Fashion designer Anand Jon gets 59 years sentence

Posted on Monday 31 August 2009

அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் ஆனந்த ஜானுக்கு 59 வருட சிறை

anand-jon.jpg

மெரிக்காவில் பிரபல ஃபேஷன் டிசைனராக வலம் வந்தவர் இந்தியரான ஆனந்த ஜான். இவருக்கு, மாடல் அழகிகளை கற்பழித்தது மற்றும் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் 59 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ நகர நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாரீஸ் ஹில்டன், மேரி பிளிஜ் உள்ளிட்ட அமெரிக்காவின் பிரபல மாடல்களுக்கு ஆடை வடிவமைத்துக்   கொடுத்தவர் ஆனந்த் ஜான். புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளராகத் திகழ்ந்த ஆனந்த் ஜான் மீது, கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டுவரையில் 14 முதல் 21 வயது வரையுள்ள மாடல் அழகிகளை கற்பழித்தது மற்றும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அவர் மீதான இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இவ்வழக்கில் ஆனந்த் ஜானுக்கு எதிராக 9 இளம்பெண்கள் சாட்சியம் அளித்தனர்.

இந்த இறுதிக்கட்ட விசாரணையின்போது ஆனந்த் ஜான் தனக்காக தானே வாதாடினார். தன் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

admin @ 10:56 pm
Filed under: American news
Lanka Tamil journalist gets 20 years sentence

Posted on Monday 31 August 2009

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறை

லங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர் ஜே.எஸ்.திசநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.

‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியவரும், தனி இணையதளத்தை நடத்தியவருமான ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசநாயகம் (45) தீவிரவாதத்தை ஆதரித்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வந்த ‘நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு’ என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதியதற்காக 2008 மார்ச் 7-ல் திசநாயகம் கைது செய்யப்பட்டார்.

புலிகளின் வெளியீடுகளுக்கு நிதி சேகரிப்பதில் திசநாயகத்திற்கு முக்கிய பங்கு இருந்ததாகவும், முக்கிய புலித் தலைவர்களுடன் அவருக்கு தொடர்பிருந்ததாகவும் இலங்கை அரசின் நாளிதழ் ஒன்று கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டது.

அரசுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க கடந்த ஜனவரியில் அவரது பத்திரிகை அலுவலகத்துக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளில் இலங்கையில் 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1982 ஆம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அதன் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள முதல் நபர் திசநாயகம். இந்தத் தீர்ப்புக்கு எதிராக முறையிடப் போவதாக திசநாயகத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

திசநாயகத்தின் மீதான கைது நடவடிக்கையின் போது, இலங்கையில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள்  கைது செய்யப்படுவது பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

admin @ 9:11 pm
Filed under: srilanka news
Lanka Tamil genoside: Nedumaran blames Karunanidhi

Posted on Monday 31 August 2009

ஈழத் தமிழர் படுகொலையில் முதல் குற்றவாளி கருணாநிதி: பழ. நெடுமாறன்

ழத் தமிழர் படுகொலையில் முதல் குற்றவாளி கருணாநிதி என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டி உள்ளார்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,

“மன்னார் வளைகுடா படுகையில் பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவிடம் கொடுத்து விட்டது இலங்கை. இந்திய தென்பகுதியில் பாதுகாப்பு கேடயமாக இருந்த இலங்கை, இப்போது சீனாவுக்கு எல்லா ராணுவத் தொழிற்சாலைக்கும் அனுமதி அளித்து விட்டது. இது இந்தியாவுக்கு பேராபத்து.

