World’s worst lovers!

Posted on Wednesday 30 September 2009

நாற்றம் பிடித்த நாசக்காரர்கள் யார்?

லகின் மோசமான காதலன்கள் என்ற பெயரை ஜெர்மனி ஆண்கள் எடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் பெண்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் காதலில் கலக்குபவர்கள் யார்?, படுக்கையில் படுத்துபவர்கள் யார்? என்றெல்லாம் பலான பலான கேள்விகள் கேட்கப்பட்டன. பதிலுக்கான காரணமும் கேட்கப்பட்டது.

அந்த சர்வேயில்தான் ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்களை ‘நாற்றம் பிடிச்ச நாசக்காரர்கள்’ என பெண்மணிகள் முத்திரை குத்தியிருக்கிறார்கள். காதல் செய்ய (இது படுக்கை காதல்), ஜெர்மனி ஆண்கள் பக்கத்தில் வரும்போதே கூவத்தில் புரண்டுவிட்டு வந்தார்களோ என எண்ணத் தோன்றுகிறதாம். அந்தளவுக்கு வாசம் மிக்கவர்களாக ஜெர்மனி ஆண்கள் திகழ்கிறார்களாம். அவர்களுக்கு அடுத்த இடத்தை பிரிட்டன் ஆண்கள் பிடித்திருக்கிறார்கள். நாற்றம் எல்லாம் இல்லையென்றாலும், ‘அந்த’ விஷயத்தில் ‘பக்’கென பற்றிக்கொள்ளாமல், ‘ஆறினக் கஞ்சி பழம் கஞ்சி’ என்பது போல் படுசோம்பேறிகளாக இருக்கிறார்கள் இவர்கள் என்று குறை சொல்லியிருக்கிறார்கள் பெண்கள்.

அதற்கடுத்த மோசமான காதலன்கள் பட்டியலில் சுவீடன் (பட்டென தீர்ந்து போகிறார்களாம்), ஹாலந்து (அடக்கியாள்கிறவர்கள்), வேல்ஸ் (சுயநலக்காரர்கள்), ஸ்காட்லாந்து (முனகல் மட்டுமே கேட்கவேண்டிய இடத்தில் அதிக சத்தம் வருகிறதாம்) நாட்டு ஆண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அதேசமயம் சிறந்த காதலன்களாக ஸ்பானீஸ், பிரேசில் நாட்டு ஆண்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பெண்கள்.

admin @ 11:09 pm
Filed under: news
Boat topples in Thekkady, 32 deceased

Posted on Wednesday 30 September 2009

சோகமான சுற்றுலாத் தலம்: தேக்கடியில் படகு கவிழ்ந்து 38 பேர் பலி

thekkady1.jpg

கேரள மாநிலத்தின் பிரபல சுற்றுலாத் தலமான தேக்கடி ஏரியில், நேற்று மாலை படகு கவிழ்ந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 38 பேர் இறந்தனர். மேலும் பலரின் உடல் தேடப்பட்டு வருகிறது. இதனால் சுகமான இந்த சுற்றுலாத் தலம் சோகமாக மாறியது.

தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரள இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி ஏரி உள்ளது. பெரியாறு வனவிலங்கு சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியில், படகு துறை உள்ளது. ‘ஜலகன்னிகா’ என்ற கேரள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான படகு, நேற்று மாலை 4 மணிக்கு புறப் பட்டது. இதில், வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர்.படகின் மேல்தளத்தில் 25 பேர், கீழ் தளத்தில் 49 பேர் மற்றும் டிரைவர்கள் இருவர் என 76 பேர் பயணம் செய்தனர்.

வனப் பகுதிகளுக்கிடையே இயற்கை அழகை ரசித்துக் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மாலை 5 மணிக்கு படகு துறையில் இருந்து ஏழாவது கி.மீ., தூரத்தில், மணக்கவளை என்ற இடத்தில் படகு சென்ற போது, யானைகள் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் ஒரு பகுதியின் கரைக்கு வந்தன. அவற்றை பார்க்கும் ஆவலில் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு படகின் ஒரு பகுதிக்கு சென்றனர்.அப்போது, காற்று வேகமாக வீசியது. படகின் ஒரு பகுதியில் அனைவரும் இருந்ததால், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. பயணிகள் அலறிய சத்தம் கேட்டு தூரத்தில் இருந்த மற்ற படகோட்டிகள், ஒயர்லெஸ் மூலம் வனத் துறை மற்றும் சுற்றுலாத் துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியைத் துவக்கினர்.சிறிது நேரத்தில் இருட்டத் துவங்கியதால், மின் விளக்குகள் கொண்டு வரப்பட்டு மீட்புப் பணி தொடர்ந்தது. இதுவரை வரை 38 உடல்கள் மீட்கப்பட்டன. உயிருக்குப் போராடிய ஆறு  ஆறுபேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

admin @ 9:19 pm
Filed under: news
Australia’s victory over Pakistan knock India out

