» 2010 » April .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Vietnam travel

Posted on Friday 30 April 2010

hanoi.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

நான் தாய்லாந்தை எட்டிப் பார்ப்பதில் இந்த டோனா ரீக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?

நேரம் வீண்; பெட்ரோல் செலவு என்று யோசிக்கிறாரா? லாவோசைக் காட்டத்தானே ஒப்பந்தம் பேசினோம்? தாய்லாந்து எப்படி இதனுள் வரும் என்று யோசித்திருப்பாரா? பிடிபடவே இல்லை.

இந்தப் பதிலில் எனக்கு ஏமாற்றம் ஏதும் பெரிதாக ஏற்படவில்லை என்று சொல்லலாம். காரணம், தாய்லாந்து நான் ஏற்கெனவே பார்த்த நாடுதான். இவ்வளவு அருகே இருக்கிறோமே; நம் ஜம்போ பாஸ் போர்ட்டில்தான் ஏகப்பட்ட பக்கங்கள் இருக்கின்றனவே அதில் ஒரு பக்கத்தைத் தாய்லாந்து முத்திரையால் நிரப்பினால் என்ன என்று தோன்றியதன் விளைவே தாய்லாந்தை எட்டிப் பார்க்கும் ஆசை.

இன்னொரு துணைக் காரணமும் தாய்லாந்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு நாட்டிற்கும் எனப் பன்முகங்கள் உண்டு. ஒரு நாட்டின் ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு அந்த நாட்டைப் பற்றிய முழுமையான கருத்தை ஒருவர் எட்டிவிடவே முடியாது. கேரளாவிற்கும் காஷ்மீருக்கும் ஏதேனும் ஒற்றுமைகள் உண்டா? ராஜஸ்தானின் வறட்சிப் பாலைவனப் பகுதிகளைப் பார்த்துவிட்டு இந்தியா என்பது வளைகுடா நாடுகளைப் போன்ற ஒரு பகுதிதான் என்று ஒரு வெளிநாட்டவர் முடிவிற்கு வந்தால் அதைச் சரியென்று ஏற்றுக் கொள்ள இயலுமா?

மும்பையைப் பார்த்துவிட்டு, இந்தியா எந்த மேலை நாட்டிற்கும் சளைத்தது அல்ல என்று ஒருவர் பெருமை பாடினால் அதை நம்மால் ஒப்புக் கொள்ளமுடியுமா?

பீகாரில் உள்ள மக்களின் வறுமையை மட்டும் காட்டி இந்தியா மிக வறுமை மலிந்த நாடு என்கிற கருத்திற்கு நாம் உடன்பட முடியுமா?

தாய்லாந்திற்கும் இப்படிப் பல முகங்கள் உண்டு. தாய்லாந்தில் வடக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேனே தவிர அதன் கிழக்கு முகத்தைப் பார்த்தது இல்லை. நகரச் சாயல்படியாத தாய்லாந்தின் கிராமத்து வாழ்க்கை முறையைப் பார்க்க வேண்டுமானால் அதற்குக் கிழக்குமுகம்தான் சிறந்தது.

எனக்கும் தாய்லாந்தின் கிழக்குப் பகுதிக்கும் இடையே உள்ள தூரமே மெக்காங் ஆற்றின் அகலம் மட்டுமே.

மிஞ்சிப் போனால் ஒரு கரையில் லாவோஸ் நாட்டையும் மறுகரையில் தாய்லாந்தையும் கொண்டிருக்கும் இந்த மெக்காங் ஆற்றின் அதிகபட்ச அகலம் 500 மீட்டர்கள் இருக்கலாம். இந்த ஆறும், விதிகளும், இந்த டோனா ரீயுமா என் ஆர்வத்திற்கு அணை போடுவது?

எண்ணிப் பார்த்த போது, டோனா ரீ மீது சற்றுக் கடுப்புக்கூட ஏற்பட்டது. ஆனால் வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை.

“சரி எங்கே போவோம்?” இது நான்.

“உங்களுக்கு எதிலெல்லாம் ஆர்வம் சொல்லுங்கள்?” இது டோனா ரீ.

“இங்கே பார்க்க ரொம்பத்தான் இடங்களைக் கொண்டிருக்கிறீர்களாக்கும்?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை.

“புதுமையான ஓர் இடத்தை நாம் பார்க்கப்போகிறோம். அதற்குமுன் உணவு உண்டுவிட்டுச் செல்வது நல்லது. நாம் போகும் இடம் இங்கிருந்து வெகு தூரம். வழியில் நல்ல உணவுக் கடைகளும் இல்லை. சாலையோர உணவுக் கடைகள்தாம். அதில் தயாரித்து அளிக்கப்படும் உணவு வகைகளை இந்தியர்கள் இரசித்து உண்டு நான் பார்த்தது இல்லை” என்றார் டோனா ரீ.

“அப்படியா? எங்களவர்கள் என்ன சொல்வார்கள் உங்கள் உள்ளூர் உணவைப் பற்றி?”

“நாற்றமடிக்கிறது என்பார்கள்?” சிறு புன்னகையுடன் இதை டோனா ரீ சொல்லவே எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“நீங்கள் எங்களவர்களின் கருத்தை ஏற்கிறீர்களா டோனா?”

“இல்லையில்லை”

“எங்கள் உணவு வகைகள் பெரும்பாலும் இனிய மணம் உடையவை.

பசியைத் தூண்டுமளவும் நாக்கில் நீர் ஊறுமளவும் எங்கள் சமையல் மணம் இருக்கும்.” “அதனால்தான் உங்கள் சமையலில் வரும் வாசனையை இப்படி விமரிசிக்கிறார்கள்.”

“எங்கள் உணவும் பசியைத் தூண்டும் மணமே தவிர, நாற்றம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” டோனா விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

நான் இதை ஒரு விவாதமாக ஆக்க விரும்பவில்லையே தவிர, நிச்சயமாக நம் உணவுத் தயாரிப்பில் இருக்கிற இனிமை, மணம் கீழை நாடுகளில் உள்ள பல நாடுகளில் இல்லவே இல்லை.

இதை ஒரு பாசமிக்க இந்திய உணவு இரசிகனாகச் சொல்லாமல் ஓர் உலகத் தரமான இரசனையுடன் கூடிய மூக்கை அடிப்படையாகக் கொண்டே சொல்கிறேன். இதை டோனாவுக்கு நிரூபிக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு வேகமே எழுந்தது.

“இந்திய உணவகம் இங்கு ஏதும் இருக்கிறதா?”

“இல்லை.”

“ஆச்சரியமா இருக்கிறது. இந்திய உணவகம் இல்லாத கிழக்காசிய நகரம் அநேகமாக இந்த வியான்டின் நகரமாகத் தான் இருக்கும்.”

“இந்தியர்கள் இந்த நாட்டில் மிகமிகக் குறைவு”

“ஏன் அப்படி?”

“இந்தியர்கள் என்பவர்கள் நான் அறிந்தவரை உழைப்பாளிகள் அல்லது முதலாளிகள். இங்கே விவசாயம், சுற்றுலா தவிர தொழில் விருத்தி என்று ஏதும் இல்லை. இங்கு உள்ளூர் மக்களுக்கே சரிவர வேலை கிடைக்கவில்லை. இங்கு தொழிற்சாலைகள் தொடங்கவும் வாய்ப்புக் குறைவு. எனவே இந்தியர்கள் இந்த நாட்டைக் கண்டு கொள்ளவில்லை.”

டோனாவைக் குறை சொல்லவே முடியாது. தம் நாட்டைப் பற்றிய மிகைப்படுத்தாத கருத்தையே இவர் கொண்டிருக்கிறார் என்பதற்கு இவர் கடைசியாகச் சொன்ன இந்த வாசகமே நல்ல சான்று.

ஓட்டலுக்குப் போனால் டோனாவுக்கும் சேர்த்து நான்தான் பில் கொடுக்கவேண்டும். டோனா சாலையோரக் கடைகளில் உணவருந்த விரும்பவில்லை என்பதால், நம்மை ஓர் உயர்ந்த ஓட்டலுக்கு அழைத்துப் போய் நம்மை ஒரு வழி ஆக்கி விடுவாரா?

நாங்கள் சென்றது துசாகி (TUSAKI) என்ற ஓர் ஓட்டலுக்கு. இது மெக்காஸ் ஆற்றை ஒட்டியிருந்த மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் ஆரவாரமற்று இயங்கிக் கொண்டிருந்தது.

“என்ன சாப்பிடுகிறீர்கள்?”

“நாற்றமடிக்காத எந்த உணவும்” என்று நான் சொல்ல, டோனா அந்த ஓட்டலில் உணவு உண்டு கொண்டிருந்த அனைவருமே திரும்பிப் பார்க்குமளவு பெரிய சிரிப்பாகச் சிரித்தார்.

“புரிகிறது. உங்கள் இரசனைக்கு ஏற்ப ஆர்டர் கொடுக்கிறேன்.”

வந்த சர்வரிடம் லாவோஸ் மொழியில் ஏதோ சொல்ல, அவன் பத்து நிமிடத்திற்கெல்லாம் இரண்டு பெரிய பீங்கான் கோப்பைகளுடன் வந்தான்.

