Posted on Friday 26 March 2010
சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!
திருச்சி, காட்டூர், திருவள்ளூர் என்று அண்மைக் காலம் வரைக்கும் தமிழகத்தில் பொதுமக்களால் சாலை மறியல் நடந்து வருவது வருத்தம் தருகிறது.
உலகிலே எங்கும் நடவாத செயலாகவே என்னுடைய உலக அனுபவம் சொல்லுகிறது.
பொதுமக்களுக்கு இந்தப் புண்ணியப் பாதையைக் காட்டிக் கொடுத்தவர்களே அரசியல்வாதிகள்தாம்.
இரயில் மறியல், சாலை மறியல் (நல்லவேளை! கடல் மறியல் வான்மறியல் சாத்தியமற்ற விஷயங்கள்!) என்று இவர்கள காட்டிய பாதைகள் இவர்கள் அநேகமாகக் குறைத்துக் கொண்டுவிட, பொதுமக்கள் பிடித்துக் கொண்டுவிட்டார்கள். ஆகா! என்ன அருமையான வழி இந்த அண்ணன்கள் (?) காட்டிய வழி என்று!
காரணம் பெரும்பாலும் கைமேல் பலன்!
சாலை மறியல் என்றதுமே காணக் கிடைக்காத பதவியில் இருப்பவர்கள் கூடச் சாலைக்கு வந்து மக்களைச் சந்திக்கிறார்கள்.
உடனே வாக்குறுதி தந்தது (!) கலைந்து போகச் சொல்கிறார்கள் (மசியாதவர்களுக்கு நல்ல பூசையும் கிடைப்பது தனிக்கதை!)
இப்படியே காலம் ஓட, சில நேரங்களில் வேலை ஆக, சில நேரங்களில் இரண்டாவது சாலை மறியலும் நடக்கிறது.
சாலை மறியல் செய்தால் கை மேல் பலன் என்று பொதுமக்களை நம்ப வைத்த குற்றம் யாருடையது என்று சிந்தித்துப் பாருங்கள். மக்களின் மனக் கொதிப்புகளையும் உணர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ளாத பதவியாளர்களும் அரசியல்வாதிகளும் சாலை மறியலை மறைமுகமாகத் தூண்டுபவர்களே.
உாய் அதிகாரி ஒருவரே சொல்லிக் கொடுத்தாராம் இப்படி - “நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம். பதவியில் இருக்கிற பெருமக்கள் (?) காதல போட்டுக்கலை. பேசாத சாலை மறியல் பண்ணுங்க. சரியாயிடும்!”
பொதுமக்களுக்குப் பொது மக்களே இடைஞ்சல் செய்கிற இந்த மோசமான கலாசாரத்திற்கு என்று முடிவு வரும்?
எத்தனைப் பேர் அவசரமாகப்போக வேண்டிய நிலை! பாலும் அத்தியாவசியப் பொருள்களும் சில மணி நேரம் தாமதிக்கப்பட்டாலும் அவை வீண்தான்!
மருத்துவ சிகிச்சைக்கும் கல்வித் தேர்வுகளுக்கும் நேர்முகத் தேர்வுகளுக்கும் அரக்கப்பறக்க போகிறவர்கள் எத்தனைப் பேர்! எத்துணை மனித நேரங்கள் சாலைகளில் முடக்கப்பட்டு விடுகின்றன!
முதலில் சாலையோரப் போராட்டம், கவன ஈர்ப்பு ஏற்படாவிடில் அடுத்தகட்டப் போராட்டம். இதன் பின்னர் சாலை மறியல் என்கிற படிப்படி அணுகுமுறைகூட இல்லாமல் நின்றது நிற்க சாலையில் கூடி வழிமறிப்பது என்ன நியாயம்?
ஒரு சாலை விபத்திற்குக் கூட சாலை மறியல் செய்வது என்கிற அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறதே, இதற்கு என்னதான் தீர்வு!
உரியவர்கள் சிந்திக்கட்டும்!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?
2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?
2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!
2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!
2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!
2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

































குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!
மணிமேகலை பிரசுரத்தின்…
மாங்காய் காரத் தொக்கு - அலமேலு ரங்கநாதன்
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்துபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து
மாங்காய் ஊறுகாய் - அலமேலு ரங்கநாதன்