Wednesday, 16 Dec 2009
காயம் காரணமாக ஒரு நாள் போட்டியிலிருந்து முரளிதரன் நீக்கம்!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 4 ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக முரளிதரன் 20 ஓவர் போட்டி மற்றும் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்ணான்டோ, முரளிதரனுக்கு பதிலாக முத்துமுதலிக், சுரஜ்ரந்தீவ் என்ற இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை சேர்த்துள்ளதாக இலங்கை அணி மேனேஜர் தெரிவித்துள்ளார்.
































