» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 20 Nov 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம்

கதம்பா மரம்( CADAMBA)

கடம்பா

திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் - பாடல் :
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலா னாஞ்செய்த வல்லினை வீடுமே.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் குளித்தலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில் கதம்பமரம் தெய்வீக மரமாக வணங்கப்படுகிறது.

சிவபெருமான் மற்றும் முருகப் பெருமானுக்கு கதம்பா மரம் உகந்த மரமாகக் கருதப்படுகிறது. இது தவிர புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மரத்தை மிகவும் போற்றுகிறார்கள்.

ஜைன மத முனிவர் வாசு பூஜ்யா கதம்பா மரத்தின் அடியில் ஞானம் பெற்றதாக ஜைன மதத்தவர்கள் நம்புகின்றார்கள்.

இந்த மரத்துப் பூக்களை முருகப்பெருமான் ஆபரணமாக அணிந்து கொண்டதாக “திருமுருகாற்றுப்படையில்” சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் முருகனை வழிபடும் பக்தர்கள் கதம்பப்பூக்களைக் கொண்டு பூஜை செய்கின்றனர்.

இது போலவே, விஷ்ணு புராணத்திலும் கதம்ப மரத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணனுக்கும் இந்த மலர் மிகவும் பிடிக்கும். இந்துக்களின் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த மலைச் சிகரங்களில் ஒன்றான கோமந்தா சிகரத்தில், கதம்ப மரம் மிக அதிகளவில் காணப்படுகிறது.

கதம்பா மூலிகை இமயமலை அடிவாரங்களில், குறிப்பாக, நேபாளத்தின் கிழக்குப் பகுதி முதல் பர்மா வரையிலுள்ள பகுதிகளில் நன்றாக வளர்கின்றது. மேலும், இது தென்னகப் பகுதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குன்றுப் பகுதிகளிலும் இவை மிக நன்றாக விளைகின்றது.

ஆயுர்வேதம்
இந்த மூலிகை ஆண்மைக் கோளாறுகளைப் போக்கி, நலப்படுத்த மிகவும் உதவுகிறது. இந்திரியத்தை அதிகளவில் உற்பத்தி செய்வதுடன், உடலுறவில் கூடுதல் இன்பத்தைத் தருவதிலும், பிறப்புறுப்புக் குறைபாடுகளுக்கும் இவை மிகவும் நன்மை பயக்கிறது.

பெண்களின் பிறப்புறுப்பு நோய்கள், சிறுநீர் பிரிவதில் ஏற்படும் சிக்கல், இரத்தசோகை, தோல்நோய்களுக்கு இது மிகவும் பயன்படுகிறது.

இரத்தச்சிதைவு, விஷத்தன்மைகளுக்கு எதிரான தன்மைகளைத் தோற்றுவிப்பதால் இது மிகவும் உதவுகிறது.

இதன் பழத்தைச் சாறு பிழிந்து, அதனைச் சீரகம், சர்க்கரையுடன் கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்தால் அவர்களின் ஜீரண மண்டலம் சீராகச் செயல்பட உதவும். இந்த மூலிகை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அசுத்தங்களை வெளியேற்றவும் மிகவும் உதவுகிறது.

இந்த மூலிகையின் இலைகளைக் கஷாயமிட்டு, அதனைக் கொண்டு வாய் கொப்பளித்தால், வயிற்றுப் பிரச்னைகள், ஜீரண மண்டல குறைபாடுகள் குணமடைந்து நலன் ஏற்படும். மேலும், இது சிறுநீரை சீராக வெளியேற்றுவதுடன், சிறுநீர் பிரிவதில் ஏற்படும் குறைபாடுகளையும் சீர்ப்படுத்துகிறது.

பயன்படும் உறுப்புகள்
இந்த மூலிகையின் தண்டுப்பகுதி, பழங்கள், பூக்கள் ஆகியவை மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

அளவு : இந்த மூலிகையைக் கஷாயமிட்டு, 50 முதல் 100 மில்லி வரையில் மருந்தாகத் தரலாம்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருக்கடம்பத்துறை (குளித்தலை - கடம்பர் கோயில்), திருகடம்பூர் திருஆலவாய், (கடம்பாவனம் - மதுரை) ஆகிய திருக்கோவில்களில் கடம்ப மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இத்திருக்கோவில்கள் சார்ந்த ஊரும் மரத்தின் பெயரால் மரம் தலவிருட்சமாக அமைந்து உள்ளது சிறப்பாகும்.

