Friday, 27 Nov 2009
‘பஞ்ச்’ பாலு
தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.
பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!
அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.
பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?
…………………
வன்னியர்களுக்கு தனி இடஓதுக்கீடு கிடைக்காத வரை, இந்த சமூகம் முன்னேறாது. எனவே, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி, விரைவில் போராட்டாம் நடத்தப்படும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்
அந்த மக்களே போங்கன்னு சொன்னாலும், அந்த குறுகிய வட்டத்தைவிட்டு நீங்க வரப்போறது இல்லை. போராட்டம் அது இதுன்னு எதாச்சும் பண்ணிட்டு இருங்க, அப்பத்தானே மறக்காதவங்க மறக்காம இருப்பாங்க.
திமுக ஆட்சியில் அதிகமாக குறைகளை சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கு காரணம், குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படுகின்றன. நானும் பத்திரிகையாளராகப் பணியாற்றி இருக்கிறேன். குறைகள் அனைத்தும் சரி செய்வதற்காகவே, அதை பத்திரிகைகள் சுட்டிக்காட்டி எழுதுகின்றன.
- கனிமொழி எம்.பி.,
அப்ப, யாரும் சுட்டிக்காட்டவில்லையென்றால், நாங்களாகக் கண்டுக்கவே மாட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா மேடம்.
பார்லிமெண்ட் கூடும் சமயத்தில் பிரதமர் வெளிநாடு செல்வது அவமதிக்கும் செயல்.
- பாஜக தலைமை
பரவாயில்லையே ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல சொல்லியிருக்கீங்க.
மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உளள் பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு இதுவரை 31 கோடி ரூபாயை மகாராஷ்டிர அரசு செலவழித்துள்ளது. அவனை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் 8.5லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
- பத்திரிகை செய்தி
பசிக்காக திருடுபவனுக்கு இருட்டறையில் சிறை. 10,000 கோடி திருடுபவனுக்கு ஏசி அறை. அதுப்போல் ஒரு கொலை செய்தால் தூக்கு; 160 பேரை கொன்றால் இந்த வசதிகள் போலும். சட்டம் ஒரு இருட்டறை மட்டுமல்ல சிரிப்பறையும்கூட.
































