» 2010 » May .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Healthy life

Posted on Friday 28 May 2010

radish.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் இயல்புடையவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். இந்த இரு குணங்களுக்காகவே முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

சுத்தமான இரத்தத்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் தொடர்ந்து உடல் நலப் பாதுகாப்புடன் வாழ முடிகிறது.

மலச்சிக்கல், இரைப்பைக் கோளாறுகள், நெஞ்சுவலி, சிறநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை, முகம் கறுப்பாகமாறுதல் போன்றவைகளையும் முள்ளங்கிக்கிழங்கும், அதன் இலைகளும் நன்கு குணப்படுத்திவிடுகின்றன.

மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும்.

பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கிக் கிழங்கு நன்கு பயிர் செய்யப்படுகிறது.

100 கிராம் முள்ளங்கிக் கிழங்கில் ஈரப்பதம் 9.4%ம் மாவுச்சத்து, 3%ம் உள்ளது. மீதியில் சிறிதளவு புரதம், கொழுப்பு, தாதுஉப்புகள், நார்ச்சத்து முதலியவை உள்ளன. வைட்டமின் ‘சி’ வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் ஆகியவற்றுடன் இரும்புச்சத்தும் (0.4 மில்லி கிராம்), கால்சியமும் (35 மில்லி கிராம்), பாஸ்பரஸும்(22 மில்லிகிராம்) இருக்கின்றன. இதனால் கிழங்கைப் பச்சையாகவோ சாறாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள் அதிகம் கிடைக்கும். 100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி அளவு 17தான். சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகவும் முள்ளங்கிக்கிழங்கு சாப்பிடுவது நல்லது.

மூலநோய் குணமாகக் காலையும், மாலையும் 50 முதல் 100 மில்லி வரை முள்ளங்கிக் கிழங்கின் சாறு அருந்திவர, மூலம் கட்டுப்படும்.

ஒரு கப் முள்ளங்கிக் கீரைச் சாற்றை அருந்தினால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் உட்பட அனைத்துச் சிறுநீரகக் கோளாறுகளும் குணமாகும். குணமாகும்வரை தினமும் ஒரு கப் அருந்தி வர வேண்டும்.

மஞ்சள் காமாலை உடனே கட்டுப்பட முள்ளங்கிக் கீரையின் சாற்றை மெல்லிய வெள்ளைத் துணியில் வடிகட்டி, அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். வயதானவர்கள் தினமும் அரைக்கிலோ முள்ளங்கிக் கீரையைச் சேகரித்து இந்த முறையில் அருந்தினால் மிக விரைவில் மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணமாகிவிடுவார்கள்.

இருமல், நெஞ்சு சம்பந்தமான நோய்கள் (இதயவலி) வயிற்று உப்புசம் தொண்டைப்புண், தொண்டைக்கட்டு முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி முள்ளங்கிக் கிழங்குச் சாறுடன் அதே அளவு தேனையும் கலந்து சாப்பிட வேண்டும். சிறிது உப்பும் இதில் சேர்க்கப்படவேண்டும். தினசரி மூன்று வேளை இது போல் சாப்பிட்டால் மேற்கண்ட கோளாறுகள் குணமாகும். இது மிக உயர்தரமான நன்மையைத் தரும் மருத்துவமுறையாகும்.

தோலில் வெண்புள்ளி உள்ளவர்கள் முப்பது முதல் ஐம்பது கிராம் வரை முள்ளங்கி விதையை இடித்து, வினிக்கர் மூலம் பசையாக்கி, வெண்புள்ளி உள்ள இடங்களில தடவவேண்டும். தொடர்ந்து தினசரி தடவினால் இந்த விதைப்பசை தோலின் நிறத்தை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடும்.

படர்தாமரை நோய், முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தவிட்டு நிறமுள்ள புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும். முள்ளங்கி விதையில் ஒரு வகையான பிளீச்சிங் பொருள் இருக்கிறது. அதுவே, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.

முள்ளங்கிக் கிழங்கையும், கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான உடல் நலத்துடன் திகழலாம் என்பத நிச்சயம்.

முள்ளங்கியைச் சமைக்கலாமா?
முள்ளங்கிக் கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் வைட்டமின்களும், தாது உப்புகளும் அழிந்துவிடுவதுடன் நோய் எதிர்ப்பு பாக்டீரியாக்களும் கூடவே சிதைந்துபோய் விடுகின்றன.

எனவே, பச்சையான முள்ளங்கிக்துண்டுகளுடன் காரட், பீட்ரூட் துண்டுகளையும் கலந்து, அவற்றில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, உப்பு சேர்த்து, சாலட் போல் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியம் கிடைக்கும்.

இதே போல், முள்ளங்கிக் கீரையையும் சமைக்காமல், சிறுதுண்டுகளாக நறுக்கி, பச்சையாகச் சாப்பிடவேண்டும். அல்லது மேற்கண்ட சாலட் (Salad)டில் சேர்த்துக் கொள்ளலாம். கிழங்கைவிடக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’ முதலியவை அதிகம் உள்ளன. 100 கிராம் கீரையில் கிடைக்கும் கலோரி அளவு 28 ஆகும்.

எனவே, கீரையையும், கிழங்கையும் பச்சையாகவே பயன்படுத்துங்கள். அதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுங்கள்.

தாம்பத்திய வாழ்வில் ஆர்வம் வேண்டுமா?
சிறுநீர் நன்கு கழியவும், எரிச்சல் நீங்கவும் சிறுநீரில் கற்கள் சேராமல் இருக்கவும முள்ளங்கிச் சாம்பார் செய்து சாப்பிடலாம். (துண்டுகள், பெரியனவாக வெட்ட வேண்டும்)

வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களில தான் முள்ளங்கிக்கிழங்கு கிடைக்கிறது. மற்ற நிறங்களிலும் சில இடங்களில் பயிராகிறது.

இருவகை முள்ளங்கியிலும் மருத்துவக் குணங்கள் ஒரே மாதிரிதான் உள்ளன. நன்கு சாப்பிட்ட திருப்தி வேண்டும் என்பவர்களும், தாம்பத்திய வாழ்வில் அதிக ஈடுபாடு வேண்டும் என்பவர்களும் மட்டும் சிவப்பு முள்ளங்கிக் கிழங்கை அதிகமாகப் பயன்படுத்துங்கள்.

புத்தியுள்ள குழந்தைகள் வேண்டுமா?
குழந்தைகள் மந்தபுத்தி இல்லாமல் சுறுசுறுப்பாய் இருந்து படிக்கவும், நன்கு உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக்கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்தும் அதிக அளவில் உள்ளன.

வாத நோய்க்காரர்கள் முள்ளங்கிக்கிழங்கைச் சாப்பிடலாம். ஆனால், முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 3:09 am
Filed under: Uncategorized
Vietnam travel

Posted on Friday 28 May 2010

nah-trang.jpgவீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

மெக்காங் ஆற்றங்கரையில் இரவு நேர உணவுக் கடையில் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைக் கேட்டு என் லாவோஸ் வழிகாட்டி, எனக்காக ‘த்சோ த்சோ’ என்று பரிதாபப்பட்டு, உச்சுக்கொட்டி, சுவாரசியமாக கேட்கும் விதமாகக் கன்னத்தைக் கையில் தொட்டபடி “உம் அப்புறம்?” “ஐயோ அப்புறம்?” என்று கேட்பாராக்கும் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது. நான் ஏதோ பெரிய நகைச்சுவையை உதிர்த்ததைப்போல விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்ததும் ஏமாற்றமாகவும் சொல்லப்போனால் கடுப்பாகவும் ஆகிவிட்டது.

“ஏண்டியம்மா! இதிலே, சிரிக்க என்ன இருக்கிறது? உங்க நாட்டுக்கு ஒரு பத்திரிகையாளன் வந்தான். ஆற்று அழகினை இரசித்தபடி உணவு உண்ண ஓர் உணவுக் கடையில் அமர்கிறான். அவனிடம் ஒருவன் மிரட்டிக்கேட்டு எதிரே உட்கார்ந்து இஷ்டத்துக்குத் திங்கிறான் இந்த அநியாயத்தை ஏன் என்ன என்று கேட்க நாதியில்லை. நம் வாடிக்கையாளருக்கு இப்படி ஓர் உள்ளூர்க்காரன் மிரட்டல் விடுக்கும் சம்பவம் நடக்கிறது. இதைக் கடைக்காரர்களும் தட்டிக் கேட்கமாட்டேன் என்கிறார்கள். எங்களுக்கென்ன வந்தது? நீ எக்கேடோ கெட்டுப் போ எனக்கு வேண்டியதெல்லாம் வியாபாரம்; காசு என்று வேடிக்கை பார்க்கிறீர்கள். நடந்ததையெல்லாம் வேதனையோடு சொன்னால், அதை ஒரு பெண்ணாக இருந்தும் இரக்கம் காட்டிக் கேட்டுக்கொள்ளாமல் இப்படிக் கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறியேம்மா இது உனக்கே நியாயமா?” என்று கேட்டுவிட வேண்டும் என்று வேகமே வந்தது.

