Tamilvanan » 2010 » July

Archive for July, 2010

Healthy life

Friday, July 16th, 2010

brinjal.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

அட, அப்படியா?
ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாகும். கத்தரிப்பிஞ்சும், முற்றிய காய்களும் சமைத்து உண்ண உபயோகப்படுகின்றன!

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.

100 கிராம் கத்தரிக்காயில் புரதம்1.4 கிராம், கொழுப்பு 0.3 கிராம், நார்ச்சத்து 0.3 கிராம், தயாமின் 0.04 மில்லி கிராம், ரைபோபிளேவின் 0.11 மில்லிகிராம், நிகோடினிக் அமிலம் 0.09 மில்லிகிராம், வைட்டமின் ‘சி’ 12 கிராம், வைட்டமின் ‘ஏ’ 124 சர்வதேச அலகுகள் என்னும் கணக்கில் உள்ளன. 100 கிராம் காயில் கிடைக்கும் கலோரி அளவு 24 தான்.

கத்தரிக்காய்
அறியாத சில உண்மைகள்!
கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும்.

தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன; ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன.

இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது.

பாரிசவாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகல்கிறது. உடல் வலிவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும்.

குளிர்க்காலத்திற்கு ஏற்றகாய்!

உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட - இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரிவற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும்.

கத்தரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

இந்தியாவில் தோன்றியது கத்தரிக்காய். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிர் செய்யப்பட்டுவருகிறது. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் முக்கிய காய்கறிப் பதார்த்தமாய் இப்பொழுதும் இருந்து வருகிறது.

மத்திய தரைக்கடல் நாடுகளிலும், பால்கன் பகுதிகளிலும் முக்கிய உணவாகக் கத்தரிக்காயைப் போற்றி உண்ணுகின்றனர்.

அமெரிக்காவின் முக்கியமான முதன்மையான 22 காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாய் விளங்குகிறது.

உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும்.

இக்காய் ஊதா அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். அவை இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.

வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Vietnam Travel

Friday, July 16th, 2010

halong-bay.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

“நான் ரஜினியைப் போல”!

வியட்நாமின் தலைநகரான ஹனாயில் இந்திராகாந்திக்குச் சிலை இருக்கிறது என்பது உண்மையில் எனக்குப் புதிய தகவலாக இருந்தது.

ஹனாயில் ஜமீல் ஸ்டீலில் பணிபுரியும் தமிழர் மணியிடம் “நாளை அந்த இந்திராகாந்தி சிலை இருக்கும் இடத்திற்கு அவசியம் அழைத்துப் போங்கள்” என்றேன்.

“ஹனாயில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் என்று நான் ஒரு பட்டியலை தினந்தோறும் எப்படி எப்படி என்று போட்டிருக்கிறேன். அதன்படி முதல்நாள் பட்டியலில் இந்திரா பூங்கா இல்லை, அடுத்தநாள் தான் வருகிறது. நீங்கள் விரும்புவதால் நாளைய பட்டியலுக்கு அதைக் கொண்டுவந்து விடுகிறேன்.”

“இந்திரா பூங்கா பற்றிச் சொன்னீர்கள். ஒரு நாட்டின் தலைவரின் சிலையை மற்ற நாடுகளில் வைப்பதே பெரிது என எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திராவுக்கு என ஒரு பூங்காவே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்கு உண்மையில் மிக சுவாரசியமாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது மணி சார்.”

“வாருங்கள் அங்கு வந்து பாருங்கள் அசந்து போவீர்கள்!”

நானே பெருமிதமாகச் சொல்லிவிட்டபிறகு இன்னுங்கூட ஒருவித உயர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் என்றால் நிச்சயம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று ஊகம் செய்தேன்.

“காலையில் சீக்கிரம் எழுந்து விடுவீர்களா?”

“உங்களையே எழுப்பிவிடுமளவு எழுந்து விடுவேன்” என்கிற என் பதிலை மணி மிகவும் இரசித்தார்.

மணியின் வீடு, ஒரு படுக்கையறை கொண்ட Flat. ஆகையால் மணி எனக்குத் தம் படுக்கையறையை விட்டுக் கொடுக்க முன்வந்து வரவேற்பறையில் சோபாவில் படுத்துக் கொள்ள முன்வந்தார்.

“இது நியாயமில்லை. நான் சோபாவில் படுத்துக் கொள்கிறேன். எனக்கு இது பிடிக்கும். எனக்குப் பெரிய செளகரியமெல்லாம் தேவையில்லை. இந்த விஷயத்தில் நான் ரஜினி மாதிரி எங்கு படுத்தாலும் எனக்குத் தூக்கம் வரும்” என்று என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். மணியிடம் ஒன்றும் எடுபடவில்லை.

நான் பயணங்களின்போது இரண்டு அலாரங்களை எப்போதும் எடுத்துக் கொள்வேன். ஒன்று காலை வாரினாலும் ஒன்றில் பாட்டரி இழந்தாலும் மற்றது காப்பாற்றும் என்கிற நம்பிக்கை.

ஐந்து நிமிட இடைவெளியில் ஐந்து மணி நேரம் மட்டும் தூங்கும்படி அலாரங்களை அடைத்துவிட்டுத் தூங்கினேன்.

சரியாக எழுந்து திருடனைப்போல் சத்தம் ஏதும் எழுப்பாமல் குளித்துக் தயாராகி கையில் இருந்த டிரான்சிஸ்டரைத் தட்டி பிபிசியின் உலகச் செய்திகளைத் கேட்டுவிட்டு வியட்நாமிய மொழியின் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன்.

வியட்நாமிய இசை கிட்டத்தட்ட மேற்கத்திய இசைபோல் ஆகிவிட்டது. இதை ஒப்பிடும்போது நாம் எப்படியெல்லாம் இன்னமும் பாரம்பரிய இசையிலிருந்து எந்த அளவு விலகாமல் இருக்கிறோம் என்பது புரிந்தது.

காலையில் எழுந்த மணி கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தவர் என்னது! குளித்து தயாராகிவிட்டீர்களா? என்று வியந்து போனார்.

“தேவைக்கு ஏற்றபடி அன்றாட தினத்தை மாற்றி வடிவமைத்துக் கொள்வேன் மணி சார். தூக்கம், உணவு, குளியல் என்று எல்லாவற்றையும் நம் வீட்டில் நம் நாட்டில் இருப்பதுபோல் அமைத்துக் கொண்டால் வந்த இடத்திற்குப் பொருந்தாதே சார்” என்றேன்.

இதை அவர் மிகவும் ஏற்பது போல் ஓர் இதழோரப் புன்னகை ஒன்றைச் சிந்தினார்.

வரவேற்பறையை ஒட்டிய ஒரு தடுப்பின் பின்னால் தான் சமையலறை.

சட்டென்று சில உணவு வகைகளைச் சுடவைத்துக் கொடுத்தார். அவற்றுள் ஒன்று வியட்நாம் பாணி சூப்.

“நீங்கள் குறிப்பிட்ட வியட்நாம் பெண்மணி தயாரித்த சூப்பா இது”

“ஆமாம்”

“உங்கள் நேரமும் அவர் வேலைக்கு வரும் நேரமும் வேறுவேறு. பிறகு எப்படித் தகவல் தெரிவிப்பீர்கள்?”

“இந்த மேசையில் எழுதி வைத்துவிடுவேன். வீட்டில் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன சமைக்க வேண்டும் என்று ஒரு தாளில் எழுதிப் பார்வையில் வைத்துவிடுவேன்.”

“மறுநாள் பகல் நேரத்தில் வந்து அனைத்து வேலைகளையும் முடித்து வைத்துவிட்டுப் போய்விடுவார்.”

“ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறதே! சாவி?”

“அவரிடம் ஒன்று, என்னிடம் ஒன்று!”

“ஒன்றும் பயமில்லையா?”