அந்த பெரிய பீங்கான் கோப்பை நிறைய கலங்கலான பழுப்பு நிறத்தில் சூப் இருந்தது. அதில் ஏகப்பட்ட காய்கறிகள் மிதக்க பக்கத்தில் ஒரு சிறு கோப்பையில் வேகவைக்கப்பட்ட வெள்ளைச் சாதம்.

நாமெல்லாம் சாதத்தை நிறையவும் மற்றவற்றைக் குறைவாகவும் சாப்பிடுகிறோம் அல்லவா?

லாவோசில் அப்படி அல்ல. சாதம் பக்கவாட்டு உணவு காய்கறி சூப்தான் பிரதான உணவு.

சூப்பில் சாதத்தைப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்த டோனாவைப் பார்த்து நானும் அப்படியே சாப்பிட்டேன்.

“எப்படி இருக்கிறது?”

“சரியாக என் இரசனையோடு ஒட்டிப்போகிறது.”

இவ்வளவு பெரிய கோப்பையையும் முடித்துவிட முடியுமா என்று ஐயப்பட்ட எனக்கு அதன் ருசி, மிச்சம்மீதி வைக்கவிடாமல் செய்தது.

“வேறு ஏதும் சாப்பிடுங்க” என்றேன் மரியாதைக்காக

“ஊகும்! இதுவே அதிகம்.”

பில்வரும் நேரம்.

எனக்கு இரண்டு சஸ்பென்கள். ஒன்று பில் மிரட்டுமா? இரண்டாவது பில்லை யார் கொடுப்பது?

டோனா இதை வித்தியாசமாகக் கையாண்டார்.

(தொடரும்).

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 1:59 am
Filed under: Uncategorized
Until death happens…

Posted on Friday 30 April 2010

lena-tamilvanan.jpgமரணம் வரை தொடர வேண்டியவை…..

குடும்பத் தலைவர்கள் சலித்துக்கொள்கிறார்கள். “எவ்வளவு காலம்தான் இப்படி உழைத்தே ஓடாய்ப் போவது? மகன் தலையெடுத்து நம்ம சிரமத்தைக் குறைப்பான்னு பார்த்தா, தொழில் பண்றேன்னு பெரும்பணத்தை அழிச்சே ஒப்பேத்திட்டான். சாண் ஏறினா முழம் சறுக்குது. என்னத்தப் பண்ணித் தொலையறது சொல்லுங்க? வயது வேற ஏறிக்கிட்டே போகுது” என்கிற பாணியில் விதவிதமான புலம்பல்கள்.

“முன்ன மாதிரி இல்லை, கைகாலெல்லாம் அசந்து போகுது. ஈசி சேரில் அக்கடான்னு கிடக்கலாம்னு பார்த்தா எங்கே முடியுது” என்கிற பாணியில் இல்லத்தரசிகள்.

நடுத்தர வயதுக்காரர்களின் இளைய தலைமுறையின் புலம்பல்கள் சற்றே மாறுதல்களுடன் தொடர்கின்றன.

விதிக்கப்பட்ட கடமைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுச் செய்தால் அந்த உணர்வுகளே நமக்கு ஓர் ஆள் நம் உடம்பைப் பிடித்து மசாஜ் செய்துவிடுவதற்குச் சமம்.

“என் கடமைகளை என்னால் நன்கு செய்யமுடிகிறது; நானும் நன்கு சமாளிக்கிறேன் பெரிய விஷயமில்லே இது! என்ன சொல்றீங்க?” என்று நாம் மனம்விட்டுப் பேசக்கூடியவர்களிடம் சொல்லி மகிழ்ந்தால் அதுவே கேரள ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சைக்குச் சமம்.

இவற்றை விடுத்து, புலம்பித்தள்ள இதைக்கேட்டு சுற்றியிருப்பவர்களும் “ஆமாமா! நீங்க ரொம்பப் பாவம்!” என்று தங்கள் பங்கிற்கு நம் (ஆக்சிஜன்) காற்றை இறக்கிவிட்டு, அவர்கள் பாடு போய்விட, நாம் முன்னிலும் சுருதி இறங்கிப்போகிறோம்.

இவர்களின் கதை இருக்கிறதே இது ஆற்றில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருப்பவன், சே! எதிர்த்துவரும் இந்த ஆற்றில் எவ்வளவு நேரமா நானும் நீந்துகிறேன்! சில அங்குலம்தானே முன்னேறியிருக்கிறேன். என் முயற்சி ஒரு வீண் முயற்சி. நான் நீச்சலை நிறத்திவிடப்போகிறேன் என்கிற முடிவுக்கு வந்தவனின் கதைக்குச் சமம்.

இருக்கிற இடமும் காப்பாற்றப்படாமல் போய் ஆற்றின் (வாழ்வின்) போக்கில் அடித்துச் செல்லப்படுவதை ஏற்பதா நம் வாழ்க்கை?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 1:52 am
Filed under: Uncategorized
Time to start and realize

Posted on Friday 30 April 2010

jayalalitha.jpgசக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

பென்னாகரம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் டெப்பாசிட் பறிபோனதை எதிர்க்கட்சியினர் சிலர் இது, ஜெயலலிதாவின அரசியல் அஸ்தமனத்தின் ஆரம்பம் என்று குதித்து மகிழ்ந்திருக்கக் கூடும்.

இப்படி நடக்க விடமாட்டேன் என்பதுபோல் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் பதிலாக அமைந்திருக்கின்றன.

தேனியில் நடந்த கட்சிக் கூட்டத்திற்குச் சென்றபோது சாலை விபத்தில் சிக்கிக் காயமடைந்த தொண்டர்களைக்கூட மருத்துவமனையில் போய்ப் பார்த்திருக்கிறார்.

எட்டாத உயரத்தில் இருக்கும் தலைவர் என்றும், காட்சிக்கு எளியவர் அல்லர் என்றும் போயஸ் தோட்டத்து, பையனூர் பங்களாவின் கொடநாடு எஸ்டேட்டில் கதவுகள் தொண்டர்களுக்குச் சாமானியத்தில் திறக்காது என்கிற சிலரது கூற்றையும் உடைத்தெரியும் முயற்சியில் ஜெயலலிதா இறங்கியிருப்பதாக நம்ப இடமிருக்கிறது.

உதாரணமாக ஒரு சிலர் மட்டுமே காணக்கூடிய பையனூர் பங்களா, அ.தி.மு.க.வினருக்கான கட்சிக் கூட்டத்தை நடத்தும் களமாகவும் மாறியிருப்பது வியப்பிலும் வியப்பு.

தமிழகத்தில் வெற்றிகரமான தலைவர்கள் பலரும் தங்களது எளிமை காரணமாகத்தான் அழியாப் புகழைப் பெற்றதுடன் தொண்டர்களின் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்றார்கள்.

ஆனால் ஜெயலலிதா தன்னை ஓர் உயர்மட்ட தலைவராகவே முன்னிறுத்தி வந்திருக்கிறார்.

இவர் யாரை ஆதரித்துப் பேசினாலும் அவர் இவருக்குச் சமமாக அருகில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட முடியாது. நின்று வணக்கம் செலுத்தியபடி இருக்க வேண்டும் எவ்வளவு நேரமானாலும்.

பாதுகாப்பு முயற்சி என்ற பெயரால் ஜெயலலிதா பிரசார வேனை விட்டு இறங்கிவிடமாட்டார். எந்தத் தொகுதியிலும் இவரது கால்கள் மண்ணை மிதித்துவிட மாட்டா. மேடைக்கெல்லாம் வேலை கிடையாது. வேனிலும் அந்த வேட்பாளருக்கு இடம் கிடையாது.

இப்படி ஓர் உயர்மட்ட அரசியலை நடத்தி தமிழகத்திற்குப் புதிய பாதை காட்டியவர் ஜெயலலிதா மட்டுமே.

ஆனால் இவையெல்லாம் நாள்பட்ட அரசியலுக்குச் சரிப்பட்டு வராது என்பதைத் தமிழகம் உணர்த்த ஆரம்பித்ததும் ஜெயலலிதா இதை உணர ஆரம்பித்திருப்பதும் நல்ல மனமாற்றங்கள்!

அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களைப் பொருட்படுத்தினால் நடுத்தரத் தொண்டர்களை மதித்து நடத்தினால், உயர்மட்டத் தொண்டர்களிடம் நட்புணர்வோடு பழகினால் அ.தி.மு.க. நன்கு வலிமை பெற வாய்ப்பு இருக்கிறது.

தமிழக அரசின் கடந்த காலத் தேர்தல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் தமிழக மக்கள் தொடர்ந்து மாற்றி மாற்றியே ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

ஸ்டாலின் அழகிரியின் போட்டி மனப்பான்மைகளையே முதலிடமாகக் கொண்டு நம் கட்சித் தொண்டர்களையும் அரவணைத்துக் கொண்டால் ஜெயலலிதா மறுபடி சக்தி வாய்ந்த தலைவியாகத் தமிழகத்தில் உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!
2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 1:48 am
Filed under: Uncategorized
Disease relief plants - Akbar Kausar

Posted on Friday 30 April 2010

மணிமேகலை பிரசுரத்தின்…

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

சுரைக்குடி சிவன் கோயில் தலவிருட்சம்
சுரைக்காய்
(LEGENARIA VULGARIS)

ஆயுர்வேத மருத்துவம்

கொழுந்து இலை
: இதனால் உடலின் நீர் இறங்கும். வீக்கம் போகும். சோம்பல், வாதம், பித்தம், கபம் போன்ற பிணிகள் நீங்கும். பேதியும் ஆகும். இலையால் சுவையற்ற தன்மை, ஈரல் நோய்கள், மார்பு நோய், உண்டாகும், உடல் சூடு தணியும். இலையால் வீக்கம், நீர்க்கட்டு போகும். கொடியால் வெறி நோய்கள் போகும்.

