» 2009 » October .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Prabhu Deva, Nayantara appeared together

Posted on Saturday 31 October 2009

ஹைதராபாத்தில் ஒன்றாக மேடையில் தோன்றிய நயன் - பிரபுதேவா!

nayan-with-prabhudeva1.jpg

S
outh Scope Style பத்திரிகையின் சார்பில் தென்னிந்திய திரைப்படத்துறையினருக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் South Scope Style - 2009 க்கான விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

சிவாஜி திரைப்படத்திற்காக சிறந்த நடன ஆசிரியர் விருது பிரபு தேவாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபுதேவாவுடன் நயன்தாராவும் உடன் வந்தார். இந்நிகழ்ச்சி முழுவதும் அருகருகே அமர்ந்திருந்த இருவரும் திரும்பி செல்லும்போதும் ஒன்றாகவே சென்றனர்.

நயன்தாராவுடன் செட்டிலாகாமல் விட மாட்டார் போலிருக்கு பிரபுதேவா? அவ்வளவு காதலா, காதலா?

nayan-with-prabhudeva2.jpg

nayan-with-prabhudeva3.jpg

admin @ 2:05 am
Filed under: kollywood
Hemamalini wishes to act in variety characters

Posted on Saturday 31 October 2009

நீச்சல் காட்சியில் சேலை கட்டியா நடிக்க முடியும்? : ஹேமமாலினி

hemamalini.jpg

ந்திரவிழா திரைப்படத்தில் அறிமுகமான ஹேமமாலினி அதில் உடன் நடித்த நமீதாவுக்கு போட்டியாக வளருவாரா எனத் தெரியாது. ஆனால், ‘நமீதாவுடன் நான் போட்டி போட மாட்டேன்’ என்று சொல்லும் ஹேமமாலினி, அதற்கு காரணமாக ‘கவர்ச்சியை நம்பி ரொம்ப நாளுக்கு தாக்குப்பிடிக்க முடியாது’ என்கிறார்.

நான் அவன் இல்லை- இரண்டாம் பாகம், குரு சிஷ்யன் படங்களில் நடித்துவரும் ஹேமமாலினிக்கு இந்திரவிழா இயக்குநர் ராஜேஷ்வர் வைத் ஹேமமாலினி என்ற பெயரில் நீடிக்க விருப்பமில்லையாம். தனனுடைய இயற்பெயரான ஸ்ருதி பிரகாஷ் என்ற பெயரில் நடிக்கத்தான் விருப்பமாம்.

பரதநாட்டியம், கதக்கெல்லாம் கற்று வைத்திருக்கும் ஹேமமாலினிக்கு கராத்தே கூட தெரியும்(பிளாக் பெல்ட்). மராட்டிய படம் ஒன்றில் அறிமுகமான ஜோரோடு இந்திரவிழா மூலம் தமிழுக்கு தாவிவிட்ட ஹேமமாலினி, ஆசிரியை வைத்து தமிழ் கற்றுவருகிறார் (என்ன ஒரு ஈடுபாடுங்க).

எல்லா நடிகைகளும் போலவே ஹேமமாலினியும் ‘கிளாமர் வேடம்தாங்க வருது. ஆனால், எனக்கு நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் தோன்றத்தான் ஆசை’ என்கிறார்.

‘சரி, இந்திரவிழாவில் ஏன் நீச்சல் உடையில் நடித்தீர்கள்?’ என்று கேட்டால், ‘நீச்சல் காட்சியில் சேலை கட்டியா நடிக்க முடியும்? கதைக்கு தேவை என்பதால் அப்படி நடிச்சேன்!” என்று சமாளிக்கிறார். அப்ப சரி.

admin @ 1:41 am
Filed under: kollywood
Robot to help physically challenged people eat!

