Monday, 29 Jun 2009

Marxist carelessness leads to defeat: Baradhan

bardhan.jpgமார்க்சிஸ்டுளின் அலட்சியமே தோல்விக்கு காரணம்: பரதன்

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளின் தோல்விக்கு காரணம் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசின் அலட்சியப் போக்குதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பரதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

”மேற்கு வங்கத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு விவசாயச் சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. அதோடு நிறுத்தியிருக்காமல் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாதது அரசின் அலட்சியப் போக்கினை காட்டுகிறது. இதனை திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றுவிட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு நிர்வாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கலக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதும் மிகப்பெரிய குறையாகும்.

அவர்கள் கூட்டணி அரசு என்பதை மறந்துவிட்டு ஒரு கட்சி ஆட்சி போல் நடந்து கொண்டதும் தோல்விக்கான காரணங்களுள் ஒன்றாகும்” எனக் கூறினார் பரதன்.

Related Posts Title


One Response to “Marxist carelessness leads to defeat: Baradhan”

  1. jahir

    pesi pesi alivadhu enbadadhu idhu than pol therigiradhu.

Leave a Reply