Sunday, 31 May 2009
ஆர்த்தியை 4ஆம் தேதி கைப்பிடிக்கிறார் ஜெயம்ரவி

ஜெயம்ரவி திருமண பந்தத்தில் நுழைகிறார். வரும் 4ஆம் தேதி அவருக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. மணமகள் ஆர்த்தி தயாரிப்பாளர் விஜயகுமாரின் மகள் ஆவார். 7ஆம் தேதி வரவேற்பு நடக்கிறது.
தன்னுடைய திருமணம் குறித்து, ஜெயம்ரவி நிருபர்களிடம் கூறியதாவது:
”இது காதல் திருமணம்தான். ஆர்த்தியை எனக்கு சில ஆண்டுகளாகவே தெரியும். அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் காதலைச் சொன்னேன். ஏற்றுக்கொண்டார். இப்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது.
திருமணம் தொடர்பாக எங்கள் குடும்பத்திற்குள் பிரச்னை வந்தது எனக் கூறப்பட்ட செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. நான் கேட்காமலேயே என் விருப்பங்களைப் பூர்த்தி செய்து வரும் பெற்றோர் என் காதலை ஏற்க மறுப்பார்களா என்ன?
ஆர்த்தியைக் கைப்பிடித்தப் பிறகு திரைத்துறையில் மிக உயர்ந்த இடத்தை நான் அடைவேன் என என் உள்மனம் கூறுகிறது. திருமணம் செய்வதால் என் ரசிகைகளை இழந்துவிடமாட்டேன். என்னுடைய சினிமா இமேஜும் எந்தவிதத்திலும் பாதிக்காது” என்று கூறினார்.
