சில சம்பவங்கள் நடக்கும்போது வேதனை நடந்து முடிந்து நான் சிந்திக்கும்போது நமக்கேகூட அது நகைச்சுவை எனும்போது, சரி இந்தம்மா சிரித்துவிட்டுப் போகட்டும்? இந்த மகிழ்ச்சிக்கு நாம் ஏன் தடையாக இருப்பானேன் என டோனாவைக் கடுப்படிக்காமல் விட்டுவிட்டேன். வந்திறங்கிய நாளாய் டோனா இப்படிச் சிரித்து நான் பார்த்ததே இல்லை.

டோனா சிரிப்பை ஒருவாறாய் அடக்கிக்கொண்டு,

“நான்தான் சொன்னேன்ல? நீங்க ஏன் நல்ல கூட்டமான உணவுக்கடையில் போய் அமரலை? எதிரே ஒருத்தன் இப்படி வந்து உக்கார்ந்துக்கினு கண்டதையும் கேட்டு வம்பு பண்றான்! இதை நீங்க கண்டிக்கலைன்னா நான் உணவை இப்படியே போட்டுட்டு எந்திரிச்சுப் போயிடுவேன்னு ஏன் கடைக்காராம்மாகிட்டேயும் அவளது உதவியாளர்கிட்டேயும் வம்பு பண்ணலை?” என்று ஒரு புது கோணம் தந்தார்.

“எல்லாம் கடைக்காரர்களுக்குத் தெரிந்துதான் நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இது ஒரு திட்டமிட்ட செட்டப்போ என்றுகூட எண்ண வேண்டியிருக்கிறது. லாவோசில் அதிகம் உண்ணும் போட்டி வைத்தால் அவனை எப்படியாவது மெக்காங் ஆற்றங்கரையோரம் தேடிப்பிடித்துக் கலந்துகொள்ள வையுங்கள். உலக அளவில் பரிசு பெறுவான். என்னிடம் மிரட்டிக் தின்னது போதாது என்று இன்னும் வேற என்னைப் போன்ற இளித்தவாயர்களை தேடிக் கொண்டிருந்தான் கடைக்கடையாக” என்றேன். இதற்கும் டோனா சிரிக்க, இந்தச் சிரிப்பை நானும் எதிர்பார்த்த காரணத்தால் என்னால் இரசிக்க முடிந்தது.

உள்ளத்து எரிச்சல்களைத் தணிக்க நகைச்சுவை எனும் நீரே சிறந்த தீர்வு. வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

அடுத்து நாங்கள் சென்றது ஜுயங் ஹுவான் எனும் இடத்திற்கு

இங்கு சிற்பங்கள் பலவற்றையும் எவ்வித ஒழுங்கும் இல்லாமல் சிறு குழந்தைகள் வளரும் வீட்டில் வீடு முழுக்க இறைந்து கிடக்குமே பொம்மைகளும் விளையாட்டுப் பொருள்களும் அப்படிக் காணப்பட்டன.

இந்த இதழில் வெளியாகியுள்ள படத்தைப் பாருங்கள். இருபுறமும் உள்ள சிலைகளை விட்டுவிடுங்கள். நேர்பின்னால் இருக்கிறதே இது நம் தமிழ்நாட்டில் காணப்படும் அனந்தசயனன்போல இல்லை? பெருமாள் பள்ளிக்கொண்ட காட்சியைப்போலவே காணப்பட்டாலும் சில பல மாற்றங்களுடன் இதைப் படைத்திருக்கிறார் இதனை உருவாக்கிய சிற்பக் கலைஞர் (கலைஞர்கள்?)

எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் கிரேக்க, ரோமானிய சிற்பக் கலைப்பாணியில் இல்லாமல் ஓரளவு தமிழக இந்தியர் சிற்பக்கலையை ஒட்டியே இச்சிலைகள் அமைந்திருக்கின்றன.

டோனாவுமே நம் ஊகத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக இது வீஷ்ணு, லாஷ்மி, பார்வதி என்று நம் ஊர்ப்பெயர்களை நீட்டி முழக்கி, சில மாத்திரைகளைச் (தமிழ் இலக்கணம் படித்தவர்கள் அறிவார்கள்) சேர்த்துப் பெயர்களை விதவிதமாகச் சொல்கிறார்.

இந்த நாடுகளைத் தாண்டி நம் கலாசாரத்தை ஒட்டிய சிற்பக்கலையைக் காண முடியாது. ஜப்பானிய தைவானியச் சிற்பக் கலைகள் நம் கலை வடிவத்திற்குச் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன. இவற்றையெல்லாம் காணும்போது, நவீனங்களும், போக்குவரத்து வசதிகளும் வளராத அந்தக் காலத்திலேயே நம் மன்னர்களும், நம் சிற்பக் கலைஞர்களும் இந்தப் பகுதிகளில் எப்படியெல்லாம் கோலோச்சியிருக்கிறார்கள் என்று எண்ணிப் பெருமிதம் கொள்ள முடிகிறது.

ஜுயங்ஹுவான் கவனிப்பார் இன்றியும் கண்காணிப்பார் இன்றியும் காணப்படுவது வருத்தம் அளிக்கிறது.

நல்லவேளை, இச்சிலைகள் இருக்கும் இடம் ஒரு தோட்டமாக இருந்தாலும் மண்டிவிடாமல் நன்றாக இருக்கிறது.

சிலைகள் சில உறுதியான ஒற்றைக் கற்களாலும் சில சாந்துக்குழைவுகளாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சாந்துக் குழைவுகளால் ஆன சிலைகள் மெல்லச் சேதப்பட்டு இன்னும் சில ஆண்டுகளில் உலகிற்கு விடை கொடுத்துவிடுவதைப் போல் காணப்படுகின்றன. இத்தகைய அரிய பொக்கிஷங்களைப் பாதுகாப்பதில் கம்போடிய நாடு காட்டும் அலட்சியத்தை லாவோஸ் நாட்டிலும் காணமுடிகிறது.

“டோனா! சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு உங்கள் நாட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதை உங்களது வாக்குமூலமாகவே சொன்னீர்கள். இருக்கிற கொஞ்சநஞ்ச சுற்றுலாத் தலங்களில் உள்ள இந்த அரிய கலைச் செல்வங்களையாவது நன்கு பராமரிக்கலாம் அல்லவா? என்று டோனாவை இலேசாகச் சீண்டிப் பார்த்தேன்.

நல்ல பலன். அவர் தங்கள் நாட்டில் உள்ள அலட்சிய உணர்வைப் பற்றி சற்றுக் கொட்டித் தீர்த்துக்கொண்டார்.

“டோனா உங்களிடம் ஒரு வெளிப்படையான கேள்வி. என்னைப்போல் பல வெளிநாட்டவர்களுக்கு உங்கள் நாட்டைச் சுற்றிக் காட்டுபவர் நீங்கள். இப்படி உங்களிடம் என்னைப்போல் எவரும் குறைபட்டுக்கொண்டிருக்கிறார்களா?”

“இதுவரை இல்லை.”

“அப்படியானால் நான்இதைத் குறிப்பிட்டது உங்களுக்குப் பிடித்திருக்காது அல்லவா?”

“அப்படி இல்லை. நல்லதோ கெட்டதோ, யோசனையோ அறிவுரையோ உங்களைப் போல் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்பவர்களையே எனக்குப் பிடிக்கும். பட்டும் படாமல் மேல்பூச்சாகப் போகிறவர்கள் சம்பிரதாயமாக நடந்துகொள்கிறவர்கள் என்னை ஏனோ ஈர்ப்பது இல்லை.”

என்னை மட்டந்தட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதை எனக்குச் சாதகமாகத் திருப்பிய டோனாவின் செயல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இந்த டீ சர்ட் உங்களுக்கு மிக நன்றாக இருக்கிறது என்றார் டோனா இன்னும் “இப்படி ரோஸ் நிறத்தில் போடவெல்லாம் ரொம்பவும் தைரியம் வேண்டும்.”

“உங்கள் நாட்டில் வாங்கிய பனியன்தான்.”