Posted on Saturday 31 October 2009

கை ஊனமுற்றோர்க்கு இனி கவலையில்லை:
வந்துவிட்டது உணவூட்டும் ரோபோட்!

my-spoon1.jpg

னிதனின் பிரச்னைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்ப்பதுதான் இன்றைய மனிதனின் முக்கிய சவாலாக இருக்கிறது. ஜப்பான் அறிஞர்கள் இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அவர்களுடைய புது சாதனையாக கை ஊனமுற்றோர்க்கான ‘உணவூட்டும் ரோபோட்’ வந்திருக்கிறது. இதற்காக, உரிய ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு, 11ஆண்டுகள் போராடிய ‘சிகாம்’ என்ற ஜப்பான் நிறுவனம் இந்த ரோபோட்டுக்கு ‘மை ஸ்பூன்’ (My Spoon) என்று மிகப் பொருத்தமாக பெயர் வைத்துள்ளது.

இயற்கையாக அல்லது விபத்தால் கை ஊனமுற்றவர்கள் கையிருந்தால் எப்படியெல்லாம் தங்கள் விருப்பத்துக்கு உணவருந்த முடியுமோ அவ்வாறெல்லாம் இந்த ரோபோட் உணவூட்டி விடும்.

இந்த ‘மை ஸ்பூன்’ ரோபோட்டில் பொருத்தப்பட்டுள்ள ட்ரேயில் உணவை, நூடுல்ஸை வைத்துவிட்டால் போதும் ஸ்பூன் அல்லது முள்கரண்டியை  பயன்படுத்தி உணவை எடுக்கும் ரோபோவின் கைகள், உணவை நம் வாய்க்குக் கொண்டுவந்து ஊட்டிவிடும். கைகளின் வேகம் மற்றும் திசையை மாற்ற ஜாய் ஸ்டிக் இருக்கிறது.

கை ஊனமுற்றவர்கள் உணவருந்த இனி மற்றவர் உதவியை நாட வேண்டாம்.

admin @ 12:18 am
Filed under: news
Aishwarya Rai​ named ‘Global Face of the Year’

Posted on Friday 30 October 2009

‘அகில உலக முகம்’ ஐஸ்வர்யா ராய்

aishwarya-abhisheks-first-interview-together-on-the-oprah-winfrey-show.jpg

பா
லிவுட்டின் நட்சத்திர தம்பதியான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்ஜோடி முதன் முதலாக, அமெரிக்க டிவியில் பிரபலமான ‘ஓபாரா வின்ஃப்ரே ஷோ’வில் ஒன்றாக கலந்துகொண்டுள்ளது. இவர்களுடைய  இந்த பேட்டி நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டின் ‘அகில உலக முகம்’ என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ‘விடியோகான் - இந்தியாவின் இளைய உதாரண புருஷர்கள்’ (India Youth Icon Awards ‘09) என்ற பெயரில், இந்த விருதுகளை விஸ்கார்ட் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் இவ்வாண்டு முதல் வழங்கத் துவங்கியுள்ளது.

இவ்விருதுகள் சினிமா, டிவி, பத்திரிகைத் துறை, சமூக நலன் மற்றும் நீதி, தொழில்நுட்பம், வியாபாரம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையில் உதாரண இளைஞர்களாக ஹிரித்திக் ரோஷனும், நடிகை பிரியங்கா சோப்பராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டின்  நவநாகரீக மங்கையாக தீபிகா படுகோனை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பிரிவில், ராகுல் காந்தியும், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்னர்.

admin @ 11:32 pm
Filed under: news
Ancient mud skyscraper city in Yemen

Posted on Friday 30 October 2009

பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்

mud-skyscraper-city1.jpg

ழை வந்தால் மருகும் மண்குடிசைகள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஆனால், களிமண்ணின் உறுதியை நம்மைவிட அதிகம் அறிந்தவர்கள் ஈமென் நாட்டுக்காரர்கள். அமெரிக்காவில் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால்தான் வானைத் தொடும் கட்டடங்கள் வளர ஆரம்பித்தன. ஈமென் நாட்டில் உள்ள ஷிபெம் என்ற பகுதியில் உள்ள மண் மாளிகைகளுக்கு வயது கிட்டத்தட்ட 2000 என்கிறார்கள். கிபி 2 நூற்றாண்டு முதலே இங்கு களிமண்ணால் ஆன அடுக்குமாடிகளைக் கட்டியிருக்கிறார்கள். இவற்றுள் இப்படி நெருக்கமாக 7ஆயிரம் வீடுகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். அவற்றில் 500 கட்டடங்கள் 5 முதல் 11 அடுக்குகள் வரை கொண்டவை, சில கட்டடங்கள் 100 அடி உயரத்தை தாண்டுகின்றன.