“இந்த வியட்நாமியப் பெண் மிகவும் நம்பிக்கையானவர். ஒன்றுமே களவு போகாது. எழுதி வைத்த வேலைகளை அவ்வளவு சரியாகவும் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் முடிப்பார்.”

“வீட்டு வேலை செய்கிற பெண்மணியைப் பற்றி ஒரு குறைகூடத் சொல்லாமல் இருக்கிற நல்ல முதலாளி நீங்கள்!”

சிரித்துக் கொண்டார் மணி.

மணி பிரிட்ஜைக் காண்பித்து “நீங்கள் விரும்புவீர்கள் என்று பழச்சாறுகள் கொண்ட டப்பாக்கள், பழங்கள், ஐஸ்கிரீம்கள், உதிரித் தீனிகள் என்று அனைத்தையும் வாங்கி நிறைத்திருக்கிறேன். இந்த வீடு உங்கள் வீடு போல. இது உங்கள் விட்டு பிரிட்ஜ் என்று நினைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்பதை எடுத்தக் கொள்ளுங்கள்.நான் எடுத்துத் தர வேண்டும் என்பதே இல்லை. வெட்கப்படாமல் வேண்டுமென்கிற நேரத்தில் வேண்டுமென்பதை எடுத்துத் தயங்காமல் பயன்படுத்துங்கள் என்றார்.

வெளிநாடுகளில் என்னை விதவிதமாக உபசரித்தவர்கள் உண்டு. இப்படி பிரிட்ஜ்ஜை நிறைத்து எல்லாம் உங்களுக்கு விருப்பம் போல் பயன்படுத்துங்கள் என்று சொன்னவர்களை நினைவுப்படுத்திப் பார்க்கிறேன். உஹும் எவரும் நினைவிற்கு வர மறுக்கிறார்கள்.

பிரிட்ஜ்ஜைப் பார்த்தேன். உயர்ந்த உள்ளம் படத்தில் ஓட்டல் பாடலாக ஒன்று வரும். “இஷ்டம் போல் வெட்டுங்கடா டோய்” என்று கமலஹாசன் ஒரு பாடல் பாடுவோரே அதில் ஆரம்பித்து பழங்காலத்தில் “இதுவே எனக்குப் போதும்” என்று ரங்கராவ் முடிப்பாரே அந்த நிலையில் இருந்தேன்.

தமிழ்க் தொலைக்காட்சிகளை எவ்வளவோ திட்டுபவர்கள் உண்டு. இவர்கள் இவற்றின் அருமையை உணர லாவோஸ், கம்போடியா போன்ற தமிழ் தொலைக்காட்சிகளே இல்லாத பகுதிகளில் சுற்ற வேண்டும். ஒரு சிறு தமிழ் நிகழ்ச்சியையாவது பார்க்க மாட்டோமா? தமிழகச் செய்திகள் என்ன? என ஏங்கிப்போவோம் ஏங்கி. நானும், இந்த மனநிலையில்தான் இருந்தேன். மணி வீட்டில்தான் இதற்குத் தீனி கிடைத்தது. பல தமிழ் சேனல்களை இவரது தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்தபோது என் மனம் அடைந்த நிறைவு இருக்கிறதே அதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

“மணி சார் எத்தனை மணிக்குப் புறப்படுகிறோம்? எப்படிப் போகிறோம்

ஹுவாங்தான் நம்மை அழைத்துச் செல்கிறார். நேரம் ஏழரை என்று சொல்லியிருக்கிறேன்.”

“எத்தனை மணிக்கு?”

“மணி ஏழு இருபத்தைந்து!

“நீங்கள் புறப்பட இன்னும் பத்து நிமிடம் ஆகும்போல தெரிகிறதே”

பரவாயில்லை. ஹுவாங் காத்திருப்பார்.

“அப்படியில்லை மணி சார்! எழரை என்றால் ஏழரை. நான் கீழே இறங்கி வருகிறேன் நீங்கள் தயாராகி வீட்டைப் பூட்டிக் கொண்டு முன்பின் வாருங்கள். நான் தயாராகி விட்டதால் கீழே போய் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒருவராவது நேரத்திற்குப் போனதாக இருக்கட்டும்” என்று பதிலுக்குக் காத்திராமல் கதவைத் திறந்து கொண்டு ஏதோ கட்டடத்தில் தீப்பிடித்துக் கொண்டவனைப்போல் லிப்டைக் கூட மதிக்காமல் படிக்கட்டுகளில் ஓடி ஓடி இறங்கினேன்.”

மணி ஏழு இருபத்து எட்டு. சரியாகக் கூட அல்ல! ஹுவாங்கிற்கு முன்னால் போய் குறித்த நேரத்தைக் கடைப்பிடிப்பதில் இந்தியர்களும் வல்லவர்களே என்று நிரூபிக்க வேண்டும் என்பதே என் ஆசை. 7.29க்கெல்லாம் கீழே இறங்கி ஹுவாங்கின் கார் நிற்கும் இடத்திற்குப் போனால்

ஹுவாங் காரின் அருகே…

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

50% credit guarantee for tamil govt

Friday, July 16th, 2010

tamil-computer.jpgபாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

தமிழ் படித்தவர்கள் ஒரு காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், விரிவுரையாளர், துணைப் பேராசிரியர் என்று இவற்றை மட்டுமே இலக்குகளாகக் கொண்டு படித்தார்கள்.

பள்ளி, கல்லூரிகளின் பெருக்கங்கள் இன்றளவிற்கு அன்று இல்லை என்பதால், இந்த வேலைகளும் கிடைக்காமல் பல்வேறு துறைகளை நாடிப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது.

உதாரணமாக 1975-77 ஆம் ஆண்டுகளில் என்னுடன் தமிழ் எம்.ஏ.படித்தவர்கள் மொத்தம் 31 பேர். இவர்களுள் ஒன்பது பேர்களுக்கு மட்டுமே கல்விப் பணியில் வேலை வாய்ப்புக் கிடைத்தது.

மற்றவர்கள் பிரித்துக் கொட்டிய நெல்லி மூட்டையாய் ஆளுக்கொரு திசையில் சிதறிப் போனோம். அரசு வேலை வாய்ப்பை ஒருவர் மட்டுமே பெற முடிந்தது. இவரும் தமிழால் வாய்ப்புப் பெற்றாரா என்றால் இல்லை.

எனவே தமிழ் படித்தவர்கள் இந்தக் காலத்தில் இரக்கத்திற்குரியவர்காளகவும் பரிதாபத்திற்குரியவர்களாகவும் கருதப்பட்டார்கள்.

தமிழ் படிப்பது அதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெறுவது என்பது பெரும்பாலும் குதிரைமீது பணம் கட்டுவதற்குச் சமம். ஜெயித்தாலும் எவ்வளவோ குதிரைகளின் நடுவே சில குதிரைகளுக்கே வாய்ப்பு என்கிற நிலை.

வேலை வாய்ப்பைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழின்மீது கொண்ட பற்றால் காதலால் படித்தவர்களும் உண்டு. பட்ட மேற்படிப்பும் படிக்க வேண்டும். இருப்பவற்றுள் ஏதோ ஒன்று என்று படிக்க முன்வந்தவர்களையும் அறிவேன்.

ஆக வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லாத படிப்பாகவே தமிழ் இலக்கியம் இருந்து வந்தது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் சில பலன்கள் விளைந்திருக்கின்றன என்றால் அவற்றுள் உருப்படியானது தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்பது.

இதைத் தேர்தல் அறிவிப்புப் போல காற்றில் கரைந்து விடாமல், சட்ட முன்வடிவம் கொடுத்து சட்டமாகவும் ஆக்கப் போகிறார்கள்.