Posted on Wednesday 30 September 2009

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: வெளியேறிய இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாவிட்டாலும், நேற்று நடைபெற்ற மேற்கு இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் மேற்கு இந்திய தீவுகள்அணி தோல்வி அடைந்தது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. ‘ஏ’ பிரிவில் இருந்து ஏற்கனவே பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. இந்நிலையில் நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

கெய்ல், சர்வான்போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்கத்திலேயே திணறியது. பிரவீண் குமார் பந்துவீச்சில் பிளட்சர்(0), ரீபர்(1) வெளியேறினர். நெஹ்ரா வீசிய ஆட்டத்தின் 8வது ஓவரில் பாவல்(5), ஸ்மித்(21) வீழ்ந்தனர். அமித் மிஸ்ரா சுழலில் பெர்னார்ட்(22) வெளி யேறினார். சமி அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். ஹர்பஜன் சுழலில் கிராண்டன்(5), ரோச்(4) வீழ்ந்தனர். இறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 36 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டது. மில்லர்(17) அவுட்டாகாமல் இருந்தார்.இந்திய சார்பில் நெஹ்ரா, பிரவீண் குமார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்குத்தான் என்றாலும் ஆரம்பத்தில் இந்திய அணியும் திணறியது. ரோச் பந்தில் காம்பிர்(6) போல்டானார். டிராவிட்(4) ரன் அவுட்டானார். இதற்கு பின் தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி இணைந்து . மட்டை போட்டனர். கோஹ்லி ஒரு நாள் போட்டிகளில் தனது 2வது அரைசதம் கடந்தார். தினேஷ் கார்த்திக் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 32.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, இத்தொடரில் முதல் வெற்றியை பெற்றது. 79 ரன்களுடன் (9 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்த விராத் கோஹ்லி, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் வெற்றிக் கொடி நாட்டி வந்த தோனி தலைமையிலான இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் மோசமானதாக அமைந்தது. இம்முறை லீக் சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுடனான போட்டி மழையால் ரத்தானது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்றது. 3 புள்ளிகள் மட்டும் பெற்றதால் லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியது.

இப்போட்டியில் வயிற்றுக் கோளாறு காரணமாக, சச்சின் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக அபிஷேக் நாயர் இடம் பெற்றார்.

பந்துவீச்சாளர் தோனி!

இந்திய கேப்டன் தோனி நேற்று மிதவேகப் பந்துவீச்சில் கலக்கினார். கீப்பர் பொறுப்பை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்த இவர், 17வது ஓவரை வீசினார். முதலிரண்டு பந்தில் டவ்லின் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். நான்காவது பந்தில் டவ்லினை(14) போல்டாக்கிய தோனி, ஒரு நாள்போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை பெற்றார். ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக பந்துவீசிய இவர், 2 ஓவரில் 14 ரன் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின இதில் பாகிஸ்தான் வென்று ஆஸ்திரேலியா தோற்றால், இந்திய அணிக்கு அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் காலி பண்ணி இந்திய அணியின் முகத்தில் கரியைப் பூசியது ஆஸ்திரேலியா. இவ்வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

admin @ 8:29 pm
Filed under: cricket
EQ attacks Indonesia again

Posted on Wednesday 30 September 2009

சமோவா சுனாமியைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ந்தோனேசியா அருகே பசிபிக் கடலின் அடியில் நேற்று மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவின் படாங் நகரில் 1000- த்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுமத்ரா தீவை ஒட்டிய பசிபிக் கடல் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் (7.6 ரிக்டர்) படாங் நகரில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இக்கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கிடந்த 75-க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் கட்டட இடிபாடுகளில் 1000-த்துக்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு மலேசியாவிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் கடலில் உள்ள சமோவா, அமெரிக்க சமோவா மற்றும் டோங்கோ தீவுகளில் நேற்று காலை ஏற்பட்ட சுனாமியால் 113 பேர் இறந்துள்ளனர்.

admin @ 7:54 pm
Filed under: news
Tsunami hits Samoa

Posted on Wednesday 30 September 2009

சாமோவ் நாட்டில் சுனாமி தாக்கி 120 பேர் பலி

samoa-tsunami.jpg

சிபிக் கடலில் நியூசிலாந்து நாட்டுக்கு வடக்கே பிஜி நாட்டுக்கு கிழக்கே சாமோவ் என்ற குட்டி நாடு உள்ளது. இதை ஒட்டி அமெரிக்கன் சாமோவ் என்ற இன்னொரு குட்டி தீவும் மற்றும் 11 தீவுகளும் உள்ளன.