ஒரு படிகூடக் கீழே இறங்கி வராத டோனா தினமும் என் உடைகளை விமர்சிக்க ஆரம்பித்திருந்தது எனக்கே விநோதமாக இருந்தது.

நாளை முதல் கண்டதை அணியக்கூடாது. நாளையும் டோனா பாராட்டும்படி அணிய வேண்டும்.

டேய் ஏதேது! கல்லூரிக் காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதைப் போல இருக்கிறது. தேவை ஓர் எல்லைக்கோடு என்று உள்மனது உரத்து ஒலிக்க ஆரம்பித்த வேளையில் ஒரு பெண்ணின் பெரிய குரல் இது என்ன மகிழ்ச்சியின் வெளிப்பாடா? அல்லது அபயக்குரலா? இந்தச் சுற்றுலா மையத்தில் என்னையும் டோனாவையும் தவிர எவரும் இல்லையே!

டோனாவும் பெண்ணின் குரல் வந்த திசையை நோக்கித் திரும்ப

நான் தமிழ்த்திரை நாயகனாக என்னைக் கற்பனை செய்துகொண்டு அந்தத் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 3:04 am
Filed under: Uncategorized
Warning won’t be threatened

Posted on Friday 28 May 2010

lena-kalkandu.jpgஎச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

சில பொருள்களை விலைக்கு வாங்குபோது அவற்றின் அட்டைகளிலும், சில நேரங்களில் வில்லைகளாகவும் caution (எச்சரிக்கை) என்று போட்டு ஒரு மிரட்டு மிரட்டியிருப்பார்கள்.

இதைப் படித்து நாம் மிரண்டு விடுகிறோமா என்றால், இல்லை.

இதை நல்ல உணர்வுடன் கூடிய அக்கறையான எச்சரிக்கை என்றுதான் எடுத்துக் கொள்கிறோம்.

தமிழக வனப்பகுதிகளில் யானைகள், புலிகளின் படங்களை வரைந்து எச்சரிகை செய்யும்போது சிறுநீர் கழிக்க வாகனத்தை விட்டு இறங்கினால்கூட முன்ஜாக்கிரதையுடன் செயல்படுகிறோம். மாறாகப் பெரிதாக மிரண்டு விடுவது இல்லை.

ஆனால் ஒரு நீண்ட நெடிய கார்ப் பயணத்தின்போது வழியனுப்ப நிற்கிறவர்கள் “பார்த்து! மெதுவாப் போங்க; எங்க பார்த்தாலும் ஒரே விபத்தா இருக்கு” என்று பேசத் தெரியாமல் பேசினால் உடனே ஒரு வழி ஆகிவிடுகிறவர்கள் உண்டு.

அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தத் தெரியாதவர்கள் சமயங்களில் இப்படிப் பேசி விடுகிறார்கள்.

தேர்வு எழுதப் போகும்போது நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்போது; மதிப்பு மிக்க தொகைகள்; விலையுயர்ந்த பொருள்களை எடுத்துச் செல்லுதல் போன்றவற்றின்போதும் சொல்லப்படுகிற சில வார்த்தைகளால் பெரிதும் தாக்குறப்பட்டு அடிப்படை விஷயத்தைக் கோட்டைவிடுகிறவர்கள் உண்டு.

போதாக் குறைக்கு “கெளம்பும்போதே வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம அதையும் இதையும் சொல்லி வச்சு மூடு அவுட்! அப்பவே தெரியும் எனக்கு - இப்படித்தான் நடக்குமென்று” என்று புலம்பவும் செய்வார்கள். தவிர்க்கப்பட்ட ஒரு விபத்தில் எதிராளி இப்படிக் கேட்பான்: “ஏன்யா! உனக்குக் கண்ணை ஆண்டவன் பின்னாலயா வச்சுப் படைச்சான்?” இன்னொருத்தன், “வீட்ல சொல்லிட்டுதான் வந்தியா?” என்பான்.

இத்தகைய எச்சரிக்கை மணிகளை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர இருக்கிற நிலைமைகளை இன்னும் மோசமாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 3:00 am
Filed under: Uncategorized
Achievement another side

Posted on Friday 28 May 2010

dmk.jpgசாதனைகளின் மறுபக்கம்!

தி.மு.க. ஆட்சி தன் சாதனைகளாக ஒரு முழுப் பக்க விளம்பரம் வெளியான அதே காலகட்டத்தில் இவ்விளம்பரத்திற்கு நேர் எதிராகக் கொட்டை கொட்டையான எழுத்துகளில் பிரசுரிக்கப்படவேண்டிய சில வேதனைகளையும் குறிப்பிடவேண்டியிருக்கிறது.

அரசின் ஆதரவுப் பத்திரிகைகள் இவற்றை வெளியிடாதபோதும் நடுநிலை நாளேடுகளும் எதிர்ப்புணர்வு ஏடுகளும் இவற்றை நன்கு கண்டு கொண்டிருக்கின்றன.

மத்திய தணிக்கைத் துறைக்குப் பாரபட்சம் என்பது கிடையாது. காசு கொடுத்து இவர்களை விலைக்கு வாங்கிவிட முடியாது. ஆளுங்கட்சியின் கரைத்துண்டுகளுக்கெல்லாம் மசியாதவர்கள் மத்திய தணிக்கைக் துறையினர். இவர்களிடம் இரகசியம் கிடையாது. உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்துப் பத்திரிகைகளுக்கும் நகல் அனுப்பிவிடுகிற துணிச்சல் துறை.

ஆளும் கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இருக்கிற கூட்டணி உறவெல்லாம் இவர்களை ஒன்றும் செய்யாது.

இத்தகைய பின்னணிகளைக் கொண்டவர்கள் என்பதால்தான் பின்வரும் உண்மைகளைத் தோலுரித்திருக்கிறார்கள்.

மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒதுக்கிய தொகையில் 7311 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமலேயே போய்விட்டது. இனி இத்தொகைக்கு இந்த ஆண்டு மத்திய அரசின் தாடையைப் பிடித்துக் கெஞ்சத்தான் வேண்டும். ஏன் இந்த நிலை? தமிழக மக்களுக்கு இத்தொகையைப் பயன்படுத்துவதைவிட தமிழக அரசுக்கு வேறு என்ன முக்கிய வேலை?

கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளின் ஒட்டுமொத்த வேட்டு 1,475 கோடி ரூபாய், நிர்வாக கோளாறுகளே முக்கியக் காரணமாகத் தோன்றுகிறது.

நில ஆவணங்களைக் கணினி மயமாக்கும் திட்டத்தில் கருவிகளும் மென்பொருளும் சரிவரத் தரப்படாததால் 10 கோடி நஷ்டம்.

மீனவர்களுக்கான இலவச வீட்டு வசதித் திட்டத்தில் 10 வீடுகளுக்கு 1 வீடு என்கிற விகிதத்திலேயே வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மீனவர்கள் செய்த பாவம் என்ன?

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் நிலத்தின் மதிப்பீடு விஷயத்தில் கோட்டைவிட்ட பணம் 159 கோடி ரூபாய் யாரை மகிழ்விக்க, யார் பலன்பெற விடப்பட்டது இந்தக் கோட்டை? 2007-2008இல் 4545 கோடி ரூபாய் தமிழக அரசின் வருவாய் இருப்பாக இருந்தது. இது 2008-2009இல் 1452 ரூபாயாகக் குறைந்து போனது. இந்தச் சறுக்கத்தை எப்படி வளர்ச்சி என ஏற்பது?

தமிழக அரசின் வருவாய், தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பதிலாக அரசு ஊழியர்களுக்கே 79 சதவிகிதம் செலவாகியிருக்கிறது. தமிழக மக்களுள் அரசு ஊழியர்களைப்போல் கொடுத்து வைத்தவர்கள் எவரும் இலர்!

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!
2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 2:50 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 28 May 2010

dhoni.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ச.மெய்யநாதன், இராமநாதபுரம்.

நிம்மதியான வாழ்க்கை, ஏழைக்கா, பணக்காரனுக்கா?

எழைக்குத்தான்! ‘எய்ட்’ (உதவி)தான் இல்லையே ஒழிய ‘ரெய்டு’ இல்லாத வாழ்க்கை.


ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெற மாணவனின் திறமை காரணமா, ஆசிரியரின் திறமை காரணமா?

என்னைக் கேட்டால் இரண்டுமே தேவை என்பேன். மாணவனின் திறமை என்பது ‘எலெக்ட்ரானிக் ஸ்டார்ட்டர்; ஆசிரியரின் திறமை என்பது ‘கிக் ஸ்டார்ட்டர்’ மூளை இலகுவாக இருக்கும்போது ‘எலெக்ட்ரானிக் ஸ்டார்ட்டர்’. அது மக்கர் பண்ணும்போது ‘கிக் ஸ்டார்ட்டர்’ பயணம் முன்னேற வேண்டும்.