மற்ற பயன்கள் : சுரைக் கீரையை உள்ளிப்பூண்டு சேர்த்து சமைத்து 41 நாட்கள் சாப்பிட்டால், அல்லது கொடியை மட்டும் குடிநீர் செய்து குடித்தால் நலம் தரும்.

* இலையை குடிநீரிட்டு சர்க்கரை கலந்து காமாலை நோய்க்குக் கொடுக்கலாம். கொடியை குடிநீரிட்டு, வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு இவற்றிற்குக் கொடுக்கலாம்.

* கொடிகள், சிறுநீரை பெருக்கச் செய்யும் குடிநீர்களில் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றன.

* சுரைக்காய் குடுக்கையை சுட்ட கரியை, இரசவேக்காட்டுக்கு கொடுக்கப்படுகிறது. காட்டுச்சுரைக்காய் சாம்பலுடன், தேன் சேர்த்துக் கண்ணில் இட மாலைக்கண் நோய் போகும். இதன் சாற்றுடன் எண்ணெய் சேர்த்து காய்ச்சி கண்டமாலைக்குப் போட குணமாகும்.

இயல்பு : குளிர்ச்சி, ஈரம்.

முக்கிய குணங்கள் : இது விரைவாக ஜீரணிக்கும் தன்மை உடையது. இதைக் குறைந்த அளவில் உணவாகப் பயன்படுத்துவார்கள். சிறுநீரைப் பிரியச் செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஈரத்தைத் தருகிறது. இரத்தம் மற்றும் பித்தக் கொதிப்பைத் தணிக்கிறது.

பயன்படுத்தும்முறை
: இதை அதிகளவில் தனியாகவோ அல்லது இறைச்சியுடன் கலந்தோ சமைத்து உண்பதற்குப் பயன்படுத்துவார்கள். பித்த குணமுடையவர்களுக்கு குறிப்பாக பித்தம், ஜுரம், இருமல், காசநோய், பைத்தியம், மூளைநோய் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது.

இது குளிர்ச்சி மற்றும் ஈரம் கொண்ட தன்மையால், உஷ்ணத்தால் உண்டாகும் தலைவலி, பைத்தியம், ஒரு வித மூளை நோய்க்கு இதன் மேல்தோலையும் உள்சதையையும், தலையில் பற்றாகப் போடுவார்கள். மேலும், உடல் உஷ்ணம் மற்றும் தண்ணீர் தாகத்தைத் தணிக்கிறது. இலேசான வயிற்றுவலியையும் உப்புச்சத்தையும் உண்டாக்குகிறது.

அளவு : சாறு 40 மில்லி கிராம் முதல் 80 மில்லி கிராம் வரை.

தீய விளைவுகள் : இலேசான வயிற்று வலியையும், உப்புச்சத்தையும் உண்டாக்குகிறது. இத்துடன் ஊதே ஹிந்த் மற்றும் கரன்ஃபல் கலந்து பயன்படுத்த வேண்டும்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

சுரைக்குடி சிவன் கோயில் தலவிருட்சமாக சுரை வணங்கப்படுகிறது. சுரையின் அறிவியல் பெயராக “லிகேனரியா வல்கரிஸ்” (LEGENARIA VULGARIS) என அழைக்கப்படுகிறது. இது இந்தியா முழுவதும் பயிராகிறது. 2 வகையாக காணப்படுகிறது. அவை இனிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும். காட்டுச்சுரை, பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மொத்தத்தில் மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/04/23 சுரைக்குடி சிவன் கோயில் தலவிருட்சம் சுரைக்காய்

2010/04/16 பெரம்பலூர் பொய்யாத நல்லூர் கோதண்ட ராமசாமி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சந்தன மரம்

2010/04/09 காஞ்சி அச்சிறு பாக்கம் ஆட்சி ஈஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் சரக்கொன்றைப் புளியமரம் கொன்றை

2010/04/02 அறந்தாங்கி திருப்புனவாயில் பழம்பதி நாயகர், விருத்தபுரீஸ்வரர் கோயில் தலவிருட்சம் சதுரக்கள்ளிச் செடி

2010/03/26 தஞ்சை திருச்சேரையூர் ஸ்ரீசாரங்கபாணி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சங்கு புஷ்பம்

2010/03/19 திருச்சாய்க்காடு சாயாவனேசுவரர் கோயில் தலவிருட்சம் கோரைக்கிழங்கு

2010/03/12 வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் கொட்டை பூவரசன் மரம்

2010/03/06 குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம் கூதாளி

2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்

2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை

2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்

2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்

2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்

2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்

2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

admin @ 1:35 am
Filed under: Uncategorized
Samayal

Posted on Friday 30 April 2010

chef-cartoon.jpgஜவ்வரிசி வடாம் - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1 கிலோ
பச்சை மிளகாய் - 10
எலுமிச்சம் பழம் - 3
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
பச்சை மிளகாயுடன் உப்பைச் சேர்த்து நைசாக அரைத்து எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வைக்கவும். ஜவ்வரிசியை அளந்து அதன் அளவைப் போல் இரண்டரை பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து ஜவ்வரிசியைப் போட்டு வேக வைத்து ஆற வைத்து மிளகாய் கலவையைக் கிளறவும். சிறிய கரண்டியால் (பிளாஸ்டிக் ஷீட் அல்லது துணியில் மாவை விட்டு சமமாகவும் வட்டமாகவும் பரப்பிக் காயவைத்து கூழ் வடாம் எடுப்பது போல் எடுத்து வைக்கவும். ஜவ்வரிசியை கொஞ்சம் கெட்டியாக கிளறி ஆறியதும் உப்பு, எலுமிச்சம்பழம், பச்சைமிளகாய் கலவையைப் போட்டுக் கலந்து தண்ணீரைக் கையில் தொட்டுக்கொண்டு ஜவ்வரிசியை கையில் எடுத்து ஷீட்டில் வட்டமாகவும் மெல்லியதாகவும் தட்டலாம். பொரிக்கும்போது முத்துப்போல் பொரியும். பக்குவம் கெட்டியாக இருக்கவேண்டும்.

Chettinadu Samayal

2010/04/23 கூழ் வடாம்

2010/04/16 கொத்தமல்லி இலைத் தொக்கு

2010/04/09 தக்காளித் தொக்கு

2010/04/02 மாங்காய் தித்திப்புத் தொக்கு

2010/03/26 மாங்காய் காரத் தொக்கு

2010/03/19 மாங்காய் ஊறுகாய்

2010/03/12 மாவடு

2010/03/06 அடை மாங்காய் - முதல் வகை

2010/02/26 ஆவக்காய் ஊறுகாய்

2010/02/19 காய்கறி ஊறுகாய்

2010/02/12 மாங்காய் இஞ்சி ஊறுகாய்

2010/02/05 அரிநெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/29 நெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/22 நார்த்தங்காய் ஊறுகாய்

2010/01/15 முழு எலுமிச்சம்பழ ஊறுகாய்

2010/01/08 எலுமிச்சம்பழ ஊறுகாய்

2009/12/31 மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

2009/12/25 தேங்காய்ச் சட்னி

2009/12/18 புதினாத் துவையல்

2009/12/11 வெங்காயத் துவையல்

2009/12/04 பிரண்டைத் துவையல்

2009/11/27 இஞ்சித் துவையல்

2009/11/20 துவரம்பருப்பு துவையல்

2009/11/13 பாசிப்பருப்பு துவையல்

2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்

2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்

2009/10/23 செளசெள துவையல்

2009/10/16 கத்தரிக்காய் துவையல்

2009/10/09 சீரக ரசம்

2009/10/02 தக்காளி ரசம்

2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்

2009/09/18 திடீர் ரசம்

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

admin @ 12:03 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 30 April 2010

cauliflower.jpgகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

பூக்கோசு என்று சொல்லப்படும் காலிஃபிளவரின் தாயகம் பசிபிக் பெருங்கடல் பகுதி அருகே உள்ள நாடுகள்தாம். அமெரிக்காவில் அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் இது நன்கு விளைகிறது.

சீசன் சமயத்தில் தினமும் காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சத்துணவாக அமையும்.100 கிராம் பூக்கோசில் கிடைக்கும் கலோரி அளவு 33தான். எனவே, 200 கிராம் பூக்கோசைத் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

குறிப்பாக, உடல் குண்டாக உடற்பயிற்சி, பலவகையான சத்துணவு வகைகள் சாப்பிட்டும் உடலில் சதை கூடாமல் இருப்பவர்கள் பூக்கோசைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால் சீசன் முடிவதற்குள் ஒல்லியாய் இருப்பவர்கள் ஓரளவு குண்டாகிவிடுவார்கள்.