இதில் சாமோவ் சுதந்திர நாடு, அமெரிக்கன் சாமோவ் அமெரிக்காவுக்கு சொந்தமானது.

இன்று அதிகாலை 6.48 மணிக்கு சாமோவ் நாட்டுக்கு தெற்கே 160 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்க மையம் இருந்தது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 8.3 புள்ளிகளாக இருந்தது.

நில நடுக்கத்தால் சாமோவ் மற்றும் அமெரிக்கன் சாமோவில் பயங்கரமாக கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. மக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியே ஓடினார்கள்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் பலியானார்கள். மீண்டும் நிலநடுக்கம் வரலாம் என்ற பீதியில் மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்கள் கழித்து திடீரென சுனாமி அலைகள் இரு தீவுகளையும் தாக்கின.

15 அடியில் இருந்து 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து அடுத்தடுத்து தாக்கின. இதில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். அவர்களை கடல் அலை இழுத்து சென்றது.

1 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அலைகள் நிலப்பரப்புக்குள் வந்தன. அலை தாக்கியதில் கட்டிடங்கள் இடிந்தன. ரோட்டில் சென்ற கார் மற்றும் வாகனங்களையும் அலைகள் இழுத்து சென்றன.

சாமோவ் நாட்டில் உள்ள தாலாமோவ், லாலாமனு, மதாவு, டபுவா, கவுதாவி, லோடோ போகா, சவுசங், அமெரிக்கன் சாமோவில் உள்ள லிபோன், பைதோகி ஆகிய இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன.

இரு பகுதிகளிலும் சுனாமி அலையில் சிக்கி 120 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆயிரக் கணக்கானோரை காணவில்லை.

சாமோவ் நாட்டில் உள்ள லாலாமனு ஆஸ்பத்திரியில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாக இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

அமெரிக்கன் சாமோவ் கடற்கரை நகரில் ஏராளமான சுற்றுலா விடுதி, பொழுது போக்கு பூங்காக்கள் இருந்தன. சுனாமியால் இவை நாசமாகின இங்கும் ஏராளமானோர் பலியானார்கள். பலர் உடல்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து கிடக்கின்றன.

சுனாமி அலை ஊருக்குள் புகுந்ததும் மக்கள் அலறியடித்து உள்புறத்தில் உள்ள மேடான பகுதிக்கு ஓடினார்கள். அவர்கள் பீதியில் இன்னும் கடற்கரை பகுதிக்கு வராமல் அங்கேயே தங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் விரைந்து உள்ளனர். அவர்கள் பிணங்களை மீட்டு வருகின்றனர். அமெரிக்க ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

சாமோவ் நாடு சாவே, உபோலு என்ற இரு தீவுகளையும், 10 சிறு தீவுகளையும் கொண்டது. இதன் தலைநகரம் அபியா. முதலில் ஜெர்மனி ஆதிக்கத்திலும், பின்னர் நியூசிலாந்து ஆதிக்கத்திலும் இருந்தது. 1962-ம் ஆண்டு சுதந்திர நாடானது. இங்கு 1 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

அமெரிக்கன் சாமோவ் துதுலியா என்ற தீவில் உள்ளது. இதன் தலை நகரம் பாகாபகோ அங்கு 65 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அமெரிக்க கடற்படை தளம் இங்கு இருக்கிறது.

சாமோவ் அருகே உள்ள நியூசிலாந்து, பிஜி தீவு, டோங்கோ ஹவாய் தீவு மற்றும் சாலமன் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அங்கு சுனாமி தாக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து அங்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

சுனாமி பற்றி அறிந்ததும் கவலை அடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.

admin @ 3:28 am
Filed under: news
Phenomenon in babies birth

Posted on Wednesday 30 September 2009

குழந்தை பிறப்பு… ஓர் அதிசயம்

lali2.jpg

ந்தோனேசியாவில் 8.7 கிலோ எடையுடன் அக்பர் என்ற குழந்தை பிறந்திருக்கிறான். குழந்தைப் பிறப்பில் எத்தனையோ அதிசயங்கள் உலகம் முழுக்க அரங்கேறியபடியே தான் உள்ளன. அதில் சில உங்கள் பார்வைக்கு…

