வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
வெற்றியைச் சிலபேர் என்னவோ கடையில் வாங்குகிற கத்தரிக்காய் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். போனோம் வாங்கி வந்தோம் என்றா வெற்றிகள் கூறுகட்டி விற்கப்படுகின்றன?
சில வெற்றிகள் வேர்ப் பலா போல் பறிக்கச் செளகரியமாய் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் சிலவற்றை ஏறிப் பறிக்கவே பெரும்பாடு படவேண்டியுள்ளதே!
சில திருமண இல்லங்களில், விசேஷங்களில், சில விழாக்களில் தலைப்பாகை கட்டிக்கொண்டு குதிப்பவர்கள் உண்டு.
“அதைச் செய், இதைச் செய்! நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே? நீ ஏன் சும்மா நின்றுக்கிட்டிருக்கே?” என்று எதையாவது கேட்டு இம்சைப்படுத்துவார்கள்.
எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும். விழாவின் வெற்றி பேசப்பட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம். ஆனால் நிதானப்பேர்வழிகளைக்கூட டென்ஷனாக்கி விடுவார்கள். வெற்றியை அடைவதில் காட்டும் அவசரம் வெறித்தனமாக மாறிவிடும். வெறித்தனம் சேர்ந்து கொண்டால் வெற்றி மட்டுமே இலக்கு. அந்த வெற்றி எப்படி வந்தாலும் சரி என்கிற உணர்வு சேர்த்து கொண்டு விடுகிறது.
வேகமும் வெறித்தனமும் பதற்றத்தைத் தருகின்றன. இது நியாய அநியாயங்களைப் பற்றியெல்லாம் அக்கறைப்படுவது இல்லை. அதுமட்டுமல்ல, லாஜிக்கையும் (தர்க்கம்) புறக்கணித்து விடுகிறது. இது ஒரு மிகப் பெரிய ஆபத்தான செயலாகும். இதனால் உணர்ச்சிதான் கொந்தளித்து நிற்கிறதே தவிர, நடைமுறையான விஷயங்கள் பிடிபடாமல் போகின்றன.
வெற்றி இலக்கை அடைய முடியாதபடி காலை வாரிவிட இதைவிட வேறு வலுவான எதிர்மறைச் சக்தி தேவையில்லை என்கிற சூழ்நிலையும் உருவாகிவிடுகிறது.
ஒருவனின் புறப்படுகிற இடத்திற்கும் வெற்றியின் இலக்கிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கக்கூடும்.இந்த இடைப்பட்ட தூரத்தை அல்லது காலகட்டத்தை மிகக் கவனமாகவும் மனஉறுதியுடனும் நம்பிக்கையுடனும் அணுக வேண்டும்.
கணக்குப் பாடத்தில் இறுதி விடை எப்படி இருந்தாலும் அதைப் போட்டு முடிக்கும் வழிமுறைகளுக்கு (Steps) மதிப்பெண் உண்டு.
இதேபோல வெற்றி இலக்கை அடையாளம் காட்டுகிற பல கட்டங்களில் வெற்றியின் அறிகுறிகள் தெரிய வரும். அவற்றில் மகிழந்து, இளைப்பாறி, வெற்றி இலக்கை மனம் இலயித்து அடையவேண்டுமே தவிர, வெற்றிக்குப் பரபரக்கக் கூடாது.
மீறிப் பரபரத்தால் முட்டைக் கூடைகளை எடுத்துக் கொண்டு தலை தெறிக்க ஓடிய ஒருவனின் கதைதான் மிஞ்சும்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
Most Commented Posts
































September 30th, 2009 at 9:46 am
‘வெற்றி இலக்கு இருக்க வேண்டும்;
வெறி இருக்கக் கூடாது’ என்பதை
சுருக்கமாக விளக்கிய கட்டுரையில்
கூறிய ஒவ்வொரு ஸ்டெப்(கருத்து)புக்கும்
10, 10 மார்க்.
http://www.nizampakkam.blogspot.com