Tamilvanan » 2010 » August

Archive for August, 2010

Healthy life

Friday, August 13th, 2010

banana.jpgஇதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

பிச்சையிடுவது தவறு. இது சோம்பேறிகளை உருவாக்கும் என்று சொல்வது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

ஆதரவற்ற இந்தத் தாய்க்கு இவரது பிள்ளைகளால்கூடக் கைவிடப்பட்ட நிலையில், நம்மைப் போன்றவர்கள் உதவாவிட்டால் பிறகு யார் உதவப் போகிறார்கள் என்று பார்ப்பது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

ஊழியர் தவறு செய்கிறார். தவறு செய்பவர்களுக்கு வளைகுடா நாடுகளின் பாணியில் சவுக்கடிதான் சிறந்த வழி என்பது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

தவறுவது மனித இயற்கை; மன்னிப்பதே பேராண்மை அப்போதுதான் அவன் திருந்துவான் என்று வாய்ப்பு வழங்குவது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

தவறுகள் அதிகரித்துவரும் (குற்றம் வேறு தவறு வேறு) இவ்வேளையில் இதயக் கண்கொண்டு பார்ப்பதெல்லாம் சரிப்பட்டு வருமா என்பது, அவரவரின் மனநிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு செய்யப்படவேண்டிய விஷயம்.

ஏமாற்றுபவனுக்கு அடி உதை என்பது சில பண்ணையார்களின் பழக்கம். ஒரு சில செளகரியங்களைக் குறைப்பதுகூடப் பரவாயில்லை. ஆனால் உடல் தழும்பு மறைந்தும் மனத் தழும்புகள் மறையாதவர் எத்துணையோ பேர் அவர்கள். இவர்களைப் பழிவாங்காமல் இருப்பவர்கள் என்பது என்ன நிச்சயம்?

மகன்-மகள்களின் தவறுகளை, ஒரு தந்தை அறிவுக்கண் கொண்டுதான் பெரும்பாலும் பார்க்கிறார். தாயோ இதயக் கண்கொண்டு பார்க்கிறார். உங்களைக் கேட்கிறேன். தந்தை திருத்திய பிள்ளைகள் அதிகமா, தாய் திருத்திய பிள்ளைகள் அதிகமா?

சட்டம் அறிவின் வழியே சிந்திக்க மட்டுமே தெரிந்தது. அதற்கெனவே உருவாக்கப்பட்டது. இதுவும் தேவைதான். இதற்கு முன் இதயத்தின் கண்கொண்டு ஒருமுறை பார்ப்பதும் நல்லது.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Analysis problems

Friday, August 13th, 2010

lena-tamilvanan.jpgஇதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

பிச்சையிடுவது தவறு. இது சோம்பேறிகளை உருவாக்கும் என்று சொல்வது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

ஆதரவற்ற இந்தத் தாய்க்கு இவரது பிள்ளைகளால்கூடக் கைவிடப்பட்ட நிலையில், நம்மைப் போன்றவர்கள் உதவாவிட்டால் பிறகு யார் உதவப் போகிறார்கள் என்று பார்ப்பது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

ஊழியர் தவறு செய்கிறார். தவறு செய்பவர்களுக்கு வளைகுடா நாடுகளின் பாணியில் சவுக்கடிதான் சிறந்த வழி என்பது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

தவறுவது மனித இயற்கை; மன்னிப்பதே பேராண்மை அப்போதுதான் அவன் திருந்துவான் என்று வாய்ப்பு வழங்குவது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

தவறுகள் அதிகரித்துவரும் (குற்றம் வேறு தவறு வேறு) இவ்வேளையில் இதயக் கண்கொண்டு பார்ப்பதெல்லாம் சரிப்பட்டு வருமா என்பது, அவரவரின் மனநிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு செய்யப்படவேண்டிய விஷயம்.

ஏமாற்றுபவனுக்கு அடி உதை என்பது சில பண்ணையார்களின் பழக்கம். ஒரு சில செளகரியங்களைக் குறைப்பதுகூடப் பரவாயில்லை. ஆனால் உடல் தழும்பு மறைந்தும் மனத் தழும்புகள் மறையாதவர் எத்துணையோ பேர் அவர்கள். இவர்களைப் பழிவாங்காமல் இருப்பவர்கள் என்பது என்ன நிச்சயம்?

மகன்-மகள்களின் தவறுகளை, ஒரு தந்தை அறிவுக்கண் கொண்டுதான் பெரும்பாலும் பார்க்கிறார். தாயோ இதயக் கண்கொண்டு பார்க்கிறார். உங்களைக் கேட்கிறேன். தந்தை திருத்திய பிள்ளைகள் அதிகமா, தாய் திருத்திய பிள்ளைகள் அதிகமா?

சட்டம் அறிவின் வழியே சிந்திக்க மட்டுமே தெரிந்தது. அதற்கெனவே உருவாக்கப்பட்டது. இதுவும் தேவைதான். இதற்கு முன் இதயத்தின் கண்கொண்டு ஒருமுறை பார்ப்பதும் நல்லது.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Cast out caste

Friday, August 13th, 2010

against-caste1.jpgவடிகட்டப்பட்ட கருத்து!

பொருளாதார ரீதியான பின்தங்கியோருக்கான ஆணையத் தலைவரான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சின்னோ ஒரு புதுப்புயலைக் கிளப்பியிருக்கிறார்.

உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களுள்ளும் பரம ஏழைகள் உள்ளனர். எனவே இவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சிபாரிச செய்துள்ளார்.

நான் கல்லூரியில் படித்த நாள்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில வசதியான மாணவர்கள்கூட அரசு செய்து தரும் சலுகைகளையும் பொருாளதார உதவிகளையும் பெற்றுப் படித்ததைப் பார்த்திருக்கிறேன்.

இவர்களுக்கு உதவி கிடைத்ததில் எனக்கு வருத்தமில்லை. ஆனால், தகுதி உள்ள பிற்படுத்தப்பட்ட ஏழைக்குக் கிடைக்கவேண்டிய வசதிகளை இவர்கள் வழிவிட்டு அனுபவிக்கவிடாமல் செய்கிறார்களே என்று ஏங்கியது உண்டு.

அதே நேரத்தில் உயர்குலத்தில் பிறந்தமைக்காக எந்த வசதியையும் பெறமுடியாமல் திணறிப் படித்தவர்களையும உயர்கல்வி பெற முடியாமல் போனவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் உழைத்திருக்கவில்லை என்றால் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கே அனைத்து நன்மைகளும் போய்ச் சேர்ந்திருக்கும்.

ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு நிச்சயம் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடும் உதவிகளும் செய்யவேண்டும் என்கிற ஏற்பாட்டைச் செய்து தந்ததாலேயே இச்சமுதாயம் நன்கு வளர்ந்து வருகிறது.

அதே நேரத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சல் போய்க் களைகள் பலன்பெற்ற கதைகளும் நம் சமுதாயத்தில் உண்டு.

பொருளாதார அடிப்படையில்தான் கல்வி வேலைவாய்ப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று நம் தலைவர்கள் கூக்குரல் எழுப்பியபோது அது ஏனோ எடுபடாமல் போனது.

ஆனால் அதிலிருந்து வடிகட்டப்பட்ட ஒரு கருத்தாய், ஒட்டுமொத்தமாகப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டாம். பிற்படுத்தப்பட்ட அனைவரும் நன்மை பெறட்டும் என்ற ஏற்பாடு செய்துகொள்ளப்பட்டது.

