வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
“என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
ஹனாய் வாழ் தமிழர்கள் எனக்கு விருந்து தர இருந்த உணவகத்திற்குள் நானும் மணியும் அவர்கள் குறிப்பிட்ட நேரப்படி துல்லியமாக நுழைந்தபோது அங்கு ஹனாய்வாழ் தமிழர்கள் ஒன்று கூடியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் உணவக உரிமையாளர் மட்டுமே தென்பட்டர். என் கண்கள் தமிழ் நண்பர்களைத் தேட, “என்ன பார்க்கிறீர்கள்” என்றார்.
“எவரும் இன்னும் வரவில்லை, வந்தவிடுவார்களா வாருங்கள். உட்காருங்கள். என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்றார் தொடர்ந்து.
எனக்கு ‘சப்பென்றிருந்தது. ஒருவர்கூடவா வரவில்லை? ஏன் இப்படி? என் மனக்கேள்வியைப் புரிந்துகொண்டவராய் மணி எனக்கு நிறையச் சமாதானம் சொன்னார்.
“எல்லோருக்கும் இன்னைக்கு அலுவலகம் இருக்கு. அதை முடித்து வீடு போய், வீட்ல இருககிறவங்களை அழைச்சிக்கிட்டு வரணும்ல அதான் லேட். வாங்க உக்காருவோம். வந்துடுவாங்க.”
“என்னிடம் இந்தச் சமாதானமெல்லாம் எடுபடாது தெரியுமா? இதுதான் உண்மை நிலை என்றால் இன்னும் ஒரு மணி நேரம் கழித்துக்கூட நேரம் குறித்திருக்கலாம் அல்லவா?” இந்த அன்பு விருந்தில் நாம் குறை காணக்கூடாது. ஆனால் நம்மவர்கள் நேர உணர்வில் குறிப்பாக இல்லை என்பது இங்கும் நிரூபணமாகிவிட்டது.
உலகச் சமுதாயத்தோடு பழக நேருகிறபோது நம்மைப் பற்றிய மதிப்பீடுகள் பல அளவுகோல்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ஒரு சமுதாயம் நேரத்தைக் கடைப்பிடிக்கிறதா என்பதும்.
வந்த இடத்திலும் (நாட்டில்) இப்படி என்றால் நம்மைப்பற்றி வியட்நாமியர்கள் என்ன நினைப்பார்கள் என்று நான் சிந்தனைவயப்பட்டபோது
நான் மூட் அவுட் ஆகிவிட்டேனாக்கும் என்று கணித்து, மணி மேலும் ஒரு சமாதானம் சொன்னார்.
“விருந்துக்குத்தான் இப்படி. பணியில், கடமையில் நம்மவர்கள் நெருப்பு.”
“பரவாயில்லையே!”
“நம்மவர்கள் உண்மையில் இப்படி என்ாறல் அதில் மகிழ்ச்சிதான். நம்மவர்களிடம் நம்மவர்கள் சலுகை எடுத்துக்கொண்டால் அதில் அவ்வளவாகத் தவறு இல்லை. ஆனால் மற்ற உலகச் சமுதாயத்தினரிடம்தான் இப்படி நடந்து கொண்டுவிடக்கூடாது.”
எல்லோரும் ‘டாண்’ என்று வராததில் எனக்கு ஒரு செளகரியம் பிடிபட்டது. அதுவும் ஒவ்வொருவராக நுழைய ஆரம்பிக்க அவர்களோடு உரையாடவும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக்கொள்ளவும் செளகரியமாக இருந்தது.
உணவருந்தும்போதுகூட ஓரிருவர் அருகிலும் எதிரும் புதிருமாயும் அமர்கிறோம். உரையாடல் இவர்களுடன் முடிந்துபோகிறது. மற்றவர்களுக்கு இதில் ஏமாற்றமடையலாம். இதற்கும் நான் வழி வைத்திருந்தேன். இதை உரிய இடத்தில் சொல்கிறேன். சொன்ன நேரம் நடந்து முக்கால் மணி நேரம் கழித்தும்கூடச் சிலர் வந்தார்கள்.
நேர விஷயத்தில் நீங்கள் ரொம்பக் கறார் பேர்வழி (?) என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் எங்களால் முடியலை என்றார் ஒருவர் பெரிய சிரிப்புடன்.
“பரவாயில்லை” என்று நான் அவருககு சமாதானம் சொன்னேன்.
பொதுவான உணவு வகைகளை முதலிலேயே சொல்லியிருந்ததால் மளமளவென உணவு வகைகள் வந்தன. பிறகு யாருக்கு எது மேலும் தேவையோ, சிறப்புத் தேவையோஅதைச் சொல்லி வழங்கிக் கொள்ளுங்கள் என்று பொது அறிவிப்பு வெளியிட வண்ணச் சாயமற்ற உணவு என்ன இருக்கிறது என்று கேட்டு நானும் ஓர் உணவு வகையைச் சொன்னேன்.
அனைவரது கவனமும் என்மீது இருந்ததால் என் செயல்பாடுகள், என் உரையாடல்கள் ஒவ்வொன்றையும் தமிழன்பர்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனித்தனர்.