பிரபாகரன் பற்றி பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் பிரபாகரன் நன்றாக பத்திரமாக இருக்கிறார். உலக அளவில் வாழும் 9 கோடி தமிழர்களும் ஒன்றுகூடி மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்து போரிட வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

ஈழத் தமிழர் படுகொலையில், சர்வதேச அரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங், மூன்றாவது குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபட்ச. சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி இவர்களை குற்றவாளிகளாக நிரூபிக்காமல் விடமாட்டோம்” என்றார்.

admin @ 8:24 pm
Filed under: srilanka news
Aspirin attacks healthy people, says research

Posted on Monday 31 August 2009

ஆஸ்பிரின் ஆபத்து: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

aspirin1.jpg

மா
ரடைப்பு வராமல் தடுக்கும் என்ற ஒரே காரணத்திற்காக, ஆரோக்கியமானவர்கள் கூட விழுங்கி வைக்கும் ஆஸ்பிரின் மாத்திரையால் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வாழ்க்கையில் கவலையே இல்லாதவர்கள் உள்பட உலகில் லட்சக்கணக்கான பேர் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தினசரி ஒரு ஆஸ்பிரின் மாத்திரையாவது எடுத்துக்கொள்கிறார்கள்.

தேவையில்லாமல் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற ஐரோப்பா கண்ட இதயத்துறை மருத்துவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

‘ஆரோக்கியமானவர்கள் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால் மட்டும் மாரடைப்பில் இருந்து தப்பிவிட முடியாது. அதற்கு மாறாக, ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளும் பலரும் உள் உறுப்பில் ஏற்படும் ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று குண்டு ஒன்றை வீசியிருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்..

‘ஆனால், இதய நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் தகுந்த, நல்ல பலன்களைக் கொடுக்கிறது. அவர்கள் தொடர்ந்து ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளவேண்டும்’என்று அறிவுரை கூறினர்..

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்பிரின் மாத்திரையுடன் கொலாஸ்ட்ராலை குறைக்க உதவும் பாலிபில் போன்ற மாத்திரையையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் இல்லாமல் ஆஸ்பிரினின் நன்மையைப் பெறலாம்.

50யில் இருந்து 75 வயது வரையிலான 29 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்களில் பலருக்கும் காலில் இருந்த தமனிகள் பலவீனமாக இருந்தன. இது எதிர்காலத்தில் இதய நோயை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாகும். ஆனால், அது பற்றி ஏதும் அறியாதவர்களாக அவர்கள் இருந்தனர். மேலும், அதில் பலரும் கடந்த 8 வருடமாக தொடர்ந்து ஆஸ்பிரின் எடுத்து வருபவர்கள்.

ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டவர்கள், எடுத்துக் கொள்ளாதவர்கள் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்றும், ஆஸ்பிரின் எடுத்துக் கொள்பவர்கள் உடலில் இதய நோயைத் தடுப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

ஸ்காட்லாண்டில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், பார்சிலோனாவில் நடைபெற்ற ஐரோப்பா  கண்ட இதயத்துறை மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவ பேராசிரியர் ஜெரி ஃபோக்ஸ் கருத்து கூறுகையில், “பொதுவாக, ஆரோக்கியமான மக்களுக்கு ஆஸ்பிரினை பரிந்துரை செய்யக்கூடாது என்று எங்கள் ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவுகளை தடுப்பதில் ஒரு சிறிய பங்கையே ஆஸ்பிரின் ஆற்றுகிறது. ஆனால் அது உள்உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது. ரத்தக்கசிவானது மரணத்தைக்  கூட வரவழைக்கும்” என்கிறார்.

முன்னதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் செய்த ஒர் ஆய்வில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமானவர்களில் ஐவரில் ஒருவருக்கும்  மட்டும் தான் மாரடைப்பு வரும் பாதிப்பு குறைகிறது என்றும் ஆனால், அதில் மூவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும் கண்டறியப்பட்டது.

இதய நோய்க்கு எதிரான ஆஸ்பிரினின் செயல்பாடு என்பது அதை எடுத்துக்கொள்பவரின் உடல்நிலை, வாழ்க்கை முறை, மனஅழுத்தம் பரம்பரையை வைத்து மாறுபடுகிறது. ஆகையால் மருத்துவரின் ஆலோசனை இன்றி அநாயாசமாக ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்காதீர்கள் என்று எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

admin @ 2:22 am
Filed under: news
Marriage is not an essential thing, says Kamal

Posted on Monday 31 August 2009

திருமணங்கள் தேவையில்லை: கமல் விரக்தி

kamalhaasan.jpg

தோல்வியில் முடிவதால் திருமணங்கள் தேவையில்லாதது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் அவருடைய பேட்டியில்,

“திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை. குடும்பம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. உறுதியானது. வாணி கணபதி, சரிகா ஆகியோரை நான்  திருமணம் செய்து கொண்டேன். எனக்குப் பிடித்தவர்களின் ஆசையை ஈடேற்ற நான் செய்த முட்டாள்தனம்தான் திருமணம். நான் செய்துகொண்ட சமரசம் அது. நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க நான் கொடுத்த விலைதான் திருமணம்” என்றவர்,

‘2 குழந்தைகள் பிறந்த பிறகு சரிகாவைத் திருமணம் செய்தது?’ என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,]

“ஓட்டல்களில் அறை எடுத்து தங்க சங்கடம் ஏற்பட்டது. இந்தக் குழந்தைகளின் தாயார் இவர் என்று சொன்னால் போதாது உன் மனைவி யார் என்றும் கேட்டார்கள். எனவேதான் சரிகாவைத் துணைவியாக்கிக் கொண்டேன்.

என் குழந்தைகளுடன் இப்போது சரிகா எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. குழந்தைகளும் அப்படித்தான். அவர்கள் சரிகாவுடன் இருக்க விரும்பவில்லை.

அவர்கள்வயது வந்தவர்கள். வாக்களிக்கவும் சுயமாக முடிவுகள் எடுக்கவும் அவர்களால் முடியும். எனவே, அந்தப் பிரச்னையில் நான் தலையிடுவதில்லை.

அரசியலில் நானும் இருக்கிறேன். ஆனால், நான் அரசியல்வாதி அல்ல. என் படங்களில் அரசியல் கருத்துக்கள் அழுத்தமாக இடம் பெறும்.

நான் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை. என் மீது கடும் கோபம் கொள்வார்கள். பிறகு நான் துப்பாக்கியுடன்தான் செல்ல வேண்டியிருக்கும்” என்றார் கமல்.

admin @ 1:09 am
Filed under: kollywood
Threatening California fire!

Posted on Sunday 30 August 2009

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ:
அணைக்க முடியாமல் ஆர்னால்டு வேதனை

california-fire.jpg

மெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாநிலத்தில் மலைக்காடு ஒன்றில் ஏற்பட்ட காட்டுத்தீ மேலும் பரவி வருவதால் அங்கே அச்சம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு அருகே உள்ள மலையில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவி வருவதால் 12 ஆயிரம் கட்டடங்கள் பாதிக்கப்படலாம் என அம்மாநில நிர்வாகம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது கடும் வெயில் நிலவி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் பதிவான அதிகமான வெப்பத்தால் இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவத் தொடங்கியுள்ள பகுதியில் உள்ள 10 ஆயிரம் வீடுகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயானது கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாக கலிஃபோர்னியா மாநில கவர்னர் ஆர்னால்டு ஸ்வாசர்நெகர் கூறியுள்ளார்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போரடி தீயை அணைத்து வந்தாலும், இக்காட்டுத்தீயானது இதுவரையில் சுமார் 142 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு எரித்து பஸ்மமாக்கி உள்ளது. ஆயினும் மேலும் அது பரவுவதை தடுக்க தங்களால் ஆன முயற்சிகளை தீயணைப்பு துறையினர் செய்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தத் தீயானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு வடக்கே உள்ள வில்சன் மலையை தழுவாமல் தடுக்க தீவிர முனைப்பில் உள்ளனர். தகவல் தொடர்புக்கு உதவும் பல்வேறு நிறுவனங்களின் ஆண்டெனாக்களும், கண்காணிப்பு கோபுரங்களும் இம் மலைப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காட்டுத்தீயானது இப்பகுதியில் இருந்து மூன்றாவது கிலோ மீட்டர் வரையில் பரவி வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காட்டுத்தீயால் எழும்பிய புகை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை  மூடியது. காற்றில எழுந்து வந்த சாம்பல் இங்குள்ள வீடுகளிலும், வாகனங்களின் மீது படிந்துள்ளது.

இந்தக் காட்டுத்தீயால் 3 பேருக்கு கடுந்தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 1000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

காட்டுத்தீயின் ஆக்ரோஷம் குறைவு தான் என்றாலும் அப்பகுதியின் மேடு, பள்ளமான அமைப்பு தீயணைப்பு படையினரின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என கலிஃபோர்னியா மாநில நிர்வாகம் கூறியுள்ளது.