வடகிழக்கு இந்தியாவில், சைனி சன்புரா என்ற குக்கிராமத்தில் 2008 ஏப்ரல் மாதம் சுஷ்மா - வினோத் சிங் தம்பதிக்கு பிறந்தாள் லாலி(முதல் படம்).  ஒரே தலையில் இரு முகங்களுடன் பிறந்த லாலிக்கு இரண்டு ஜோடி கண்கள், இரண்டு மூக்கு, இரண்டு வாய் எனப் படைத்த இறைவன் இரண்டு காதுகளை மட்டுமே அவளுக்குக் கொடுத்திருந்தான்.  மொத்தத்தில். ஒரே சமயத்தில் இரண்டு வாய்களையும் லாலியால் திறந்து மூட முடியும் என்ற மருத்துவர்கள் அவளுடைய உயிருக்கும் மட்டும் உத்திரவாதம் தரமுடியாது என கைவிரித்துவிட்டார்கள்.

laxmi.jpg

வடஇந்திய கிராமம் ஒன்றில் பிறந்த லஷ்மி தத்மா ஒரு தலை, நான்கு கால்கள், நான்கு கைகளுடன் பிறந்தாள். 30 மருத்துவர்கள் அடங்கிய குழு மேற்கொண்ட, மிக நீண்ட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவள் தேவையற்ற உடல் பாகங்கள் நீக்கப்பட்டு தேறி வருகிறாள்.

julia-grovenburg.jpg

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜூலியா க்ரோவன்பர்க் தன்னுடைய மருத்துவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர். மூன்று வார கர்ப்பிணியான அவர் மீண்டும் ஒருமுறை கர்ப்பமாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இரண்டு குழந்தைகளுக்கும் வேறு வேறு பிரசவ நாள் தரப்பட்ள்ளது. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் முதலில் உருவான கரு ஆண் என்றும் பிறகு உருவானது பெண் என்றும் தெரிய வந்தது. ஒன்பது மாதம் கழித்து பிறக்கவிருக்கும் ஆண் குழந்தைக்கு ஹட்சன் என்றும், பெண் குழந்தைக்கு ஜிலியன் என்றும் இப்போதேபெயர் வைத்துவிட்டனர் ஜூலியா க்ரோவன்பர்க் - டாட் தம்பதியினர். இந்த இருவரின் பிறப்பில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அண்ணாவும் தங்கச்சியும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறக்கப் போகிறார்கள். ஹட்சன் 2009 டிசம்பரிலும் ஜிலியன் 2010 ஜனவரியிலும் பிறப்பார்க என பிரசவ நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால், மருத்துவர்கள்   கூற்றுபடி இந்த இரு குழந்தைகளும் சிசேரியன் முறையில் ஒரே சமயத்தில் தான்பிறப்பார்கள் எனத்  தெரிகிறது.

kylie-hodgson.jpg

கெய்லி ஹாட்க்சன் என்ற பெண் 2006 இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தாள். அதில் ஒரு குழந்தை  வெள்ளையாக, பறக்கும் கூந்தலுடன் பிறந்தது. மற்றொரு குழந்தை கருப்பாக, சுருட்டை முடியுடன் பிறந்தது. கெய்லி மற்றும் அவருடைய கணவர் இருவரின் தாய்மாரும் வெள்ளையர்கள் தந்தையர்கள் இருவரும் கருப்பினத்தவர்கள் என்பதுதான் இப்படியொரு வித்தியாசமான குழந்தைகளுக்குக் காரணம்.

rumaisa-rahman.jpg

2004 செப்டம்பரில், ருமைசா ரஹ்மான் பிறக்கும்போது செல்போன் சைசுக்குத்தான் இருந்தாள். இவள்தான் உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மிகச் சிறிய குழந்தை எனக் கருதப்படுபவள்.
இரண்டரை கிலோ எடை வந்தப் பிறகுதான் இவளை வீட்டுக்கு அனுப்பிவைத்தது சிக்காகோ லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையம். இவளுடன் பிறந்த இன்னொரு சகோதரி ஹிபு இவளை சற்றே பெரியவளாக இருந்தாள்.

admin @ 1:25 am
Filed under: news
Akbar ‘the great!’

Posted on Tuesday 29 September 2009

8.7 கிலோ… அசாதாரண குழந்தை அக்பர்! 

akbar-the-great.jpg

க்பர் ரிஷுதீன்…. அரபி மொழியில் மிகச் சிறந்தவன் என்று பொருள். பெயருக்கு ஏற்ப வெயிட்டாகப் பிறந்திருக்கிறான் அக்பர்.