காரணம், இதில் மாவுச்சத்தும் உயர்தரமான புரதமும் தாதுஉப்புகளும் அடங்கி யுள்ளமையே.

அதே நேரத்தில், படுகுண்டாய் இருப்பவர்கள் பூக்கோசை அளவுடன்தான் சாப்பிடவேண்டும். இல்லையெனில், அவர்கள் மேலும் குண்டாகிவிடுவார்கள்!

வாதநோய்காரர்கள் பூக்கோசை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது!

வளரும் குழந்தைகளுக்குத் தினமும் சூப்பாக சமைத்துக்கொடுத்தால் பூக்கோசில் உள்ள இரும்பு சத்து, திசுக்கள், நகம், முடி வளர உதவும். கந்தகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், புரதம், மாவுச்சத்து ஆகியவற்றால் குழந்தைகள் வாட்ட சாட்டமாய்த் திடகாத்திரமாய் வளர்வார்கள்.

குழந்தைகளைப் போலவே சத்துணவுடன் இரத்த விருத்தி, ஆரோக்கியமான உடற்கட்டு தேவை என்று விரும்பும் பெரியோர்களும் பூக்கோசைத் தவிர்க்கக்கூடாது.

கைகால்களில் ஏற்படும் மூட்டுவலி குணமாகவும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது. 100 கிராம் பூக்கோசில் 55 மில்லிகிராம் அளவு வைட்டமின் ‘சி’ இருக்கிறது.

காலிஃபிளவரில் புழுக்கள் இருக்கும். எனவே, நன்கு கழுவின பிறகே சமைக்க வேண்டும்.

100 கிராம் பூக்கோசில் 1.2 சதவிகிதம் நார்ச்சத்து அமைந்துள்ளது. இது குடலில் தங்கியுள்ள கழிவுப்பொருள்களை வெளியேற்றிவிடுகிறது. மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. இரத்த ஓட்டத்தில் பித்தநீரும் கொழுப்பும் அதிக அளவு சேர்ந்துவிட்டால் நார்ச்சத்தே தடுத்துவிடுகிறது. இதனால் எல்லாவிதமான இதயநோய்களும் முன்கூட்டியே தடுக்கப்பட்டுவிடுகிறது.

மாரடைப்பு, அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு முதலிய நோய்கள் ஏற்படாமல் நீண்டகாலம் நலமாய் வாழவேண்டும் என்பதற்காகத்தான் பட்டாணி, மொச்சை போன்றவற்றைப் பலரும் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். அவற்றில் உள்ளதைப் போலவே பூக்கோசிலும் நார்ச்ச்த்து தக்கவிகிதத்தில் அமைந்துள்ளது.

பூக்கோசு சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். நாக்கு வறட்சி, தோல்வறட்சி ஆகியன நீங்கும். சளித்தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு இந்த உணவே மருந்தாகும்!

அடிக்கடி தலைவலியால் சிரமப்படுபவர்களுக்குப் பூக்கோசு குணமளிக்கும். வைட்டமின் ‘ஏ’யும் சிறிதளவு இருப்பதால் கண் பார்வை தொடர்பாக ஏற்படும் தலைவலியும் உடன் குணமாகும்.

உடல் பளபளப்பிற்காகப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுகிறவர்கள் காலிஃபிளவரையும் தொடர்ந்து சாப்பிட்டு இதே நன்மையைப் பெறலாம்.

எல்லா வயதுக்காரர்களும் மிகவும் விரும்பிச் சாப்பிடும் பூக்கோஸில் அதற்கு ஏற்றவாறு பாஸ்பரஸ் சத்தும் போதுமான அளவில் அமைந்துள்ளது. இது மந்தப்புத்தியை அகற்றி மூளையைச் சுறுசுறுப்புடன் செயல்படத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

எனவே, காலிஃபிளவர் (சீசனின்போது) தினசரி நன்கு சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைப் புதுப்பித்துக்கொள்ள மறவாதீர்கள்.

பாகற்காய் : சில இனிப்பான செய்திகள்
வேம்பு போன்று கசப்பான சுவையுள்ள காய்கறி, பாகற்காய் அமெரிக்காவின் வெப்பமண்டலப் பிரதேசத்தில் தோன்றிய மிக முக்கியமான இரு காய்கறிகளுள் பாகற்காயும் ஒன்றாகும். (இன்னொன்று, பறங்கிக்காய்)

பாகற்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் மோனோர்டிகா சாரண்டிகா (Monordica Chawantica) என்பதாகும்.

அமெரிக்காவைக் கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பே அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி அருகே பாகற்காய் நன்கு விளைந்தது. அங்கிருந்து இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு அதன் விதைகள் எடுத்துச் செல்லப்பட்டன. தற்போது இந்தியா, ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளிலும் பாகற்காய் நன்கு பயிராகிறது.

மிகச்சிறந்த மருத்துவகுணங்களை நிரம்பிய காய்கறி இது; நஞ்சை முரிக்கும்; குடிமயக்கத்தை நீக்கும; காய்ச்சலைத் தணிக்கும்; வயிற்றுக் கோளாறுகளைக் குணப்படுத்தும்; பசிக்சுவையை உண்டுபண்ணும்; பித்தத்தைப் போக்கும்; மலச்சிக்கலையும் போக்கும் அரிய உணவு மருந்து இது.

இவ்வளவு சிறப்புகளையும் பாகற்காயை நீரிழிவு நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் விரும்பி உண்ணுவதில்லை. காரணம், பாகற்காயில் உள்ள கசப்புச் சுவைதான்! ஆனால் இக்காயின் அருமையை இருபதாம் நூற்றாண்டில் மக்கள் நன்கு உணர்ந்துவிட்டார்கள்.

அதன் விளைவாக ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பாகற்காய் சமையலில் அதிகம் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

பிரிட்டன் நாட்டு டாக்டர்கள், பாகற்காயில் இன்சுலின் போன்ற ஒரு முக்கியமான பொருள் இருக்கிறது; அதுதான் நீரிழிவுக்காரர்களின் இரத்தத்திலும், சிறுநீரிலும் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது என்று 1993 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்ட இயற்கை மருத்துவச் சிகிச்சையில் பல்லாண்டுகளாகப் பாகற்காய் உணவு மருந்தாகவே பயன்படுத்தப்பட்டு வருவதற்கு இதுதான் முக்கியகாரணம் என்றும் மேற்படி பிரிட்டன் ஆய்வு உறுதி செய்துள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, தொற்றுநோய் பரவாமல் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழ விரும்பும் அனைவருக்கும் தேவையான சத்துணவும் பாகற்காயில் உள்ளது.

எனவே, காலையில் காபி, தேநீர் முதலிய பானங்களுக்குப் பதிலாக 5, 6 பாகற்காய்களை (பழுத்தவை) சூஸாகத் தயாரித்து நீரிழிவு நோயாளிகள் அருந்தினால் அடிக்கடி பசி எடுக்காது. மற்றவர்களுக்கும் இதே நன்மை கிட்டும்.

100 கிராம் பாகற்காயில் வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி1′, ‘பி2′ வைட்டமின் ‘சி’-8 மில்லிகிராம், இரும்புச் சத்து, 2 மில்லிகிராம் மற்றும் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாது உப்புகளும் போதுமான அளவில் உள்ளன. எனவே, உயர் இரத்த அழுத்தம் நரம்புக்கோளாறுகள், மாவுச்சத்துக் குறைபாடுகள், கண் தொடர்பான நோய்கள் முதலியவை இருந்தால் அவை குணமாகவும், அல்லது மேற்கண்ட கோளாறுகள் வந்துவிடாமல் முன்கூட்டியே தடுக்கவும், காலையில் பாகற்காய் சூஸ் வெறும் வயிற்றில் அருந்தி வாருங்கள்; தொற்று நோய் எதுவும் அண்டாது.

பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டாலும் சூஸாக அருந்தினாலும் மூலத்தொந்தரவு குணமாகிறது; இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டுவிடுகிறது.

இரும்புச்சத்தால் இரத்த விருத்தியும் தொடர்ந்து உற்பத்தியாகிறது.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலும் குணமாகிறது.

மூலத்தொந்தரவு உள்ளவர்கள் பாகற்கொடியின் இலைகளைப் பறித்து, மூன்று தேக்கரண்டி அளவு சாறாகத் தயாரித்து, அதை மோருடன் கலந்து காலையில் அருந்த வேண்டும். இந்தச் சிகிச்சை முறையை ஒருமாதம் தொடர்ந்தால் மூலநோய் கட்டுப்படும்.

தொழுநோய் குணமாக….
சொறி, சிரங்கு, நமட்டு எரிச்சல், படர்தாமரை, தொழுநோய் போன்றவற்றை வேருடன் அழித்துக் குணப்படுத்தும் அரிய மருந்து பாகற்காய்! மேற்கண்ட நோய்கள் குணமாக ஒரு கப் பாகற்காய்ச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தைக் கலந்து, சூடான காபியை ஒவ்வொரு மடக்காக சாப்பிடுவது போல சாப்பிட வேண்டும். ஆறுமாதம் வரை தினமும் அதிகாலையில் இந்த முறையில் சாப்பிடும் பாகற்காய்ச் சாறு, இரத்தம் தொடர்பாக தோலில் ஏற்பட்டுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி மேனி எழிலுக்கு ஏற்றது பாகற்காய் என்பதை மற்றவர்களுக்கும் உங்களைச் சொல்ல வைக்கும்.

சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டாலும் மேற்கண்ட அனைத்து நோய்களும் குணமாகி ஆரோக்கிய விருத்தியைப் பெற முடியும். சமைத்துச் சாப்பிடும் பாகற்காய் தொண்டை வலி, மூக்கில் ஏற்படும் கோளாறுகள் முதலியவற்றையும் குணப்படுத்துகிறது.

பழுத்த பாகற்காயின் விதைகளை மணமூட்டும் பொருளாகப் பல்வேறு பொருள்களில் இந்தியா பயன்படுத்திக்கொள்கிறது.

பசலைக்கீரையை போல பாகல் இலையைச் சமைத்துச் சாப்பிட்டும் குறைந்த செலவில் உடலுக்கு அதிக நன்மைகளைப் பெறலாம்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 12:02 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 30 April 2010

angadi-theru.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஆர்.அய்யாசாமி, முதுகுளத்தூர்.

தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா ஜூலையில் ஓய்வுப் பெறுகிறாராமே?

எப்போதும் ஆகஸ்டில் நாட்டுக்குச் சுதந்திரம்! இந்த ஆகஸ்டில் இவரது ஓய்வால், அரசியல்வாதிகளுக்குச் சுதந்தரம் கலக்கவிட்டார் கலக்கி.


சி.ஷிவானி, கோயமுத்தூர்.

‘ஜெயலலிதாவின் அறிக்கையால் நிலக்கரியின் தரம் குறைந்துவிடவில்லை. அவரது தரம்தான் வேகமாகக் குறைந்து வருகிறது’ என்கிறாரே கருணாநிதி?

நல்லவேளை, ஜெயலலிதாவின் முகத்தில்தான் நிலக்கரி என்று பேசுகிற அளவிற்கு நிலைமை தரம் தாழவில்லை!


பே.திருமாவேலன், கரூர்.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதிக்கு ஒரு வக்கீல் கோயில் கட்டுகிறாராமே?

கோயில் கட்டட்டும், குடமுழுககு நடக்கட்டும். அதற்குப்பின்னால் கரசேவை நடக்காமல் இருந்தால் சரி. மாயாவதி இப்போது உத்திரப்பிரதேசத்தின் லட்சுமி.


எல்.குழந்தைவேலு, பம்மல்.

ஜி.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் கவிழ்த்துவிட்டதே கவிழ்த்து?

வும், பெரிதாக வளர இக்கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதிக மீன் வளம் இல்லாத இந்த விரிகுடாவில் இருக்கிற குஞ்சுகளும் பிடிக்கப்பட்டுவிட்டால் வருடம் முழுவதும் மீன் வளம் இல்லாமல் போய்விடும். இதற்கு தமிழக மீன்பிடி பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் மீனவர்கள் அனைவரும் இதற்கு உடன்பட்டு பல காலமாய் இது நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு செய்ய வேண்டியது எல்லாம் இக் காலகட்டத்திற்கு மீனவர்களுக்கு நல்ல உதவித் தொகை வழங்குவதுதான். (மாதம் 500 ரூ. எந்த மூலைக்கு) மீனவ நண்பர்களும் இக்காலகட்டத்திற்கு என ஒரு சேமிப்புக் குணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது.


கே.ராஜ்வேல், எட்டயபுரம்.

பெரும்பாலோர் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுகிறார்களே, ஏன்?

ஆங்கிலத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாதவர்களும், தமிழ் சரிவரத் தெரியாதவர்களும்தான் இப்படிப் பேசுகிறார்கள். உண்மையில் இவர்கள் தமிழர்களே அல்லர். இவர்கள் ஆந்திரர்கள். ஆந்திரக்காரர்களுக்குத்தான் எப்போதும் தயிரும், சாம்பாரும் கலந்து அடிப்பது பிடிக்குமாம்!


எஸ்.முனுசாமி, புதுக்கோட்டை.

கரும்பின் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைகிறார்களா?

யானைப் பசிக்கு இது சோளப்பொறி மாதிரி! உண்மையில் கரும்பு நட்ட நாள் முதல் விவசாயிகளுக்குக் கசப்புதான்.


கே.அஷரப் அலி, தொண்டி.

சானியா நான் பாகிஸ்தானின் மருமகள் அல்ல என்கிறாராமே?

மறுத்தாலும் இதுதான் உண்மை. பாகிஸ்தானிய மக்களின் நன்மதிப்பைப் பெறக் கிடைத்த நல்வாய்ப்பை சானியா நழுவவிடக்கூடாது. குழந்தைப் பிறப்பைக் குறைக்கும் நல்லெண்ணத் தூதுவர்கள் இந்த ஜோடி என்கிறது பாகிஸ்தான். இருநாடுகளின் நல்லுறவுப் பாலமாகவும் இவர்கள் செயல்பட முடியும்.


சி.ராஜா, கரூர்.

சசி தரூர்?

சறுக்கிய தரூர். உலக உறவு விவகாரங்களில் வல்வலரான ஒரு மனிதனின் திறமைகள் இந்திய அரசிற்குப் பயன்படாமல் போனது ஒரு பெரிய குறையே. ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை சுனந்தா மாற்றி எழுதி, ஓர் ஆணின் தோல்விக்குப் பின்னால் நான் இருக்கிறேன் என மாற்றிவிட்டார்.


சிக்கந்தர் பாஷா, புதுச்சேரி.

மாதா, பிதா, குரு தெய்வத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த வரிசை என்றும் மாறாது. பெண்களுக்கு அப்போதே 25 சதவீதத்தைக் கொடுத்து விட்டிருக்கிறார்கள். மிச்சமிருக்கிற 8 சதவீதத்திற்குத்தான் இவ்வளவு போராட்டங்கள்!


ஆர்.சிதம்பரம், நாமக்கல்.

அரியானாவில் அரசு ஊழியர்கள் கோதுமை வாங்க, வட்டியில்லா கடனாக ரூ.7 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதே?

நம்மவர்களுக்குத் தெரிந்தால் டிட்டோவாக இதை அரிசியில் இற்க்கிவிடுவார்கள். அரசு ஊழியர்களும் பதிலுக்கு ‘கஞ்சி கொடுத்த கலைஞர் வாழ்க’ என்று போஸ்டர் அடிப்பார்கள்.


ஏ.வெற்றிகொண்டான், திருச்சி-2.

தி.மு.க.தான் ஏழைகளுக்குத் தொண்டாற்றும் ஒரே இயக்கமாமே?

கலைஞர் தம் கட்சியின் மீதுதான் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்.


எஸ்.அன்பழகன், கடலூர்.

காயமடைந்த தொண்டர்களை மருத்துவமனை சென்று சந்தித்திருக்கும் ஜெயலலிதா பற்றி?

தொண்டர்களின் மனக்காயங்களையும் அக்கறையுடன் கவனித்தால் நன்றாக இருக்கும்!


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

ரேஷன் கார்டில் ரேகை பதிக்கும் யோசனையைத் தெரிவித்திருக்கிறாரே அமைச்சர் வேலு?

நடைமுறைக்கு ஒவ்வாத யோசனை. கைரேகைகளைச் சரிபார்க்க இயலாது. இதைப் பார்க்க ஒவ்வொரு முறையும் ரேகைச் சிறப்பாளர்கள் உதவ முடியுமா என்ன?


ஆர்.சோமசுந்தரம், அரக்கோணம்.

கிரிக்கெட் வாரியத்தை அரசு ஏற்கவேண்டும் என்கிற கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?

ஏன் கிரிக்கெட் வாரியம் நன்றாக இயங்குவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா என்ன?


எஸ்.விமலா, மதுரை.

பள்ளிப்பிள்ளைகளின் மன அழுத்தத்தைக் குறையுங்கள் என்று கேட்கும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீதின் கோரிக்கை அம்பலம் ஏறுமா?

ஏறவேண்டும். நாங்கள் படித்த காலத்தில் மாரல் இன்ஸட்ரக்ஷன் என்று ஒரு வகுப்பு உண்டு. பிறகு நூலகத்தில் படிக்க ஒரு வகுப்பு உண்டு. இவையெல்லாம் எடுக்கப்பட்டு, படிபடிபடி 90ம் அதற்கு மேலும் எடு என்று ஆசிரியர்களும், பள்ளி தலைமைகளும், பள்ளி நிர்வாகங்களும் மாணவ மாணவிகளை மதிப்பெண் குவிக்கும் இயந்திரங்களாக மாற்ற முயலுவதைக் குறைத்துக்கொண்டால் தவிர, நிலைமை மாறாது. பதரின் கருத்து பதர் அல்ல, பருக்கை!


எஸ்.சாந்தகுமார், திருநெல்வேலி.

தமிழக அரசின் கோபுரச் சின்னம் நீக்கப்பட வேண்டும் என்கிற வாதம் சரியா?

இந்தியாவை உலகிற்கு எளிதில் உணர்த்த இன்றளவும் தாஜ்மகாலே பெரிய சின்னமாக இருக்கிறது. இது மதஉணர்வுடன் பார்க்கமுடிகிறதா என்றால் இல்லை. கோபுரத்திற்கு மதச் சாயம் பூசவேண்டியதில்லை. ஸ்ரீவில்லிபுத்தூரின் கட்டடச் சிறப்பிற்கான அடையாளம் இது. இதைப் பெரிதாக்கிக் குளிர் காய நினைப்பவர்களின் அரசியல் உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


பழ.இராமச்சந்திரன், கொடைக்கானல்.

அங்காடித் தெரு படம்?

நல்ல பாடம். தென்னகத்திலிருந்து நகர்களில் அடைக்கப்படும் நவீனக் கொத்தடிமை ஊழியர்களின் வாழ்வை அப்பட்டமாகப் படம் பிடித்திருக்கும் வசந்தபாலன் ஒரு நல்ல சமூக விழிப்புணர்வை பதித்திருக்கிறார்.


ஏ.பாபுசிங், கோபி.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைக்கு அண்மை உதாரணம்?

சசிதரூருக்கு வைத்த வேட்டு லலித்மோடியின் இருக்கையில் வெடித்திருக்கிறதே இதைச் சொல்லலாம். லலித்மோடி ஒரு மகாக்கில்லாடி. மகாக் கில்லாடிகளும் சிறு விஷயங்களில் கோட்டைவிட்டு, பேராபத்தைத் தேடிக்கொள்வார்கள் என்பதற்கு லலித்மோடி நல்ல உதாரணம். இனி, ஏதேனும் மோடிவித்தை செய்து தப்பித்தால் உண்டு.


எஸ்.பாண்டியன், வந்தவாசி.

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பிற்கும் விமானங்களின் இரத்துகளுக்கும் என்ன சம்பந்தம்?

விமானங்கள் முடிந்தவரை நிலப்பகுதியிலேயே பறக்க விரும்பும் பாதுகாப்புக் கருதி அமெரிக்க ஐரோப்பிய விமானங்கள் ஐஸ்லாந்தை ஒட்டியே பறக்கவேண்டிய சூழ்நிலை. இயற்கையின் சீற்றத்தின்முன் மனித இனம் கைபிசைந்து நிற்கவேண்டியதுதான் என்பது மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது!

23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:01 am
Filed under: Uncategorized
Disease relief plants - Akbar Kausar

Posted on Friday 23 April 2010

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

பிரான்மலை சிவன் கோயில் தலவிருட்சம் சாமை அரிசி (தினை)
(PANICUM ITALICUM)

சாமை அரிசி என்று மக்களால் போற்றப்படும் ஒரு தானிய வகைதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.

தமிழகத்தின் பல கோயில்களில் பலவகையான மரங்கள் தரவிருட்சமாக வணங்கப்படுகிறது. உண்மையில், இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும். மூலிகை மரங்களின் மருத்துவ குணங்களை அறிந்த அந்தக் காலத்திய மக்கள், அதன் பயன்களை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றைப் புனிதமாக வணங்கப்படும் கோயில்களில் வளர்க்கத் தொடங்கினர். இதனால் அம்மரங்கள் தெய்வீக முக்கியத்துவத்துடன் போற்றி வளர்க்கப்பட்டது. நாளடைவில், இவை தெய்வீக மரங்களாக உருப்பெற்று, மக்கள் மத்தியில் ஆன்மீக அந்தஸ்துடன் போற்றப்படத் தொடங்கியது.

பழங்காலத்தில் இருந்து உருவான இந்த தெய்வீக மரங்கள் பல கோயில்களில் சில முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாக, மரங்களை தலவிருட்சமாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர். இதன் மூலம் கொடிய நோய்களுக்கு நிவாரணம் கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

சின்னஞ்சிறு செடி கொடிகளை முதல் பெரிய பெரிய மரங்கள் வரை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. புனித மரங்களாக போற்றப்பட்டது. தானிய வகைகளில் தினையும் இவ்வாறு புனிதத்துவம் பெற்றது.

தினை
தினையின் வேறு பெயர்களாக இறடி, ஏனல், கங்கு என அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவில் பயிராகும் ஒருவகை உணவுப் பொருள் ஆகும். இனிப்புச் சுவை கொண்டது.

உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.

சித்த மருத்துவம்

தினைமா - கஞ்சி - சாதம்

* தினையரிசி - உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும்.

* இதன் அரிசியைச் சிலர் சமைத்து உணவாகக் கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலைக் காக்கும் தன்மையுடையது.

* இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.

பண்டைக்காலத்திலிருந்தே தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.

கி.மு. 2700களிலேயே சீனாவிலும் பின்னர் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியதாகவும், பின்னர் இந்தியா, ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் பயிரிடப்படுகின்றன.

இந்தியாவில் மட்டும் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் தினை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது.

அமெரிக்கா, மத்திய ஐரோப்பாவில் தீவனப் பயிராகவும், வளர்க்கின்றனர். இது வறட்சியைத தாங்கும் பயிர். இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்பது கூடுதல் தகவலாகும்.

சத்துக்கள்
ஈரப்பதம் - 11.2%
புரதம் - 12.3%
கொழுப்புச்சத்து - 4.3%
கனிமச்சத்து - 3.3%
நார்ச்சத்து - 8.0%
மாவுச்சத்து - 60.9%
எனவும் உமி 20% வரையிலுமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புரதம்
தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும். இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.

இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.

மாவுச் சத்து
மாவுச்சத்து - 60%
ஸ்டார்ச்சு - 55%
சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.

கொழுப்புச் சத்து
தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.

* உமியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் பால் மிவுக், ஸ்டீரிக் என்ற நிறைவு பெற்ற கொழுப்பு அமிலங்கள் 10 சதம் வரையிலும் லினோலியரிக் அமிலம் 80% வரையிலும் ஒலியிக் அமிலம் 9% வரையிலும் உள்ளது.

கனிமச் சத்துக்கள்

இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை,கோதுமை,ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.

உயிர் சத்துக்கள்
தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.

தினையின் பயன்கள்
உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்குக் கொடுக்கின்றார்கள். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம். மேலும் இதனைக் கோழிகளுக்கும், கூண்டில் வளர்க்கும் பறவைகளுக்கும் கூடத் தீனியாக்கியுள்ளனர்.

தினையின் தாள்
* இதனைக் கால்நடைகளுக்குத் தீவனமாக்குகின்றனர். பூவிடும் பருவத்திலிருந்தும், தானியம் முற்றாமல் இளம் பருவத்தில் இருக்கும் வரை சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும்.

* மேலும் இதனை வீடுகளுக்குக் கூரை வேயவும், படுக்கை தயார் செய்யவும் பயன்படுத்துகின்றனர். தானியம் நீக்கிய கதிர், எரி பொருளாகவும், மெத்தை, தலையணை போன்றவை தயாரிக்கவும் பயன்படுகின்றது.

நன்மைகளும் தீமைகளும்
* தினையில் பல நல்ல பயன்கள் இருந்தாலும், ஒரு சில தீய தன்மைகளும் உள்ளன. இது உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும். இதனால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட காரணமாகிறது.

* இது உவர்ப்புத்தன்மை கொண்டது. சிறுநீர் உற்பத்தியையும் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது.

* முடக்கு வாதத்துக்கு நிவாரணியாகப் பயன்படுகிறது.

* முற்காலத்தில் பிள்ளைப் பேறு நடந்த தாய்மார்களுக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

* சினை மாடுகள் தினையின் தாளை சாப்பிடும் போது கருக்கலைவதாக தெரியவந்துள்ளது.

* குதிரைகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. அதிகமாக உண்பதால் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. முட்டிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது ஆராய்ச்சிகள் தெரிவிக்கும் கருத்துகளாகும்.

* குளிர் காலங்களில் தினையை அறுவடை செய்யாமல் தாமதப்படுத்தும் போது தானியத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டபின் அதனை உட்கொள்பவர்களுக்கு ‘டான்சி லைட்ஸ்’ எனும் நோயும் ஏற்படுகின்றது.

தினையைக் கொண்டு சிலவகையான உணவுகள் செய்யப்படுவதை பின்வருமாறு காண்போம்.

திடை அடை
தேவையான பொருட்கள் : வறுத்த தினை மாவு 25 கிராம், வெல்லம் 20 கிராம், வறுத்த கடலை புண்ணாக்குத் தூள் 25 கிராம், டால்டா சில தேக்கரண்டி அளவு.

செய்முறை
எல்லாவற்றையும் வெல்லத்துடன் சேர்த்துப் பிசைந்து கொண்டு சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொண்டு எண்ணெய் தடவிய வாணலியில் ஒவ்வொன்றையும் அடைபோல் தட்டி இரண்டு புறமும் நன்றாக வேகவைத்து சூடு தணிந்த பின் சாப்பிட வேண்டும்.

திணை இட்லி
தேவையானவை : தினை 100 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், தேவையான உப்பு.

செய்முறை
தினையையும், கடலைப் பருப்பையும் நன்றாக அரைத்து மாவாக்கி கூழ் பதம் செய்து ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் இட்லிபோல் அவித்துச் சாப்பிடலாம்.

திணைக்கஞ்சி
தேவையானவை
: (வறுத்த) தினைமாவு 50 கிராம், (வறுத்த) கடலைப் பிண்ணாக்கு மாவு 25 கிராம், (வறுத்த) மொச்சைப் பருப்பு மாவு 15 கிராம், வெல்லம் 20 கிராம்.