ஏ.அப்துல் ஹமீது, வேலூர்.

பன்மொழிப் புலமை இப்போது குறைந்து வருகிறதே?

யார் சொன்னது? அவர்களை பர்மா பஜார் பக்கம் போகச் சொல்லுங்கள். ஒரே வாயில் எத்தனை மொழிகள்? அதுவும் ஒரே மொழியில் எத்தனை ரகங்கள்? மொழி ஆராய்ச்சியளார்களுக்கே புரியாத சொற்கள்.


பி.நாச்சிமுத்து, சிங்காநல்லூர்.

சிங்கமுத்துவின் நகைச்சுவை காட்சிகளை இனிக் காணமுடியாதா?

வில்லத்தனமான காட்சிகளை இரசிக்க நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவற்றையும் பார்த்து இரசிப்போமே!


நா.குமார், பாண்டிச்சேரி.

இந்தியத் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இங்கிலாந்தில் எத்தகைய அவமானம் நிகழ்ந்ததாம்?

இந்திய வீரர்கள் துப்பாக்கி சுடும் கலையில் வல்லவர்கள் இவர்களின் மனத்தில் புயலை உருவாக்கும் எண்ணத்துடன் இவர்களது கவனத்தைத் திசை திருப்பும் எண்ணத்துடன் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இதற்கு உலகத் துப்பாக்கிச் சுடும் அமைப்பு மன்னிப்புக் கேட்டிருப்பதால் விஷயம் அடங்கிப் போகும். போக்குவரத்து விஷயத்தில் நடந்த இந்த செயல் மற்றும் வார்த்தை அவமானங்களை இந்திய வீரர்கள் தூசி தட்டுவதுபோல் தட்டிவிடுவது நல்லது.


கே.சிக்கந்தர், சேலம்.

இங்கிலாந்து வெற்றி பெறும் என எதிர்பார்த்தீர்களா?

கேப்டன் காலிங்வுட்டிற்கே ஆச்சரியம் தாங்கவில்லை என்கிறபோது மற்றவர்களின் நிலையைச் சொல்ல வேண்டுமா? ஆஸ்திரேலியா வென்றால் அந்தப் பெருமையை அது பெரும்பாலும் தக்க வைத்துக் கொள்ளும் இங்கிலாந்து 20-20இல் கண்ட கண்ட நாடுகளிடம் தோற்று, இந்தக் கோப்பை அதிர்ஷ்டத்தில் வந்ததுதான் என்று சொல்லாமல் சொல்லப் போகிறது.


எம்.பாஸ்கரன், காரைக்குடி.

தோனியை நீக்க வேண்டும் என்று ஒரு கருத்து எழுகிறதே?

பல கோப்பைகளை தந்தவர் தோனி. ஒரு கோப்பை மறுக்கப்பட்டதற்காக இவரது பதவியை பறித்தால் அது அநியாயம்!


பே.திருமாவேலன், கோவை-2.

ஜோதிடர்களின் அறவுரையின்பேரில்தான் கலைஞர் தன் வீட்டைத் தானமாகத் தர முன் வந்தார் என்றும்; அவசர கதியில் தலைமைச் செயலகத்தைத் திறந்து வைத்தார் என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறாரே?

உண்மையாகவா? வியப்பாக இருக்கிறதே! ஆனால் ஜோதிடர்களின் சொல்பேச்சுக் கேட்டு நடப்பதை ஜெயலலிதா விமரிசிப்பதுதான் நல்ல வேடிக்கை!


ஆர்.சாரதி, கொமாரபாளையம்.

அனுராதா ரமணனின் மரணம் குறித்து?

அனைவரிடமும் கர்வமின்றிப் பழகும் வாஞ்சையான சகோதரி. தம் எழுத்தில் தீர்த்துப் போகாத உண்மையைத் தொடர்ந்து பராமரித்தவர். அச்சு ஊடகத்தைத் தாண்டிக் காட்சி ஊடகத்திலும் வென்றவர். அவரது வெள்ளாந்தியான சிரிப்புதான் அடிக்கடி நினைவிற்கு வந்துபோகிறது.


கே.முருகேசன், சென்னை.

தமிழகக் காவல்துறை செயலிழந்து விட்டதா?

வேண்டாதவர்கள் யாரோ சொல்கிறார்கள். நம்பாதீர்கள். பேரன், பேத்தி, உறவினர்கள் எல்லாம் இதைக் கட்டுக்கோப்பாய்தான் வைத்திருக்கிறார்கள். இங்கு ஐ.பி.எஸ். ஸ்டாண்ட்ஸ் ஃபார் இண்டர்னல் பாலிடிக்ஸ் சீக்ரட்!


என்.குணசீலன், பாண்டிச்சேரி.

எதற்கெடுத்தாலும் எனக்குக் கோபம் வருகிறது. என்ன செய்ய?

யார் மீது? முதலில் இதற்காக உங்கள் மீது கோபம் கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.


எஸ்.ஜெயபாலன், விருதுநகர்.

மூத்தவர்கள் இருக்க இளையவர்கள் கல்யாணம் செய்யலாமா?

சூழ்நிலை கெட்டுப் போனால் செய்ய வேண்டியதுதான். பொதுவாக இன்றைய இளைஞர்களுக்கு சாலையிலும் சரி, வாழ்க்கையிலும் சரி ஓவர்டேக் பண்ணியே பழக்கம் ஆயிடுச்சு.


எஸ்.சீனிவாசன், சென்னை-87.

புதிய சட்டமன்றப் பேரவை வளாகக் கூரையானது தற்காலிகமாக மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டதாமே?

ஒரு நாள் கூத்துக்கு மக்கள் பணம் மூன்று கோடி என்பது வேண்டாத விஷயம்.


ஜி.குமார், செங்குன்றம்.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் தமிழ் வளம் பெறுமா?

பெறலாம். அப்படியே தோட்டாதரணியும் வளம் பெறுவார்!


ஆர்.பிரகாஷ், குரோம்பேட்டை.

இக்காலப் பெண்களின் பொறுப்புணர்வு எப்படி?

எங்களுக்கும் ஆளத் தெரியும் என்பதுபோல சென்னையில் மாதிரிச் சட்டசபையை நடத்திக் காட்டிய அவர்களை இனி ஒரு மாதிரி பார்க்க முடியாது. அவர்களை நம்மோடுதான் இனி சேர்த்துக் கொள்ளவேண்டும்.


என்.சுப்புராஜ், விருத்தாசலம்.

கண்டும் காணாமல் வாழ்வது மூடத்தனமா?

மனிதனாக இருக்கும்போது அது மூடத்தனம். மந்திரியாக இருக்கும்போது அதுதான் மூலதனம்.


ஆர்.ராகவன், ஈகை.

தி.மு.க. அரசின் மீதான பழிகள் நிலைக்காமலிருக்கக் காரணம்?

ஓடுகிற கண்ணீருக்கு அசுத்தம் இல்லை என்பார்கள். காரணம் அடுத்து வரும் அலையால் அது அடித்துக்கொண்டு போய்விடும். அதுபோல்தான் இவர்களின் பழிகளும், ஒவ்வொரு பழி வரும்போதும் இருந்த பழி அடித்துக்கொண்டு போய்விடுகிறது.


எம்.சம்சுதீன், காஞ்சிபுரம்.

தொடர்ந்து பதினோரு இடைத்தேர்தல்களில் வென்றது பற்றிப் பெருமிதம் கொள்ளும் துணை முதல்வர் பற்றி?

எப்படி வென்றார்கள் என்பது பற்றி ஜெயலலிதா திருவாய் மலர்ந்தால் நன்றாக இருக்கும்.

21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 2:40 am
Filed under: Uncategorized
Accident made incident

Posted on Friday 21 May 2010

writer-lena.jpgவாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

கோவை ராம்நகரில் ஒரு சிறு சாலை விபத்து. காயங்களும் இல்லை, சேதங்களும் பெரிதில்லை. மோதிக்கொண்ட கார் ஒட்டுநரும் வேன்காரரும் சண்டை போட்ட அழகு இருக்கிறதே, செல் கேமராவில் படம் பிடித்து இயன்றபோதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

ஏண்ணா! நான்தான் ரைட்ல ஓரமா வர்றேன்ல! நீங்க கொஞ்சம் நின்று வரலாம்லண்ணா?