சுனாமி சுழன்றடித்துத் தாக்கும் இந்தோனேசியாவின் வட சுமத்ரா தீவில் கடந்த 21 ஆம் தேதி, திங்கள்கிழமை அன்று ஆனி என்ற தாய்க்குப் பிறந்த அக்பர் பிறக்கும்போதே 8.7 கிலோ எடை இருந்திருக்கிறான். மற்றக் குழந்தைகளிடையே அவன் உறங்கும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது.  இரண்டு அடிநீளமிருக்கும் அக்பர் சிசேரியன் மூலம் பிறப்பிக்கப்பட்டான்.

இந்தோனேசியாவில் இதுவரை பிறந்த குழந்தைகளில் எடை மிகுந்த குழந்தை என்ற சாதனையை அக்பர் புரிந்திருக்கிறான். உலகளவில் எடுத்துக்கொண்டால் 1879 இல், அமெரிக்காவில் பிறந்து உடனே இறந்துவிட்ட ஒரு குழந்தையின் எடை 10.43 கிலோ.

அக்பர் அசாதாரண குழந்தை என்பதால் சிசேரியன்கூட கொஞ்சம் சிக்கலாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அம்மா ஆனியின் கர்ப்பப்பையில் இருந்து அக்பரை எடுப்பதற்குள் மூச்சு வாங்கியிருக்கிறது மருத்துவர்களுக்கு. ஆனாலும் பிறக்கும்போதே சாதனையுடன் பிறந்துவிட்டான் அக்பர்.
பிறந்த சமயத்தில் மூச்சு வாங்க சிரமப்பட்டதால் அக்பருக்கு ஆக்சிஜன் தரப்பட்டிருக்கிறது. மற்றபடி தற்போது அவன் சேமமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அக்பரின் அம்மா ஆனிக்கு 41 வயது. . அக்பர் அவருக்கு நான்காவது குழந்தை. மருத்துவமனையில் பிறக்கும் முதல் குழந்தையும் அக்பர்தான். பிரசவத்தில் சிக்கல் ஏற்படாமல் இருந்திருந்தால் இவனும் வீட்டில்தான் பிறந்திருப்பான்

அக்பர் இருக்கும் எடைக்கு அவன் அருந்தும் பாலும் அதிகமாக இருக்கிறது. அம்மா ஆனி நீரிழிவு நோயாளி வேறு. சர்க்கரை அளவும் உச்சஸ்தாயியில் இருக்கிறது. கிட்டத்தட்ட தாயின் மார்பே கதி என்று அவன் கிடப்பதால், அவனுக்குள் க்ளுகோசின் அளவு அதிகரித்து அவன் இன்னும் அதிக குண்டடிக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அம்மா ஆனியின் கைகளில் பரந்து விரிந்து படுத்திருக்கும் அக்பர் அழுதால் சிங்கக்குட்டி உறுமுவதுபோல் இருக்கிறதாம். சாதாரண குழந்தை (ஊரையே எழுப்பிவிடும் அளவுக்கு) கத்தினாலே தாங்க முடியாது. உண்மையில் சிங்கக்குட்டி அளவுக்குப் பிறந்திருக்கும் அக்பர் அழுதால் அப்படித்தான் இருக்கும்.

admin @ 11:09 pm
Filed under: news
Who am I?: Kamal searches himself

Posted on Tuesday 29 September 2009

நான் யார் எனத் தேடுகிறேன்! - கமல்

நான் யார் எனத் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். ரஜினி, தான் யார் என்பதை ஆன்மிகத்தில் தேடுகிறார். நான் சமூகத்தில் தேடுகிறேன். அதற்கான தைரியத்தை எனக்குக் கொடுத்தது மக்கள்தான் என்று கமல் பேசினார்.

இந்தியத் திரையுலகில் கமல்ஹாசனின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி அவருக்கு விஜய் டி.வி. பிரமாண்டமான பாராட்டு விழாவை சென்னையில் திங்கள்கிழமை நடத்தியது. விழாவில் கமல் பேசுவதற்கு முன்னதாக, மறைந்த அவருடைய பெற்றோர் சீனிவாசன்-ராஜலட்சுமி ஆகியோரின் உருவச் சிலைகளை கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் நினைவுப் பரிசாக வழங்கினர்.

அதை பெற்றுக்கொண்ட பின்னர் கமல் பேசுகையில்,இ

“”என் பெற்றோரின் உருவச் சிலைகளைப் பார்க்கும்போது அவர்கள் இங்கு இல்லையே என நான் நினைக்கவில்லை. இங்கு இருக்கும் பல நட்சத்திரங்கள் தங்களுடைய பணிகளை விட்டுவிட்டு இன்று எனக்காக வந்திருக்கிறார்கள்.