செய்முறை
வெல்லப்பாகு தயாரித்துக் கொண்டு, மாவுகளை நீரில் ஒன்றாகக் கலந்து, நன்கு பிசைந்து வைத்துக்கொண்டு பின்பு அந்தக் கலவையை வெல்லப்பாகுடன் கிளறிக் கொண்டே சேர்க்க வேண்டும்.

பின்னர் சுமார் 25 நிமிடங்கள் வரை அடுப்பில் மேல் வைத்திருந்த பின் இறக்கி, வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடலாம்.இவை குறைந்த விலையில் கூடுதலான சத்துணவு பெறும் முறையாகும்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
பிரான்மலை சிவன் கோயில் தலவிருட்சமாக தினை வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்
சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் கூறப்படுவது தினைப்புனமும், தினையும், இதற்கு ‘ஏனல்’ என்று பெயர். இது ஓராண்டுச்செடி. தினையரிசிக்காகப் பயிரிடப்படுவது, மலை மக்கள் தினைமாவில் தேனைச் சேர்த்து சாப்பிடுவர். விருந்தினருக்கும் தருவர். சங்க இலக்கியப் பெயர் ஏனல், தினை ஆகும். தாவரப்பெயர் ‘செட்டேரியா இட்டாலிகா’ வாகும்.

மலைப்பாங்கிலும், சிறு நிலங்களிலும் இது பரவி இருந்தது. அதில் தினை விதைக்கப் பெற்றது. தினையின் தாள் பசுமையானது. இலை நீளமானது. தினைத் தாளின் அடியில் சுற்றிலும் பசிய வேர்கள் பரவி இருக்கும். இதனைக் குருகென்னும் பறவையின் காலுக்கு உவமையாகக் கூறுவர். முற்றிய தினைக்கதிர் வளைந்திருக்கும். கதிரில் பொன்னிற செல்விய தினை விளையும். இவை ஒன்றோடு ஒன்று இணைந்து, பிணைந்து இருக்கும். இதனை யானைக் கன்றுகளின் துதிக்கைகளுக்கு உவமை கூறியுள்ளார். புலவர் பெருங்கெளசிகனார் என்பவர், குறுந்தொகை, நற்றிணை, மலைபடு கடாம், ஐங்குறு நூறு, அகநானூறு, திருமுருகாற்றப்படை, பெரும்பானாற்றுப்படை ஆகிய நூல்களிலும் தினை பற்றி பாடப்பட்டுள்ளது.

தினை அரிசிக்காக பயிரிடப்படுகின்றது. நல்ல உணவுப் பொருள். ஆங்கிலத்தில் இதற்கு “இட்டாலியன் மில்லெட்” எனவும் பெயரிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழில் தினை விளைவது பலவாறாகக் கூறப்படுகின்றது.

இது தமிழ்நாட்டில் மிகப்பழங் காலந்தொட்டு விளைந்து வருகின்றது என சங்க இலக்கியத் தாவரவகைப் பாட்டியல் நூல்கள் தெரிவிக்கின்றன.

தினைப்புணத்தை மகளிர் காவல் காத்து வந்தனர். பெரிதும் கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து உண்ணும்.

மேலும் யானை மேய்ந்து அழிப்பதும் உண்டு. ஆதலால் இதனைக் காப்பதற்கு மலை உச்சியில் ஒரு பரண் அமைப்பர். அவற்றில் இருந்து தட்டை, கவண், தொண்டகச் சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும், கிளிகளையும் விரட்டுவர்.

யானை, பன்றி முதலியவை தினைப் புனத்தைக் கவர்ந்து அழிக்காமல் அவற்றை விரட்டுவதற்கு பறை ஒலி எழுப்புவதும் உண்டு. முற்றிய தினையை அறுக்கும் போது மகளிர் பாடுவது வழக்கமாகும்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/04/16 பெரம்பலூர் பொய்யாத நல்லூர் கோதண்ட ராமசாமி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சந்தன மரம்

2010/04/09 காஞ்சி அச்சிறு பாக்கம் ஆட்சி ஈஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் சரக்கொன்றைப் புளியமரம் கொன்றை

2010/04/02 அறந்தாங்கி திருப்புனவாயில் பழம்பதி நாயகர், விருத்தபுரீஸ்வரர் கோயில் தலவிருட்சம் சதுரக்கள்ளிச் செடி

2010/03/26 தஞ்சை திருச்சேரையூர் ஸ்ரீசாரங்கபாணி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சங்கு புஷ்பம்

2010/03/19 திருச்சாய்க்காடு சாயாவனேசுவரர் கோயில் தலவிருட்சம் கோரைக்கிழங்கு

2010/03/12 வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் கொட்டை பூவரசன் மரம்

2010/03/06 குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம் கூதாளி

2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்

2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை

2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்

2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்

2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்

2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்

2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

admin @ 3:16 am
Filed under: Uncategorized
Vietnam travel

Posted on Friday 23 April 2010

ho-chi-minh-city.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

லாவோர்ஸ் நாட்டு ஓட்டலில் உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு, அப்படியென்ன நீங்கள் வியந்த பரிசு என்கிறீர்களா? இருக்கிறது

என் பெயரை கண்ணாடி இழையால் உருவாக்கி அதன் முனையில் ஒரு பிளக்கை இணைத்து மின் இணைப்பில் சேர்த்தால் என் பெயர் நியான் விளக்கு போல எரிகிறது.

பேனா கொடுத்தால் எழுதிப் பார்க்கிறவர்கள் முதலில் தங்கள் பெயரைத்தானே எழுதுகிறார்கள்? தங்கள் பெயர்களை நேசிக்காதவர்கள் உலகில் மிகக் குறைவு. அதுவும் நான் வந்து இறங்கும் தினத்தன்று அதைத் தயாரித்து வைத்திருந்து கொடுத்ததும் அசந்து போனேன்.

டோனா ரீக்கும் அப்படி ஒரு வியப்பு. ஆங்கிலத்தில் சூப்பர்லேட்டிவ் டிகிரியில் உள்ள பல வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்தப் பரிசைப்பற்றி என்னிடமும் வரவேற்பாளரிடமும் பாராட்டிச் சொன்னார்.

இந்த அழகிய பரிசைக் கையில் வாங்கியதும் எனக்கு ஏற்பட்ட அடுத்த இரு உணர்வுகளைச் சொல்லியாக வேண்டும்.

முதலாவது இது யார் மூளையில் உதித்த யோசனையோ தெரியவில்லையே, அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

14 வார்த்தைகள் கொண்ட கண்ணாடிப் பொருளால் செய்யப்பட்ட இந்தப் பொருளை உடையாமல் பத்திரமாக இந்தியாவிற்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியுமா என்பது இரண்டாவது உணர்வு.

“நான் ஓட்டல் அதிபருக்கா, பொது மேலாளருக்கா, யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்?” என்று வரவேற்பாளப் பெண்மணி மாயூனிடம் கேட்டதற்கு அவர்,

“என்னிடம் சொல்லி மகிழ்ந்தீர்களே, அதுவே போதும் நான் சொல்லிவிடுகிறேன்” என்று எனக்கும் உரியவர்களுக்கும் இடையே சீனச் சுவராய் நின்றாள்.

ஓட்டல்காரர்கள் இப்படி ஒரு பரிசைத் தந்து என் வாயையும் கையையும் கட்டிப் போட்ட கதை தனிக் கதை. அதையும் சொல்லிவிடுகிறேன்.

டோனா ரீ “நீங்கள் ஓய்வெடுக்கிறீர்களா, இருவருமாக எங்கும் புறப்படுவோமா?” என்று என்னிடம் கேட்க, எனக்கு இந்தக் கேள்வியே புதுமையாக இருந்தது.

இந்தக் கேள்வியை எந்த ஒரு பெண்மணியாவது என்னிடத்தில் கேட்டுவிட முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். எனக்கே விநோதமாக இருந்தது.

சரி ஓட்டல்காரர்கள் அளித்த துன்புறுத்தும் படலத்திற்கு வருவோம்.

நான் சொன்னேன். “தொடர்ந்து ஓய்வே இல்லாமல் பயணித்து இங்கு வந்திருக்கிறேன். நீட்டி நிமிர ஆசைதான். ஆனால் இந்த பகல் பொழுதைத் தூங்கிக் கழிக்க விரும்பவில்லை. அறையில் செட்டில் ஆகி, குளித்து உடைமாற்றி ஒரு குட்டித் தூக்கம் போட்டு ஒரு மணி நேரத்தில் தயாராகிவிடுவேன். எனவே இன்னும் ஒரு மணி நேரத்தில் வரவேற்பறையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.”

”என்னது இத்தனைக்கும் ஒரு மணி நேரமா? போதுமா?”

”போதும்”

”அதெப்படி சில நிமிடங்கள் மட்டும் தூங்கி எழ முடியும்? அப்படியே நீங்கள் உறங்கிவிட்டால்.”

“என்னிடம் டைமர் என்ற கடிகாரம் உள்ளது. அதில் இருபது நிமிடங்களை மட்டும் செட் செய்து தட்டிவிட்டால் சரியாக இருபதாவது நிமிடம் நம்மை எழுப்பிவிடும்.”