mud-skyscraper-city2.jpg

இந்த கட்டடங்களில் என்ன விசேஷம் என்றால், இவையெல்லாம் மிக நெருக்கமாக கட்டப்பட்டுள்ளன. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை ஓரே வளாகத்தில் கட்டப்பட்டது போல் தோற்றம் தரும். சாலைகள் என்று எதுவும் இல்லை, எல்லாமே சந்துகள்தான். இதற்கு காரணம் இருக்கிறதாம். அந்த காலத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவே இப்படி கூட்டுக் கட்டடங்களை கட்டியிருக்கிறார்கள். எதிரிகள் உள்ளே நுழைந்தால் வேகமாக செல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறிய சந்துகள். எதிரிகள், இப்பகுதி மக்களிடம் மாட்டிக்கொண்டு சிதற வேண்டியதுதான். எதிரிகளோ கொள்ளையர்களோ இப்பகுதியில் நுழைவதாகக் கனவு கூட காண முடியாது.

mud-skyscraper-city3.jpg

கிபி 2 ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதி முளைத்தது என்றாலும் கடந்த 5 நூற்றாண்டுகளில்தான் அபரிதமான அளவுக்கு கட்டடங்கள் அடர்த்தியாக முளைத்தன என்கிறார்கள் இப்பகுதி பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள்.

மனித எதிரிகள் மட்டுமல்லாது இயற்கை எதிரிகளான புயல் மழை கூட இந்தப்பகுதியை தொட்டுப் பார்த்ததுண்டு. இவற்றிடமிருந்து யாரும் தப்பிக்க இயலாதுதான். எனினும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கட்டடங்களுக்கு ஸ்பெஷல் வர்ணங்கள் பூசி பாதுகாத்து வருகிறார்கள். தங்கள் கட்டடங்களில் புனரமைப்புப் பணிகளை அவ்வப்போது இம்மக்கள் செய்து வருகிறார்கள்.

உலகின் பழமையான, அரிய, உயரமான களிமண் கட்டடங்களைக் கொண்ட இப்பகுதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் ஆபத்து வந்தது. இங்கிருந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளும் முயற்சியில் பெரு நகரங்களுக்கு இடம்பெயரத் துவங்கினர். இது மனிதர்கள் இல்லாத ‘பேய் நகராக’ மாறியிருக்க வேண்டியது. நல்ல காலம், ஈமென் நாட்டு அரசின் பல்வேறு நகர வளர்ச்சித் திட்டங்களால் காப்பாற்றப்பட்டது.

mud-skyscraper-city4.jpg

உலகின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய பகுதி என்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஷிபெம் - மை கடந்த வருடம் புயலும் மழையும் கடுமையாகத் தாக்கியதில் பல கட்டடங்கள் சிதிலமடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், புறநகர் திட்டங்கள் மற்றும் உயரமான கட்டடத் திட்டங்களுக்கெல்லாம் முன்னுதாரணமான பகுதியாக இப்பகுதி விளங்கி வருகிறது.

admin @ 10:34 pm
Filed under: news
Simbhu asks dates from Priyanka and Deepika Padukone