“கைகாட்டிவிட்டுத் திரும்பலாம்லண்ணா நீங்க? (யாருக்கு யார் அண்ணன்?) இண்டிகேட்டராவது போட்டிருக்கலாம்ங்களே!” என்று ஆரம்பித்தது இந்த வாக்குவாதம். இருவர் வாதங்களிலும் தடித்த வார்த்தைகள் இல்லை. மரியாதைக்கும் குறைவில்லை. உச்சமாக முகத்தில் குறையாத புன்னகை!

சாலை மோதல்கள் மிக மோசமாகாத வரை சிறுசிறு சம்பவங்களில் வார்த்தைகள் கடுமையாக ஆகவேண்டும் என்பதில்லை.

சென்னையில் படித்த நாகரிகமாக இருந்த ஒருவர் எதிர் வாகன ஓட்டுநர் ஒருவரை மரியாதைக் குறைவாகப் பேச ஓட்டுநரும் தகாத வார்த்தையைப் பதிலுக்குப் பயன்படுத்த, அங்கு வந்து சேர்ந்த சார்ஜண்ட் “என்னங்க! ஒரு சிறு சிராய்ப்புக்கா இப்படி அடிச்சுக்குறது?” என்று வியப்பில் மூழ்குமளவு நிலைமை மோசமாகி போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டுவிட்டது.

கெளரவக் குறைவான வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டதுதான் இவ்வளவிற்கும் காரணம்.

மிக மோசமான வாகனத் தாக்கங்களின்போதுகூட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளாமல் சமாதானமாகப் போகமுடியும். காப்பீடு என்கிற வசதி இருக்கிறவரைக்கும் வார்த்தை வீச்சுகள் அநாவசியமானவை. வேண்டுமென்றே எவரும் மோதுவது இல்லை. கவனக்குறைவு எல்லோரிடமும் உள்ளதுதான். அது தலைதூக்கும்போது இப்படி நடக்கிறது.

மோசமான வார்த்தைப் பரிமாற்றங்கள் நிலைமைகளை விபரீதமாக்கும். கைக்கலப்பில் கூட அது முடியலாம். வழக்கின் திசையும் திரும்பிவிடும். பொது இடங்களில் கெளரவமாக நடந்து கெட்டிக்காரத்தனமாக நமக்கு சாகதமாகத் திரும்பும்படி நிலைமைகளைக் கையாளப் பழகிக்கொள்ளவேண்டும்.

சாலை விபத்தின். வார்த்தை மோதல்கள் நன்மையில் முடிந்ததாக ஒரு சம்பவத்தையாவது எனக்கு உதாரணமாகக் காட்டமுடியுமா?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 4:46 am
Filed under: Uncategorized
Relief from expired foods

Posted on Friday 21 May 2010

expired-drugs.jpgமக்களின் நலன் மண்ணின் தூசியா?

காலாவதி மருந்துப் பொருள் ஆரவாரம் அடங்குமுன் காலாவதி உணவுப் பொருள் விவகாரம் பூதாகரமாக ஆரம்பித்திருக்கிறது.

பரவாயில்லை. மருந்துத் துறை அதிகாரிகளை ஒப்பிடும்போது உணவுத் துறை அதிகாரிகள் எவ்வளவோ சுறுசுறுப்புக் காட்டியிருக்கிறார்கள்.

இந்தியாவில் பொதுமக்கள் எவ்வளவு ஏமாளிகள் என்பதையும், வியாபாரிகள் சிலர் எவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் என்பதையும் உணவுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிற உண்மைகள் புலப்படுத்துகின்றன.

உணவுப் பொருள்களை வாங்குகிற பொதுமக்களுக்கு விலையைப் பற்றி மட்டுமே அக்கறை இருக்கிறது என்பதையும் அது காலாவதியாகிவிட்டதா என்பதைப் பற்றிச் சற்றும் அக்கறையில்லை என்பது இந்தச் சோதனைகளின்போது நன்கு புலனாகிறது.

நம்பகமான கடைகள் என்று கருதப்படுகிற நிறுவனங்கள் கூட சர்வ சாதாரணமாக மக்களை இதுவரை ஏமாற்றி வந்திருக்கின்றன.

இந்த நடவடிக்கைகளின்போது ஓர் உலுக்கும் உண்மை வெளிப்பட்டிருக்கிறது. காலாவதி ஆன பொருள்களைத் திரும்ப எடுத்துக் கொள்கிறோம் என்று உணவுப் பொருள்களை விற்கும் அமைப்புகள் இவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்வதே இல்லையாம். இவற்றை விற்றுக் கொள்ளுங்கள்; வாங்குகிறவர்கள் எக்கேடோ கெட்டுப் போங்கள் என்று இந் நிறுவனங்கள் எந்த அளவிற்கு அலட்சியம் காட்டுகின்றன என்பதைப் பார்க்கும்போது மக்கள் நலன் இந்த மண்ணில் எப்படித் தூசியாக மதிக்கப்படுகிறது என்பது புலப்படுகிறது.

காலாவதி மருந்துகளை விற்ற கும்பலுக்கு ஒரு வகையில் மறைமுகமாக நன்றி சொல்ல வேண்டும்.

நாவரசுவின் மரணத்திற்குப் பிறகுதான் தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயேகூட ராகிங் கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு புதிய புதிய கடுமையான விதிகள் எல்லாம் நடைமுறைக்கு வந்தன.

பிரத்தியுஷாவின் ஈவ் டீசிங் மரணத்திற்குப் பிறகுதான் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைச் சட்டம் வலுப்படுத்தப்பட்டு, பெண்களிடம் பேச்சுக் கொடுப்பதைப் பற்றியே ஆண்கள் யோசிக்குமளவிற்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன.

ஒரு மோசமான பாதிப்பிற்குப் பிறகுதான் நம்மவர்கள் விழித்துக் கொள்கிறார்கள்.

நல்லவேளையாக காலாவதி ஆன உணவுப் பொருள் விஷயத்தில் பயங்கரமான பாடங்கள் எதையும் கற்காமலேயே மக்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற ஆரம்பித்துவிட்டது ஆறுதலாக இருக்கிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!
2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 4:14 am
Filed under: Uncategorized
Vietnam travel

Posted on Friday 21 May 2010

luang-prabang.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

லாவோஸ் நாட்டில் மெக்காங் நதிக்கரையில் இரவு நேர உணவுக் கடையில் என் எதிரே வந்து அமர்ந்த அந்நியன் ஒருவர் “என் இன்றைய உணவு உங்கள் செலவில்” என்று உரிமையயோடு சொன்னதை என்ன இரகத்தில் சேர்ப்பது என்றே புரியாமல் குழம்பிப் போனேன்.

பச்சை வேண்டுகோள். மிரட்டல் என்கிற இரகங்களில் அடங்காவிட்டால் மனநோயாளியாக இருப்பானோ என்றுகூட எண்ணத் தோன்றியது.

கீழை நாட்டவர்கள் பலரும் முகத்தில் உணர்ச்சியைக் கொட்டாமலும் காட்டாமலும் பேசுவதில் வல்லவர்கள். இந்த ஆற்றல் மட்டும் நமக்கு இருந்தால் எத்தனையோ இடங்களில் சண்டை சச்சரவுகளே வரா.

நாமோ வார்த்தைகளிலும் (எதிர்மறை) உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, முகத்திலும் அவற்றைக் காட்டி மாட்டிக்கொள்கிறோம்.

என் வெளிநாட்டுப் பயணங்களில் நான் எவ்வளவோ கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றுள் ஒன்று உணர்ச்சியை (குறிப்பாக எதிர்மறையான) வெளிப்படுத்தாமல் பேசவேண்டும்.

உதாரணமாக, ஒன்றை மறுக்கும்போது முகத்தை கடுகு தாளிக்கும்மளவு சூடாகச் சொன்னால் அதன் பலனே வேறு. இதமாக மறுத்தால் அதன் விளைவே வேறு. ஒரு படி மேலே போய் புன்னகையோடு மறுத்தால் எதிராளிக்கு ஏற்படும் மனக்காயத்தின் அளவு மிகச் சாதாரணமாகிவிடுகிறது. என் எதிரே அமர்ந்து உணவு கேட்டவனிடம் துணிந்து மறுப்பது; ஆனால் இதமாக மறுப்பது என்று முடிவு செய்து, “சாரி, அதிகமாகப் பணம் கொண்டு வரவில்லை. நான் சாப்பிட மட்டுமே காசு இருக்கிறது” என்றேன்.