முந்தைய அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதில் முரண்பாடான கொள்கையைக் கொண்டிருக்கும் அடுத்த அரசு கூட இந்த நன்மையின் மீது கை வைக்கப்படும் என்று நம்ப இடமிருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை என்பது இயல்பாகவே நடக்க வேண்டிய ஒன்று. மற்ற மாநிலங்களில் அந்த மொழிகளைப் படிக்காதவர்கள் வேலை பெறுவது என்பது நினைத்துப் கூடப் பார்க்க முடியாத ஒன்று.

இந்த அடிப்படை விஷயத்திற்கே நாம் குதிக்க வேண்டிய நிலைக்குத் தமிழகத்தின் முந்தைய ஆட்சிகள் நம்மை வைத்திருந்தன.

இந்த நிலையை மாற்றியமைக்கும் இந்த ஆட்சிக்கு 50 சதவிகித நன்றி கூற வேண்டும்.

வேலைவாய்ப்புகளை அதிகரித்து, வேலைச் சேர்க்கை நடைபெறப் போதுமான நிதி ஆதாரங்களை வகுத்து வேலை வாய்பகத்தை முடுக்கியும் விட்டு நியமன ஆணைகளைப் பெருமளவில் வழங்கும் போதுதான் மீதமிருக்கிற நன்றியையும் சேர்த்துச் சொல்ல முடியும்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Knowing health tips is good

Friday, July 16th, 2010

lena-tamilvanan-kalkandu1.jpgமருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

நம் வாழ்நாளின் அருமையான சேமிப்புகளெல்லாம் மருத்துவச் செலவு எனும் தீயினில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இந்த அவலம் நிகழாதிருக்கவேண்டுமானால் நமக்குச் சிறிதேனும் மருத்துவ அறிவு அவசியம்.

மருத்துவச் செலவை அவலம் என்றும், தீ என்றும் எப்படிச் சொல்லப்போயிற்று என்று மருத்துவம் சார்ந்த எவரும் கோபம் கொள்ளவேண்டாம்.

பல மருத்துவச் செலவினங்கள் அறியாமையினால் வலிய இழுத்துக்கொள்ளப்பட்டவை என்பதனாலேயே சொல்கிறேன்.

நோயின் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவரிடம் போகவேண்டும் என்பது மருத்துவ அறிவில் தலையாயது. தொண்டையில் கீச்கீச் ஆரம்பித்த உடனேயே மருத்துவரிடம் சென்றுவிட்டால் சளி, காய்ச்சல், இருமல், தொண்டைக்கட்டு ஆகியவை உடனே கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் இல்லாவிட்டால் பத்துகள் (ரூபாய்தான்!) நூறுகளாகி, ஆயிரங்களாகிவிடும்.

வாய்க் கட்டுப்பாடு என்பது நோய்க் கட்டுப்பாடு என்பது இரண்டாவது மருத்துவ அறிவு, நமக்குள் என்னென்ன கோளாறுகள்; நம் பரம்பரை வழியே நமக்குள் ஒளிந்திருக்கும் கோளாறுகள் என்னென்ன என்பதை உணர்ந்து அவற்றிற்கு ஏற்ப நம் வாழ்க்கை முறையை (லைஃப் ஸ்டைல்) உணவு முறையை மாற்றிக்கொள்ளாவிட்டால் செலவுகள் சில இலட்சங்கள் என்பது உறுதி.

மருத்துவ அறிவை வளர்த்துக்கொள்ளப் பல வழிகள். ஒரு மருத்துவர் தம் இருக்கையில் இல்லாத பிற இடங்களில் கிடைத்தால் விடக்கூடாது. ஒரு மினி பேட்டி எடுத்துவிட வேண்டும். தொலைக்காட்சிகள், வானொலிகளில் தினமும் மருத்துவப் பேட்டிகள் உண்டு. இவற்றைப் பார்க்கவும், கேட்கவும் வேண்டும். மருத்துவ நூல்களுள் நமக்கு என்னென்ன கோளாறுகள் உள்ளனவோ அவை குறித்த நூல்களை வாங்கிப் படிக்கவேண்டும்.

நம் மருத்துவ அறிவு நமக்குப் பல பெரிய தொகைகளை நமக்கு மறைமுகமாக ஈட்டித் தரவல்லது என்பதோடு நம் உடல் உபாதைகளையும் அடியோடு குறைக்கவல்லது!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Junior Kelvi Pathil

Friday, July 16th, 2010

petrol-hike.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எம்.சந்திரபிரபு, குடியாத்தம்.

பெட்ரோல் விலையேற்றத்தை மக்கள் பாராட்டுகிறார்கள் என்கிறாரே மன்மோகன்சிங்?

டர்பனை ரொம்ப கீழே இறக்கிட்டார்போல அதுதான் எதுவுமே அவர் காதில் விழமாட்டேங்குது தலைப்பாகைக்கூட ஒருவகையில் அவருக்கு நல்ல தலைக்கவசமாய் இருக்குது. அதிர்ஷ்டக்காரர்! மக்கள் பாராட்டுகிறார்களாமா…?ஹும்! என்னத்தைச் சொல்வது!


எம்.கண்ணன், சென்னை-118.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போரட்டத்தை ஒடுக்க முயன்ற கலைஞரைப் பற்றி?

என்னதான் அகில இந்தியத் தலைவராயிருந்தாலும் டெல்லித் தலைவருக்கு இவர் சலோ சொல்ல முடியாது. சலாம்தான் சொல்ல முடியும்.


என்.தமிழ்மணி, சென்னை.

வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர்ப் பலகைகள் அவசியம்தானா?

மக்களுக்குத் தெரிவது தலைக்கு மேலே உள்ள விலைவாசிள்தாம்! பெயர்ப் பலகைகள் அல்ல. எனவே விலைவாசிகளைக் கட்டுப்படுத்தினால் தமிழர்களும் மகிழ்வார்கள். தமிழன்னையும் மகிழ்வாள்.


சி.எஸ்.ஏ. சென்னை-118.

பழ.கருப்பையா வீட்டைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை இல்லையே?

கண்டுக்காதீங்க. தி.மு.க.விற்கு மட்டும் இந்தப் பழம் ரொம்பவும் கசந்து விட்டது. அதனால்தான் இது அடிபட்டது பொதுவாக மாற்றான் தோட்டத்துப் பழங்களை அடிப்பதில் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே அலாதிப்பிரியம் கலைஞரின் கருவூலத்தில் இந்த வரலாறும் சேர்க்கப்படுமா?


கே.பெரியசாமி, ஈரோடு.

டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் கண்டிப்பாக உயராதாமே?

மறைமுகமாக உயர்த்துவதில் நம் போக்குவரத்துக் கழகங்கள் சமர்த்துகள்!


ஜி.விக்டர்ராஜ், சென்னை.

உங்களின் லேண்ட் லைன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா?

இருக்கிற கேபிளையே ஒட்டுப்போட்டு ஒட்டுப்போட்டு பேசிக்கொண்டு இருக்கிறேன். இதில் என்ன இரகசியம் பேசிவிடப் போகிறேன்.


க.தி.மணி, காரைக்குடி.

பழைய சட்டப் பேரவை மண்டபத்தில் செம்மொழி நூலகம் அமையப் போகிறதாமே?

கலைஞரா, கொக்கா? ‘பழைய கோட்டையில் ஆட்சி செய்வேன்’ என்று ஜெயலலிதா சொன்ன அதே நாளில் இந்த அறிவிப்பைச் செய்து அவரை அங்கு நுழையவிடாமல் செய்துள்ளார். ஆக இவர்களின் சண்டையால் வெள்ளையர்கள் காணாமல் போய்விட்டார்கள். இந்த யுக்தி, நமது தேசியத் தலைவர்களுக்குத் தெரிந்திருந்தால் வெள்ளையர்களை அவர்கள் எப்போதோ காணாமல் செய்திருப்பார்கள்.


ஜி.கதிரவன், உடுமலை.

சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் மறைவு குறித்து?

