Friday, 10 Sep 2010
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி
எல்லா விதமான நோய்களையும் குணப்படுத்தும் வெள்ளைப்பூண்டு
வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?
காய்கறி வகைகளில் இரண்டே இரண்டு மட்டுமே ஆங்கில மருத்துவத்தில் அப்படியே பதப்படுத்தப்பட்டு மாத்திரைகளாக விற்கப்படுகின்றன.
ஒன்று, வல்லாரைக் கீரை! ஞாபக ச்கதியைப் பெருக்கப் பயன்படும் இந்தக் கீரையை உலர்த்திப் பொடியாக்கிப் பிறகு வில்லைகளாகத் தயாரித்து விற்கின்றனர்.
இரண்டாவது, வெள்ளைப்பூண்டு! இதய சம்பந்தமான நோய்களையும், பிளட்பிரஷரையும் தவிர்க்கவும், குறிப்பாக மாரடைப்புத் தவிர்க்கவும், வெள்ளைப்பூண்டு கேப்ஸுல்களை டாக்டர்கள் எழுதிக் கொடுக்கின்றனர்.
வேறு எந்தக் காய்கறிகளுக்கும் இத்தகைய சிறப்புகள் இல்லை.
உலக அளவில் வெள்ளைப்பூண்டு கேப்ஸுல்களை அதிக அளவில் தயாரித்துத் தினமும் சாப்பிடுகிறவர்கள், ஜெர்மானியர்களே! அவர்கள் இந்த கேப்ஸுல்களை அதிக அளவில் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
ஆஸ்துமா, காது கேளாமை, தொழுநோய், இதய நோய்கள், தொண்டை, அழற்சி, எல்லா வகையான காய்ச்சல்கள், கல்லீரல் கோளாறுகள், கக்குவான் இருமல், சிறு நீரகக் கோளாறுகள் என அனைத்துக்கும் மிகச் சிறந்த மூலிகை மருந்தாகவும், உணவாகவும் வெள்ளைப்பூண்டு திகழ்கிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் முடி நன்கு வளர, பசி மந்தம் அகல, வெண்புள்ளிகள் என்னும் லுகோடார்மா, தொழுநோய், இதய நோய்கள், மூலத் தொந்தரவுகள், வயிற்றில் புழுக்கள், கண்பார்வைக் கோளாறுகள், இருமல், நுரையீரல் கோளாறு முதலியவை விரைந்து குணமாகத் தினமும் உணவு மருந்து போலச் சாப்பிடச் சொல்லுகிறார்கள்.
இவையெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்தான். அதனால்தான் பதினேழாம் நூற்றாண்டில் நிக்கோலஸ் கல்பெப்பர் (Nicholas Culpeper) என்பவர் தமது ‘The Complete Herbal’ என்ற நூலில், “எல்லா வகையான நோய்களையும் குணமாக்கும் அற்புதமான மருந்து வெள்ளைப்பூண்டு என்னும் அரிய காய்கறிதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோடிக்கணக்கான மக்கள், தங்களின் எல்லா விதமான தோல்களையும் உடனடியாகக் குணமாக்க நாடும் ஒரே மூலிகை, ஒரே காய்கறி வெள்ளைப்பூண்டுதான் என்று 1994-ஆம் ஆண்டு, ஜீன்ஃபில்டிங் என்பவர் உலகம் முழுவதும் சென்று வெள்ளைப்பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டு நோய் குணமானவர்களைச் சந்தித்து இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்தார்.
மத்திய ஆசியாவில் தோன்றிய வெள்ளைப்பூண்டை, கி.மு.3000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தங்களின் முக்கியமான தினசரி உணவு வகைகளுள் ஒன்றாகப் பயன்படுத்தி வருபவர்கள் சீனர்கள்தான். இவர்களின் உணவு வகைகளில் எப்போதும் வெள்ளைப்பூண்டு சேர்த்தே சமைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் ஆரோக்கியமாய் வாழ்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருவது வெள்ளைப்பூண்டே! கடந்த நூற்றாண்டுகளில் இதன் பொருட்டே மதிப்பு வாய்ந்த காய்கறியாக வெள்ளைப்பூண்டு திகழ்ந்து, இப்போதும் திகழ்கிறது.