அதே நேரத்தில் பிறப்பால் உயர் வகுப்பாய் இருந்து அவர்களுக்கு வசதி இல்லை என்றால் அவர்களையும் கைதூக்கிவிட வேண்டும் என்கிறார் சின்கோ.

ஓட்டு வங்கியின் கோணத்தில் பார்த்தால் அரசு இதைப் பரிசீலிக்குமா என்பது சந்தேகம்தான். காரணம், இவர்களின் சதவிகிதம் மிகக் குறைவு. அரசியலுக்காக இதை எதிர்ப்பவர்களும் உருவாகவே செய்வார்கள்.

ஆனால் பரிசீலிக்கவேண்டிய நல்ல யோசனையாகவே இதைக் கொள்ள வேண்டியிருக்கிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Vietnam Travel

Friday, August 13th, 2010

hosimin.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

ஹோசிமின் வியட்நாமைத் தன்னிச்சையாக ஒரு சுதந்தர நாடு என்று அறிவித்ததும் பிரான்சு சும்மா இருக்கவில்லை.

வியட்நாம் இன்னமும் எங்கள் ஆதிக்கத்திற்குள்தான் இருக்கிறது என்று அறிவித்து தன் படைகளை வலிமைப்படுத்தியபடி போரை அறிவித்தது. பிரான்ஸ் இந்த விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டது என்பதைச் சரித்திரம் நிரூபித்தது. வியட்நாமிய மக்களை மிகவும் அப்பாவிகள் என்றும் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத மக்கள் என்பதால் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. ஆயுதமற்ற இந்தமக்களை எளிதில் மூட்டைப் பூச்சியை நசுக்குவதைப்போல் நசுக்கிவிடலாம் என்றும் அலட்சியக்கணிப்பீடு செய்துவிட்டது.

இதைப் புலி வாலைப் பிடித்த நாயர் கதையுடனும், பிள்ளைப் பூச்சியை எடுத்து வயிற்றில் கட்டிக் கொண்ட சம்பவத்துடனும் ஒப்பிட்டவிடலாம்.

வியட்நாமிய மக்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தி படுபயங்கர மூளையாகச் செயல்பட்டவர் ஹோசிமின்தான் பிரான்சிற்குப் வியட்நாமிற்கும் இடையே இந்தப் பயங்கரமான போரின் பெயர் என்ன தெரியுமா? ஆச்சரியப்படுவீர்கள். ஆம். இதன் பெயர் இந்தோசீனா போர். இது நடந்தது 1946 இல்.

விவசாயமும் மீன்பிடித் தொழிலும் தவிர வேறு எந்தத் தொழிலும் அதிகம் தெரியாத மிகப் பின் தங்கிய வியட்நாமிய மக்களை அபரிமிதமாகத் தயார் செய்த பெருமை ஹோசிமின்னுக்கு மட்டுமே உண்டு.

நவீன கெரில்லா (மறைந்திருந்து தாக்குவது) போர் முறையின் தந்தை என்றால் அவர் ஹோசிமின்தான். (இதனால் நன்மையடைந்தது வியட்நாம் என்றாலும் உலகம் இன்னமும் பல பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம்). இந்தப் பின்னணிகளை அறிந்தால்தான் ஹோசிமின் மீது அந்த நாட்டு மக்கள் ஏன் பெருமதிப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நமக்குத் தெரியவரும்.

வியட்நாமிய மக்களின் போர்த் தந்திரங்களைப் பற்றி இத் தொடரில் உரிய இடத்தில் சொல்கிறேன். இவற்றின் அடையாளங்களை வியட்நாமுக்குள் பயணித்து கண்கூடாக பார்த்தவன் என்பதால் இது சாத்தியம்.

இந்தப் பன்னணியை மனத்தில் கொண்டுதான் ஹோசிமின் வாழ்ந்த வளாகத்திற்குள் நுழைந்தேன்

ஹோசிமின் மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதை இவரது தோட்ட வீடு சொல்கிறது சாதாரணக் கட்டில், ஓர் எளிய மேசை. படிக்கக் கொஞ்சம் நூல்கள். எளிய பேனா, சாதாரணமான கண்ணாடி கலைநுணுக்கம் கொண்ட கண்ணாடிக் குடுவை, வியட்நாமியப் பாரம்பரியம் கொண்ட ஒரு மேசை விளக்கு, இவையா ஒரு தேசியத் தலைவரின் தனிப் பயன்பாட்டுச் சொத்துகள்! வியப்புதான்.

ஒளிவுமறைவான உள்ளறைகள் எல்லாம் இல்லை. தோட்டத்திலிருந்து பார்த்தால் அவரது கட்டில் மேசை எல்லாம் தெரிகின்றன.

மரத்தாலான சிறிய வராண்டா அதிலிருந்து பார்த்தால் தோட்டக் காட்சியின் பசுமைகள் தெரிகின்றன.

தோட்டத்தில் பம்பளிமாஸ்களும் மாங்கனிகளும் காய்த்துக் தொங்குகின்றன. நடக்கும்போது பம்பளிமாஸ்கள் நச்சென்று நெற்றியிலும் தலையிலும் மோதுகின்றன. பசும் புல்வெளிகள் அங்கங்கே சில பூச்செடிகள்.

நட்ட நடுவே ஒரு பெரிய குளம். வடிவமற்று இருந்தாலும் அதிலும் ஒரு நேர்த்தி இருக்கிறது.

அந்தக் குளத்தில் கொசக்கொசவென ஏராளமாய் மீன்கள். இதன் அளவுகள் மிரட்டுகின்றன. அவ்வளவு பெரிய அளவில் இருக்கின்றன. கிட்டே போனால் விலகி ஓடுமாக்கும் என்று பார்த்தால் ‘போடா சர்தான்’ என்பதுபோல் பயப்படாமல் பார்ப்பதுடன் நம்மை மிரட்டுவது போலவும் பார்க்கின்றன.

இவ்வளவு மீன்களுக்கும் தினமும் ஒரு மூட்டையளவு உணவைக் கொட்ட வேண்டுமே, யார் செய்கிறார்கள் இதை என்று எண்ணிக் கொண்டேன். எவரும் இவற்றைப் பிடிக்க முயற்சி செய்யாததாலும், ஏகப்பட்ட பார்வையாளர்கள் வருவதாலும் மனிதர்களுக்கு இவை பழகிவிட்டன என்று நினைக்கிறேன்.

ஒரு சிறிய குளத்தில் இவ்வளவு திரளான, பெரிய அளவிலான மீன்கள் நான் எங்குமே பார்த்ததில்லை என்பதால் வெகுநேரம் அசையாமல் நின்று உறைந்தே போனேன்.

வெகு தூரம் கடந்து போய்விட்ட ஹுவாங்கும் மணியும் பின்னோக்கிக் திரும்பிப் பார்த்து நான் வராதது கண்டு ரிவர்! கியர் போட்டு என்னை நோக்கி நடக்க ஆரம்பித்து அருகே வந்து

“என்ன இங்கேயே நின்றுவிட்டீர்கள்?”

“இந்த மீன் குளம் என்னைக் குழந்தையாக்கிவிட்டது” என்றேன். ஹுவாங் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். “உங்களுக்கு ஹோசிமின் மீது இருக்கும் ஆர்வத்தைவிட மீன்கள் மீது ஆர்வம் அதிகம் போலிருக்கிறதே” என்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல அந்த அமைதியான இடமே அதிரும்படி மூவரும் சிரித்தோம்.