சட்டசபையில் மட்டுமல்ல ‘மல்லிகை மணக்கும் பூவிருந்தவல்லியிலும் ஒரு மல்லிகையின் வாசம் அடங்கிப் போனது.


வி.செந்தாமரை, சென்னை.

செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பியின் வருகை பற்றி?

இவரது வருகை செய்வினை அல்ல; அதுவொரு செயப்பாட்டுவினை இன்னுமா புரியலே. அதுக்குத்தாங்க இலக்கணம் வேணுங்கிறது! சிவத்தம்பி வரவில்லை; வரவழைக்கப்பட்டார் என்கிறேன்!


டி.சம்சுதீன், காஞ்சிபுரம்.

வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.விடம் என்பது தொகுதிகளைக் கேட்போம் என்கிறாரே கார்த்தி சிதம்பரம்?

கோவையில் ‘இனியவை நாற்பதுக்கு அளித்த அதே ஆதரவு உங்களுக்கும் உண்டு என்று சொல்லப் போகிறார் கலைஞர். இதைத்தான் அப்பா சிதம்பரமும் பிள்ளை சிதம்பரமும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்.


எம்.பிரபு, கொளத்தூர்.

இன்றைய இளைஞர்களிடம் வீரம் இல்லையே?

ஐ.டி.பார்க் பக்கம் போனாலும் போனார்கள். ரேஷன் கடைகளில் அரிசி வாங்கக்கூட அவர்களிடம் தெம்பில்லை. ஏதோ நம்ம வீட்டுப் பெண்களால்தான் அந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியையாவது வாங்க முடிகிறது.


கே.ஆனந்தன், விருகம்பாக்கம்.

எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் தேவையா?

அவர்களுள் சிலருக்கு கட்டிங்கே போதும. ஓய்வூதியம் தேவையில்லை. இந்த கட்டிங் விஷயத்தில் இவர்கள் ரொம்பச் சமர்த்து.


எம்.பார்த்திபன், முசிறி.

நீங்கள் அதிர்ஷ்டசாலியா?

நானொன்றும் ஆளும் கட்சியின் அரசியல் வாரிசு இல்லையே? அவர்கள்தான் இன்று உண்மையான அதிர்ஷ்டசாலிகள்.


எஸ்.சங்கர், சென்னை-20.

மனித வாழ்க்கையை ஏதோடு ஒப்பிடலாம்?

எல்லோரும் நீர்க்குமிழியோடு ஒப்பிடுவார்கள். நானோ குழந்தையின் கையில் கிடைத்த பலூனோடு ஒப்பிடுவேன்.


ஆர்.வெற்றிகொண்டான், திருச்சி.

தேர்தல் வந்தால் யாருக்கு வாழ்வு?

நாட்டிலுள்ள எல்லாச் சுவர்களுக்கும் பொங்கல் வந்த மாதிரி எல்லாச் சுவர்களுமே அப்போது வெள்ளையடித்துக் கொள்ளும்.


எஸ்.ராமஸ்வாமி, சென்னை-4.

பீகார் மாநிலத்திற்கு குஜராத் அரசு அளித்த நிவாரண நிதியைத் திருப்பியளித்த நிதிஷ்குமாரின் செயலைப் பற்றி?

மோடி கொடுத்தது பர்சனல் பணமல்ல. அது பப்ளிக் பணம். அந்த பப்ளிக் பணத்தை நம்ம நிதிஷ் பப்ளிக்காய் உதாசீனப்படுத்தியிருக்கிறார். இது பப்ளிக்காய் தெரிகிறது.


ஆர்.ஸ்ரீஹரி, சென்னை-44.

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் விரிசல் காளகஸ்தி போல் ஆகிவிடுமா?

ஆகாது. முன்பு காளகஸ்தியில் விரிசல். இப்போது ஸ்ரீரங்கத்தில் விரிசல். ஆக விரிசலில்கூட சைவமும் வைணவமும் இப்படி பாலன்ஸ் பண்ணி நமது இந்தியாவை ஒரு சமயச் சார்பற்ற நாடாகக் காட்டிக் கொண்டிருக்கிறதே என்றுதான் நானும் கொஞ்ச நேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆள்பவர்கள் பக்கத்தில் ஆண்டவர்களும் இருப்பது ஆச்சரியம்தான்.


டி.இமானுவேல், திருச்செங்கோடு.

தி.மு.க., அ.தி.மு.க. காரர்களுக்குப் பிடித்த விளையாட்டு?

இப்போதைக்கு இவர்களுக்குப் பிடித்தது கபடி! இரு சாராருக்குமே காலை வாருவதுதான் இப்போது ரொம்பவும் நடக்கிறது.


எஸ்.பவானி, பொழிச்சலூர்.

இனியாவது தமிழர்கள் தமிழிலேயே பேசுவார்களா?

‘ஸ்பீக்’கலாம். யார் கண்டார்கள்?


எஸ்.பரந்தாமன், ஆடுதுறை.

போபால் விஷவாயு வழக்கில் ஆண்டர்சன் தப்பிக்க யார் காரணம்?

அரசியலிலும் விஷவாயு கசிந்திருப்பது இப்போதுதான் தெரிகிறது. கொஞ்சம் பொறுங்க, மத்திய அரசு எனன சொல்றது? நானே சொல்கிறேன்.


பி.சரவணன், சென்னை-80.

அடுத்த தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு என்ன?

அந்த ராமதாஸ் சாலையில் இன்னும் எத்தனை ‘யூடர்ன்’கள் இருக்கோ? அதில் பயணிப்பர்களுக்கே அது வெளிச்சம்!

09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Healthy life

Friday, July 9th, 2010

yam.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

கிழங்குவகைகளுள் அதிகமான மாவுச்சத்தைக் கொண்டவை, சேப்பங்கிழங்குகள் தான், உருளைக் கிழங்கைவிட எளிதில் வேகக்கூடியவை; செரிமானம் ஆகக்கூடியவை. உருளைக் கிழங்கைவிட, இனிப்புச் சுவை அதிகம் கொண்டவை.

சேப்பங்கிழங்கில் வெண்மை, கருமை என இரு நிறவகை உண்டு. ஐரோப்பாவில் 13 வகைகள் உள்ளன.

100 கிராம் சேப்பங்கிழங்கில் கிடைக்கும் கலோரி அளவு 97 ஆகும். அதில் மாவுச்சத்து 21 சதவிகிதமும், புரதம் சதவிகிதமும், ஈரப்பதம் 73 சதவிகிதமும் உள்ளன.

குழந்தைகள் அறிவுடனும் உடல் உறுதியுடனும் வளர….
சேப்பங்கிழங்கு வெட்டை நோயைக் குணமாக்கும். இருசாராரின் மலட்டுத் தன்மையையும் நீக்கும். இரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்யும். காய்ச்சல் நேரத்திலோ, தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும் காலத்திலோ இக்கிழங்கைச் சாப்பிட்டால் அது மருந்தை முரிக்கும். வாதம், இருமல் ஆகியன உள்ளவர்களும் தவிரிக்க வேண்டிய கிழங்கு இது. மற்றபடி எல்லா வயதுக்காரர்களும் நனகு சாப்பிட வேண்டிய கிழங்குகளுள் இதவும் ஒன்றாகும். கண்பார்வைத் திறனை அதிகரிக்கும்.

ஹாவாயிலும் மற்ற பசிபிக் தீவுகளிலும் சேப்பங்கிழங்கும், சேப்பங்கீரையும் முக்கிய உணவாக உள்ளன. தென்னமெரிக்காவில் டாஸீன் என்று இதற்குப் பெயர்.

வேகவைத்த கிழங்கைக்கொண்டு சூப்பு, குழம்பு, கேக் முதலியன தயாரிக்கிறார்கள். இக்கிழங்கிலிருந்து குழந்தைகளுக்கான சத்துணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான மற்ற சத்துணவுப் பொருள்களில் முக்கிய மூலப் பொருளாகவும் இக்கிழங்கு மாவு பயன்படுகிறது. வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’ போன்றவையும் இக்கிழங்கில் அதிக அளவு உள்ளன. இதனால் குழந்தைகள் புத்திக்கூர்மையுள்ளவர்களாய் வளர்கின்றனர்.

மேற்கண்ட நன்மைகளை இக்கிழங்கை வேகவைத்துப் பொரியல் செய்து சாப்பிட்டாலே பெறலாம். சேப்பங்கிழங்கும், கீரையும் சற்றுக் கசப்பாய் இருக்கும். இதைப் போக்கப் புளிசேர்த்துச் சமைக்க வேண்டும்.

கிழங்கைப் போலவே கீரையும் சத்து மிகுந்தது. 100 கிராம் சேப்பங்கீரையில் 56 கலோரி வெப்பம் உடலுக்குக் கிடைக்கிறது. ஆனால், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ முதலியவை அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் சேப்பங்கீரையில் உள்ளன.

சேப்பங்கீரையைத் தண்டுடன் சேர்த்துச் சமைத்தால் சத்துகள் அதிகமாய்க் கிடைக்கும். வாடிய கீரையையும் சமைத்துண்ணலாம். இது இக்கீரைக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும். வளரும் குழந்தைகளுக்குக் கால்சியமும், பாஸ்பரஸும் மிக அவசியமானவையாகும். 100 கிராம் உலர்ந்த சேப்பங்கீரையில் 1500 மில்லிகிராம் கால்சியமும், 308 மில்லிகிராம் பாஸ்பரஸும் கிடைக்கின்றன.

சேப்பங்கிழங்கின் இலைகள் முக்கோணவடிவில் பெரிய அளவில் இருக்கும்: பார்க்க மிகவும் அழகானவையாகவும் இருக்கும்.

சிறந்த உணவான சேப்பங்கீரையை வேகவைத்த தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் வயிற்றுவலி, மலச்சிக்கல் முதலியவை உடனே குணமாகும்.

சேப்ப இலையின் சாறு வெட்டுக்காயங்களை உடனே ஆற்றும். வெட்டுக்காயத்தின்
மீது சில துளிகள் விட்டால் போதும்.

மூல நோய்க்கு மிகச்சிறந்த உணவு மருந்து, இக்கீரை. காதுவலி, காதில் சீழ் வடிதல் முதலியவை குணமாக சேப்பங்கீரைச் சாற்றினை துளியளவு காதில் விட்டால் போதும்! காதுவலி குறையும் குணமாகும். காதில் உள்ள சீழ் நீங்கும்; அதனால் ஏற்பட்ட புண்ணும் உடனே குணமாகும்.

பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரைச் சாற்றைப் பூசினால் நஞ்சு இறங்கிவிடும்; வலியும் குறையும்.

புளி சேர்த்துச் சமைத்துண்பதால் சேப்பங்கீரை இரத்தக் கடுப்பை குணமாக்குகிறது. தாது விருத்தியை அதிகரித்து குழந்தைப் பேறு கிடைக்கவும் வழி செய்யப்பயன்படுகிறது.

சேப்பங்கிழங்கின் தாயகம் ஐரோப்பாவும் மேற்கு ஆசியாவும் ஆகும்.

சேப்பங்கிழங்கின் மாவுச்சத்து, கீரையின் மருத்துவக்குணங்கள் முதலியவற்றிற்காக இந்தியா உட்பட பல நாடுகள் சேப்பங்கிழங்கு உற்பத்தியில் அதிகம் ஈடுபாடு காட்டிவருகின்றன.

வீட்டுத் தோட்டங்களில் சேப்பங்கீரையை உணவிற்காக வளர்ப்பது இந்தியாவின் அதிகரித்துள்ளது. இது சிறந்த மூலிகையாகும்.

மூலநோய் குணமாகவும், மூளைவளர்ச்சி அதிகரிக்கவும் சேப்பங்கிழங்கு, சேப்பங்கீரை முதலியவற்றை உணவில் அடிக்கடி இடம் பெறச் செய்யுங்கள்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Love and affection

Friday, July 9th, 2010

writer-lena.jpgசின்னச் சின்ன கரிசனங்கள்!

கரிசனம் என்பதற்குத் தமிழ் அகராதிகள் அன்பு, கனிவு, பாசம் என்று பொருள் கூறுகின்றன.

இதற்கு அருமையான பலன்கள் உண்டு.

எங்கள் வீட்டிற்கு மளிகைப்பொருள் கொண்டுவந்து தரும் பையன், குரியர் கடிதத்தைத் தர வரும் நபர், தனியார் தொலைபேசிக் கட்டணத்தை வசூல் செய்ய வரும் ஆள், ஓரு புதுப்பொருளை வாங்கினால் அதை எங்கள் வீட்டிற்கு வந்து பொருத்தி தரும் தொழில்நுட்பக் கலைஞர் என்று எவர் வந்தாலும் இன்முகம் காட்டி “வாருங்கள்” என்பேன். முதலில் தண்ணீர் எடுத்து நீட்டுவேன். “டீ, காப்பி ஏதேனும் சாப்பிடுங்களேன்” என்பேன்.

‘தினமும் பல வீடுகளுக்குப் போகிறோம் ஒருவர்கூட இப்படி நம்மை உபசரிக்க(?)வில்லையே’ என்று அவர் எண்ண ஆரம்பிப்பார்.

இது ஓர் அடிப்படை மனிதாபிமானம். ஆனால் எதிராளியின் மனத்திற்குள் சில இனம்புரியாத இரசாயனங்களைச் சுரந்து பல நன்மைகளைப் புரிய வைக்கும் நம்மைச் சார்ந்தும். நம்மை எதிர்பார்த்தும், நாம் கவனிப்புக் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்கிற எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கும்கூட அது காட்டப்படுவதே கரிசனம்.

பொது இடங்களில், பயணங்களில் சந்திக்கும் நபர்களிடம் காட்டப்படும் சிறுசிறு அன்புச் செயல்கள் அந்த இடத்தில் அந்தப் பயணத்தில் இனிய அதிர்வலைகளை உருவாக்குகின்றன.

நாம் படித்து முடித்த செய்தித்தாள்களை வார இதழ்களை உடனே பெட்டிக்குள் போட்டு பூட்டாமல் “நீங்கள் படிக்கிறீர்களா?” என்று சகபயணிகளிடம் கேட்கும்போது (”இதெல்லாம் நான் படிப்பதில்லை” என்று அவர் மறுத்தாலும்கூட) அங்கே நம் உள்ளத்தின் பரப்பளவை நாம் எடுத்துச் சொல்லவிட்ட திருப்தியை நாம் அடையலாம்.

நம்மைப் பாதிக்காத Affect பல சிறுசிறு செயல்கள் எதிராளியின் உள்ளத்தில் மிகப் பெரிய பாதிப்பை influence ஏற்படுத்துகின்றன என்கிற உண்மையை உணர்ந்தவர்கள் நிச்சயம் கரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Vietnam Travel

Friday, July 9th, 2010

hoian-hue.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்

வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

அன்று நாங்கள் சென்றது ஒரு புத்தர் கோயிலுக்கு. உள்ளே ஏகப்பட்ட அமைதி. புத்தர் ஆலயங்கள் என்றாலே புத்த பிரானின் அமைதி தவழும் அவர் முகம்போலத்தான்.

இந்த அமைதிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. என்னையும் டோனாவையும் தவிரக் கோயிலில் எவரும் இலர். புத்த பிட்சுக்கள், கோயிலைப் பாதுகாக்கும் காவலர்கள், பராமரிப்பாளர்கள் என எவருமே இலர். என்னதான் பாதுகாப்பான ஊர் என்றாலும் இப்படியா?

“உள்ளே அறைகளில் எவரேனும் இருப்பார்களா?”

“இருப்பார்கள் என்று தோன்றவில்லை. எதற்கும் பார்ப்போம்”

அக் கோயிலைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாத டோனா என்னோடு முதல் முறையாக வந்தவர்போல் காணப்பட்டார்.

தோட்டமும் தரைப்பகுதிகளும் புத்தர் சிலைகளும் மிக அழகுறப் பராமரிக்கப்பட்டுக் காணப்பட்டன.

டோனா உடன் வந்ததால் ஒரே நன்மை என்ன தெரியுமா? அங்கங்கே நின்று படம் பிடித்துக்கொள்ள முடிந்ததே. அதுதான். கோயிலைச் சுற்றிவந்தபோது இனிய அதிர்வலைகள் என்னுள் உருவாவதை என்னால் உணர முடிந்தது. கலை வேலைப்பாடுகளின் காப்பகமாய் அக்கோயில் இருந்ததைச் சிலை வடிவிலும் மரங்களின் வடிவிலும் கண்டேன்.

லாவோஸிற்கு விமானத்தில் வந்திறங்கவே எங்கெங்கோ போய் வரவேண்டியிருக்கிறது. இவ்வளவு நவீன வசதிகள் உள்ள காலத்திலேயே இப்படி இருக்க புத்த மதத்தின் தாக்கம் இந்த நாடுகளில் எத்துணையோ ஆண்டுகளுக்குமுன் என்னமாய்ப் பரவியிருக்கிறது என்று எண்ணியபோது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

செருப்புகளை உள்ளே அணிந்து செல்லக் கூடாது; ஊது பத்திகள்; பழங்களின் படையல்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்து மதத்தின் சில சாயங்கள் புத்த மதத்தில் இருப்பது பிடிபடுகிறது. லாவோஸ் மக்களின் பலரது கனவு இந்தியாவிற்கு வந்து புத்தகயாவைப் பார்க்கவேண்டும் என்பதாம். புத்தமதம், பிறந்த நாடு என்பதால் இந்தியர்கள் மீது லாவோஸ் மக்களுக்கு இனம் புரியாத பாசம் உண்டாம். டோனா சொன்னார்.

மறுநாள் லாவோஸிலிருந்த என் கூடாரத்தைத் தூக்கி வியட்நாமில் அமைக்க வேண்டிய நாள்.

என்னை வழியனுப்பும் பொறுப்பையும் டோனாவே ஏற்றுக் கொண்டார். பேசியபடி அவருக்கான கட்டணத்தைக் கொடுத்தேன். அவர் ஒரு சிறு துண்டுச் சீட்டை நீட்டினார். அது எனக்காக அவர் செலவழித்த தொகைகளின் பட்டியல். நியாமற்றதாக எதுவும் இல்லை. எனவே எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொடுத்தேன். விமான நிலைய வாசலோடு இறக்கி விட்டு டாட்டா காட்டிவிடாமல், “உள்ளேயும் வந்து வழியனுப்புகிறேன்” என்றார்.

வேண்டாம் என்றதற்கு, அப்படியில்லை, “நீங்கள் விமானத்தில் ஏறும்வரை என் பொறுப்பு” என்றார்.

அவர் இப்படிச் சொன்னதிலும் நல்லதாகப் போயிற்று. காரணம் ‘வியான்டின் விமான நிலையத்தில் ஏறும்போது ஒரு தொலைபேசியில் நீங்கள் வருவதை உறுதி செய்து அழைப்புக் கொடுங்கள்’ என்றார்கள் என் வியட்நாம் தமிழ் அன்பர்கள்.

“உங்கள் கைத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஹனாய்க்குப் பேசிக் கொள்ளட்டுமா?”

“தாராளமாக!”

“உலக அளவில் கூப்பிட ஏதும் இரகசியத் தடுப்பு எண் வைத்திருப்பார் போல, நீங்கள் எண்களைச் சொல்லுங்கள். நான் போட்டுத் தருகிறேன்.”

சொன்னேன். ஹனாயில் தமிழர் மணியின் கைத்தொலைபேசியில் மணி அடித்ததும் என்னிடம் கொடுத்தார் டோனா.

மணி சார்! நான் லேனா பேசுறேன். லியான்டின் விமான நிலையமான லாவாட்டேவிலிருந்து பேசறேன்.

“சொல்லுங்க லேனா சார். உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்”.

விமான நிலையத்திற்கு வந்துவிட்டேன். வியட்நாம் ஏர்லைனிலில் புறப்படுகிறேன். நோய்பாய் (ஹனாய்) விமான நிலையத்திற்கு இரவு 9.40க்கு வருகிறது.

“தெரியும். உங்க பயணத் திட்டம் என் கையில் இருக்கு”.

“விமான நிலையத்தில் வரவேற்க வருகிறவர்களுக்கோ எனக்கோ எவ்விதத் தவிப்பும் கூடாது என்பதற்காக இந்தத் தகவல்.”

“ரொம்ப நல்ல பழக்கம். பலரும் பின்பற்ற வேண்டிய பழக்கம். உங்களை வரவேற்க நாங்க நான்கு பேர் வந்தோம்.”

“பெரிய விஷயமா இருக்கே, உங்களையெல்லாம் சந்திக்க ஆர்வமாக இருக்கேன்.”

“வாங்க வாங்க உங்களோட பாதுகாப்பான பயணத்திற்கு என் வாழ்த்து”.

“நன்றி” என்று மணியிடம் சொல்லிவிட்டு

“இப்பத்தான் மகிழ்ச்சியாக இருக்கு. உங்க தொலைபேசி மிக உதவி” என்றேன் டோனாவிடம்.

நிறைவாக நன்றாக நான்கு வார்த்தை சொன்னேன் அவரது சேவைபற்றி. வியட்நாம் ஏர்லைன்ஸ் என்றாலே சிறு தாமதம் இருக்கத்தான் செய்கிறது.

லா வட்டா விமான நிலையத்தின் மறுபடி 25 டாலர் கேட்டார்கள். டிக்கெட்டோடு இவற்றையெல்லாம் சேர்த்து வாங்கிக் கொள்ளாமல், அங்கங்கே டாலர்களைக் கொடுக்கிறபோது ‘பக்பக்’ என்கிறது.

வியட்நாம் ஏர்லைன்ஸ் செம உயரம் தூக்குவார்கள் எனறு பார்த்தால் மிகத் தாழவே பறந்தது. ஒரு நெடிய பயணத்தில் ஒரு விமானம் இவ்வளவு தாழப் பறந்து நான் பார்த்தே இல்லை.

விமானத்தில் என்னோடு அமர்ந்திருந்த ஒரு வியட்நாம் ஜோடி, நான் போட்ட நான்கு தும்மல்களைப் பார்த்து இடத்தையே மாற்றிக் கொண்டுவிட்டது. H1N1 ப்ளூ ஜுரம் ஒட்டிக் கொண்டு விடும் என்கிற பயமோ என்னவோ!

ஒரு புன்னகைக்காத ஆண் ஊழியர் கொரிக்க வறுகடலையும் குடிக்க ஆப்பிள் சாறும் கொடுத்தார்.

ஹனாய் விமான நிலையம் அப்படி ஓர் அழகு. வியட்நாம் அப்படி ஒன்றும் பணக்கார நாடல்ல. ஆனால் விமான நிலையத்தில் பணத்தை அள்ளி இறைத்திருக்கிறார்கள்

குடியேற்ற அதிகாரி என்னைப் பார்த்தார். பாஸ்போர்ட்டைப் பார்த்தார். பாஸ்போர்ட்டின் எல்லாப் பக்கங்களையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அவ்வளவு கனமாக பாஸ்போர்ட்டை அவர் பார்த்ததில்லை போலிருக்கிறது. இரு பழைய பாஸ்போர்ட்டுகளைச் சேர்த்து பின் (PIN) அடித்த மூன்றாவது பாஸ்போர்ட் அது.

