Tamilvanan » 2009 » January

Archive for January, 2009

Punch Balu

Friday, January 30th, 2009

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.

பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

நான் பாரத ரத்னா விருதை எதிர்ப்பார்க்கவில்லை. கலைஞர் பட்டமே எனக்குப் போதும்.
- கருணாநிதி

அப்ப, எதிர்பார்க்கறதுக்கு முன்னாடியே கொடுத்துடனும்னு சொல்ல வர்றீங்களா?

நிஜம் சொன்னால் ரஜினியைவிட நீயொரு வசீகரமான ஃபிகர். நாவினிக்க உன்னைப் பாடியே என் உடம்பில் ஏறிப்போனது ஷுகர்
-கருணாநிதியைப்பாராட்டி கவிஞர் வாலி

வாலி… நீயொரு ஜாலி
சினிமாவில் நீ எழுதுவது லாலி
கலைஞரை புகழ்வதே உன் ஜோலி
உன் வர்ணிப்புக்கு இல்லை ஒரு வேலி
எத்தனை வேண்டுமானாலும் உனக்குத் தரலாம் கூலி
எப்படி இருக்கு இந்த கேலி?

ஆபாச வாழ்த்து அட்டை, பொதுமக்கள் கூடும் இடங்களில் அருவருக்கத்தக்க அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கட்டுப்பாடு  விதிக்காமல், காதலர் தினத்துக்கே தடைவிதிக்கவேண்டும்.
- இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் செந்தில்குமார்

பேசாம யாருமே காதலிக்கக் கூடாதுன்னு தடைச் சட்டம் போட்டுருலாமே. அப்புறம் காதலர் தினமாவது காதலிக்காத தினமாவது. காதலர்களும், அவர்தம் பெற்றோர்களும் கவலைப்பட விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைத்தால் வேற என்னதான் பஞ்ச் அடிக்கறதான்.

ஒட்டுமொத்த ஈழ இயக்கத்தையே நையாண்டி செய்யும் அம்மாவிற்கு இன்று வரை ராமதாஸ் பதில் சொல்லியிருக்கிறாரா? அடுத்த கூட்டணி அம்மாவோடு என்பதால் அவர், எவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறார்.
- பத்திரிகையாளர் சோலை கட்டுரை

நடுநிலையாக இருக்கவேண்டிய பத்திரிகையாளர்களில் சிலரே பாதைகள் மாறி மாறி பயணிக்கும்போது அரசியல்வாதிகளைப் பற்றி கேட்கவேண்டுமா என்ன?

அதிலும் ஐயா, மதிப்பவர்களை மிதிப்பதிலும் மிதிப்பவர்களை மதிப்பதிலும் வல்லவர் ஆயிற்றே. அவருக்குத் தேவை ஜெயிக்கும் கூட்டணியில் இடம். சென்ற முறையைவிட கூடுதல் எம்.பி., எம்.எல்.ஏ., சீட்டுகள் அவ்வளவுதான். அதற்காக அவர் எத்தனை நாடகம் வேண்டுமானாலும் போடுவார். அவர் மட்டுமா அப்படி, அரசியல் கட்சிகள் எல்லாம அப்படித்தானே உள்ளன.

Punch Balus Old punches

2009/01/23 Punch Balu

2009/01/16 Punch Balu

2009/01/09 Punch Balu

2009/01/02 Punch Balu

2008/12/26 Punch Balu

2008/12/19 Punch Balu

2008/12/12 Punch Balu

2008/12/05 Punch Balu

2008/11/28 Punch Balu

2008/11/21 Punch Balu

2008/11/14 Punch Balu

2008/11/07 Punch Balu

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

What happen to Tamilnadu Peace?

Friday, January 30th, 2009

bus-burning.jpgதமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

தமிழகத்தில் பல பேருந்துகள் உடைக்கப்பட்டும், கொளுத்தப்பட்டும் வருவது வேதனைக்குரியது. இவற்றிற்குக் காரணமானவர்களின் தலைவரே இதை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவோ, விரும்பவோ மாட்டார்.

