Thursday, 31 Dec 2009
நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!
“எந்த ஒரு நிகழ்விற்கும் நான் நேரத்தோடு செல்வேன். அப்படிக் குறித்த நேரத்திற்கு நான் ஒரு நிகழ்விற்கு வராவிட்டால் நான் செத்துப்போய்விட்டேன் என்று நீங்கள் தாராளமாக எடுத்துக் கொண்டுவிடலாம்’ என்று ஒரு முறை நம் உரையின்போது குறிப்பிட்டிருந்தார் நெப்போலியன் ஹில் என்கிற வாழ்வு முன்னேற்றச் சிந்தனையாளர்.
இந்த வாக்குமூலத்தை நான் முதல் முறை அறிய நேர்ந்தபோது ஆடிப் போய்விட்டேன் ஆடி!
என்ன ஒரு தன்னம்பிக்கை இருந்தால் ஒரு கொள்கையில் எத்தகைய ஓர் உறுதிப்பாடு காட்டினால், அப்படி ஒரு வாக்கியத்தை ஒருவர் ஒரு பொது மேடையில் சொல்லியிருக்க முடியும் என்பதே என் வியப்பிற்குக் காரணம்.
நம்மவர்கள் பலர் குறித்த நேரம் (punctuality) என்றால் வீசை என்ன விலை என்று கேட்பவர்களாக இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நம்மைவிடப் பலவிதங்களிலும் பின்தங்கியிருக்கிற ஆசிய நாடுகள் சிலவற்றிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும்கூட மக்கள் அப்படி ஒரு நேர உணர்வு உள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கும்போது, ஐயோ! எல்லாத் திறமைகளும் உள்ள நம்மவர்களுக்கு இந்த நேர உணர்வும் வந்துவிட்டால் எவ்வளவு உயர்வுகளை இவர்கள் அடைய முடியும் என நான் ஏங்குவது உண்டு.
சற்றும் எதிர்பாராத காரணங்களினால் ஒருவர் நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் போனால்கூட அதை ஈடுகட்டும் விதமாகச் சில செயல்களப் பின்பற்றுவது சற்றேனும் ஆறுதலாக இருக்கும்.
6.15-க்கு வருகிறேன் என்கிறீர்களா? போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிட்டீர்களா? 6.14-க்கு உரியவருக்குப் பேசுங்கள். இருக்கிற நிரவரங்களைச் சொல்லிவிடுங்கள். ‘பரவாயில்லையா’ நான் என்ன செய்ய? நீங்கள்பாடு தொடருகிறீர்களா? உங்கள் முடிவுப் படி செய்யுங்கள். என் தாமதத்தால் உங்கள் போக்கு எதுவும் தடைப்படக்கூடாது என்று பெருந்தன்மையாகப் பேசுங்கள். ஒரு புகழ்மிக்க பேச்சாளர் கிட்டத்தட்ட ஒரே பெயர் உள்ள இரு ஓட்டல்களின் பெயரால் குழம்பி வேறு ஓட்டலுக்குப் போய், இந்த ஓட்டலில் நடந்த கூட்டத்திற்குத் தாமதமாக வந்தார். பேசும் போதாவது ஏன் தாமதம் என்று விளக்கி, பார்வையாளர்களின் அடப்பாவமே என்கிற அன்புனர்வைப் பெற்றிருக்கலாம் அல்லவா? செய்யவில்லை.
தாமதம் எனில் அவசியம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இது ஒரு பெரிய குற்றமா? நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது நம்மவர்களின் பார்வையாக இருக்கிறது. தவறு. இது நம்மைச் சமூகத்தில் உயர்த்துகிறது. அது மட்டுமல்ல; சே! இப்படியெல்லாம் மன்னிப்புக் கேட்டு வழியக் கூடாது. இனியாவது நேரத்திற்குப் போக வேண்டும் என்கிற மனத் தூண்டுதலிலும் இது முடியும்!.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

































January 9th, 2010 at 9:01 am
sir,every message is very useful, very nice