Posted on Friday 30 October 2009

பிரியங்கா, தீபிகாவுடன் நடிக்க ஆசைப்படும் சிம்பு

deepika-padukone.jpg

சிம்புக்கு இங்கத்து நடிகைகள் போரடித்து விட்டார்கள் போலிருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட ஆசைப்படுகிறார். சிம்பு, தனது 25 படத்தை நெருங்கிவிட்டார். அந்தப் படத்தை தானே இயக்கவும் முடிவு செய்துள்ள அவர், அதற்காக வித்தியாசமான கதை ஒன்றை தயார் செய்து வருகிறார். அதில் தனக்கு ஜோடியாக நடிக்க, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். இருவரும் இன்னும் பதில் சொல்லவில்லை என்றாலும் இருவரில் ஒருவர் நிச்சயம் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் சிம்பு.

admin @ 8:46 pm
Filed under: kollywood
Sivagangai court sends summon to actors

Posted on Friday 30 October 2009

சூர்யா, சரத்குமார், விவேக் உட்பட 8 பேர் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

த்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சிவகங்கை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நடிகை, நடிகர்கள் எட்டு பேர், வரும் 19ம் தேதி ஆஜராக நீதிபதி ஜி.என்.சரவணக்குமார் உத்தரவிட்டார்.

சிவகங்கை பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் கார்த்திகேயன் மனைவி தமிழ்ச்செல்வி சார்பில் வக்கீல்கள் ஏ.குமரன், ஆர்.ராஜேஷ் கடந்த 27ம் தேதி தாக்கல் செய்த மனு:

சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘சில நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுவதாக’ தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட நடிகைகளின் பெயர்களை படங்களுடன், ‘தினமலர்’ வெளியிட்டது.

அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. காவல்துறையினர் கொடுத்த தகவலின்படி செய்தி வெளியானது.இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி, சென்னை கமிஷனரிடம், ‘தினமலர்’ நாளிதழுக்கு எதிராக புகார் செய்தார். கமிஷனர் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், ‘தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடப்பட்டார்.’தினமலர்’ நாளிதழை கண்டித்து, சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்த 7ம் தேதி நடந்த கண்டனக் கூட்டம் குறித்த செய்தி, “டிவி’ சேனல்களில் ஒளிபரப்பானது.

அந்த கூட்டத்தில் பல நடிகர்கள் பேசினர்.நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், சத்யராஜ், சூர்யா, அருண் விஜய், சரத்குமார், சேரன், விவேக் ஆகியோர் பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிக கேவலமாக பேசினர். இதை ‘டிவி’யில் பார்த்த போது வேதனையாக இருந்தது.உறவினர்கள், நண்பர்கள் என்னிடம் போனில் பேசி இதுகுறித்து விசாரித்தனர். எனக்கு அவமானமாக இருந்தது. மேலும் நிகழ்ச்சியை, ‘சிடி’ ஆக தயாரித்து மற்றவர்கள் பார்க்க செய்துள்ளனர்.

நடிகர், நடிகைகளின் இந்த செயலால் எனது குடும்பத்தினருக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டது. அவர்கள் ஐ.பி.சி., 499 பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர்.எனவே, இம்மனுவை விசாரணைக்கு ஏற்று அவதூறு பேசிய நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரினார்.

இந்த மனு மீதான விசாரணையை மாஜிஸ்திரேட் நேற்றைக்கு (அக்., 30) ஒத்தி வைத்தார். நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், சத்யராஜ், சூர்யா, அருண்விஜய், சரத்குமார், சேரன், விவேக் ஆகியோர் வரும் 19ம் தேதி சிவகங்கை கோட்டில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

admin @ 8:28 pm
Filed under: kollywood
Death day cakes!

Posted on Friday 30 October 2009

இறந்த நாள் கேக்குகள்!

birthday-cakes1.jpg

இறந்த நாள் அறிந்தால் இந்த கேக்குகளை நாம் ஆடர் கொடுக்கலாம்!