அதிக நேரமானால் விழாவுக்கு வந்தவர்கள் சென்றுவிடுவர்; அதனால் விழாவை விரைவாக முடிக்கக் கேட்டிருந்தேன். ஆனால் என் எண்ணத்தைப் பொய்யாக்கும் வகையில் அனைத்து நட்சத்திரங்களும் ரசிகர்களும் இங்கு பொறுமையாக அமர்ந்திருக்கிறார்கள்.

பிறகு ஏன் நான் என் தாய், தந்தையர் இல்லை என நினைக்க வேண்டும். அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள்

“”இதை ஆரம்ப விழாவாகவும் நினைக்கவில்லை. நிறைவு விழாவாகவும் நினைக்கவில்லை. என் பயணத்தின் சம பாதி விழாவா என யோசிக்கிறேன். பெரும் கனவுகளோடு நான் திரையுலகுக்கு நுழைந்தபோது நான் திட்டமிட்டிருந்ததில் பாதியைக் கூட இன்னும் செய்யவில்லை. இது அவையடக்கம் அல்ல.

இந்த விழா, என் நேரம் குறைவு; செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது.

திரையுலகில் இதற்கு முன்பு இருந்த தலைமுறையில் என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் யாரும் கிடையாது. அவர் தன்னைத் தாழ்த்திக்கொண்டு என்னைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் பேசியதற்குக் காரணம் எங்களிடையே உள்ள ஆழமான நட்புதான். அதனால்தான் அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்.

அவரும் நானும் சாதித்ததற்குக் காரணம் நீங்கள் (ரசிகர்ககளை கைக் காட்டுகிறார்) காட்டிய அன்புதான். அவர் தான் யார் என்பதைத் தேடி இமயமலைக்குச் செல்கிறார். நான் யார் எனத் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். ரஜினி, தான் யார் என்பதை ஆன்மிகத்தில் தேடுகிறார். நான் சமூகத்தில் தேடுகிறேன். அதற்கான தைரியத்தை எனக்குக் கொடுத்தது மக்கள்தான்.

நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை; இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன். இந்த நேரத்தில், எனக்காக இறைவனிடம் வேண்டியவர்களைக் கிண்டல் செய்கிறேன் என்று மட்டும் கருதிவிடாதீர்கள். நான் இந்தக் கொள்கையில் இருந்தாலும் என்னிடம் வளர்ந்த என் மகள் ஷ்ருதி தைரியமாகக் கோயிலுக்குச் செல்வார். பொட்டு வைத்துக்கொள்வார். எனக்கும் வைத்துவிடுவார். அதை நான் அழிப்பதில்லை. அவருடைய அன்புக்காக பொட்டு வைத்துக்கொள்வேன்” என்றார் கமல்.

admin @ 9:52 pm
Filed under: kollywood
Half century in cinema: Kamal felicitated

Posted on Tuesday 29 September 2009

கமல் 50: திரையலகம் பாராட்டு

kamal-50.jpg

ந்தியத் திரையுலகில் கமல்ஹாசனின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி அவருக்கு விஜய் டி.வி. பிரமாண்டமான பாராட்டு விழாவை சென்னையில் திங்கள்கிழமை நடத்தியது. இவ்விழாவிற்கு திரையுலகத்தினர் திரண்டுவந்து கமலைப் பாராட்டினர்.

இயக்குநர் கே.பாலசந்தர்:

“”நான் கமலுக்கு குரு என எல்லோரும் சொல்லுவர். ஆனால் நான் அதைச் சொல்வதில்லை. கமலுக்கு நான் தேவையில்லை. என் இடத்தில் ஒரு குப்பனோ சுப்பனோ இருந்திருந்தால் கூட போதும். கமல் இந்த நிலையை எட்டியிருப்பார். அந்த அளவுக்குத் திறமையானவர். கமல் ஒரு யுக புருஷன். “தசாவதாரம்’ வரை சாதித்துவிட்டார். அதையெல்லாம் மிஞ்ச வேண்டும் என்பதுதான் என் கவலையெல்லாம்; கமல் அதை மிஞ்சிக் காட்டுவார்” என்றார்.

நடிகர் சரத்குமார்:

“கமல்ஹாசன் வசித்துவரும் எல்டாம்ஸ் சாலைக்கு டாக்டர் கமல்ஹாசன் சாலை எனப் பெயர் சூட்ட வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் சங்கம் சார்பாகக் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதுகுறித்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்

நடிகர் மம்முட்டி:

“”கமல்ஹாசன் மலையாளத்தில் 41 படங்களில் நடித்திருக்கிறார். அதனால் அவரை எங்கள் மலையாளத் திரையுலகில் ஒருவராகத்தான் பார்க்கிறோம். அவர் எங்கள் மண்ணுக்கும் சொந்தக்காரர். எனக்கும் கமலுக்கும் ஒரு சவால் இருக்கிறது. நானும் அவரும் இதுவரை மூன்று தேசிய விருதுகள் பெற்றிருக்கிறோம். நான்காவது முறையாக விருது பெறப்போவது யார் என்பதில் எங்கள் இருவருக்கும் ஆரோக்கியமான போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கமல் நல்ல நடிகர் என்பதோடு நல்ல மனிதரும் கூட” என்றார்.