இதை அவனுக்குச் சொன்ன அதே நேரத்தில் என் உள் மனம் ஓர் இணைக் கணக்கும் போட்டுக்கொண்டிருந்தது. இவன் நிச்சயம் நாகரிகப் பிச்சைகாரனாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவனாக இருந்திருந்தால் இந்நேரம் உணவுக் கடைக்காரம்மாவும் அவருக்கு உதவியாக இருந்தபடி உணவு பரிமாறும் ஒருவரும் இவனிடம் அருகே வந்து, ‘என் கடையிலா வந்து தொந்தரவு செய்கிறாய்? என் வாடிக்கையாளரிடமா வந்து வம்பு பண்ணுகிறாய்?’ என்று கேட்டிருப்பார்கள்.

இவன் மனநோயாளியும் அல்லன். அப்படிப்பட்டவனாக இருந்தால் ஓட்டல் உணவுக் கடை நடத்தும் இவர்களுக்கு நிச்சயம் உள்ளூர்க்காரன் என்ற வகையில் தெரிந்திருக்கும். அத்தகையவனையும் உரிமையுடன் விரட்டியிருப்பார்கள்.

மற்றவற்றையெல்லாம் அடித்து நீக்கிவிட்டுப் பார்க்கும்போது, இவன் நிச்சயம் ஓர் உள்ளூர்ப் பொறுக்கி என்பது தெரிந்துவிட்டது. அதனால்தான் அருகேகூட வரமாட்டேன் என்கிறார்கள்.

தங்கள் கடையில் வந்து அமர்ந்த வாடிக்கையாளன் என்ற வகையில் இந்நேரம் அவனருகே வந்து “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டிருக்க வேண்டாமோ?

இந்த இடத்தில் இன்னொரு கிளைச் சந்தேகங்களும் எழுந்தது எனக்கு.

இவர்கள் இவனருகே வந்து என்ன வேண்டும் என்று இதுவரை கேட்காததற்கு இரு காரணங்கள் இருக்கவேண்டும்.

முதலாவது இவன்கள் இருவரும் மோதிக்கொண்டு ஒரு முடிவுக்கு வரட்டும். அதன்பின்னர் இருவருள் ஒருவர் அழைக்கட்டும். பிறகு நாம் போவோம் என்று இந்த உணவுக் கடைக்காரர்கள் நினைக்கிறார்களா?

அல்லது (அதாவது இரண்டாவது), இந்த உணவுக் கடைக்கார அம்மா, உணவு பரிமாறும் ஆள், இப்போது எதிரே வந்து அமர்ந்து உணவு வாங்கித் தா என்று கேட்கும் மூவருமே கூட்டுக் களவாணிகளா? இது என்ன திட்டமிட்ட நாடகமா? ஒத்திகை பார்க்கப்படும் சதியா?

இப்படித் தெரியாத்தனமாய் டோனா எச்சரித்தும் ஒதுக்குப்புறமாய் உள்ள இந்த இடத்தில் தனிமை அமைதிக்கு ஆசைப்பட்டு வந்து அமர்ந்தது தவறாறிவிட்டதே! இவனை எதிர்த்துக்கொண்டால் இங்கேயே கழுத்தை நெரித்து மெக்காங் ஆற்றில் தூக்கி எறிந்தாலும் எறிந்து விடுவான். சூழ்நிலைகள் சாதகமாக இல்லாதபோது துணிவான முடிவுக்குப் போவதைவிட அறிவுபூர்வமாக முடிவு எடுப்பதே நல்லது என்கிற முடிவிற்கு வந்தேன்.

உணவு பரிமாறுகிறவரைச் சாடையாய் அழைத்தேன். இவர் கேட்பதைக் கொடுங்க. என்னிடம் காசு அதிகம் இல்லை. ஓட்டல் அறையும் வெகுதூரம். எனவே அவர் சொல்லுகிற உணவு வகைகள், நான் சாப்பிட்டவை எல்லாம் எவ்வளவு வரும் என்று சேர்த்து, தொகையைச் சொல் பிறகு நான் ஒப்புதலைச் சொல்கிறேன் என்றேன்.

இதை உங்களுக்கு எளிமையாகச் சொல்லிவிட்டேனே தவிர, இதை உணவு பரிமாறுபவருக்குப் புரிய வைப்பதற்குள் சலிப்பு வந்து அது வெறுப்பாகி, அது கோபமாகவே உருவெடுத்துவிட்டது. மொழி புரியாத இந்த நாட்டில் வந்து இப்படியெல்லாம் மாட்டிக்கொண்டு தவிக்கவேண்டியிருக்கிறதே!

ஒருபுறம் மொழி புரியாதவர்கள்; எதிர்ப்புறம் ஒரு பொல்லாதவன். இவன்களிடம் வந்து வகையாகச் சிக்கிக் கொண்டோம் என்று தோன்றியது.

எதிராளி கெட்டிக்காரனாக இருந்தால் இந்நேரம் ஓர் உண்மைைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதாவது அவனைச் சாப்பிட அனுமதித்ததன் மூலம் நான் ஒருவர் சாப்பிடுவதற்கும் மேலாகக் காசு வைத்திருக்கிறேன் என்பது.

இதை உணர்ந்து கொண்டதால் சாப்பிட்டு முடிந்தபிறகும் பின்னாலேயே வந்து தொந்தரவு தருவானோ?

உலகப் பயணிகளையெல்லாம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இதைக் கவுண்டமணி பாணியில் படிக்கவும் “ஐயாமார்களே! அம்மாக்களே! நீங்க எவ்வளவோ பயண அனுபவங்களைப் பெற்றிருப்பீங்க. ஆனா எனக்கு நேர்ந்த இந்த மாதிரியான அனுபவம் உங்களுக்கு எப்பவாச்சும் ஏற்பட்டிருக்கும்ங்களா?

இந்தச் சட்டித் தலையன் இப்படி என் எதிரே உட்கார்ந்துகினு இப்படி சண்டித்தனம் பண்றானே! இவனோட ரவுசு தாங்க முடியலிங்களே! இவன்கிட்டேர்ந்து தப்பிக்க என்னங்க வழி? வர்ற ஆத்திரத்துக்கு காலால் உதைக்கலாம் போலருக்கே இவன் பண்ற அநியாயத்தைப் பார்த்தா!”

எதிரே அமர்ந்தவன் நல்லவேளையாக கண்டபடி தின்னக் காணோம். என்னைப்போல ஆற்றின் அழகையெல்லாம் இரசித்தபடி சாப்பிடக் காணோம்.அந்தக் கொதிக்கிற சூப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சில திரைப்படங்களில் பறக்காவெட்டியாக உள்ளே தள்ளுகிற மாதிரிக் காட்சி காண்பிப்பார்களே! அந்த இரகத்தில்தான் முடித்தான்.

“தாங்க்ஸ்பா” என்கிற பாணியில் லாவோஸ் மொழியில் ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்ததும் தான் எனக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அவன் செல்கிற திசையையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அவன் செய்த இன்னொரு காரியமும் எனக்குப் படு ஆச்சரியமாக இருந்தது.

ஆமாம்! இரண்டு கடை தள்ளிப்போய் ஒரு வெள்ளைக்காரரின் எதிரே அமர்ந்துகொண்டான். ஆனால் அந்த வெள்ளைக்காரர் என்ன சொன்னாரோ தெரியவில்லை. அவன் சில நிமிடங்களில் எழுந்துவிட்டான்.

என்னிடம் சாய்ந்த ஜம்பம் வெள்ளைக்காரரிடம் பலிக்கவில்லை.

இவர்களையெல்லாம் கடைக்காரர்கள் கேள்வியே கேட்கமாட்டார்களா? இவர்களைக் கண்டிக்க போலீசாரே இங்கு இல்லையா?

உல்லாசப் பயணிகள் நிறையப் பேர் வந்து குவிகிற இந்த நாட்டில் இவர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டாவது ஓரிரு காவலர்களை நியமிக்கக்கூடாதா இந்த ஆற்றோரம்? அவனும் சேர்த்துச் சாப்பிட்டதற்கு நல்ல வேளையாக என்னிடம் காசு இருந்தது.

ஒற்றை மனிதனாக ஓட்டலை நோக்கிச் சென்ற அந்த இருள் பாதையைத் திரும்பித் திரும்பித் பார்த்தபடிதான் நடந்தேன். எங்கே அந்தச் சட்டித் தலையன் மீதம் இருக்கிறகாசையும் அடித்துப் பிடுங்க வந்துவிடுவானோ என்று!