பொதுமக்கள் அதுவும் ஏழை எளியவர்கள் பயன்படுத்தும் வாகனமான பேருந்தைக் கொளுத்துவது நம்மவர்கள் தலையில் நம்மவர்களே மண்ணை வாரிப்போட்டுக் கொள்வதற்குச் சமம்.

இத்தகைய கலவரங்களில் பாதிக்கப்பட இருப்பவர்களின் சாபத்திற்கும் வசவுக்கும் ஆளாவதில் என்ன இலாபம் இருக்க முடியும்?

இலங்கைப் பிரச்னை என்பது இரு தலைமுறைகளுக்கும் மேலாக நடந்து வருகிற ஒன்று.

நம்மவர்கள் அதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் இங்குள்ளவர்களின் இரத்தங்கள் துடிப்பதும் கொதிப்பதும் புரிகிறது. ஆனால் இது எல்லை கடந்த பிரச்னை என்பதால் நளினமாகக் கையாள வேண்டும். ஏற்கெனவே இதைக் கையாண்ட விதத்தில் நடந்த தவறினால்தான் ராஜீவ் என்கிற அருமைத் தலைவரை நாம் இழந்தோம்.

மூக்கை அதிகம் நுழைத்தால், உலக நாடுகளின் கண்டனத்திற்கும் ஆளாவோம். இது முள்ளின்மீது விழுந்த சேலை. உள்ளூர் அரசியல் தலைவர்களுக்கு இது தெரியாதா? தெரியும்! அரசியல் இலாபக் கணக்குகளோடு எது ஒன்றையும் காய் நகர்த்தும் வேலை இங்கு நிறையவே நடக்கிறது.

ஒரு தலைவர் 10 நாள் போராட்டம் அறிவித்து தமிழகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வோம் என்கிறார். ஒரு தலைவர் இவர் என்ன செய்தாலும் அவரைப் பின்தொடர்வேன் என்கிறார். ஒரு தலைவர் மாணவர்களை இதில் சம்பந்தப்படுத்துகிறார். ஒரு கம்யூனிஸ்ட் தலைவரும் இலங்கைப் பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்தத் தேதி குறிக்கிறார்.

தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை இவர்களது நடவடிக்கை பாதிக்குமே தவிர, எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை. வேறு வழியில் சொன்னால் எந்தத் தீர்வையும் காணமுடியாத ஒரு விஷயத்திற்காக நமக்கு நாமே சேதங்களை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த விஷயத்தில் அரசுக்கு ஏற்பட்டுவரும் இழப்புகளை ஈடுசெய்யும்போவது யார் என்று எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா கேட்டுள்ள கேள்வி சிந்திக்கத்தக்கது.

இப்போராட்டங்களைத் தீவிரப்படுத்தி தமிழகத்திலும் ஏன் மத்தியிலும்கூட ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குவதுதான் இவர்களது திட்டமா?

நிலைமை இப்படியே தொடர்ந்தால் தி.மு.க.வும் மத்தியக் கூட்டணி அரசும் பதவியிழக்கும் நிலைமைகூட உருவாகலாம். யார் கண்டார்கள்?

இரு அரசுகளையும் ஆட்டம் காண வைத்தால் இவர்கள் விரும்புகிற எல்லை கடந்த ஆதிக்கம் எப்படிச் சாத்தியமாக முடியும்?

ஜனநாயக நாட்டில் அறவழிப் போராட்டங்களுக்கு எத்துணையோ வசதிகள் இருக்க, சில தமிழகத் தலைவர்கள் தோந்தெடுத்துள்ள வழி மிகவும் சீர்கேடான வழி என்றே தோன்றுகிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Self decision is best

Friday, January 30th, 2009

lenatamilvanan.jpgகைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

ஒருவரைக் கைக்குள் வைத்துக்கொண்டு காரியம் சாதிப்பவர்களை இந்த உலகம் என்றாவது பெருமைப்படப் பேசியது உண்டா?