எங்களைக் கடந்துபோன ஒரு ஜப்பானியக் குழு என்னடா இந்தாளுக இங்க வந்து இப்படிச் சிரிக்கிறானுவ” என்கிற பார்ைவையுடன் பார்த்துச் சென்றது.

அடுத்து நாங்கள் நகர்ந்தது ஹோசிமின் அரண்மனையின் (?) கார் நிறுத்தத்திற்கு.

ஸ்டுடிபேக்கர் எனகிற அந்தக் காலத்து கார் என நினைக்கிறேன். இதைத்தான் ஹோசிமின் பயன்படுத்தியிருக்கிறார். இதன் பக்கத்தில் இன்னொரு காரும் பார்த்தேன். ஒன்று பழுதானால் அதற்கு மாற்றாம் இது.

இரண்டையும் நன்கு பராமரித்து பலரும் காணும் வகையில் பாதுகாத்து வருகிறார்கள். உள்ளே போய்ப் பார்க்க அனுமதியில்லை என்பதால் வெளியில் நின்றபடி படம் எடுத்துக் கொண்டேன்.

பிரசிடென்ஷியல் பாலஸ் என்றுதான் ஹோசிமின் வாழ்ந்த கட்டடத்தை அழைக்கிறார்கள். இந்த இடத்தில் உள்ள மையக் கட்டடம் பிரம்மாண்டமாய் இருக்கிறது. இதன் உள்ளே காண அனுமதி இல்லையாம். இதுவும் ஹோசிமின்னின் வசிப்பிடமாம். இப்படியெல்லாம் (இதற்குள்) ஹோசிமின் வாழ்ந்தார் என்று அழைத்துப் போய்க் காண்பித்தால் அது அவரது கம்யூனிச எளிமைக்குச் சம்பந்தமின்றி இருக்கும் என்பதால் வெறும் தோட்ட வீட்டை மட்டும் காட்டுகிறார்களோ என்னவோ!

அல்லது அந்த அரண்மனையில் வாழாமல் தோட்ட வீட்டில் மட்டும் வாழ்ந்திருக்கும் பட்சத்தில் அரண்மனையை ஏன் பொதுமக்கள் பார்வையிட வேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

இந்த அரண்மனை பிரஞ்சு அரசால் 1906 இல் கட்டப்பட்டதாம். பிரஞ்சுக் கட்டடப் பாணியில்தான் இருக்கிறது. இது ஆரம்பத்தில் இந்தோனேசிய கவர்னர் ஜெனரலால் கட்டப்பட்டதாம்.

முக்கிய அரசு விழாக்கள் இங்கு நடத்தப்படுவது உண்டாம். அப்போது கூடப் பொதுமக்கள் பார்க்க முடியாதாம். இந்த மர்ம பங்களாவைப் பார்த்து ஆகவேண்டியது என்ன? தேவையில்லை!

இந்த வளாகத்திற்குள் ஹோசிமின்னின் பல்வேறு புகைப்படங்களை அழகுறத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். புகைப்படக் காட்சியைக் காண உங்கள் உடைமைகள் அனைத்தையும் வெளியே வைத்து விட்டு வாருங்கள். கண்டிப்பாக கையில் கேமராவோ செல்போனோ கொண்டு வரக் கூடாது என்கிறார்கள். ஜப்பானியக் குழுவினருக்கு ஓர் உள்ளூர் வழிகாட்டி ஹோசிமின்னின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சுவைமிகு பிரசங்கமாக ஆக்கிச் சொல்லிக் கொண்டிருந்தபோது ஒவ்வோர் இடத்திற்கும் நீண்ட நேரம் ஒதுக்குவதே முறை என்றும் இப்படியெல்லாம் மலர் காய்கறி பழக் கண்காட்சி பார்ப்பது போல் நாம் வேகமாக நகர்ந்து சென்று கொண்டிருப்பது ஒரு பத்திரிகையாளனுக்கு அழகல்ல என்கிற குற்ற உணர்வே உண்டானது.

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Junior Kelvi Pathil

Friday, August 13th, 2010

duplicate-marklist.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

பொ.சாமி, திருவேற்காடு.

தபால் அலுவலகங்களின் எண்ணிக்கைகள் குறைந்து வருகிறதே?

இதைவிட சேவைத் தரம் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்தப் போக்கு தனியார் தபால் சேவைகளையும் பேருந்து வழியே நடைபெறும் தபால் சேவைகளையும் ஊக்கப்படுத்துவனவாகவே உள்ளன.


தேவி இந்திரா, கொடுங்கையூர்.

சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலும் நடத்துகிறாரே விஜயகாந்த்?

சினிமா என்பது சுவர். அரசியல் என்பது ஓவியம். இதைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் விஜயகாந்த்! ரொம்பவும்தான் பழுத்துவிட்டார்.


வி.சுந்தரேசன், பெங்களூரு-2.

மின் கட்டணம் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைவு எனும் தகவல் சரிதானா?

விரிவாக வினவப்பட வேண்டும். நம்பக் கடினமாக இருக்கிறது. ஏழு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்பது ஆறுதல். ஏழைகளைப் பாதிக்காத மின் கட்டணம் என்கிறார் முதல்வர். குடித்தனக்காரர்களை நிச்சயம் பாதிக்கும். வீட்டுக்காரர்கள் இவர்களைச் சும்மா விடடு வைப்பார்களா? நடுத்தர வர்க்கத்தின் இடுப்பு எலும்பையும் பதம் பார்க்கிற இந்த உயர்வு தவிர்க்க இயலாதது என்பது மட்டும் நன்கு புரிகிறது.


எஸ்.டி.பாலன், தஞ்சாவூர்.

திருப்பதிச் சிறுத்தை கலக்குகிறதே?

இப்பதில் வெளியாகும் நேரம் அது பிடிக்கப்பட்டுவிடலாம். சிறுத்தை இரு குழந்தைகளைக் கவ்விப் பயிற்சி பெற்றுள்ளது. இனிக் கவ்வினால் இலக்கு சரியாக இருக்கலாம். ஏடுகொண்டலவாடாதான் நடை பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும்.


ஆர்.சித்ரா, புதுக்கோட்டை.

தண்டவாளங்கள் அடிக்கடி விரிசல் அடைவதாகக் கேள்விப்படுகிறோமே?

பழங்காலத் தண்டவாளங்கள்; மிதமிஞ்சிய பயன்பாடு; தினந்தோறும் கண்காணிக்க ஆள் இல்லை; தரமற்ற இரும்பு ஆகியவையே முக்கியக் காரணங்கள். இரயில்வே நிறைய இலாபம் சம்பாதிக்கிறதாம். உயிர்களை விலையாகக் கொடுத்தா இந்த இலாபத்தைச் சம்பாதிக்க வேண்டும்?


அருள்.அழகன், கன்னியாகுமரி.

ஏழை மாணவர்களுக்கு இனி மருத்துவப் படிப்பு?

அதுவும் உயர்படிப்புதான். கோடியைத் தொடுகின்றன! இனி டாக்டர் பொம்மைகளோடுதான் அவர்கள் விளையாட வேண்டும். இவர்கள் டாக்டர்களாக முடியாது. பாண்டிபஜார் சரக்குகளுக்கு இப்படியொரு மவுசா?


மு.கண்ணன், திருவான்மியூர்.

உங்களுக்கு எஸ்.எம்.எஸ்.கள் பிடிக்குமா?