“இருபது நிமிட உறக்கம் போதுமா?”

“எனக்குப் போதும்.”

“டைமருக்கும் அலாரம் கடிகாரத்திற்கும் என்ன வேறுபாடு?” என்றார் டோனா ரீ ஆர்வம் அடங்காமல்.

“டைமரில் துல்லியமாக உதாரணமாக 21 நிமிட அலாரம்கூட வைக்க முடியும். சாதாரண கடிகாரத்தில் இவ்வளவு துல்லியம் சாத்தியமில்லை!”

“அந்த டைமரை நான் பார்க்க வேண்டும்.”

“மறுபடி உங்களைச் சந்திக்கும்போது பார்க்கலாம்.”

டோனா ரீ நம்ப முடியாமல் நிமிர்ந்தார். இந்த இந்தியா ஆசாமி கதைவிடுகிறார். நிச்சயம் ஏகமாய்த் தூங்கி நம்மைக் காக்க வைக்கப் போகிறார் என்பதை இவரது நம்பிக்கையற்ற முகம் பட்டவர்த்தனமாய் எனக்குச் சொல்லிற்று.

“பார்ப்போம் ஒரு மணி நேரத்தில்” என என் அறையை நோக்கி நகர்ந்தேன்.

டோனா ரீ காத்திருப்பாரோ வேறு எங்கும் போய் வருவாரோ அது பற்றி எனக்கு அதிக அக்கறை இல்லாதிருந்தது. நானும் அறைக்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறேனே என்று சொல்லிவிடக் கூடாது என்பதே என் பயம்.

அவ்வாறு டோனா ரீ சொல்லவில்லை. கண்ணியமான பெண்மணிதான்.

பெட்டிகளைப் பிரித்தேன். மேக்கப் சாமான்கள், உடைகள், எழுத்துப் பணிகள், படிக்க வேண்டியவை. எலக்ட்ரானிக் சாதனங்கள் என்று அனைத்தையும் அறை முழுக்கக் கடைபரப்பினேன். ஏதோ இங்கேயே நாள்பட வசிக்கப் போகிறவன் போல!

டைமரைத் தட்டி 20 நிமிடமாக்கினேன். அதையும் தூக்கக் கலக்கத்தில் அமர்த்திவிட்டுத் தொடர்ந்து தூங்கிவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பெரிய அறையின் வெகு மூலையில் வைத்தேன்.

ஸ்கிரீன்களை இழுத்துவிட்டுப் பகலை இரவாக்கினேன்.

சரியாக டைமர் தன் கடமையைச் செய்ய 20ஆவது நிமிடம் எழுந்து விடுவிடுவெனத் தயாரானேன். 58ஆவது நிமிடம் வரவேற்பறையை நோக்கி நடந்தால்

டோனா ரீ, ஓட்டல் வாசலில் ஓடும் மெக்காங் ஆற்றைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டு ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் கடிகாரத்தைப் பார்த்து “நான் உங்களோடு இருக்கும்வரை இனிமேல் கடிகாரமே கட்டவேண்டாமென்று பார்க்கிறேன்.”

“புரியவில்லை என்ன சொல்கிறீர்கள்?” என்றேன் புரிந்தும்வேண்டுமென்றே.

“நீங்கள் ஒரு நேரம் சொன்னால் அதன்படி நடக்கிறீர்கள் என்கிறேன்.”

“மகிழ்ச்சி. போகலாமா?”

“எங்கள் நாட்டு டீ சர்ட்டில் நீங்கள் இளைஞராகவே ஆகிவிட்டீர்கள்.”

“நன்றி. அது என் தேர்வில் உள்ளது. லாவேஸ் டீ சர்ட் என்பதால் மட்டுமல்ல” என்றேன் சிரித்தபடி.

“ஏற்கிறேன்.”

“லாவோசைப்பற்றி ஏதாவது சொல்லுங்கள். நாம் இப்போது எங்கு போகிறோம்?”

“லியான்டியானில் பார்ப்பதற்கென்று பெரிதான இடங்கள் என ஒன்றும் இல்லை. இங்கு வருபவர்கள் இங்கு உள்ள பாதுகாப்பான அமைதியான சூழ்நிலைக்காகவே வருகிறார்கள். ஓட்டல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”

“பிடித்திருக்கிறது. மெக்காங் ஆற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சீனாவில் தோன்றி பல நாடுகளைக் கலந்து தெற்கே வெகு தூரம் ஓடிக் கடலில் கலக்கும் வற்றாத ஜீவ நதி. இதன் கரையில் ஓட்டல் அமைந்திருப்பதால் மிகப் பிடித்திருக்கிறது.

“ஓட்டலின் மறு கரையில் தெரிவது தாய்லாந்து.”

“அப்படியா?”

“ஆமாம்.”

“ஓர் ஆற்றின் அகலத்தில்தான் இதன் இருவேறு கரைகளில்தான் எவ்வளவு வேறுபாடுகள்!”

“என்ன வேறுபாடுகள் என்கிறீர்கள்?”

“லாவோஸ் மக்கள் கலாசாரத்தில் ஊறித் திளைப்பவர்கள் தாய்லாந்து பற்றி என் வாயைக் கிளறாதீர்கள்!”

“எனக்கே ஓரளவு தெரியும். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் ஆசை.”

“வேண்டாம்”.

“சரி.”

“இந்தப் பயணத்தில் நான் கம்போடிய லாவோஸ், வியட்நாம், ஹாங்காங் என்று நான்கு நாடுகளை வலம் வருகிறேன். இதில் தாய்லாந்தையும் சேர்த்துக் கொள்ள விருப்பம். ஆற்றைக் கடந்து தாய்லாந்து போகலாமா?”

“சற்றுத் தூரம் போனால் லவோசையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாலம் வரும் போகலாம். ஆனால் லாவேஸ் மக்கள் விசா இல்லாமல் போகலாம். நீங்கள் போக முடியாது.”

“ஏன்? போய் வாங்கிக் கொள்ளும் ஸ்பாட் விசாதானே தாய்லாந்திற்கு?”

“நாங்கள் விசா இல்லாமல் போவதால் வருவதால் இந்தியர்களுக்கு என என்ன விதி என்று தெரியாது. நாங்கள் நினைத்தால் காய்கறி வாங்கக் கூட தாய்லாந்திற்குப் போவோம்.”

டோனா ரீ பேச்சைத் திசை திருப்பியதற்கும், என்னைத் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்ததற்கும் ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கும் என என் மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 3:09 am
Filed under: Uncategorized
Will MLC survive?

Posted on Friday 23 April 2010

m-g-r.jpgமேல்சபை மேலான சபையாகுமா?

24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மேலவை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது எத்துணைப் பேருக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடிய விஷயமாக இருக்கும் என்கிற ஒரு கேள்வியை மட்டும் உங்கள் மத்தியில் வைக்க விரும்புகிறேன்.

மேலவை பயனற்ற ஒன்று. இதன் மூலம் மக்களுக்கு எவ்வித நன்மையும் விளையப் போவது இல்லை என்று எம்.ஜி.ஆர் கருதியதால் அவர் இதனை ஒழித்தேவிட்டார்.

இதனை ஒழிக்க, கலைஞர் கருணாநிதி இந்தச் சபை மூலம் குரல் கொடுத்துவிடக்கூடாது என்கிற கோணத்திலும், இச்சபை ஒழித்ததன் பின்னணியில் ஒரு நடிகை உண்டு என்கிற குற்றச்சாட்டும் எம்.ஜி.ஆர் மீது உண்டு.

இதை என்ன நோக்கத்தில் எம்.ஜி.ஆர் ஒழித்தார் என்கிற ஆராய்ச்சி இப்போது தேவையற்றது.

எம்.ஜி.ஆர். கட்சியின் ஏக அதிபராக இருந்ததால் அவர் கருத்தை மறுத்துப் பேச எவருக்கும் அந்தக் காலத்தில் துணிவு இல்லை என்பதால் பதவியைக் (M.L.C.) கொடுத்துத்தான் தம் கட்சியினரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிர்ப்பந்தமோ, அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய அவசியமோ இல்லை என்கிற பின்னணியோ எம்.ஜி.ஆருக்கு இருந்தது இல்லை என்பதும் இச்சபை ஒழியக் காரணம்.

ஆனால் தமிழக எதிர்க்கட்சியினர் சிலரின் குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டால், தம் கட்சியினருக்கு இத்தகைய பதவிகளைக் கொடுத்து அவர்களை அமைதி காக்க வைக்கும் அவசியம் கருணாநிதிக்கு இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதற்கு அதிகம் ஒன்றும் செலவாகாது என்கிறார் முதல்வர். அதிகமோ குறைவோ பலன் இருந்தால் அல்லவா பரவாயில்லை. பெரும்பான்மைப் பலம் உள்ள தி.மு.க.வினரும் காங்கிரசாரும் மறுபடி போய் இப் பதவிகளில் அமர்ந்து ஆட்சியாளர்களுக்குத் துதி பாடச் சில கோடிகள் செலவென்றாலும் அது பயனற்ற செலவே!

செலவைக் குறைத்துச் செய்தும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், சபையை ஜால்ராக் கூட்டமாக இல்லாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டும் மேல் சபையை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கும் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 3:04 am
Filed under: Uncategorized