100 கிராம் வெள்ளைப்பூண்டில் மாவுச்சத்து 29.8%ம், நார்ச்சத்து 0.8%ம், தாது உப்புகள் 1.0%ம், கொழுப்பு 0.1%ம், புரதம் 6.3%ம், ஈரப்பதம் 62%ம் உள்ளன. மேலும், எலும்புகளின் பராமரிப்புக்குத் தேவையான 30 மில்லி கிராம் கால்சியம், இரத்த விருத்திக்குப் பயன்படும் 1.3 மில்லி கிராம் இரும்புச் சத்தும், வைட்டமின் ‘பி’யும், வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உள்ளன.
மேற்கண்ட சத்துகளால் இன்சுலின் அதிகம் சுரந்து சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆண்மைக்குறைவு, விந்துக் குறைவு, கூந்தல் வளர்ச்சி தடைப்படுதல் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.
இளமை புதுப்பிக்கப்படுகிறது!
மீண்டும் இளமையைத் திருப்பித் தருவதில் பூண்டு சிறந்து விளங்குகிறது. இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டும் பொருள்களை வெளித்தள்ளிவிடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்ப நிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட முடிகிறது.
மூச்சு விடச் சிரமமா?
இதய நோயாளிகள் நன்கு மூச்சு விடவும், மாரடைப்பைத் தவிர்க்கவும், வெள்ளைப் பூண்டு இரசம் சாப்பிட வேண்டும். காசநோய், சளி போன்றைவுயும் இதனால் குணமாகும். தோலின் மேற்புறத்தில் உள்ள நோய் நுண்மங்களும் இதனால் அழிக்கப்படும்.
நெஞ்சு வலியின் போது வெள்ளைப் பூண்டுகளை அரைத்து நெஞ்சின் மேல் தடவலாம். எரிச்சலும் நீங்கும்.
ஆஸ்துமா குணமாக மூன்று பூண்டுபற்களை பாலில் காய்ச்சி அருந்தி விட்டு இரவில் படுக்க வேண்டும். ஆஸ்துமா குணமாகும் வரை இந்த முறையில் இரவில் பால் அருந்த வேண்டும்.
டி.பி. குணமாகும்
காச நோய் குணமாகக் கால் லிட்டர் பால், ஒரு கிராம் பூண்டு, ஒரு லிட்டர் தண்ணீர் ஆகிய கலவையை 4இல் ஒரு பாகமாய் வற்றும்வரை அடுப்பில் வைத்து இறக்கி அருந்தவேண்டும். ஆயுர்வேதம் காட்டும் இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் குணம் உண்டாகும். தினமும் மூன்று வேளை இந்த முறையில் அருந்த வேண்டும்.
பூண்டு கேப்ஸுல் சாப்பிடலாமா?
எல்லா விதமான செரிமானக் கோளாறுகளும் அகல நாலைந்து பூண்டு பற்களை நன்கு தட்டி தண்ணீர் அல்லது பாலில் விட்டு சூடாக்கி அதை அருந்தினால் போதும். இந்த முறையில் சாப்பிட்டால் எல்லாவிதமான கிருமிகளையும் வெளியே தள்ளிவிடும்.
கடும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு முதலியவற்றின் போது மேற்கண்ட முறையில் பூண்டைப் பயன்படுத்தவும், இல்லையெனில், கடையில் விற்கும் கேப்ஸுல் ஒன்றை வாங்கிச் சாப்பிட்டால் போதும்.
வெள்ளைப்பூண்டு வாசனை பிடிக்காத இதய நோயாளிகள், அதிக இரத்த அழுத்த நோயாளிகள் டாக்டர் அறிவுரை பெற்று, ஒரு நாளைக்கு மூன்று கேப்ஸுல்கள் வரை, மூன்று வேளை உணவிற்குப் பிறகு பயன்படுத்தி வெள்ளைப்பூண்டின் மருத்துவக் குணங்கள் அனைத்தையும் பெறலாம்.
இதய நோயாளிகள், புற்று நோயாளிகள், இருமல், சளி உள்ளவர்கள் ஐம்பது கிராம் பூண்டை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்துச் சாறாக தினமும் அருந்தி வரவேண்டும்.