சுருக்கம், நேரச்சேமிப்பு; கையடக்கம்; காசு மிச்சம். ஆனால் சில இம்சைக் குறுஞ் செய்திகளைப் படிக்க நேரும்போது செல்போன்களுக்கே ஆபத்து, போட்டு உடைத்துவிடலாமா என்றுதான்.


எஸ்.செந்தில்நாதன், பழநி.

இடைத்தேர்தலில் தெலுங்கானா கட்சி வெற்றி பெற்றது எதைக் காட்டுகிறது?

டி.ஆர்.எஸ்.கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பதவிகளை ச்நதிரசேகரராவின் ஆலோசனைப்படி இராஜினாமா செய்தார்கள். மறுபடி அங்கங்கே நின்று வெற்றி கண்டார்கள். இது பெரிய அதிசயமல்ல. மாநிலப் பிரிவினை என்பது ஆந்திர மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இல்லை. இதற்கு விஜயசாந்தி போன்றவர்கள் துணைபோவது நல்லதில்லை. விஜயசாந்தி யார் சொன்னாலும் மாறமாட்டார். ஒருவேளை இவரைக் திரையுலகிற்கு அறிமுகம். செய்த பாரதிராஜா சொன்னால் சற்றேனும் கேட்டுக்கொள்வார். பாரதிராஜா செய்வாரா?


கே.சாதிக்பாஷா, வேலூர்.

பஞ்சாயத்துகளுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுத்திருக்கிறார்களே? இது ஜனநாயகத்தின் வளர்ச்சிதானே?

ஆமாம். பஞ்சாயத்துகளுக்கு கொடுத்திருந்தால் அது ஜனநாயகம் இது. சமயங்களில் கட்டப் பஞ்சாயத்துகளை வளர்ப்பதால் பணநாயகமாகவும் ஆகிவிட்டது.


சி.ரங்கசாமி, கமுதி.

‘எங்களுக்கு பதவி என்பது நோக்கமல்ல; மக்கள் சேவையே முக்கியம்’ என்கிறாரே துணை முதல்வர் ஸ்டாலின்?

மேடைக்குத்தான் இந்த அலங்காரப் பேச்சு உதவும். அரிமாக்களும் சுழற்கங்க உறுப்பினர்களும், ஜேசீக்களும்கூட இைத்தான் சொல்கிறார்கள். இந்த மூலம் சொல்வதை ஏற்கலாம். அரசியலில் உள்ளவர்கள் சொல்வதை அப்படியே ஏற்கமுடியாது!


ஏ.மணிகண்டமணி, தேனி.

தி.மு.க.விற்கு இன்று திகட்டாதது எது?

மகளிர் சுய உதவிக்குழுக்கள்! அறிவாலயப் பத்திரங்களைவிட, இவர்களைப் பத்திரப்படுத்துவதையே தி.மு.க. இப்போது அதிகம் விரும்புகிறது.


டி.பெத்தபெருமாள், கோயமுத்தூர்.

‘காலம் மாறிப்போச்சு’ என்று எந்த விஷயத்தை முன் வைப்பீர்கள்?

வண்டுதான் பூவை முகரும். இதுதான் காலங்காலமாய் நடந்து வருகிற காதல் இலக்கணம். இப்போது பூக்களே வண்டுகளை முகர ஆரம்பித்துவிட்டன. ஓர் அழகு இளைஞர் சொன்னார். ‘இதுவரை எனக்கு சுமார் 20 அஃபர்கள் வந்துள்ளன’ என்று அதிர்ந்து போனேன்.


திருப்பதி கோபால், கோவை.

உங்கள் மீது யாராவது புழுதிவாரித் தூற்றினால்?

கவலைப்படமாட்டேன். காரணம் எனக்கு டஸ்ட் அலர்ஜி இல்லை.


கு.குமார், திருப்பூர்.

சென்னை நேப்பியர் பாலத்திற்கு ஒளிவிளக்கு ஊட்டப்பட்டபிறகு அந்தப் பக்கம் போனீர்களா?

ஒரு சாக்கடைப் பாலத்திற்கு (கூவம்) ஒளியூட்டியதைவிட (ஒன்றரைக் கோடி செலவாம்!) தமிழகத்தில் மேசை நாற்காலிகள்கூட இல்லாத மேற்கூரைகூட இல்லாத ஒளிக்கல்விக் கூடங்களுக்கு இத்தொகை செலவழிக்கப்பட்டிருந்தால் போய் எட்டிப் பார்க்கலாம்.


எஸ்.எம்.பானுமதி, கும்பகோணம்.

உங்கள் வீட்டு கரண்ட் பில் எவ்வளவு?

உங்களுக்கு ஒரு மெல்லிய அதிர்ச்சி தரட்டுமா? ஒரு மின் உற்பத்தி நிலையத்தை ஆரம்பித்துவிடலாமா என்று சிந்திக்கிற அளவிற்கு வேகம் வருகிறது.


சி.ராமதாஸ், முகப்பேர்.

பெண்கள் கல்லூரி சம்பந்தமான நிகழ்ச்சிகள் என்றால் உடனே ஒப்புக்கொள்கிறீர்களாமே?

வேறு ஒண்ணும் இல்லீங்க. இவங்கதான் நன்கு காது கொடுத்துக் கேக்குறாங்க. பல ஆண்கள் கல்லூரிகள் நரிகள் புகுந்த மாதிரி இருக்கு. நல்லா ஊளையிடுறாங்க.


அப்துல்ஹமீது, பெரியகுளம்.

‘பயங்கரவாதிகளுடன் போர் பழகிவிட்டது’ என்கிறாரே பாகிஸ்தான் அதிபர்?

விஷக்கிருமிகளை வளர்த்தார்கள். இப்போது விடை காண முடியாமல் தவிக்கிறார்கள்.


ஆர்.விஜயன், உடுமலைப்பேட்டை.

போலி மதிப்பெண் சான்றிதழ் உண்மைகள் வெளிவரத் தாமதம் ஆவது ஏன்?

வால் கிடைத்துள்ளது. விரைவில் தலைகள் அம்புடும். சம்பந்தப்பட்ட ஏகாம்பரம் உயர்சக்திகளால் மிரட்டப்படுகிறார். ‘வாயைத் திறந்தே’, என்கிற பாணியில். இதனால் பல்லி தன் வாலை மட்டும் உதிர்த்துவிட்டு ஓடிவிடுமே, அது மட்டும்கூட நடக்கலாம்.


எம்.கருப்பையா, ராமேஸ்வரம்.

தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுவது தொடர்கிறதே?

தமிழக மீனவர்கள் எல்லை கடப்பதால் வரும் கோளாறு இத்தகவலை இந்தியக் கடற்படையில் உயர் அதிகாரியும் உறுதி செய்துள்ளாார். ஆனால் எல்லை மீறுபவர்களைக் கைது செய்து சட்டப்படி நடக்காத இலங்கைத் கடற்படையின் எல்லை மீறல்தான் பெரிய அத்துமீறலாக உள்ளது!


டேவிட் தம்புராஜ், காரைக்குடி.

வீட்டுப் பிரச்னையை எப்படி சமாளிக்கிறீர்?

எல்லாவற்றுக்கும் வெள்ளையறிக்கையைக் தந்துவிடுகிறேன். குறைகளை தவறுகளை மன்னிக்க வீட்டினர் தயார். ஆனால் பொய்களை மன்னிக்க அவர்கள் தயாரில்லை என்கிற உண்மையைப் புரிந்து வைத்திருக்கிறேன்.


ஏ.வெற்றிகொண்டான், திருச்சி.

மத்திய அரசை தி.மு.க. இன்னமும் மிரட்டுகிறதா?

எதிர்முனையிலும் அழுத்துவதற்கு பிஸ்டல் தயாராக இருக்கிறது என்பதால் இப்போது இது குறைந்துள்ளது.

06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Healthy life

Friday, August 6th, 2010

potato.jpgகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.

மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும்.

100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும், கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன.

ஒரு மனிதன் தினமும் பாலும், உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட்டுகள் (மாவுப்பொருளும் சர்க்கரையும்) உருளைக்கிழங்கில் அபரிதமாய் உள்ளன. வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ, நீண்ட நாள்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப்பயன்படும் காய்கறி இதுதான்.

மத்திய அமெரிக்கப் பழங்குடிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நூறுவகையான உருளைக் கிழங்கு வகைகளைப் பயிர்செய்து தினமும் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். சிலி நாட்டிலிருந்து ஈக்வடார் நாடு வரை ஆய்வுப்பயணம் செய்த ஸ்பானியர்களின் மூலமே உருளைக்கிழங்கு எல்லாக் கண்டங்களுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டில் பரவியது

அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது, உருளைக்கிழங்கு. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் இது இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் இதைப்பார்க்கலாம்.

‘சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான்.

உருளைக் கிழங்கைச் சாப்பிட்டதும் அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தரவரிசைப்படி ஒழுங்குப்படுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான்.

சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது. பாலைவிடப் புரதச்சத்து இதில் அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது இரவில் ‘திடீர் திடீர்’ என்று பசியினால் அலறாது. நிம்மதியாகத் தூங்கும்.

அரிசி, கோதுமை, ஜவ்வரிசி முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் அழிந்தநிலையில் தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப் பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது.

உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில் தான் அதிக அளவு ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.

உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும். உலகில் பல்வேறு காலகட்டங்களில் பஞ்ச காலத்தில் பட்டினியைத் தவிர்த்துக் கோதுமைக்குப் பதிலாக உருளைக்கிழங்கைச் சாப்பிட்ட வரலாறும் உண்டு. புரதம், மாவுப்பொருள், சர்க்கரை என அனைத்து சத்துணவும் இதிலேயே கிடைத்துவிடுவதால்தான் பசியைப் பொறுத்துக்கொள்ளமுடிகிறது.

வாயுப்பொருள் என்று ஒதுக்காமல் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடாமல் மற்றவகைகளில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து பெறுங்கள்.

ஆரோக்கியத்தைப் புதுப்பிக்கும் உருளைக்கிழங்கு!
எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

ஊட்டச்த்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பச்சையான உருளைக்கிழங்கு
ரசம் தரும் நன்மைகள்!

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சயைாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும். இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும்.

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.

இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும்; வலியும் நீங்கும்.

வாத நோய் குணமாகும்!
இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

நீண்ட நாள் மலச்சிக்கல் தீர….
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.

முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கைத் தவறவீடாதீர்கள்.
ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக் கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது.

உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது?
வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம். சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு! எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். குண்டானவர்களை மேலும் குண்டாகிவிடும்! எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். (ஆசைக்காக)

வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Govt needs to care on students education

Friday, August 6th, 2010

student.jpgஅடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

முரண்பாடு என்கிற சொல்லுக்கு அண்மையில் கண்கூடாக ஓர் உதாரணம் கண்டேன்.

‘பள்ளியில் கூரை எந்த நேரத்தில் தலையில் விழுமோ தெரியவில்லை; பயமா இருக்கு’ என்று ஒரு பள்ளி மாணவி ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருந்த அதே நாளில் தமிழகத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘இந்தியாவிலேயே கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பது தமிழகம்தான்’ என்று பெருமைபட்டுக் கொண்டாரே, இைத்தான் குறிப்பிடுகிறேன். மக்களுக்கு நலன் செய்யவேண்டிய அரசு, மூன்று துறைகளில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி ஆகியவையே இந்த மூன்று.

உணவைக்கூட மக்கள் எப்படியோ சமாளிக்கிறார்கள். இது தனி மனிதனின் சக்தியைப் பொறுத்தது.

நல்ல மருத்துவமனைகள் என்றால் இன்று தனியார் மருத்துவமனைகள் என்று ஆகிவிட்டன. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குப் பஞ்சம். மருந்துகளா? வெளியில் வாங்கிக்கொண்டு வந்துவிடுங்கள் என்று மருந்தாளுநர்கள் கைவிரிக்கிறார்கள். பெரும்பாலும் கல்வி நிலையோ சொல்ல வேண்டாம். இடிந்த, பராமரிப்பு இல்லாத கட்டடங்கள். பெண் பிள்ளைகள் சிறுநீர் கழிக்கக்கூட வசதி இல்லை. மாலைக்குமேல் வீட்டுக்கு வரவேண்டிய நிலை. இதனால் சிறுநீரகக் கற்கள் சிறுவயதிலேயே உருவாகும் நிலை.

தமிழகத்தின் பல அரசுப் பள்ளிகளில் மேசைகள், கரும்பலகைகள் ஆகியவை இல்லை. ஆசிரியர்கள் ஓய்வுபெற்றால் அவ்வளவுதான்! புதிய நியமனங்கள் அநேகமாய் இல்லை.

அரசுப் பள்ளிகளில் நுழைந்து திரும்பினால் மனசு கனக்கிறது.

அப்படியானால் கல்விக்கு அதிகமாகப் பணம் ஒதுக்கப்படுகிறது என்கிற வாக்குமூலத்தை எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்வது?

கல்வித் துறையில் ஓட்டைகள் பெரிய அளவில் இருக்கின்றன.

தமிழகம் கல்லூரிக் கல்வியில் தருகிற வளமான காட்சியைப் பள்ளிகளின் அளவில் காண முடியவில்லை என்பதே உண்மை!

அடித்தளத்தை வலுப்படுத்தாமல் பல மாடிக் கட்டடங்களை கட்ட எண்ணுவது சாதுரியமாகுமா?

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Motivational Self Help Morning Thoughts

Friday, August 6th, 2010

lena-writer.jpgஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

காலை 4.30 முதல் வரை உள்ள நேரத்தை நம் முன்னோர் ஏனோ ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நேரத்தின் அருமைபெருமைகளை வழிவழி நம்பிக்கைக் கோணங்களிலோ, சாஸ்திரங்களின் அடிப்படையிலோ விளக்குவதற்கு நான் பொருத்தமானவன் அல்லன்.

ஆனால் இந்த விடிகாலை நேரத்தில் மனம் மிகத் தெளிவாக சலனமில்லாமல் எவ்விதச் சிந்தனையின் ஆக்கிரமிப்புகளும் இன்றி, பள்ளிக் கூடத்தில் முதல் வகுப்பின்போது துடைத்து வைக்கப்பட்ட கரும்பலகைபோல் இருக்கிறது.

என்ன பிரச்னையை எடுத்துக் கொண்டு சிந்தித்தாலும் விடிகாலை நேரம் மட்டும் குழப்பமற்ற விடையைத் தருகிறது. எதைப் பயின்றாலும் ‘பச்சக்’ என்று மனத்தில் பதிந்துவிடுகிறது.

