Monday, 22 Feb 2010
காது கேளாதோருக்கான சிறப்பு அலாரம்

காது கேட்கிறது அலாரம் வைக்கிறோம். நாம் நினைத்த நேரத்திற்கு எழுகிறோம். காது கேளாதோர் என்ன செய்வார்கள். அவர்களுக்கு என்றே சிறப்பு அலாரம் ஒன்றை ஜப்பான் நிறுவனமான ‘ஏர் வாட்டர் சேப்டி’ நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது.
கடந்த ஆண்டே இந்த அலாரம் அறிமுகம் ஆகிவிட்டாலும், இதன் விலையான ரூ.2,500 என்பது அதிகமாகத் தெரிந்ததால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது. இந்த கருவியை கொஞ்சமாக மாற்றியமைத்து ரூ.1200 விலையில் கொண்டுவர அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.
இந்த அலாரத்தில் இருந்து மணியோசை ஏதும் கேட்காது. மணியோசைக்கு பதிலாக புகையும் வாசமும் வெளியாகும். அப்படி வெளியாகும் புகையில் அலில் ஐசோதிசைனட் என்ற ரசாயணம் இருக்கிறது. இந்த ரசாயணம் எவ்வித பக்க விளைவுகளும் அற்றது என்கிறார்கள். இதை நுகரும் காதுகேளாதோர் அடுத்த இரண்டு நிமிடங்களில் படுக்கையை எழுந்திருப்பது நிச்சயம் என்கிறார்கள்.
