மறுநாள் டோனா ரீயிடம் நடந்தவற்றைச் சொன்னபோது அவர் இரக்கப்பட்டு த்சோ! த்சோ! என்று உச்சுக்கொட்டுவாராக்கும் என்று பார்த்தால்

டோனா விழுந்துவிழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்தச் சிரிப்பிற்கு நீங்கள் சரியான அசடு என்றுதான் பொருள் கொள்ள முடிந்தது.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 4:03 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 21 May 2010

snake-gourd.jpgகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

இதயநோய்களுக்குச் சிறந்த டானிக். காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் மருந்து. உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் காய்கறி. நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை எளிதாகக் குறைக்கப் போதுமான அளவு சத்தும், குறைந்த அளவு கலோரியும் கொண்ட காய்கறி. மஞ்சள் காமாலை, தலை வழுக்கை எனப்பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அரிய காய்கறியான புடலங்காய் பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.

புடலங்காயின் தாயகம் இந்தியாதான். காய்ச்சல் நேரத்தில் காய்ச்சலை மட்டுப்படுத்தப் புடலங்காய் பொறியல் செய்து சாப்பிட்டால் போதும். சிலர் அலுவலகம் வரும் வரை நன்றாய் இருப்பார்கள். தம் இருக்கையில் அமர்ந்ததும் காய்ச்சல் ஏற்பட்டுவிடும். ஏதேனும் ஒரு காய்ச்சல் மாத்திரையை அப்போது போட்டுக்கொள்வார்கள். காய்ச்சல் உடனே குணமாகும். பிறகு, மாலை அலுவலகத்திலிருந்து புறப்படும் போது மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுவிடும். இப்படி விட்டுவிட்டுக்காய்ச்சல் ஏற்படும் உடல்வாகைப் பெற்றவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் புடலங்காய்ப் பொறியல், கூட்டு என்று தயாரித்துச் சாப்பிட்டால் போதும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் தரும் காய்கறி இது. பிறகு இதுபோன்ற திடீர்க்காய்ச்சல் ஏற்படாது.

கவலையை விரட்டும் காய்!
அதிக உழைப்பு, கவலை, நோய் முதலியவற்றால் அல்லல்படுபவர்களுக்கு நெஞ்சுத்துடிப்பு மிகவேகமாய் இருக்கும். சிலருக்கு இதயவலியும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் புடலங்காயைச் சாப்பிடவேண்டும். மேலும், அவர்கள் அதிகாலையில் புடலைக் கொடியில் இளந்தரான இலையைப் பறித்து, சாறாகப் பிழிந்து வைத்துக்கொண்டு, ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை வீதம் சாப்பிட வேண்டும். இதனால், இதயம் கடும் முயற்சி செய்து இயங்குவது சமமாகி சாதாரணமாக இயங்க ஆரம்பிக்கும்.

வழுக்கைத் தலையா?
இளமையிலேயே வழுக்கைத் தலையுள்ளவர்கள் மேற்கண்ட முறையில் புடலங்காய் இலைச்சாற்றைத் தயாரித்து தினமும் ஒரு கப் அருந்தி வரவேண்டும். வாரத்தில் மூன்று நான்கு நாள்களாவது புடலங்காயையும் உணவுடன் சேர்த்து வரவேண்டும். விரைவில் இவர்களுக்கு வழுக்கை விழுந்த இடத்தில் முடிமுளைக்க ஆரம்பிக்கும்! இதற்காகவாவது வீட்டில் புடலைக் கொடியை வளர்த்துத் தினமும் பசுமையான இலைகளைப் பறித்துச் சாறாக்கி அருந்த வேண்டும்.

காய்ச்சல் நேரத்தில் புடலங்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் காய்ச்சிக் கஷாயமாய் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பித்தம் சம்பந்தமான காய்ச்சல், நாக்குவறட்சி, மலச்சிக்கல் போன்றவையும் இந்தக் கஷாயத்தை அருந்துவதால் குணமாகும். கஷாயம் நன்கு பயன்தரச் சிறிதளவு தேனையும் சேர்த்து அருந்தலாம்.

காய்ச்சல் கடுமையாய் இருந்தால் 50 கிராம் புடலங்காய்த் துண்டுகளையும் 50 கிராம் கொத்துமல்லியையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, மறுநாள் அதை வடித்து அருந்த வேண்டும்.

பித்தநோயைக் குணப்படுத்த இலைக்கஷாயத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து அருந்தலாம்.

வாந்தி எடுக்க வைக்கவும் இந்த இலைச்சாறு பயன்படும். இதில் கொத்துமல்லி சேர்க்கக்கூடாது.

கீல்வாதம் குணமாகும்!
கல்லீரல் கோளாறு, கீல்வாதம் முதலியவற்றுக்கு இலைக் கஷாயத்தை தைலம் போல மேல் பூச்சாக உடல் முழுவதும் தேய்க்க நற்பயன் கிடைக்கும்.

மஞ்சள் காமாலையைக் குணமாக்க முப்பது முதல் ஐம்பது கிராம்வரை எடையுள்ள புடலங்காய்க்கொடியின் இலைகளைக் கொத்துமல்லியுடன் இரவு முழுவதும் ஊறப்போட்டு, காலையில் அதை வடித்து, மூன்று வேளைக்குச் சமமாகப் பிரித்து வைத்துக்கொண்டு அதை அருந்த வேண்டும்.

நாட்டு மருத்துவத்தில் முக்கியமான மருந்தாய் இருக்கும் புடலை இலை இப்போது இந்திய இயற்கை மருத்துவத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்குப் பேதி மருந்தாகவும், வாந்தி எடுக்க வைக்கும் மருந்தாகவும் இந்த இலைச்சாற்றையே பயன்படுத்தலாம்.

புடலங்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோ சன்தீன் ஆங்கினா (Trichosanthes anguina) என்பதாகும்.

100 கிராம் புடலங்காயில் கிடைக்கும் கலோரி அளவு 18 தான். போதுமான அளவு புரதம், கொழுப்பு. நார்ச்சத்து, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிலவின், நியாஸின் போன்றவை இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை நன்கு சேர்த்துக்கொண்டால் உடல் எடையைப் படிப்படியாகக் குறைத்துவிடலாம்; உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும். உடலும் பலவீனமடையாது.

புடலையைக் காயாகத்தான் வேகவைத்துச் சமைத்து உண்ணவேண்டும். பழுத்த புடலையை உண்ணக்கூடாது. அது எளிதில் செரிமானம் ஆகாது. பழுத்த புடலையின் உள்ள காய்களை மட்டும் காயவைத்து, அதை இரவில் ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டி அருந்தினால் பேதி ஆகும். பழுத்த புடலங்காயில் உள்ள விதைகளைப் பேதிமருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு தினசரி புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் இதயநோயின்றியும், உடல் எடை அதிகரிக்காமலும், அடிக்கடி காய்ச்சல் ஏற்படாமலும் வாழலாம். ஆரோக்கியமாய் வாழப்பயன்படும் அரிய மருந்து, புடலை.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 3:38 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 21 May 2010

shewag-sachin-obama-singh.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எம்.கமலம், கரூர்.

வீட்டில் ஒளி விளக்கு ஏற்ற வரும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

தங்களுக்குப் பதிலாக இன்னொரு விளக்கு வந்துவிடக் கூடாத அளவுக்கு

வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

இன்றைய இளம் தம்பதிகள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வது வரவேற்கத் தக்கதா?

சும்மா புரூஃப் பண்ணத்தானே! இல்லாவிட்டால் அதற்கும் தயாராக இல்லை! அவ்வளவு பயப்படுகிறார்கள் வளர்க்கத்தான்!

கே.சுரேஷ், முதுகுளத்தூர்.

இன்றைய தலைமுறை எப்படி இருக்கிறது?

இளமையில் கள், முதுமையில் சாராயம் என்று சொல்லும்படியாக, கிராமங்களில் இந்த நிலைதான் நீடிக்கிறது.

பீ.ராம்குமார், கோவை-4.

எனது முதல் புத்தகத்தை யாருக்குக் காணிக்கையாக்கலாம்?

உங்கள் மனைவிக்கு. உங்களை ஓர் இடத்தில் உட்காரவிட்டு நிம்மதியாக எழுதவிட்டிருக்கிறார்களே அதற்கு.

சிக்கந்தர் பாஷா, வேலூர்.

ஒபாமா மன்மோகன் சிங்கை குரு என்று குறிப்பிட்டது உண்மையா?

உண்மைதான். ஒரு முறை இருமுறை அல்ல, மூன்று முறை அமெரிக்காவில் குரு என்கிற சொல் ஆங்கிலச் சொல்லாகவே ஆகிவிட்டது. அமெரிக்கர்களிடம் குரு என்றால் அப்படீன்னா என்று கேட்கவேமாட்டார்கள். ஓபாமாவின் பெருந்தன்மை எல்லோருக்கும் வந்துவிடாது!