நடிகர் மோகன்லால்:

“”கமல்ஹாசன் எங்கள் மலையாளத் திரையுலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். நம்மவர் என்றுதான் அவரைப் பார்க்கிறோம். அவர் ஒரு பல்கலைக்கழகம். அவரிடமிருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். நான் மற்ற நடிகர்களிடமும் இளம் நடிகர்களிடமும் கேட்டுக்கொள்வதெல்லாம் கமல்ஹாசனைப் பின்பற்றாதீர்கள் என்பதுதான். அவரைப் போல் நடிப்பது சிரமம். தோற்றுவிடுவீர்கள். அதனால் புதிய பாணியைக் கடைப்பிடியுங்கள்” என்றார்.

நடிகை ராதிகா:

“”கமல் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்தப் படங்களில் நடிக்கும் கதாநாயகிகளைக் கமல் காதலிப்பார் என்றே நான் நினைத்திருக்கிறேன். “சிப்பிக்குள் முத்து’ படத்தில் அவருடன் நடித்தபோதுதான், கதாநாயகி என்று இல்லை; அந்த இடத்தில் ஒரு மாடு, ஒரு கல் இருந்தால் அவற்றைக் கூட கலைக்காகக் கமல் காதலிப்பார் எனத் தெரிந்துகொண்டேன்” என்றார்.

நடிகை ஊர்வசி:
“”நான் கமல்ஹாசனுடன் “அந்த ஒரு நிமிடம்’ படத்தில் முதல்முறையாக நடித்தேன். அப்போது என்னிடம் பேசிய பலரும்… “”கமல் அவர் படத்தில் நடிக்கும்போது எப்படியாவது ஒரு காட்சியில் முத்தம் கொடுத்துவிடுவார். அதனால் உஷாராக இரு” என்றன். அந்தப் படத்தில் கமலுடன் நான் நெருக்கமாக இருப்பது போல நான்கு ஐந்து காட்சிகள் இருந்தன. அதனால் எப்போது முத்தம் கொடுப்பாரோ என பயந்துகொண்டே இருந்தேன். அந்தக் காட்சியும் வந்தது. கமல் அருகில் வந்து ஒரு வசனத்தைச் சொல்லி நடித்து சென்றுவிட்டார். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்யவில்லை. காட்சி நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் அருகில் வந்து ஒரு வசனத்தைப் பேசி நடித்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் “மைக்கேல் மதனகாமராசன்’ படத்தில் என்னை நடிக்க வைத்தார். எனக்குள் இருக்கும் நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி என்னையே எனக்குப் புதிதாக அடையாளம் காட்டியவர். கமல் என் மதிப்புக்குரிய ஆசான். நான் அவருடைய பணிவான மாணவி” என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ்:

“”என்னைப் போன்ற பல ஏகலைவர்களுக்கு கமல்தான் துரோணர். அவருடைய இந்த நிலைக்கு ஓயாத தேடலும் சலிக்காத உழைப்பும்தான் காரணம். என்னைப் போன்றவர்களுக்கு ஏதாவது ஒரு வருடத்தில் சிறந்த நடிகர் விருது கிடைக்கலாம். ஆனால் நூற்றாண்டின் சிறந்த நடிகர் என்றால் அது கமல் மட்டுமே. திரையுலகில் மற்றவர்களுக்குப் பேராசிரியராக இருக்கும் கமல், தான் மட்டும் எப்போதும் மாணவனாகவே இருக்கிறார். தமிழ் சினிமா கமலுக்குக் கொடுத்ததை விட பல மடங்கு அதிகமாக தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் கமல் கொடுத்திருக்கிறார்” என்றார்.

admin @ 9:10 pm
Filed under: kollywood
Kamal is the real superstar, says Rajini

Posted on Tuesday 29 September 2009

என் கலையுலக அண்ணா! : கமல் குறித்து ரஜினி

kamal-rajini.jpg

‘கமலைப் பாராட்டிபேச வேண்டுமானால் எனக்கு இரண்டு நாட்கள் வேண்டும். என் கலையுலக அண்ணா கமல்!’ என்று ரஜினிகாந்த் பாராட்டிப் பேசினார்.