birthday-cakes2.jpg

birthday-cakes3.jpg

birthday-cakes4.jpg

birthday-cakes5.jpg

birthday-cakes6.jpg

birthday-cakes7.jpg

admin @ 3:08 am
Filed under: news
World’s largest rubber band ball sold

Posted on Friday 30 October 2009

உலகின் மிகப்பெரிய ரப்பர் பாண்ட் பந்தை வாங்கியது ரிப்ளை நிறுவனம்

joel-waul-with-his-rubber-band-ball.jpg

ப்பர் பாண்டு விழுந்து கால் விரல் நசுங்குமா? குளிர்க் கண்ணாடி உடையுமா? ஜீன்ஸ் பேண்ட் கிழியுமா? இவை எல்லாம் நடந்தது ப்ளோரிடாவைச்  சேர்ந்த ஜியோல் வாவ்லுக்கு. எப்படி தெரியுமா உலக சாதனை நிகழ்த்த வேண்டி அவர் தயாரித்து மிகப்பெரிய ரப்பர் பாண்டு பந்தால்.

ரிப்ளைவின் ‘நம்பினால் நம்புங்கள்’ நிகழ்ச்சியைப் பார்த்தப் பின்னர் தான் இந்த சாதனையை நிகழ்த்தும் ஆசை ஜியோல் வாவ்லுக்கு  வந்ததாம்.

ஆறு வருடங்களுக்கு முன்பு தனது எண்ணத்திற்கு வடிவம் கொடுக்க துவங்கியிருக்கிறார். முதலில் சின்ன பாண்டுகளை இணைத்து சின்ன பந்து உருவாக்கிறார் அதற்கு மேலாக மேலும் பாண்டுகள். இப்படியே  சுற்றிச்சுற்றி பெரிய பந்தை உருவாக்கிவிட்டார் ஜோயல். வீட்டில் இடமில்லாததால் வெளியே வைத்து இன்னும் பெரிதாக்கினார். ரப்பர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போன் போட்டு, தன்னுடைய சாதனை ஆசையை ஜோயல் சொல்ல, அந்நிறுவனங்களும் மிகப்பெரிய பாண்டுகளை ஸ்பெஷலாக தயாரித்து  அவர் வீட்டுக்கு இலவசமாக அனுப்பி வைத்தன.

படிப்படியாக உருவான இந்த ரப்பர் பாண்ட் பந்து ஒரு கட்டத்தில் 2 மீட்டர் உயரத்தில், 4100 கிலோ எடை கொண்டதாக உருவாகி விட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் கவனித்ததை கின்னஸ் சாதனை நிறுவனமும் கவனித்தது. உலகின் மிகப்பெரிய ரப்பர் பாண்ட் பந்து என 2008 ல் சான்றிதழ் கொடுத்துவிட்டது. இதற்கு முன்னர் செய்யப்பட்டதை விட ஜோயலின் பந்து 7.2 மீட்டர் சுற்றளவு பெரிதாம்.

28 வயதான ஜோயல் 6 வருடங்கள் இரவு பகல் பாராமால் உருவாக்கிய இந்த ரப்பர்பாண்ட் பந்தை, இதை உருவாக்க காரணமாக இருந்த ரிப்ளை நிறுவனமே நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. விரைவில் இது ரிப்ளேவின் கலைக்கூடத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

admin @ 3:07 am
Filed under: American news
Crocodiles are on sale at Walmart’s first Sam’s Club in China

Posted on Friday 30 October 2009

சீன வால்மார்ட் ஸ்டோரில் முதலைக்கறி!

crocodiles-are-on-sale-at-walmarts-first-sams-club.jpg

லக அளவில் பிரபலமான வால்மார்ட் நிறுவனத்தின் கிளை அமைப்பு சாம்ஸ் கிளப். இந்த சாம்ஸ் கிளப்  தனது கிளை ஒன்றை சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரமான குவாங்சோவில் 27ஆம் தேதி தொடங்கியது.

உலகின் பல நாடுகளில் உள்ள வால்மார்ட் ஸ்டோர்ஸ்ஸில் ஏ டூ இசட் பொருட்கள் கிடைக்கும் என்றாலும், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சீனக் கிளையில் சிறப்பு ஐட்டமாக முதலை மாமிசமும் கிடைக்கும்.
அதைத்தான் இந்தப் புகைப்படம் சொல்கிறது

admin @ 3:06 am
Filed under: news