என்னை அவர் பார்த்த பார்வை ‘ஓ! இவ்வளவு சுற்றுச் சுற்றியிருக்கிறாயா நீ’ என்பதுபோல் இருந்தது.

‘எவ்வளவு நாள் வியட்நாமில் தங்கப்போகிறீர்கள்?’

“விசா முடியும் வரை!”

“என்ன தொழில் செய்கிறீர்கள்? பிசினஸ் விசிட்டா?”

“இல்லை. நான் பத்திரிகையாளன்: உடனே அவர் கண்களில் ஒரு சிறு மிரட்சி. உடனே முத்திரையைக் கையில் எடுத்துக் குத்திவிட்டார்.

எனனை வரவேற்க வந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள எனக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை.

“நான் மணி, இவர் குமார், இவர் பாலாஜி, இவர் ஹுவாங் ஜோசப்”.

“மகிழ்ச்சி” கைகளில் மிகப்பெரிய மலர்க் கொத்தைத் தந்தார்கள்.

ஹுவாங்தான் காரை ஓட்டினார். அவர் ஓட்டுநராகத் தெரியலை. மணி பணிபுரியும் ஸமில் (Zamil)ஸ்டீல்ஸின் கண்ணியமிக்க ஊழியராகவே தெரிந்தார்.

“ரொம்ப நன்றி. ஹுவாங் சார். முகம்மறியாத எனக்காக நீங்கள் மேற்கொண்ட சிரமம் பெரிது. உங்கள் பெயரைச் சரியாக உச்சரித்தேனா?” “மிகச் சரி ஹாஹா உங்களைப் போன்ற இந்திய எழுத்தாளரைச் சந்திப்பதில் எனக்குத்தான் மகிழ்ச்சி.”

விமான நிலையத்திற்கு மிக அருகிலேயே தான் ஸமில் ஸ்டீல். அங்கு குமாரும் பாலாஜியும் இறங்கிக் கொண்டார்கள். வரவேற்க வந்த அன்பிற்கு நன்றி சொன்னேன். “உங்களை நான் சந்தித்து விரிவாகப் பேசவேண்டுமே!” என்றேன்.

“தமிழன்பர்கள் ஒன்று சோந்து உங்களுக்கு ஒரு வரவேற்பு விருந்து கொடுக்கப் போகிறோம். அன்று சந்திப்போம்”.

“ரொம்ப நல்லது”.

ஹுவாங்கும் மணியும் ஒரே அடுக்கத்தில் வசிக்கிறார்கள் என்பதால் மரியாதைக்கு மணியின் வீட்டிற்கு வந்துவிட்டு, பிறகு ஹுவான் விடைப்பெற்றுப் போனார்.

“குளிங்க அசதியா இருப்பீங்க!” என்றார் மணி.

குளித்து வந்ததும் வியட்நாம் பாணி சூப் ஒன்றை வழங்கினார்.

“அருமையா இருக்கே! நீங்களா செய்தீங்க.”

இல்லை. வியட்நாம் பெண்மணி ஒருவர் இங்குவந்து சமைத்துக் கொடுத்து வீடு பெருக்கி, துணி துவைத்து எல்லாவற்றையும் பார்த்துக் கொடுத்துவிட்டுப் போவார்”

“குடும்பம்?”

“தமிழகத்தில்”

“ஏன்?”

“இங்கு பிள்ளைகளுக்கு நல்ல கல்வி தரமுடியுது”.

“ஓ!”

“நாளை எங்கெல்லாம் போகிறோம்?”

“இதோ பட்டியல்!”

“பார்த்தேன். இந்திராகாந்தி பூங்கா என்று அதில் இருந்தது?”

“என்னது இந்திராகாந்தி பூங்காவா? ஆச்சரியமா இருக்கு!”

இந்த நாட்டில் ரொம்பவும் மதிக்கப்படுகிற விரும்பப்படுகிற இரு தலைவர்கள் நேருவும் இந்திராவும். இந்திராவுக்குச் சிலையே வைத்திருக்கிறார்கள்.”

“என்ன சார் சொல்கிறீர்கள் இந்த மண்ணில் இந்திரா சிலையா?” வியப்பில் சோபாவின் பின்பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த நான் சோபாவின் முனைக்கே வந்துவிட்டேன்.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Tamil seeds germinate

Friday, July 9th, 2010

tamil-world.jpgதூவப்பட்டிருக்கும் விதைகள்

அதிகமான அரசியல் நெடியும், எல்லை மீறிய தனிமனிதத் துதிப்பாடல்களும் கொண்ட செம்மொழி மாநாட்டில் தமிழுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

உலகச் சமுதாயத்தில் தமிழர்களைவிட ஆங்கில மோகம் கொண்டவர்கள் யார் என எண்ணிப் பார்க்கிறேன். வேறு எவரும் நினைவிற்கு வர மறுக்கிறார்கள்.

மற்றவர்கள் ஆங்கிலத்தைப் பேசினாலும் தங்கள் மொழியோடு இரண்டறக் கலப்பது இல்லை. ஆனால் தமிழர்கள் அப்படி இல்லை. ஆங்கிலம் கலக்காமல் பேச இவர்களால் கிட்டத்தட்ட முடியாது என்கிற நிலை.

பல தமிழர்கள் ஆங்கிலத்தைத் தமிழ்ச்சொற்கள் போலவே ஏறறுக்கொண்டு விட்டார்கள். இத்தகைய மோசமான மொழிக் கலப்படம் எங்கு போய் நிற்குமோ என்று கவலையுறும் நேரத்தில் தமிழின் அருமை பெருமைகள் பல இலட்சம் தமிழர்களின் காதுகளை அடைய இம்மாநாடு வழிவகுத்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டிலும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தமிழின் பெருமைகளை எடுத்துரைத்த பிறகாவது சில மரத் தமிழர்களுக்குத் தமிழ் பற்றிய அருமை புரியாதா என்கிற எதிர்பார்ப்பு உயர்ந்திருக்கிறது.

ப.சிதம்பரம் போன்றவர்கள், தமிழர்கள் தமிழில் பேசவேண்டும் என்று இம்மாநாட்டில் வலியுறுத்தியிருப்பது மொழிக் கலப்படத் தமிழர்கள் தலையில் கொட்டப்பட்ட சரியான ‘நங்’ கொட்டு.

தமிழ்ப் பதிப்பாளர்களும், தமிழ் எழுத்தாளர்களும் நன்கு சன்மானம் தந்து கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்கிற இவரது கருத்து அவசியம் பரிசீலிக்கத் தக்கது.

இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகளெல்லாம் பழம்பெருமை பேசுவதிலேயே காலத்தை வீணடித்து விட்டனவோ என்று எண்ணுமளவிற்கு தமிழை நவீனப்படுத்துவதில் கணினிக் காலத்திற்கு ஏற்ப வளப்படுத்துவதில் இந்த மாநாடு அக்கறை காட்டியிருக்கிறது.

கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகள் கண்களைத் திறப்பனவாக உள்ளன.

மொழிபெயர்க்கப்படாத தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து உலக அளவில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று பாரதி எப்போதோ சொன்னதை இப்போது இந்த மாநாடு மறுபடி உயிர்ப்பித்திருக்கிறது. மாநாட்டு ஆடம்பரங்களைக் குறைத்து இதற்குச் சற்று ஒதுக்கியிருந்தால் நன்றாயிருந்திருக்கு என்கிற ஏக்கத்தையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.

தமிழ் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்பது இம்மாநாட்டினால் விளையப்போகும் மிகப் பெரிய பலன்.

எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்; அறிவியல் தமிழில் கவனம்; தமிழை ஆட்சி மொழி ஆக்குதல்; வெளிநாடுகளில் தமிழ் அழிவதைத் தடுக்கும் முயற்சிகள்; உலகத் தமிழ்ச் சங்கம், மலேசியாவில் செம்மொழி அலுவலகம்; அச்சு ஊடகத்திற்குத் தமிழை வளர்க்கும் பொறுப்பு அதிகம் என்ற உணர்த்தல் எனப் பல நல்ல ஆரம்பங்களுக்கு விதைகள் தூவப்பட்ட மாநாடு இந்தச் செம்மொழி மாநாடு என்று தாராளமாகச் சொல்லலாம்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Junior Kelvi Pathil

Friday, July 9th, 2010

google.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எஸ்.கிஷோர்சிங், கோபி.

ஜஸ்வந்த் சிங் மறுபடியும் கட்சிக்குள் வந்துவிட்டாரே!

இவரது ஜின்னா புத்தகம் இதுவரை இலட்சம் பிரதிகள் விற்றுவிட்டனவாம். ஜின்னாவை உயர்த்திப் பேசியும் இந்தியாவில் ஒருவர் வெற்றி பெற முடியும் என்பதற்கு ஜஸ்வந்த ஒரு நல்ல உதாரணம்.


கா.ஸ்ரீனிவாஸ், கோடம்பாக்கம்.

உங்கள் பின்னால் ஒரு படையே இருக்கிறதாமே?

களிம்பு தடவுகிற அளவிற்கா? ஏதோ வேண்டாதவர்கள் எனது உடம்மைப் பிடிக்காதவர்கள் செய்கிற மோசடி வேலை இது. எதையும் நம்பவேண்டாம்! என் முதுகு நல்லாத்தான் இருக்கு.


ஆர்.இருதயராஜ், திருநெல்வேலி.

ராகுலின் தமிழக வருகையால் தமிழக காங்கிரசில் இப்போது கோஷ்டிகள் குறைந்துள்ளனவா?

இல்லை! புதிதாக மேலும் ஒரு கோஷ்டி உருவாகிவிட்டது. அது, ராகுல் கோஷ்டி!


மு. பாஸ்கரன், மதுரை.

இன்றைய இளைஞர்கள் குடும்பத்தாரை மதிக்கமாட்டேன்கிறார்களே?

ஆமாம். பலர் இப்படித்தான் கூகுலை மதிக்கிற அளவிற்குக்கூட இவர்கள் குடும்பத்தை மதிப்பதில்லை. இவர்களுக்கு எல்லாமே இன்று கூகுல்தான்!


எஸ்.அக்பர் பாஷா, பாளையங்கோட்டை.

ராஜ்ய சபா எம்.பி. என்கிறார்களே, அது என்ன?

மெரிட்டில் வராதவர்கள் பேமெண்ட் சீட்டில் வருவதுபோல, தேர்தலில் ஜெயிக்க முடியாதவர்களின் பேமெண்ட் சீட் இது!


டி. டேவிட் பிரபாகரன், வேலூர்.

இன்றைய தி.மு.க. அரசின் மக்கள் நலச் சாதனைகள்?

பத்திரிகை மொழிப்படி இதில் எடிட் செய்தால் பப்ளிஷ் பண்ண இதில் அதிகமில்லை.


ஏ.ராஜா, திருத்தணி.

அரசியல் ஊழலை ஒழிப்பது மக்களின் கடமை என்கிறாரே ராகுல் காந்தி?

காங்கிரசுக்கு ஒரு கிளைமாக்ஸை கொடுத்துவிட்டார். இனி கதையை ஒரு வழியாய் முடிக்க வேண்டியதுதான்.


எம்.வெங்கட்ராமன், பண்ருட்டி.

அரசியலுக்கு இப்போது வரப்போவதில்லை என்கிறாரே விஜய்?

அரசியல் என்ற ஆரம்பப் பள்ளியில் ஒரு விஜயதசமியாய் பார்த்து சேரப் போகிற மாணவர் விஜய்! இவரா இப்படிப் பேசுகிறார்? ஏதோ பல்கலைக்கழக வாசல் இவருக்குத் திறந்திருப்பது போலப் பேட்டி வேறு.


சி.டில்லிபாபு, மதுரை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை ஒன்றரை இலட்சம் பேர் விளக்கம் கேட்டிருக்கிறார்களாமே?

கோட்டை விஷயத்தில்தான் இவர்கள்கோட்டை விடுகிறார்கள். மற்றதில்இவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். கடல்கடந்தும் சென்ற தமிழர்களின் ஜீன் கடைசித் தமிழன் வரைத் கொஞ்சமாவது இருக்காதா என்ன?


ஆர்.சந்திரபிரபாகர், தஞ்சாவூர்.

காதலர்கள் ஓடிப் போகும் செய்தி இப்போது வருவதில்லையே?

இன்றைய காதலர்கள் ரொம்பவும் தைரியசாலிகள். பெற்றோர்களுக்கு ஏன் பயந்து நடுங்கணும், நடந்தே போவோம் என்று நடந்து போகிறார்கள். நடைப் பயிற்சியே நல்ல பயிற்சி என்று நம்புகிறார்கள்.


நா.குமார், பாண்டிச்சேரி.

மத்திய அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க முடியாதது பற்றி?

டப்பாவாலாக்கள் மாதிரி நாடாளுமன்றத்தில் இந்தி வாலாக்கள் இருக்கும் வரை இந்தச் சிக்கல் சிக்கல்தான்! அப்படியானால் அழகிரியின் தலையில் இனி கிரிகிரிதான்! இந்த மதுர மல்லி இதனாலேயே வாடிப் போகாமலிருந்தால் சரி!


எம்.சுப்பிரமணியன், காரைக்குடி.

அண்ணா நூற்றாண்டு விழாவால் சாதித்தது என்ன?

நாணயமான நாணயம்! இந்த ஐந்து ரூபாயைத் தவிர, வேறு ஒரு ரூபாய் பயனில்லை. அண்ணா குடும்பத்தைக் காப்பாற்றாதவர்களுக்குப் பிற காவடிச் சிந்துகள் ஏன்?


எஸ்.சங்கரபாண்டியன், எட்டயபுரம்.

வாரிசு அரசியலை ஒடுக்க வழி?

கு.க. செய்து கொண்டவர்களே இனி தலைவராக வேண்டும். இப்படியொரு திருத்தம் அரசியலில் வராதவரை இதில் அடித்தல், திருத்தல் வராது. பெற்ற பிள்ளைகள் பிழைக்கவோ பாலிடிக்ஸ்?


க.சாம்பசிவம், சேலம்.

வருபவர்களையெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் அறிவாலயம் பற்றி?

ஒரு வகையில் இது ஆபத்து! வருகிறவர்களிடம் மரபணு ஆய்வு செய்து, அசலாக அவர்கள் எத்தகைய பின்னணியைச் சார்ந்தவர்கள் என்பதை உறுதி செய்து கொண்டு அப்புறம் சேர்த்தால் நல்லது. அப்போதுதான் ரத்தமும் ரத்தமும் ஒன்று சேரும். இல்லாவிட்டால் அவை ரத்தத்தின் ரத்தமாகவே இருக்கும்.


டி.விமல், கரூர்.

மருத்துமனைகளிலேயே மாதக் கணக்கில் கிடக்கும் நோயாளிகள் பற்றி?

உணவுப் பிரச்னை, தங்கும் பிரச்னை தீர்ந்தன பாருங்கள். நர்சுகளை எப்போது சிஸ்டர் என்று அழைத்தார்களோ, அப்போதிருந்தே அவர்கள் அக்கா தங்கைகளோடு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி பிரிவார்கள்!


எம்.அப்துல் ஹமீது, வேலூர்.

தமிழர்கள் வாழ நடைப்பயணம் மேற்கொள்வீர்களா?

நான் நடைப்பிணமாய் இருக்கிறேன் என்று குத்திக் காட்டுகிறீர்களா என்ன?

02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்