இத்தீயால் மக்கள் வசிக்கும் 10 ஆயிரம் வீடுகளும், பிற 2500 கட்டடங்களும் பாதிக்கப்படக்கூடும் என்றும், ஏற்கனவே அல்டடெனா, கிளிண்டேல், பாசடேனா, லா கிரேசண்டா நகரங்களின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

கலிபோர்னியாவில் நிலவும் கடும் வெயிலால் பெரும் சிரமத்திற்கு இடையில் தீ அணைக்கப்பட்டு வருகிறது. இந்த தீயை அணைக்க மேலும் ஒரு வாரம் ஆகும் எனப்படுகிறது.

admin @ 11:13 pm
Filed under: American news
Hatoyama becomes Japan’s PM : Big drop to ruling party

Posted on Sunday 30 August 2009

ஜப்பானில் அரசியல் மாற்றம்: 55 வருட ஆளுங்கட்சி தோல்வி

yukio-hatoyama.jpg

ப்பான்  நாட்டில்  பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது அங்கு நடந்த மத்திய தேர்தலில், 1955 இல் இருந்து ஆட்சியில் இருக்கும் ஜனநாயக விடுதலைக் கட்சி தோல்வியடைந்துள்ளது. 1996 தொடங்கப்பட்ட ஜப்பான் ஜனநாயகக் கட்சி அபரித வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ஜப்பான் ஊடகங்களின், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புப்படி மொத்தமுள்ள 480 இடங்களில் எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி 308 இடங்களையும், ஆளுங்கட்சியான ஜனநாயக விடுதலை கட்சி 119 இடங்களையும் பிடிக்கின்றன.

இந்தத் தகவல் வெளியானதும் ஜப்பானின் பங்கு வர்த்தகத்தில் 1.5 புள்ளிகள் உயர்ந்ததாகத்  தகவல்கள் கூறுகின்றன.

அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாவிட்டாலும் இந்த தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக பிரதமர் டாரோ அஸோ கூறியுள்ளார். ஜனநாயக விடுதலைக் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகுவார் எனத் தெரிகிறது.

வெற்றி பெற்ற ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹடோ யாமா அடுத்த பிரதமராக பதவியேற்கிறார். இவருடைய பதவியேற்பு குறித்து இன்று மாலைக்குள் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.
அமைச்சரவை மற்றும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் இன்று மாலைக்குள் உறுதி ப்படுத்தப்பட்ட செய்தி வெளியாகும் எனத் தெரிகிறது.

“இந்த வெற்றியைப் பெற நீண்ட காலம் ஆகியிருக்கலாம். ஆனால், நல்ல மாற்றத்தின் ஆரம்பத்தை
நாங்கள் அடைந்திருக்கிறோம்” என்று பிரதமராக ப்பதவியேற்க ஏற்க உள்ள ஹடோயாமா கூறியுள்ளார்.
‘எங்களுடைய வெற்றி ஜப்பான் அரசியலில் சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும்’ அவர் கூறியுள்ளார்.

தங்கள் ஆட்சிக்காலத்தில் தேர்தலை அறிவிக்காமல், மூன்று முறை பிரதமரை மாற்றியதும், ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியும்தான் தங்கள் தோல்விக்கு காரணம் என்று ஜனநாயக விடுதலைக் கட்சி கூறியுள்ளது.

admin @ 10:00 pm
Filed under: news
Chandrayaan-1‎ scheme comes to an end

Posted on Sunday 30 August 2009

சந்திரயான் திட்டம் முடிவுக்கு வந்தது

chandrayaan-1.jpg

ந்திரயான்-1 திட்டம் கைவிடப்பட்டதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து கூறுகையில்,