தொண்டை அழற்சி நோய் (டிப்தீரியா) உள்ளவர்கள், தினமும் 4,5 பற்களை வாயில் இட்டு மென்று தின்றால் சளிச்சவ்வுகளை அகன்று குணமாவார்கள். ஐம்பது கிராம் பூண்டை எடுத்து, சமமாய் ஏழு நாள்களுக்குப் பிரித்து வைத்துக் கொண்டு, சாப்பிட வேண்டும். டிப்தீரியா நோயாளிகளுக்கு பூண்டின் வாசமோ, சுவையோ, தெரியாது. எனவே, இவர்கள் சளிச்சவ்வுகள் அகன்ற பின்பும் இந்த முறையில் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இரத்தம் சுத்தமடையவும், ஆண்மைக் குறைவு அகலவும் இரண்டு பூண்டுப்பற்களை எல்லா வயதினரும் பச்சையாகக் சாப்பிடலாம். தினமும் இரண்டு பற்களுக்கு மேல் பச்சையாகச் சாப்பிடக் கூடாது. சமையலில் நறுமணத்திற்கு ஏற்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.
வெட்டுக்காயங்கள் விரைந்து ஆறப் பூண்டுச் சாற்றுடன் டிஸ்ட்டில் வாட்டரையும் கலந்து தடவ வேண்டும். இது ரஷ்யர்களின் மருத்துவமுறையாகும்.
பருக்கள், வடுக்கள், குணமாகப் பூண்டை அரைத்து குறிப்பிட்ட இடங்களில் தடவலாம். அல்லது தினமும் சமையலில் பூண்டு சேர்த்துச்சாப்பிடலாம். மூன்றாவதாக மூன்று வேளை பூண்டு கேப்ஸுல்கள் சாப்பிடலாம். தோல் நன்கு மாறவும் தொற்று நோய் ஏற்பட்டாமல் இருக்கவும் இந்த முறைகள் பயன்படும்.
இப்படிப்பட்ட சிறப்புமிக்க வெள்ளைப் பூண்டு ஒரு நறுமண உணவுப் பொருள் மட்டுமன்று; அது ஒரு மருந்துத் தாவரமும், ஆண்டிபயாடிக் மருந்தும், ஓர் அழகு சாதனப் பொருளுமாகும். தோல், எலும்புகள், சுரப்பிகள், நுரையீரல்கள் மற்ற சிறப்பு உறுப்புகள் அனைத்திலும் வெள்ளைப் பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்னும் பொருள் எந்த நோய்க்கிருமியும் போய்ச் சேர்ந்து விடாதபடி தடுத்துப் பாதுகாக்கிறது.
பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது டெட்டிராசிலின் ஆகிய மருந்துகளை விடச் சக்தி வாய்ந்தது பூண்டில் உள்ள அலிசின். குறிப்பாக காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அறவே அழித்து விடுகிறது.
மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரட்டீஸ், மலச்சிக்கல் தீர வெள்ளைப் பூண்டு உபயோகிக்கச் சொன்னார். இதய சம்பந்தமான தொந்தரவுகளுக்கும், குடல் பூச்சிகளைக் கொல்வதற்கும், புண்களைக் குணப்படுத்தவும் அவர் காலத்தில் வெள்ளைப்பூண்டே மருந்தாகக் கொடுக்கப்பட்டது. அத்தகைய சக்தி வாய்ந்தது வெள்ளைப்பூண்டு.
1944-ஆம் ஆண்டு பூண்டில் உள்ள ‘அலிசின்’ அமெரிக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதன் மதிப்புக்கூடியது. பிரிட்டனில் இப்போதும் கீல்வாத நோயாளிகளை, வெள்ளைப்பூண்டை நன்கு சாப்பிட டாக்டர்கள் வற்புறுத்துகின்றனர்.
வெள்ளைப்பூண்டு இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. சுவாச சம்பந்தமான உறுப்புகளைப் பலப்படுத்துகிறது.