”அந்தாளைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு இல்லாத அநியாயம் பண்றான்” என்கிற பழிச் சொல்தான் இவர்களுக்கு மிஞ்சுகிறது.

சரி, கைக்குள் சிக்கிக் கொண்டவருக்காவது இதில் பெருமையிருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. ”இவனுக்கு சொந்த புத்தி சுயபுத்தி வேண்டாம்? இப்படி ஆட்டுக்கிறதுக்கெல்லாமா ஆடுறது?” என்று அவருக்கும் பழிச் சொற்கள் காத்திருக்கின்றன.

நன்கு வளர்ந்த மகன்களைக் கைப்பிடிக்குள் வைத்திருக்கிற தாய்மார்கள் சிலரை எனக்குத் தெரியும்.

இத்தகைய பிள்ளைகள் எந்த ஒரு முடிவையும் தாயைக் கேட்காமல் எடுக்க முடியாது என்கிற நிலைமை. தப்பித் தவறி இவர்கள் சுயமாக ஏதும் முடிவெடுத்திருந்தால், ”என்னைக் கேட்காமல் எப்படி முடிவெடுக்கலாம்? அதிலிருந்து பின்வாங்கு” என்று பின்வாங்க வைத்துவிடுவார்கள். அதாவது இது அவர்களுக்கு ஒரு ஈகோ பிரச்னை.

எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியாத - அது மறுக்கப்பட்ட நிலையில் இனி நாம் முடிவெடுப்பதில் பயனில்லை என்கிற முடிவிற்கு வருகிறார்கள். இதனால் எது ஒன்றிலும் சுயமாகச் சிந்திப்பதையே விட்டுவிடுகிறார்கள். இந்தத் தன்மை காரணமாக இவர்களது மூளை குளிர்சாதனப் பெட்டியில் உறைபனிக்குள் வைக்கப்பட்ட காட்சிப் பொருளாக ஆகி, மழுங்கியே போய்விடுகிறது.

இந்த நிலையில் உரியவர்கள் அடித்துக்கொள்ளும் பெருமைகளைக் கேட்கக் காதுகளுக்குச் சகிக்கவில்லை. ”என்னைக் கேட்காம எதுவும் செய்ய மாட்டான்; என்னை மீறி எதுவும் நடக்காது” என்று இவர்கள் சொல்வது ஒரு கிழப்புலி ஒரு வாலிபப் புலியை வேட்டையாட அணுமதிக்காமல் கடித்துப் போடுவதற்குச் சமம்.

இரட்டை குழந்தைகளுள் ஒருவருக்கு ஏற்கும் மருந்து மற்றவருக்கும் ஏற்கவேண்டும் என்று அவசியமில்லை என்கிறது மருத்துவச் சரித்திரம்.

அப்படி இருக்கையில் மூத்த தலைமுறை நவீன தலைமுறையின்மீது தம் பஞ்சாங்க விதிகளைத் திணிப்பது எப்படிச் சரி? கேட்டுக் கேட்டு முடிவெடுக்கும் நிலையை வாழ்வில் பாதி வரை கொண்டு வந்தால் மீதமிருக்கும் அந்த இளைய தலைமுறையின் வாழ்நாளை வழி நடத்த மூத்த தலைமுறை பிழைத்துக் கிடக்க முடியுமா?

குதிரைகளைக் கழுதைகளாக்கிவிட்ட இவர்களை நினைத்தால் எனக்கு ஆதங்கமாகவே இருக்கிறது.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Travel around Taiwan

Friday, January 30th, 2009

taiwan-temple.jpgதைவான் சென்று வந்தேன்

நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

தைவானில் யோகக் கலையைத் தமிழ்நாட்டுக்காரர்கள் எவரும் பயிற்றுவிக்கவில்லையா? என்கிற என் கேள்விக்கு சுரேஷ்குமார் தயாராக ஒரு பதிலைச் சொன்னார்.