“அதென்ன வண்ணச் சாயம் இல்லாத உணவு என்று கேட்டுச் சாப்பிடுகிறீர்கள்? என்றார் திருமதி சங்கர் (நினைவிருக்கிறதல்லவா வியட்நாமிற்கான இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் சங்கரை?)
மற்றவர்களுக்கெல்லாம் வண்ணச் சாயங்கள் ஜீரணமாகி உடலுக்குக் கெடுதலைச் செய்யும் என் வயிறோ உடனே நிராகரித்துவிடும்.”
“அப்படீன்னா?”
“வாந்திதான்! பேதிதான்!”
“ஐயோ!”
“என் வயிறே ஒரு கிங் இன்ஸ்டிடியூட் போலத்தான்! (தமிழகத்தில் தலைசிறந்த சோதனைக்கூடம் கிண்டியில் உள்ளது) தவறானதை ஏற்காது” உடனே பெருஞ்சிரிப்பு!
நான் என்ன பேசினாலும் அதை இரசித்து ஏற்ற அருமையான தமிழர் குவியல் அது!
பலர் தந்தை தமிர்வாணனை நினைவு கூர்ந்தனர். சங்கர்லால், மாணிக்கம், அப்துல்வகாப், கத்தரிக்காய், மாது இந்திரா என்றனர் 40களுக்கும் 50களுக்கும் 60களுக்கும் போய், 2000த்திற்கு வரவே மறுத்தனர். சிறுவர்களாகி இளைஞர்களாகி அந்த நினைவுகளை அப்படி சிலாகித்தனர்.
உணவக மேலாளர் நெருங்கி வந்து “எங்கள் ஓட்டல் சமையல் கலைஞர்கள் உங்களுடன் படமெடுத்துக் கொள்ள விரும்புகின்றனர்” என்றார்.
“தாராளமாய்!” என்றேன். இது எனக்கு ஏற்பட்ட புது அனுபவம் என்பேன். ஹனாய்த் தமிழ் நெஞ்சங்கள் காட்டிய அன்பிலும், ஆர்வத்திலும் அவர்கள் தாமதமாக வந்த ஏக்கத்தைப் புதைத்து வைத்தேன்.
காய்ந்த கைகளோடு எழுந்திருக்க மனமின்றி தமிழக அரசியலையும் தமிழகத் திரையுலகையும் பற்றி ஆர்வமாக விசாரித்தனர்.
இவர்களோடு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஓர் உணர்வில் ஒற்றுமை இருந்ததை உணர்ந்தேன். அது எவருக்கும் வியட்நாமில் தொடர்ந்து வாழ விருப்பமில்லை; எப்போது தாய்நாடு திரும்புவோம் என்பதே!
இந்த உணர்வு பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலருக்கும் இல்லாத உணர்வாகும்.
என் உணவை விரைந்து முடித்துக்கொண்டு எவரெல்லாம் எனக்கு எட்டாத தூரத்தில் இருந்தார்களோ, அவர்களது இருக்கை அருகே போய் அமர்ந்துகொண்டு, “அப்புறம் என்ன சொல்லுங்கள்?” என்று ஆரம்பித்தேன் பாருங்கள் “அடடா என்ன எளிமை உங்களிடத்தில்?” என்றார்கள்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எனக்காக எவ்வளவோ தூரம் பயணித்து வந்திருக்கிறீர்கள். பல கடமைகளை விட்டுவிட்டு ஆர்வத்துடன் வந்திருக்கிறீர்கள். சில வார்த்தைகளாவது உரையாடினால்தானே நீங்கள் வந்ததற்குப் பொருள் இருக்கும்” என்றேன். திகைத்தார்கள் சிலர்.
புகைப்பட வேட்டை, ஆட்டோகிராப் வேட்டை நடக்க, முகவரி அட்டைகள் பரிமாறிக்கொள்ளப்பட முழுமனமின்றிப் புறப்பட்டோம்.
“வியட்நாமில் உங்களுக்கு வேறு என்ன சார் ஆசை?” கேட்டவர் மணி.
நம்மூரில் சைக்கிள் ரிக்ஷா முறை ஒழித்துவிட்டது. நம்மூரில் ஓட்டுபவர் முன்னால் இருக்க பயணிப்பவர் பின்னால் இருப்பார். இங்கு பயணிப்பவர் முன்னாள் இருக்க, ஓட்டுபவர் பின்னால் இருக்கிறார். இது வித்தியாசமாக இருக்கிறது. இந்த ரிக்ஷாவில் பயணித்து கார் செல்லமுடியாத சிறு சந்துகளில் பயணித்து வியட்நாமின் சந்தடி மிகுந்த வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்.
“அவ்வளவுதானே? போயிடுவோம்.
“போகிறவழியில் வியட்நாமியர்கள் வழிபடுகிற ஆமை ஒன்றைப் பார்த்துவிடுவோம்!
“என்னது வியட்நாமியர்கள் ஆமையை வழிபடுவார்களா?”
“ஆமாம்! அது ஒரு சுவைமிகு வரலாறு. வாங்க நேரில் போய்ப் பார்ப்போம்!
மனதில் பிடிபடாக் கேள்விகளுடன் அந்த ஆமையைக் காணப் புறப்பட்டோம்.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