“சந்திரனுக்கு அனுப்பப்படும் எந்த ஒரு விண்கலத்தின் ஆயுட்காலமும் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு மேல் நீடித்ததில்லை. ஆனால், சந்திரயான் 10 மாத காலம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. சந்திரயான் கிட்டத்தட்ட 95 சதவீத பணிகளை முடித்து விட்டது. சந்திரயான், இரண்டு ஆண்டு காலம் செயல்படும் என, நாங்கள் தான் தவறாக முன்பு கூறி விட்டோம்.சந்திரயானின் திட்டப் பணிகள் முடிந்து விட்டன. மொபைல் போன் “சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டது போன்ற நிலையை இன்று ஏற்பட்ட நிலைக்கு ஒப்பிடலாம்.சந்திரயான் விண்கலத்திலிருந்து எந்த ஒரு தகவல் தொடர்பும் இல்லை. நாங்கள் கொடுக்கும் தகவல்களும் அதை சென்றடையவில்லை. சந்திரயானின் ஆன்டெனா மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம் அனைத்தும் நல்ல முறையில் தான் செயல்படுகின்றன. இருப்பினும் ரேடியோ தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் தொடர்ந்து தகவல் பெற முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம்”என்றார்.

இது குறித்துஇஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் விளக்கம் கூறுகையில்,

“சந்திரனைச் சுற்றி உள்ள வேறுபடும் சீதோஷ்ண நிலை மற்றும் சுற்றி வரும் போது ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதன் செயல்பாட்டை பாதித்திருக்கலாம்.. அதே சமயம் இதுவரை சந்திரயான் அனுப்பிய தகவல்கள் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ள உதவிடும் தகவல்கள் என்பதால், இத்திட்டம் தோல்வி என்ற கருத்து தேவையில்லை. ஆனாலும், ரேடியோ தொடர்புகள் குறித்தும் மற்ற செயல்பாடுகள் குறித்தும் தொடர் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்ட பின் சந்திரயான்- 1 திட்டம் கைவிடப்பட்டது; அது இனி செயல்பட வாய்ப்பில்லை. இதனால் அடுத்த திட்டம் தடைபடாது. மாறாக இதில் ஏற்பட்ட குறைகள், நிவர்த்திக்கப்பட்டு விண்கலம் தயாரிக்கப்படும்” என்றார்.

சந்திரயான்- 1 திட்டம் முடிவுக்கு வந்தது குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறுகையில்,

“இந்தியா முதன் முறையாக அனுப்பிய விண்கலம் சந்திரயான், கடந்த 10 மாதங்களாக தேவையான அளவுக்கு தகவல்களை அளித்துள்ளது. எனவே, இது மிகப்பெரிய வெற்றி தான். து சந்திரனின் மேல் பரப்பிலேயே மோதி அழிக்கப்பட்டு விடும். இதன் மூலம் இஸ்ரோவுடனான சந்திரயானின் திட்டப் பணிகள் முடிவுக்கு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

admin @ 9:06 pm
Filed under: news
Kalaiznar health insurance scheme: Ramadoss rises questions

Posted on Sunday 30 August 2009

கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ராமதாஸ் கேள்வி

மிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ‘கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட’த்தை தான் எதிர்க்கவில்லை என்றும், இத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று என்று முதல்வர் கூறியிருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,

‘தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ‘கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட’த்தை நான் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், அந்த நோக்கத்தின் பலன் பயனாளிகளின் தேவைக்கேற்பவும், பயனுள்ள வகையிலும் போய்ச் சேர வேண்டும். அதற்காகவே ஆந்திரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒப்பிட்டு சில விவரங்களை தெரிவித்திருந்தேன்.

அந்த விவரங்கள் எதையும் முதல்வர் கருணாநிதி மறுக்கவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுகிறாரே என்ற ஆத்திரத்தில் என் மீது வசைமாறி பொழிந்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக இருக்கிறது; அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைகளும், மாவட்ட மருத்துவமனைகளும் இருக்கின்றன என்று அறிக்கையில் கருணாநிதி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள நோய்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது நடைமுறையில் கடினம் என்றும், தேவையான மருத்துவ நிபுணர்கள், ஏனைய வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கச் செய்வது இயலாது என்றும் கூறியிருக்கிறார். ஏன் இந்த முரண்பாடு?