இந்தியத் திரையுலகில் கமல்ஹாசனின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி அவருக்கு விஜய் டி.வி. பிரமாண்டமான பாராட்டு விழாவை சென்னையில் திங்கள்கிழமை நடத்தியது.

இந்த விழாவில் கலந்துகொண்டு ரஜினி  பேசுகையில்,

“கமலைப் பாராட்டி நான் பேச வேண்டுமானால் தொடர்ந்து இரண்டு நாள்கள் வேண்டும். கமல் என்னுடைய கலையுலக அண்ணா. இன்று இருக்கும் பலருக்கு கமல் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பது தெரியாது. நான் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் கமல் இப்போது இருப்பதை விட மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தார்.

‘அபூர்வ ராகங்கள்’, ‘அவள் அப்படித்தான்’, ‘ஆடு புலி ஆட்டம்’, ‘16 வயதினிலே’ உள்ளிட்ட படங்களில் நாங்கள் இணைந்து நடித்துள்ளோம்.

அப்போது கமல் சொல்லியிருந்தால் என்னை படத்திலிருந்தே எடுத்திருப்பார்கள். அவர் நினைத்திருந்தால் என்னை நடிக்க விடாமல் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என எனக்கு சிபாரிசு செய்ததே கமல்தான்.

‘நினைத்தாலே இனிக்கும்’ படம்தான் நாங்கள் இணைந்து நடித்த கடைசிப் படம். அப்போது என்னை அழைத்த கமல், “”இனி நாம் இணைந்து நடிக்க வேண்டாம் ரஜினி; அப்படி நடித்தால் உங்களை வளர விடாமல் செய்துவிடுவார்கள்; நீங்கள் பெயர், புகழ் சம்பாதிக்க முடியாது. தனியாக நடித்து நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்”  என்றார்.

மேலும், ‘தமிழ் சினிமாவை நீண்ட காலமாக நான் பார்த்து வருபவன். சினிமாவைத் தாண்டி எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நெருக்கமாக இருந்தாலும் சிலர் சுயநலத்துக்காகப் பிரித்ததால் அவர்களுடைய ரசிகர்களும் பிரிந்தனர். அந்த நிலை நமது ரசிகர்களுக்கு நேரக்கூடாது. அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்’ எனக் கூறியவர்.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், அமிதாப், திலீப்குமார், மம்முட்டி, மோகன்லால் உள்பட பலரும் கமல் என்ற ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கும் இடத்தில் ரஜினி எப்படி ஹீரோ ஆனான் என நினைக்கலாம். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்…

நீங்களெல்லாம் கமலை தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள். நான் கமலை அவருக்கு அருகில் இருந்து நெருக்கமாகப் பார்த்து பழகி அவரிடமிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டதால்தான் நடிகன் ஆனேன்.

இப்படிப்பட்ட கமல் இருக்கும்போது நான் எப்படி வளர்ந்தேன்?

நான் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தேன். கமல் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. அது என்னால் முடியாது. நான் தொட்டதை கமல் தொட்டிருக்கிறார். ஆனால் அவர் தொட்டதை நான் தொடவில்லை.

கமல்தான் உண்மையான சகலகலா வல்லவன். அவருக்குக் கலைத்தாயின் அம்சம் இருக்கிறது. அதனால் கலைத்தாயே அவரை பல ரூபங்களில் ரசிக்கிறாள். மோகன்லால், மம்முட்டி, வெங்கடேஷ், சரத்குமார் மற்றும் என்னைப் போன்றவர்களையெல்லாம் கலைத்தாய் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறாள். ஆனால் கமலை மட்டும் தோளில் வைத்துக் கொஞ்சுகிறாள்.

“இது நியாயமா? நாங்களும் உன் குழந்தைகள்தானே! ஏன் இந்த பாரபட்சம்?” என கலைத்தாயிடம் நான் கேட்டேன். அதற்கு “ரஜினி, நீ போன ஜென்மத்தில்தான் நடிகனாக ஆசைப்பட்டாய். கமல் கடந்த 10 ஜென்மங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறான். அதனால்தான் கமலைத் தோளில் வைத்துக் கொண்டாடுகிறேன்” என்றாள்.

கமல், கலைத்தாயின் அன்புக் குழந்தை. இது ஒரு வரலாற்று நிகழ்வு. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில் நானும் வாழ்ந்தேன்; நானும் நடித்தேன் என்ற பெருமை போதும்”என கமலை பாராட்டு மழையில் நனைத்தார் ரஜினி.

admin @ 8:23 pm
Filed under: kollywood