பூண்டில் கந்தகக்குழுக்களைச் சேர்ந்த ‘செலினியம்’ என்ற ஒரு வகைப் பொருள் இருக்கிறது. அது நுரையீரல்களின், நாடி நரம்புகளின் இறுக்கத்தைத் தளர்த்தி ஹார்ட் அட்டாக் அபாயம் ஏற்பட்டு விடாமல் தடுக்கிறது. இந்த உண்மையை மத்திய தரைக்கடல் மக்களின் உணவு முறைகளை ஆராய்ந்து 1995ஆம் ஆண்டுதான் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த மக்கள் தினமும் திராட்சை மதுவும், வெள்ளைப்பூண்டும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். மத்திய தரைக்கடல் நாடுகளில் இதய நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் இல்லாததற்குப் பூண்டும், திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் ஒயினுமே காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளைப்பூண்டு எய்ட்ஸ் நோய், இரைப்பைப் புற்று நோய் முதலியனவும் நமக்கு ஏற்பட்டு விடாதபடி தடுக்கிறது.
பூண்டு புத்துணர்ச்சி தருகிறது. ஆண்மைக் குறையை அகற்றும் அரிய மருந்து இது.
ஜைனமதத்தினர் பலர் பூண்டில் இரு வில்லைகளை மட்டும் தினசரி பச்சயைாகச் சாப்பிடுகின்றனர். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துவிடுகிறது.
கலிபோர்னியாவில் உள்ள லோர்னா லின்டா பல்கலைக் கழகம் தினமும் பூண்டு வில்லைகளை சேர்த்துக் கொண்டவர்களுக்கு கெடுதல் செய்யும் LDL கொலாஸ்டிரல் 70% வரை குறைந்து நல்ல கொலாஸ்டிரலான HDL நன்கு உயர்ந்தததை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
பம்பாயில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இதய நோயாளிகளுக்கு தினமும் 18 பூண்டு வில்லைகளைக் கொடுத்து குணப்படுத்தி வருகிறார்கள். இதில் இரண்டு வில்லைகளை பச்சையாகவும் மீதி பதினாறை சமையலில் சேர்த்தும் சாப்பிட வேண்டும்.
மாரடைப்பைத் தவிர்க்கும் பூண்டு
இரத்தக் குழாய்களின் படிந்துள்ள கொலாஸ்டிரலை உடைத்து இரத்தக் குழாய் கெட்டிப்படுவதைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது. ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மாரடைப்பைத் தவிர்க்கத் தொடர்ந்து வெள்ளைப்பூண்டைச் சேர்த்து வந்தால் போதும். மேலும் அது இரத்தத்திற்கு நன்மை செய்யும் HDL என்ற கொலாஸ்டிரல் வகையை அதிகரிக்கச் செய்கிறது. அத்துடன், ஒரே ஒரு பூண்டுப்பல இரத்தத்தில் உள்ள LDH என்ற இரத்தத்திற்கு கேடு விளைவிக்கும் சொலாஸ்டிரலை 12% குறைத்தும்விடுகிறது. மேற்கண்ட உண்மைகள் 1994ஆம் ஆண்டு ஜெர்மானிய டாக்டர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளாகும். இதய நோயாளிகள் தினசரி குறைந்தது ஒன்பது பூண்டு வில்லைகளை சாப்பிட வேண்டும்.
தாய்ப்பால் பெருக ஐந்து பூண்டுகளை பாலில் காய்ச்சி தினமும் அருந்தி வர வேண்டும்.
மூட்டு வீக்கம், நரம்புத் தளர்ச்சி, இசிவு போன்றவை குணமாகவும் நறுமணப் பொருளாகச் சமையலில் சேர்க்கப்படும் பூண்டே பயன்படுகிறது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு மக்களைப்போல தினமும் வெள்ளைப் பூண்டு சாப்பிடுகிறவர்கள் உயர் இரத்த அழுத்தம், இதயநோய் முதலியவற்றின் பிடிகளுக்கு ஒரு நாளும் ஆளாகமாட்டார்கள்.
நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கிமாய் வாழ வெள்ளைப்பூண்டைத் தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
‘ஒரு வெள்ளைப்பூண்டு பத்து நல்ல அன்னைக்குச் சமமானது’ என்னும் தெலுங்குப் பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்
2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!
2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்
2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!
2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்
2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு
2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்
2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!
2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்
2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!
2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்
2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி
2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்
2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்
2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்
2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2
2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு
2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3
2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2
2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1
2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்
2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது
2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?
2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

































September 19th, 2010 at 8:24 pm
very good article