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி ரூபாயை வெளிநாட்டைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு அளித்து, வாழ்நாளில் ஒரே ஒரு முறை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட அந்தப் பெருந்தொகையைக் கொண்டு முதல் கட்டமாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும், மாவட்ட மருத்துவமனைகளையும் தரம் உயர்த்தி, தேவைக்கேற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் சிகிச்சைப் பெற்று வாழ்வதற்கு வழி ஏற்படுத்தலாம்.

ஆனால், இது நடைமுறை சாத்தியம் அற்றது என்கிறார் கருணாநிதி. இந்த வாதம் அதிர்ச்சி அளிப்பதாகவும், வியப்பாகவும் உள்ளது.

அப்படியானால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் எல்லாம் வெறும் காய்ச்சலுக்கும், தலைவலிக்கும், உடல் வலிக்கும், சளிக்கும் மருத்துவம் அளிப்பதற்கு மட்டும்தானா?

இதற்கு தனியாக ஒரு துறை எதற்கு? அமைச்சர் எதற்கு? செயலாளர்கள் எதற்கு? அரசு மருத்துவமனைகள் எதற்கு? அனைத்தையும் தனியார்மயமாக்கிவிடலாமே’ என்று கூறியுள்ளார்.

admin @ 8:33 pm
Filed under: news
Free schemes will continue, says Karunanidhi

Posted on Sunday 30 August 2009

ஏழைகள் சமுதாய அந்தஸ்து பெறும்வரை இலவசம் தொடரும்: கருணாநிதி உறுதி

ழைகள் சமுதாய அந்தஸ்து பெறும்வரை அரசின் இலவசங்கள் தொடரும் என முதல்வர் கருணாநிதி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

‘இலவசத் திட்டங்கள் மூலம் உதவிகளைப் பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இருக்கும் வரை, இத்தகைய உதவிகளைச் செய்து தான் ஆக வேண்டும். ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் முன்னேற்றம் அடைய செய்து விட்டோமென்றால், அதன் பிறகு இலவசத் திட்டங்களை நிறுத்தி விடலாம்.

ஆனால், மக்கள் அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை, இத்தகைய உதவிகள் அளிக்கப்பட்டாக வேண்டுமென்பது திமுக அரசின் குறிக்கோள்.

ஏழைகள் ஓரளவுக்கு சமுதாய அந்தஸ்து பெறுகின்ற வரையில் இலவசத் திட்டங்கள் என்பது இன்றியமையாதது என்பது அனுபவபூர்வமான உண்மை.

பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பு உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டார்.

இதனால், அவர்கள் யார் எனக் கேட்டு, அதன் மீது விசாரணை மேற்கொள்ளத் தயாராகவும், அதுபற்றிய விவரத்தை அவரிடம் அறியவும் காவல் துறை சம்மன் அனுப்பியது.

பொறுப்புள்ள ஒரு கட்சியின் தலைவர் என்றால் நேரில் சென்று தனக்குத் தெரிந்த விவரங்களைக் கூறுவதற்கு ஏன் தயங்குகிறார்?

அப்படியானால் அவர் முதலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கொலையில் பங்கு உண்டு என்று சொன்னது தவறான தகவலா? யார் மீதாவது குறிப்பாக, ஆளுங்கட்சியின் மீது குற்றம்சாட்டுவது, அதற்கு விளக்கம் கேட்டால், ஓடி ஒளிவது என்பது அரசியல்வாதிக்கு அழகல்ல.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான இளங்கோவன், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவையும், தமிழக அரசையும் தொடர்ந்து தாக்கி வருகிறார். அவரது பேச்சுக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதிலளித்துள்ளார்.

இப் போக்கு தோழமைக் கட்சிகள் இடையே தேவையில்லை என்பது தான் என்னுடைய கருத்து. திமுகவைப் பற்றியோ, தமிழக அரசைப் பற்றியோ ஒருசில விரல் விட்டு எண்ணத்தக்க காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற விமர்சனங்களில் ஈடுபடுவதும், அதற்கு பதில் சொல்கிறேன் என்று இந்தப் பக்கமிருந்து சிலர் முற்படுவதும் விரும்பத்தக்கதல்ல” என்று கூறியுள்ளார்.

admin @ 8:17 pm
Filed under: news