சேவாப்பூர் மாணிக்கம் என்கிற தமிழர் ராமகிருஷ்ணா மிஷன் நிறுவனத்தின் மூலமாக தமிழகத்தில் யோகக் கலையை 30 ஆண்டுக் காலமாகப் போதித்து வருகிறார். இவர் வழியே இங்கு பல சந்தர்ப்பங்களில் யோகக் கலை இங்கும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள எத்துணையோ யோகக் கலைஞர்கள் இந்த நாட்டை முறையான வழிமுறைகள் மூலம் அணுகி, பரப்புவதற்கு முயற்சி எடுத்துக் கொள்ளலாம். உடல்நலம் சார்ந்த விஷயம் என்றால், இங்கு தைவானில் அப்படி ஓர் வரவேற்பு இருக்கும். நாமெல்லாம் (?) ரஜினி, கமலின் புதுப்படம் என்றால் ரிசர்வ் செய்து பார்ப்போமே, அப்படிப்பட்ட ஆர்வத்துடன் யோகாவை விரும்பி வரவேற்கிறார்கள்.

உடல் சற்றுப் பெருக்க ஆரம்பித்தால் உடனே அக்கறைப்பட்டு களத்தில் இறங்கி, ஜாகிங், ஸ்விம்மிங், டான்ஸ், சைக்கிளிங் என்று இறங்கிவிடுவார்கள். யோகாவுக்கு மட்டும் சரியான வடிகால் இங்கு ஏற்படுத்தப்பட்டால், நிச்சயம் இக்கலை இங்கு இன்னும் முன்வரிசைக்கு வந்துவிடும்.

”உண்மைதான் என்று படுகிறது. நம் கலைகளைத் தூக்கி உயர்த்திப் பிடிப்பதில் நம்மவர்கள் இன்னுங்கூட கவனம் செலுத்த வேண்டும்.”

”தங்கள் உடல்நலத்தின்மீது அபார ஆர்வம் காட்டுபவர்கள் தைவானியர்கள். தைபே 101 என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.”

”ஆமாம் 101 மாடிகளைக் கொண்ட கட்டடம் அது. நல்லவேளை இதைப் பற்றி ஞாபகப்படுத்தினீர்கள். தைபேயில் காணவேண்டியவை என்று நான் பட்டியல் போட்டு வைத்த இடங்களுள் அதுவும் ஒன்று.”

”அவசியம் போவோம் லேனா சார். இந்த தைப்பே 101 கட்டடத்தின் ஆண்டு விழாவின் போது ஒரு போட்டி வைத்தார்கள்.”

”என்ன போட்டி?”

”101 மாடிகளையும் படிவழியே ஓடி ஏறும் போட்டி!”

”மூன்று மாடிகளை ஓடி ஏறினாலே முழங்கால்கள் நம்மைக் கெஞ்சுமே!”

”தைவானியர்கள் இந்த மாதிரிப் போட்டிகளில் எல்லாமே வயது வித்தியாசம் பாராமல் கலந்துகொள்வார்கள்.”

”அப்படியா?”

”ஆமாம். இந்தப் போட்டியில் 80 வயதுப் பெரியவர் ஒருத்தர் கலந்துக்கிட்டாரு!”

”என்ன சொல்றீங்க சுரேஷ்? 80 வயதில் 101 மாடி ஓடி ஏறுவதா?”

”ஏறிப் பரிசும் வாங்கினாரே!”

”ஓ!”

”இங்கேயெல்லாம் யாரும் வயசாச்சுன்னு ஒதுங்கிறதே இல்லை. 90 வயது வரை சுறுசுறுப்பா ஓட்டமும் பாட்டமுமா இருப்பாங்க. பார்க்குறதுக்கும் வயது தெரியாம இருப்பாங்க. 90 வயதுக்காரரை உங்களுக்குக் காட்டுகிறேன். 70 வயதுதான் மதிப்பீங்க.”