இந்த நேரத்தில் ஊரே உறங்குகிறது. தொலைபேசியின் நைநை நைப்புகள் இல்லை. தேடி வரும் விருந்தினரோ பார்வையாளர்களோ எவரும் இல்லை. நீங்கள் உங்கள் வசம் இருக்கிறீர்கள். நேரமும் உங்கள் வசம் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த அருமையான நேரத்தை கோட்டை விட்டுவிட்டு பின் அந்த தினத்தில் எந்த வேளையை விரட்டிப் பிடிப்பதாக உத்தேசம்? உயர் அதிகாரிகள் பார்வையாளர் நேரம் எனறு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, தேடி வருபவர்களையெல்லாம் சந்தித்துத் தீர்க்கிறார்கள். மற்ற நேரங்களில் போனால் “பார்வையாளர் நேரம் இனி நாளைதான். நாளை வாருங்கள்” என்று தயவு தாட்சண்யம் இன்றித் திரும்பி அனுப்புகிறார்கள்.

நம் வாழ்க்கை முறை இப்படியா என்ன? ஒரு தூரத்து உறவினரும் நெருங்கிய நண்பரும் வந்து சேர்ந்து நம்முடைய அரை நாள் பொழுதை நம் அனுமதி இன்றியே வீணடிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்களே!

முக்கிய முடிவுகளை எடுக்கவும் காலை நேரம் சிறந்தது. காரணம், அன்றாடப் பொழுதுகளின் சம்பவங்களால் ஏற்படும் மனத்தாக்கம் நமக்குள் இல்லை. முடிவுகளை உணர்ச்சிபூர்வமாக அன்றி அறிவுபூர்வமாக ஆழ்ந்து சிந்தித்து எடுக்க நல்ல அவகாசம் கிடைக்கிறது.

கோட்டையூரில் ரோஜா முத்தையா என்று ஒரு நூலக அறிஞர் வாழ்ந்தார். அவரது வார்த்தைகளில் ‘விடிகாலை எழுபவர்கள் வாழ்க்கையில் தோற்று நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோ கிடையாது!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Vietnam Travel

Friday, August 6th, 2010

hanoi.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

வியட்நாமின் தேசத் தந்தை எனப் போற்றப்படும் ஹோசிமின்னின் (HO#CHI#MINH) நினைவகத்தில் எனக்குத் காத்திருந்த மிகப் பெரிய ஏமாற்றம் என்ன தெரியுமா?

அது மூடிக்கிடந்ததுான். என்னது? நினைவகத்தை மூடுவதா? வருடம் முழுக்கத் திறந்து இருக்கவேண்டிய நினைவகத்தை மூடுவார்களா? என்ன கதையா விடுகிறீர்கள் என்கிறீர்களா?

உண்மை.

ஹோசிமின்னின் உடலை இன்னமும் பாடம் செய்து (Embalmed) இங்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் இவ்வுடல் கெட்டுப் போகாமல் பாதுகாக்க வருடத்தில் மூன்று மாதங்கள் ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பதப்படுத்தப்படுமாம்.

நானும், மணியும் ஹுவாங்கும் சென்ற தினத்திற்கு முன்தினம்தான் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாம். எப்படி இருந்திருக்கும் எனக்கு?

ஹோசிமின் மீது எனக்கு நன்மதிப்பு உண்டு. அவர் உடல் இல்லாததால் அதைப் பார்ப்பது குறித்த நடைமுறைகளையும் அந்த நினைவகத்தின் உள்ளே எப்படி இருக்கும் என்பது பற்றியும் தெரிந்துகொள்ள முடியாமல் போயிற்று.

இதைப் பற்றிப் பேச மணி மூலம் அறிமுகம் ஆன வியட்நாமின் நண்பர் ஹுவாங்தான் சரியானவர் என்று பட்டது. ஹுவாங்கின் வாயைக் குடைந்தேன்.

“வியட்நாமியர்களுக்குப் புனிதத்தலம் என்றால் அது ஹோசிமின்னின் நினைவகம்தான். உள்ளே நீங்கள் வந்து காணமுடியாமல் போனதிலிருந்தே நீஙக்ள ஓர் அதிஷ்டமற்றவர் (யோவ்!) என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. உள்ளே மக்கள் பேசவோ, முணுமுணுக்கவோகூட மாட்டார்கள். அரை டிராயர் ஜீன்ஸ் போட்டுக்கொண்டெல்லாம் உள்ளே நுழைய முடியாது. பரவாயில்லை! நீங்கள் முழு உடையோடு வந்திருக்கிறீர்கள்” என்று என்னை ஏற இறங்கிப் பார்த்துவிட்டு கெக்கே பிக்கே என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

(யோவ் ஹுவாங்கு! இதெல்லாம் ஒரு ஜோக்காய்யா?)

பிறகு அவரே தொடர்ந்தார். ‘தொப்பி’ அணியக்கூடாது. கைகள் இரண்டையும் பாண்டுக்குள் விட்டுக்கொள்ளக்கூடாது.”

“அப்படியா?”

“ஆமாமா!”

“செல்போன், கேமரா எதற்கும் அனுமதி இல்லை. இந்த நினைவகம் இன்னொரு வகையிலும் மிக விசேஷமானது வியட்நாமின் முழுப் பகுதியிலிருந்தும் கட்டட மூலப்பொருள்கள் சேகரிக்கப்பட்டு இது கட்டப்பட்டது.”

“எங்கள் ஊரில் புனிதத் தலைவர் என்றால் அவர் உடல் எரித்து நாடு முழுக்கச் சாம்பல் தூவவோ, நாடு முழுக்க உள்ள நீர்நிலைகளில் கரைக்கவோ செய்வார்கள்.

“புதுமையாக இருக்கிறது. 1973 முதல் 1975 வரை பொருள்களைச் சேகரித்து அவற்றைக்கொண்டு இந்த நினைவகத்தைக் கட்டினார்கள். இது திறந்திருக்கும்போது நீங்கள் வரவில்லையே என்று எனக்கு ஏக்கமாக இருக்கிறது. பல நூறு மீட்டர்களுக்குப் பாம்பு நெளிந்து படுத்திருப்பதுபோல கியூ வரிசை காணப்படும். சட்டெனவும் கியூ நகராது. ஹோசிமின்னின் சதுக்க வளாகம் நகரின் முக்கியமான பகுதியில் மிகப் பெரிய இடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது.

வெகுதூரத்திலேயே காரை நிறுத்திவிட்டு,வாகனப் போக்குவரத்து அற்ற பகுதியில் ஏகப்பட்ட தூரம் நடக்கவேண்டும். தொறுத்தொறு என்று மழை வேறு பெய்துகொண்டிருக்க, கேமராவை வெளியே எடுக்க யோசனையாக இருந்தது. நாங்கள் நனைந்து கேமராவுக்குக் குடைப் பாதுகாப்புக் கொடுத்தோம்.

அங்கங்கே முக இறுக்கத்துடன் பளீர் வெள்ளை உடையில் கையில் துப்பாக்கியுடன் பாதுகாவலர்கள் விறைப்பாக நிற்கிறார்கள்.

காலனி ஆதிக்கத்திலிருந்து வியட்நாமிய மக்களை விடுவித்து மக்கள் மத்தியில் கம்யூனிசத்தின் செல்வாக்கைப் பரப்பியவர்.

‘சற்றுநேரம் காத்திருங்கள். பாதுகாவலர்கள் மாறுகிற அழகு சிறப்பாக இருக்கும்” என்றார் ஹுவாங்.

“லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் பாதுகாவலர்கள் மாறுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே வேண்டாம். புறப்படுவோம்” என்றேன்.

“லண்டன் பாதுகாவலர் மாற்றமெல்லாம் சாதாரணம். நீங்கள் அவசியம் இந்த இடத்தில் நடைபெறும் அந்த விசேஷத்தைக் காணவேண்டும்”.

“பரவாயில்லை. புறப்படுவோம்.”

இந்த நினைவகத்திலிருந்து நடக்கிற தூரத்தில்தான் தலைவரின் அரண்மனை (Presidential Palace) அதுவும் மிகச் சரியாகப் பின்புறம் இருக்கிறது. இரண்டிற்கும் இடையே அழகான பூங்கா ஒன்று பராமரிக்கப்படுகிறது.

ஹோசிமின் வாழ்ந்த வீட்டின் உள்ளே நுழைய 5000 வியட்நாமிய டாலர்களாம். சற்றே ஆட்டம் கண்டது என் உடல். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் நான்தான் எடுப்பேன். ஊகும்! நான் எடுப்பேன் என்று ஹுவாங்கும் மணியும் மல்லுக்கட்ட ஏதேது! இவர்கள் நமக்கு வேேலையே வைக்கமாட்டார்கள் போலிருக்கிறதே என எண்ணிக்கொண்டேன்.

காலை 8.00க்குத் திறந்து 11.00க்கு வெளியேற்றி மதியம் 2.00க்கு ஆரம்பித்து மாலை 4.00க்கு ஓடிப் போங்க என்கிறார்கள். நேரத்தைச் சற்று அதிகப்படுத்தலாம் இவர்கள்.

ஹோசிமின் 1958 முதல் 1969 வரை அவ்வப்போது வரப்போக இருந்திருக்கிறார். எந்த நாளில் எந்த நேரத்தில் நாட்டின் எந்தப் பகுதியில் இருப்பார் என்றே சொல்ல முடியாதாம். அமெரிக்கர்களுடன் நடந்த போரில் புது உத்திகளைக் கையாண்டு அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வது உலக நாடுகளுள் வியட்நாம் மட்டுமே!

போர்களில் தோல்வி என்பதையே அறியாத அமெரிக்கா, வியட்நாமில் மட்டும் ஒப்புக்கொள்ள இயலாத தோல்வியைத் தழுவியது.

இந்தப் போரின் முதுகெலும்பாக விளங்கியவர் ஹோசிமின்இத்தகைய கொரில்லா போருக்குத் தலைமை தாங்கி நடத்தியவருக்கு இந்த வீட்டிலேயே முகாமிட பிடித்திருந்தது?

1890இல் பிறந்த ஹோசிமின் இயற்பெயர் குயென் சிங் குங் ஹோயாங் என்ற பகுதியில் பிறந்தார். வியட்நாமைத் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரான்சு நாட்டின் நீராவிக் கப்பலில் வேலையில் சேர்ந்ததால் உலகம் முழுவதும் சுற்ற வாய்ப்புத் கிடைத்தது. சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் கப்பல் ஊழியராகச் சென்ற வேளையில்தான் கம்யூனிசத்தின்மேல் இவருக்கு கண் விழுந்தது.

சென்ற இடங்களில் (குறிப்பாக சீனாவில்) வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட வியட்நாமியர்களை இவர் சந்திக்க நேர்ந்தது.

இவர்களையெல்லாம் ஒன்று திரட்டினார் ஓர் உயர்ந்த நோக்கத்துடன். 1930இல் இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்து அவர்களின் உள்ளங்களைத் தட்டி எழுப்பினார்.

ஹோசிமின்னை மிகப் பெரிய ஆற்றல்மிக்க பேச்சாளர் என்கிறது சரித்திரம்.

புழுவின் உடலில் புலியின் இரத்தம் பாய்ச்சிய கதையாய், சோம்பிக் கிடந்து அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமியர்களை எழுச்சிமிக்கவர்களாக ஆக்கும் ஆற்றல் இவரது பேச்சிற்கு இருந்தது.

இவரது எண்ணம் ஈடேற அரசியல் சூழலும் சாதகமாக மாற ஆரம்பித்தது 1945இல் ஜப்பான் வெறித்தனமாக மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்க ஆரம்பித்து வியட்நாம், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளை வென்று பிரெஞ்சு ஆதிக்கத்தை ஓழித்தது.

அதே நேரத்தில் ஜப்பான் நேச நாடுகளிடம் சரணமடைந்தபோது வியட்நாமில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தி, ஹனாயைக் கைப்பற்றி வியட்நாமை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தார். ஹோசிமின் பிரான்ஸ் சும்மா விடுமா?

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Junior Kelvi Pathil

Friday, August 6th, 2010

karanunadhi-jayalalitha-vij.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஏ.தர்மராஜன், பாளையங்கோட்டை.

பா.ஜ.கா. தேய்கிறதே?

அதுவொரு நிலா. தேய்ந்து வளருவதுதான் நிலாவிற்கு எப்போதும் பிடிக்கும்.


எஸ்.செல்வி, சென்னை-40.

ஆக்டபஸ் ஜோதிடம் பிடிக்குமா?

வறுவல்தான் பிடிக்கும். ஆஸ்திரேலியா போயிருந்தபோது வடை மாதிரி ஒன்றைக் கொடுத்தார்கள். என்னது இது? சுவையாக இருக்கிறதே என்றேன். ஐயோ! தெரியலையா? ஆக்டபஸ் வறுவல் என்றார்கள். துப்ப முடியவில்லை. ருசி அப்படி!


உ.வைரவன், புதுக்கோட்டை.

பட்டறிவுக்கும், படிப்பறிவுக்கும் என்ன வித்தியாசம்?

பட்டறிவில் முதலில் தேர்வு, அப்புறமாய்தான் பாடம். படிப்பறிவில் முதலில் பாடம். அப்புறமாய்தான் தேர்வு.


எஸ்.இருதயராஜ், மயிலாடுதுறை.

வரும் தேர்தலில் ஆண்டிப்பட்டியையும் கைப்பற்றுவோம் என்கிறாரே அழகிரி?

ஆண்டிப்பட்டிக்காரர்களுக்கு இனி சுக்கிரதிசைதான். அதைத்தான் அழகிரி நாசூக்காகக் சொல்லியிருக்கிறார்.


பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.

சீமான் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதே?

இவர் என்ன பெரிய சீமானா என்று நினைக்க வேண்டிய அரசு, அவரை அப்படி நினைக்கத் தயாரில்லை. அதனால்தான் இந்தச் சட்டம்!


எஸ்.சாய்குமார், வந்தவாசி.

உலகத் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் உதைபட்ட கால்பந்தானது ரூபாய் முப்பத்தைந்து லட்சத்திற்கு ஏலம் போனதாமே?

அட! நம்ம ஊர் செந்தில் அங்கே எப்படி? இவர்தான் உதைபட்டாலும் மதிப்பு, வருமானம்!


எம்.ராகவ், சென்னை.

கர்நாட அரசியல் எப்படியிருக்கிறது?

யார் தோண்டினாலும் எப்போது தோண்டினாலும் அது சுரங்கமாகவே உள்ளது. எனவே சுரங்கத்தில் இருப்பதை வெளியில் உள்ள எங்களைப் போன்றவர்களால் சரிவரப் பார்க்க முடியவில்லை.


