற முடக்கத்தால் இதுவரை 78 கோடி ரூபாய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறாரே பாராளுமன்ற விவகார அமைச்சர் நாராயணசாமி?

நாராயணர் சொன்னது வெறும் பதினான்கு நாள் கணக்கு. அப்புறமெல்லாம் என்ன கணக்கு? அட நாராயணான்னு சொன்னாலும் விடியாது போலிருக்கு.


மா.முருகன், புதுக்கோட்டை.

மருத்துவ மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கவுன்சில் நடத்தும் பொது மருத்துவ நுழைவுத்தேர்வு கூடாது என்கிற மருத்துவர் ராமதாஸின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடுதானா?

இல்லை. துணியால் வடிகட்டுவது பொதுத் தேர்வு. கோணியால் வடிகட்டுவது பொது நுழைவுத்தேர்வு. உயிர் காக்கும் பணியில் கசடுகள் கலந்துவிடாமலிருக்க வேண்டுமானால் பொது நுழைவுத்தேர்வு மிக மிக அவசியம். அரைகுறைகள் நுழைந்துவிட்டால் அப்புறம் எப்படி இருக்கும் வைத்தியம்?


எம்.கதிரவன், நாமக்கல்.

இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கர்ட்சன் பிறப்பால் தென்னாப்பிரிக்கர். ஆனால் இந்தியாவை வெற்றிபெறச் செய்து தம் நாட்டைத் தோற்கடிக்கச் செய்யும் தர்மசங்கடத்தில் இருக்கிறார். இவர் யாருக்கு விசுவாசகமாக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

வாங்கிய காசுக்கு!


கே.பாரதி, புதுச்சேரி.

அண்மையில் பத்திரிகைகளில் நீங்கள் ஆர்வமாகத் தொடர்ந்து படித்த செய்தி?

தாய் யானைபோல் கைவிடப்பட்ட குட்டியானை பற்றிய செய்திகளைச் சொல்லலாம். இதற்குக் கிடைத்த ராஜ கவனிப்பைப் படித்தபோது அட! நாம் ஓரு குட்டியானையாகப் பிறக்கவில்லையே என்று தோன்றியது!


கா.அருள், தூத்துக்குடி.

இரசிகர்கள் இடுப்பைக் கிள்ளினால் சிநேகா அவர்களை அடிப்பாராமே?

சிநேகாவை உங்களுக்கு வளர்ந்த நடிகையாகத்தான் தெரியும். சிநேகாவை எனக்கு துடுக்கு நிறைந்த சிறுமியாகத் தெரியும். சிநேகாவுக்கு அப்போது 11 வயது. ஷார்ஜா தமிழ்ச் சங்கம் நடத்திய விழாவில் பங்கு பெற்று கலைநிகழ்ச்சி நடத்திக் காட்டிய சிறுமிகள் பலருக்கும் என் கையால் கேடயம் தந்தேன். சிநேகாவுக்கும் மட்டும் விடுபட்டுவிட்டது. மற்ற சிறுமிகள் என்றால் மூலையில் போய் அழுவார்கள். சிநேகா எனக்கு ஏன் தரவில்லை என்று துடுக்காகக் கேள்வி கேட்டார். அந்தத் துணிவு எனக்குப் பிடித்திருந்தது. அந்தத் துணிவு இந்தப் பதிலிலும் தொடர்வது தெரிகிறது.


எஸ்.சங்கரபாண்டியன், எட்டயபுரம்.

வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி?

கூட்டணிகள் அமைவதைப் பொறுத்தது. தி.மு.க. தலைவர்கள் நிறையச் சம்பாதித்துவிட்டார்கள் என்கிற கருத்துப் பரவலாக இருக்கிறது. இது தி.மு.க.வின் வெற்றியைத் தனிப்பட்ட முறையில் பாதிக்கலாம்.


கே.ராஜ்வேல், சிவகாசி.

சட்டமன்றத் தேர்தல்களுக்கு அதிக நாள் இல்லை. ஆனபோதும் கூட்டணி விஷயத்தில் ஒரு தெளிவும் ஏற்படவில்லையே?

எல்லாம் ஸ்பெக்ட்ரம் ஒலிக்கற்றை செய்கிற வேலை. இந்த விஷயம் உரத்து ஒலிப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க வழிவகை தெரியாமல் திணறுகின்றன. ராசா தவறு செய்தது உண்மை என நிரூபிக்கப்பட்டால் இதைச் சாக்கிட்டே காங்கிரசானது தி.மு.க.வைக் கழற்றிவிடப் பார்க்கிறது. அ.தி.மு.க. பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்று உரத்துக் குரல் கொடுத்து காங்கிரஸிற்கு இதனோடு கூட்டணி வைத்துக்கொள்ளமுடியாத தர்மசங்கடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரசோ ஏகக் குழப்பத்தில் இருக்கிறது.

17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 3:19 am
Filed under: Uncategorized