திருக்கடம்பூர் (PINCODE - 639104) என்னும் ஊர் ஓமாம்புலியூருக்கு வடமேற்கில் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூருக்கு மேலைக் கடம்பூர் என்றும் பெயர் உள்ளது. இங்கு அமுதகடேசுவரர், சோதிமின்னம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்பு மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்பு மரத்தையும் சேர்த்து வணங்ஙகுகிறார்கள். திருக்கடம்பத்துறை (பின்கோடு - 639 104) எனும் ஊர் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 31 கி.மீ. தூரத்திலும், குளித்தலைக்கு வடிமேற்கே 2 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இவ்வூர் கடம்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு கடம்பவனநாதர், முற்றிலா முலையம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்ப மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்ப மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருஆலவாய் (PIN CODE - 625 001) என்னும் ஊர் சோமசுந்தரக்கடவுள் 64 திருவிளையாடல்களை நடத்தியதில் இடம் பிடித்து உள்ளது. இவ்வூர் மதுரை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு சொக்கநாதர், மீனாட்சி அம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்பு மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்ப மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

அத்தீச்சுரம் (PINCODE - 627 412) என்னும் ஊர் ஆழ்வார் குறிச்சியிலிருந்து கடனாநதி அணைக்குப்போகும் நகரப் பேருந்தில் கல்யாணிபுரி நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரத்தில் உள்ளது. இவ்வூர் சிவசைலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு சைவநாத சுவாமி, அத்ரீசுவரர், சிவசைவநாதர், பரமகல்யாணி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்ப மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்ப மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

சங்க இலக்கியம்
கபிலர் குறிஞ்சிப்பாட்டில் “பாங்கர் மரா அம்பல் பூந்தணக்கம் என்றார். “மரா அம்” என்ற இச்சொல் சங்க இலக்கியங்களில் எல்லாம் அளபெடை பெற்றே வருவது இதன் சிறப்பியல்பு.

சங்க இலக்கியப் பெயராக மரா அம் எனவும், அதன் வேறு பெயர்களாக மரவம், மரா, கள்ளி, கடம்பு எனவும், பிற்கால இலக்கியப் பெயராக கடம்பை, மராமரம் எனவும் உலக வழக்குப் பெயராக வெண்கடம்பு, வெள்ளைக் கடம்பு எனவும் கூறுவர். ஆங்கிலப் பெயராக “ஆன்தோ செஃபாலஸ் கடம்பா’ எனவும் குறிக்கப்படுகிறது.

உறுதி மிக்க பெரிய மரம். இது ஆலமரத்துடன் சேர்த்து பேசப்படுகிறது. ‘பூ’ வெண்ணிறமானது. கொத்தாகப் பூப்பது, சுண்ணாம்பு போன்ற வெண்ணிறமானது. இதன் வெண்மை ஒளியைக் கதிரவன் ஒளியோடு பொருத்தினார் கல்லாடனார். தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்ட ஒரு யானை, மலைப் பகுதியில் மராமரத்து மலர் உதிர்வதை வெள்ளிய மழைத் துளிவிழுவதாக எண்ணி அங்குமிங்கும் ஓடி அலைந்தது என்பர்.

தெய்வங்களின் நிறத்தோடு மலர்களை அறிமுகம் செய்யும் கலித்தொகை. ஒரு காதணி கொண்டவனும் வெள்ளை நிறத்தவனும் வலிய நாஞ்சில் படையைக் கொண்டவனுமாகிய பலராமன் பசிய துளசி மாலை அணிந்திருப்பது போன்று மாமரத்தின் அகன்ற உயர்ந்த கிளைகளில் பசிய மயில்கள் சூழ்ந்திருக்கும் என்றும் கூறுகிறது.

பலராமன் மார்பில் அணிந்துள்ள வெண்மையான மரா மலர்த்தார் அருவி போன்றிருந்தது என்று கூறுவர் இளம் பெருவழுதியார். இம் மரத்தடியில் பலர் கூடும் மன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடியிடத்தில் போரில் புறங்கொடாது மாய்ந்த வீரரது நடுகல் நாட்டப்பட்டுள்ளது. இம்மரத்தின் சிறு தெய்வம் இடம் பெறுவதாகவும், இத்தெய்வம் கொடியேரைத் தெறுமென்றும் நம்பினர்.

“மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப” என குறுந்தொகை குறிப்பிடுகிறது. சங்க இலக்கிய நூல்களில் இதுபற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply