Friday, 19 Feb 2010
ரசிகர்களும், மக்களும் விரும்பும்வரை நடிப்பேன் : ரஜினிகாந்த்

“ரசிகர்களும், மக்களும் விரும்பும்வரை நடிப்பேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்துப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
“திரை உலகத்தினர் முதல்வர் கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் தைரியமாக தனது கருத்துகளை வெளியிட்டார். அவரைப் பாராட்டுகிறேன். எனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அவரை நேரில் சந்தித்து நன்றி கூறினேன்.
விழாக்களுக்கோ, போராட்டங்களுக்கோ நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.
ரசிகர்களும், பொது மக்களும் விரும்பும் வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன்” என்றார் ரஜினிகாந்த்.

































February 19th, 2010 at 12:48 am
Baba udan nadippathai niruthinthal makkal santhozhamaha irunthiruppar.cinemavil ivar kodikkanakkil sampathithare ozhiya thamizh makkalukkaha ivar enne seithullar endru yaraavathu yosikkarhala…