ஆர்.விக்டர், பாண்டிச்சேரி.

நியூயார்க் வெடிகுண்டு விவகாரத்தில் பாகிஸ்தானியர் சதி வெளியாகியிருப்பது பற்றி..?

பாகிஸதானின் முகத்திரையைக் கிழித்தெறியக் கிடைத்த சரியான சம்பவம்.

பாபுசிங், கோபி.

மேற்கு இந்தியத் தீவுகளில் இந்தியத் தோல்வி குறித்து?

டெண்டுல்கர் சேவாக் இல்லாத கோப்பைக் கனவு உங்களுக்கே ரொம்ப ஓவராத் தெரியவலை!

டி.சித்ரா, கரூர்.

கடனில் தவிக்கும் கிரீஸ் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு நிதியுதவி வழங்க முன்வந்ததன் பின்னணி என்ன?

கொஞ்சம் சுயநலம், கொஞ்சம் மனிதாபிமானம். ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கிரீஸில் பெரிய முதலீடுகளைச் செய்துள்ளன. இவை எழுந்திருக்க வேண்டும். கிரீஸின் வீழ்ச்சியால் ஐரோப்பியப் பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி. இதனையும் தூக்கி நிறுத்த வேண்டும். ஏற்கெனவே ஐரோப்பிய யூனியனின் கரன்சியான யூரோ பயங்கரமாக நொண்டியடிக்கிறது. கிரீஸிற்குமட்டுமல்ல, விரைவில் ஸ்விடனுக்கும் போர்ச்சுகலுக்கும்; அயர்லாந்திற்கும் ஐரோப்பிய யூனியன் உதவியாக வேண்டும். இப்படியெல்லாம் சிக்காமல் இந்தியா எழுந்து நிற்பது பெரிய விஷயம்தான்.

க.நா. இராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்.

உங்கள் எழுத்திற்குத் தூண்டுகோல் யார்?

சாதாரணமாய் எழுதுவதற்கு என் முதலாம் வகுப்பு ஆசிரியர். அதையே எப்படி எழுத வேண்டும் என்பதற்கு என் தந்தை. இது சரி, இது சரியில்லை என நெறிப்படுத்தியவர் என் தாய். அதன் பிறகு அதற்குக் களம் கொடுத்தவர் திரு.எஸ்.ஏ.பி. இவர்களே என் தூண்டுகோல்கள், திறவுகோல்கள் என்று சொல்லலாம்.

சி.விஜயகுமார், தேவரைக்குறிச்சி.

பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டும் எனக் கூறுகிறார்களே பெற்றோர்களே, அதன் பொருள் என்ன?

குடும்ப சாகரத்தில் தம்மோடு பிள்ளைகளும் இருந்தால், தங்களை அதில் முக்கிவிடுவார்கள். எனவே அவர்களைக் கரையேற்றினால்தான் தங்களுக்கு ஜலகண்டம் இருக்காது என்று நினைக்கிறார்களோ, என்னவோ?

பே.திருமாவேலன், பாண்டிச்சேரி.

மாவோயிஸ்டுகள் மறுபடி ஒரு தமிழர் உட்பட பலரைக் கண்ணிவெடியில் சாய்த்திருக்கிறார்களே?

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உட்பட தீவிரவாதத்திற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் தேவை என்கிறார்கள். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட முதல்வர்கள் இவர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்திவிட்டார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் இன்னமும் பூவால் இவர்களை வருடுவதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

எஸ். சாந்தகுமார், மதுரை.

நித்யானந்தா பற்றிய இரகசியங்களை ஒரு வெளிநாட்டு பக்தர் வெளியிடுகிறாராமே?

வரட்டும். பேசிப் பேசித் தள்ளிய நித்யா, இப்போது காவல் துறையின் விசாரணைக்கு உடன்படாமல் மவுனம் சாதிப்பது புரியாத புதிர். இதைப் பற்றியும் அந்த பக்தர் எழுதினால் தேவலை!

என்.குமாரச்சாமி, திருவாரூர்.

பள்ளிக் கட்டணச் சீரமைப்பு நடைமுறைக்குச் சரிப்பட்டு வருமா?

நேரத்திற்கு வராத இரயில்களுக்கு எதற்கு இரயில்வே நேர அட்டவணை என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு மற்றவர், எவ்வளவு நேரம் தாமதமாக வருகிறது என்று தெரிந்து கொள்ளத்தான் என்றாராம். அந்தக் கதைதான் இந்தக் கதையும். அரசு கட்டணத்தை நிர்ணயித்தால்தான் இவர்கள் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்பது தெரியவரும். இரகசியமாகக் கொடுக்க முன்வரும் பெற்றோர் இருக்கும்வரை மறைமுக வசூல்கள் நடைபெறவே செய்யும். ஆனபோதும் அரசின் இந்த நன்முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஆர். கிருஷ்ணன், வந்தவாசி.

மறைமலையடிகள் இல்லத்துப் புதுப்பிப்பு தமிழ் நெஞ்சங்களுக்கு நல்ல இதம். என்ன சொல்கிறீர்கள்?

உண்மைதான். பக்தவத்சலம் காலத்தில் இந்த (பல்லாவரம்) வீட்டிற்கு ஒரு புது வாழ்வு வந்தது. பிறகு மறுபடி பாழடையத் தொடங்கியது. நல்ல தமிழ் உணர்வு கொண்ட கலைஞர் காலத்தில் இந்த வீடு கவனிக்கப்படாவிட்டால் பிறகு எப்போதுதான் விடிவு? மேலை நாடுகளில் மாமனிதர்களின் பிறந்த இல்லங்களை அப்படிப் போற்றிப் பாதுகாக்கிறார்கள். நமக்கும் அவர்களது உணர்வு வரவேண்டும்.

எஸ்.முருகானந்தம், திருவேற்காடு.

சுனாமி பயம் சென்னையை நன்கு உலுக்கிவிட்டதா?

நல்ல ஒத்திகையாக அமைந்துவிட்டது தவறில்லை என்பேன்.

ஏ. வெற்றிகொண்டான், திருச்சி.

தமிழக அரசின் நலத்திட்டங்களை, அறிவிப்புகளைக் காணும்போது கஜானா நிரம்பி வழிகிறதோ என்று தோன்றவில்லை?

டாஸ்மாக் கடைகளில்தான் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கு கோப்பைகளில் மது நிரம்பி வழிகிறது. டாஸ்மாக் நேயர்களின் வாய்களிலும் அது வழிகிறது. இதனால் கஜானா ஓரளவு நிரம்புகிறது. கஜானா நிரம்பி வழிந்தால் அரசுக் கலைக் கல்லூரிகளில் 49 முதல்வர்கள் பணியிடங்கள் காலியாக இருக்குமா? காவலர்கள் போதுமான அளவு இன்றிக் காவல் நிலையங்கள் காற்று வாங்குமா? சார்பதிவாளர் அலுவலகங்களுக்குப் போய்ப் பாருங்கள் எவ்வளவு இருக்கைகள் காலி தெரியுமா? பொன்னாட்சி நடக்கிறதாம் பொன்னாட்சி.

கே.எம்.பழனியப்பன், கோயமுத்தூர்.

ஜெய்ராம் ரமேஷ் அப்படி என்னதான் பேசிவிட்டார்?

சீனாவில், இந்தியாவிற்கு ஆபத்து இருப்பதாக உள்துறை அமைச்சகம் தேவையில்லாமல் பயமுறுத்தியது. சீனா கார்பனை அதிகம் வெளியிடுவதை உள்துறை அமைச்சகம் குறை கூறுகிறது. இவற்றால் இரு தரப்பு உறவு பாதிக்கப்படுகிறது என்று சொந்த நாட்டின் கொள்கையையே தவறாக விமரிசித்திருக்கிறார் சீனாவுக்குப்போன இடத்தில் சீனர்களைக் குளிர்விக்க சீனர் செய்யும் எல்லை அட்டகாசங்களும் ஆக்கிரமிப்புகளும் பொறுக்க முடியாதவை. இந்தியாவின் அளவு கடந்த சகிப்புதன்மையால்தான் இந்தியா-சீன உறவே பிழைத்துக் கிடக்கிறது. ஜெய்ராம் ரமேஷைப் போல் நம் மண்ணை அந்நிய மண்ணில் விமரிசித்த அமைச்சர் இதுவரை இல்லை. இவர் நிச்சயம் நீக்கப்பட வேண்டியவர். நீக்கினால் சீனாவுக்குக் கன்னத்தில் கொடுக்கப்பட்ட நல்ல அறையாக இருக்கும்!

07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 3:24 am
Filed under: Uncategorized