டி.சாந்தா, கோவை.

போலியோ கட்டுப்டுத்தப்பட்டு விட்டதே?

போலியோ குறைந்து வருகிற நேரம் பார்த்து போலிகள் பெருகி வருகிற நேரமாக உள்ளது. என்ன செய்ய?


ஏ.எல்.பழனியப்பன், திருச்சி.

உங்களை அமைச்சராக்கினால்?

என்னைப் புழலில் (சிறை) மூழ்க வைக்க எத்தனை நாளாய் உத்தேசம்?


எம்.கல்யாணசுந்தரம், பவானி.

இப்போது தமிழர்களுக்கு தேவைப்படுகிறது?

அவர்களின் முதுகெலும்பிற்கான ஸ்டெம்செல் சிகிச்சை!


பி.எஸ்.பெருமாள், ஓசூர்.

ராகுல்காந்தி கலைஞர் உறவு?

அவர்களுக்குள் இப்போதிருப்பது ஒரு பொருட்படுத்தாத உறவு! ராகுல் ஏனோ கலைஞரைப் பொருட்படுத்துவதே இல்லை!


எழில்பிரியன், காஞ்சிபுரம்.

தங்கபாலு, தி.மு.க.வை அளவு கடந்து ஆதரிக்கிறாரே?

உங்களுக்கு ஒரு சந்தேகம்தானா அது எனக்கும்தான். தங்கபாலு தி.மு.க.வில் பதிவு செய்து கொள்ளாத ஒரு மாநிலச் செயலாளர்.


மணிகண்டமணி, தேனி.

ஜெயலலிதா முன்னிலும் சுறுசுறுப்பாக இருக்கிறாரே?

கோவைக்காரர்கள் கெட்டிக்காரர்கள். கருணாநிதிக்கு குளூக்கோஸ் ஏற்றிய கையோடு ஜெயலலிதாவிற்கும் அதை ஏற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். இவருக்கு ஓரிரு பாட்டில்கள் அதிகம். அதனால்தான் இந்தச் சுறுசுறு!


எஸ்.ராமதாஸ், முகப்பேர்.

தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

கிழிபடுவதற்கான சட்டைகளைச் சேகரித்துக் கொள்ளத் தரப்பட்ட அவகாசமோ என்னவோ!


அ.ஞானசேகரன், மதுரை.

பா.ம.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது?

கொழு கொம்பு இல்லாமலிருந்த முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி போல, கொழு கொம்பு இல்லாத இந்தக் கட்சிக்கும் ஒரு பாரி எப்படியும் கிடைப்பார். அதுவரைக்கும்தான் பொறுங்களேன்!


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

தமிழக அரசியலில் கூட்டணிகள் எப்படி அமையும்?

ஏகப்பட்ட ஓருதலைக் காதல்கள் எதிராளியைக் கேட்காமலேயே ஆளாளுக்கும் அவர்களாகவே காதலித்து வருகிறார்கள். இந்தக் காதல்கள் எங்கே முடியுமோ தெரியலே.


கே.கபிலன், கோபி.

அரசியலில் மரியாதைச் சந்திப்பு என்றால் என்ன?

அவர்களுக்குள் ஏதோ மாட்டுத் தரகு நடந்திருக்குன்னு அர்த்தம். பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் தரகுக்குப் பெயர் மரியாதைச் சந்திப்பு!


எஸ்.அழகப்பன், கோயமுத்தூர்.

தமிழில் படித்தால் அரசு வேலையில் முன்னுரிமையாமே?

நிச்சயம் ஜெராக்ஸ் எடுக்கும் வேலையாவது கிடைக்கும். அதைதான் இப்போது கொடுத்திருக்கிறார்கள்.


எஸ்.நாச்சிமுத்து, சிங்காநல்லூர்.

இன்று தெளிவான தலைவர் யார்?

விஜயகாந்த்! எதையுமே குழப்பிக் கொள்ளாமல் படப்பிடிப்பில் இருக்கிறார். ஏற்கெனவே இவர் மேக்அப்பில் இருக்கிறார். மற்றவர்களோ அந்த மேக்அப்புக்காக அலைகிறார்கள்.


டி.வெங்கடேஷ், ஹைதராபாத்.

மகாராஷ்டிர அணையை எதிர்த்து சந்திரபாபு நாயுடு கைதாகி இருக்கிறாரே?

லோக்கல் அரசியல் புளித்துப்போய் இந்திய அரசியல் பண்ணப் போயிருக்கிறார். உள் மாநிலப் புளிப்பை விட வெளிமாநிலப் புளிப்பில் கடுமை அதிகம். இது நாயுடுவிற்குத் தெரியவில்லை.


ஏ.அப்துல்ஹமீது, கரூர்.

சச்சினின் இரத்தத்தில் எழுதப்பட்ட புத்தகம் பற்றி?

மோசமான இரசனை என்பேன். சச்சின் இந்த மண்ணிற்காகக் கணக்கில்லாமல் வியர்வை சிந்தியவர். உலக அளவில் இந்தியாவின் பெருமையைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பன்மடங்கு உயர்த்தியர். அவரது இரத்தத்தில் உருவான புத்தகத்தைப் புரடடும்போது மனம் மகிழுமா? பதறுமா? ஓர் உயிரைக் காப்பாற்றப் பயன்பட வேண்டிய இரத்தம் புத்தகங்களை உருவாக்கவா? சே! Bad taste!


ஜி.எஸ்.பீதாம்பரம், கொடுங்கையூர்.

மதிப்பெண் ஊழல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால்?

கஷ்டப்பட்டு படித்தவர்களுக்கெல்லாம் மதிப்பு இல்லாமல் போயிருக்கும்!


எஸ்.பவளராஜன், உடுமலைப்பேட்டை.

தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஓய்வு பெற்றுவிட்டாரே?

அரசியல்வாதிகள் பலருக்குக் குளிர்விட்டுப் போகும்! பலருக்கு மகிழ்ச்சி ஏற்படும். நேர்மையும் திறமையும் இரண்டும் உள்ளவர் அரசியல் மிரட்டல்களுக்கு அஞ்சாதவர். தமக்குச் சரியென்று பட்டவற்றை எப்பேர்ப்பட்டவர்களுக்கும் உணர்த்தத் தயங்காதவர் நரேஷ் குப்தா போன்றவர்களை இனியும் காண்போமா? சந்தேகம்தான்!


நா.குமார், புதுச்சேரி.

இரயில் டிக்கெட்டுகள் ஊழலில் சி.பி.ஐ.நுழையுமளவு ஆகிவிட்டதே?

பெரிய அளவில் வேறு நடந்ததுதான் காரணம். பொது மக்கள் சக்கையாக ஏமாற்றப்பட்டதுதான் காரணம். ஒருமுறை ஒரு சக பயணி உண்மைகளைக் கக்கினார். திடீரென்று சென்னைக்கு வருவாராம். நினைத்த இரயிலில் திரும்புவாராம். நினைத்த வகுப்பில் பயணிப்பாராம். 300 ரூபாய் 400 ரூபாய் அதிகம் கொடுத்தால் போதுமாம். கற்றை கற்றையாக இரயில் டிக்கெட்டுகளை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்பவர்கள் உண்டாம். அதிகாரப் பெருச்சாளிகள் பிடிபட்டால் பொதுமக்கள் நன்மை பெறுவர். நடக்கட்டும்.

30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்