”பரவாயில்லையே! உடல்நலத்தில் அக்கறை செலுத்தும் எந்த ஒரு சமூகத்தையும் எனக்கு மிகப் பிடிக்கும். இந்த வகையில் தைவானியர்களை எனக்கு மிகப் பிடிக்கிறது.”

”நம்ம மக்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லுங்க சார். உண்மையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம்ம மக்களை நினைச்சா ஏக்கமா இருக்கு. தைவானியர்களின் யோகாசனம் ஆர்வம் பற்றி இன்னமும் சொல்லணும். பல பேர் இந்தியாவுல வந்து யோகா கத்துக்கிட்டு, இதையே முழுநேர வருமானத் தொழிலா மாத்திக்கிட்டாங்க.”

”ஆர்வத்தைப் பழக்கமாக்கி, பழக்கத்தை வருமானமாக்கி, பலே ஆளுங்கதான் இந்தத் தைவானியர்கள்.”

”வருமானம்னாலும எவ்வளவுங்குறீங்க! ஒரு டாக்டரும் ஓர் இன்ஜினியரும் சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு இணையாக இங்கே உள்ள யோகா மாஸ்டர்கள் சம்பாதிக்கிறாங்க.”

”ஐயோ! இதையெல்லாம் சொல்லி என்னோட ஏக்கத்தை ரொம்பவே கிளறீங்களே!”

”உண்மையைச் சொன்னேன் லேனா சார்.”

”இதப் பார்த்துட்டு இப்ப தைவானியர்கள் நிறையப் பேர் இந்தியாவுலே வந்து இறங்கிட்டாங்க.”

”அப்படியா?”

”ஆமாம் 3-4 வருஷம் வரை தங்கி யோகாவைப் பேருக்குக் கத்துக்காம ஆழமாக் கத்துக்கிட்டு நாடு திரும்பி பிராக்டீசை ஆரம்பிச்சிடுறாங்க.”

”கேட்கவே ஆச்சரியமா இருக்கு சுரேஷ். நம்ம கலை வெளிநாட்டவர்களுக்கு நல்ல வருமானம் தந்துக்கிட்டிருக்குங்கிறீங்க!”

”ஆமாமா. சந்தேகமே வேண்டாம்.”

”இங்கு வந்தபிறகு உங்களது உடல்நலம் பற்றிய பார்வை மாறியிருக்கிறதா சுரேஷ்? எனக்கே நாடு திரும்பியதும் உடல்நலத்திற்காக தைவானியர்களைப் போல் இன்னும்கூட நேரம் ஒதுங்கி அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற எண்ணம் உண்டாகியிருக்கிறது.”

”நிச்சயமாக மாறியிருக்கிறது. நான் சற்று மாறியிருக்கிறேன் என்பதற்கு ஒர் உதாரணம் சொல்கிறேன்.”

”சொல்லுங்க.”

”நானும் சில தைவானிய நண்பர்களும் சேர்ந்து மலையேற்றம் போய்விட்டு வந்தோம்.”

”சற்று தள்ளித் தெரிகிறதே ஒரு குட்டை மலை அதிலா?”

”இல்லையில்லை. லாலாசான் என்று ஒரு மலை இருக்கிறது.” ‘லாலாசான்’ என்று ஒருமுறை நானே சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.

”எவ்வளவு உயரம்?”

”2000 அடிகள்?”

”அவ்வளவுதானா உயரம்?”

”இங்கே இருக்கிற மலைகளெல்லாம் அதிக உயரம் இருக்காது.”

”ஓ! சரி, சொல்லுங்கள். எவ்வளவு பேர் போனீர்கள்?”

”15 பேர்”

”உங்கள் வயதுக்காரர்களா?”

”அதுதான் இல்லை. குடும்பம் குடும்பமாக எல்லா வயதினரும்.”

”அட! பிள்ளைகள் பெண்கள்?”

”ஆமா.”

”இங்க இவுங்ககூட மலையேறுவாங்களா?”

”தாராளமா!”

”ஆச்சரியமா இருக்கு!”

”ஆபத்தான பயணமா இருந்துச்சா? வனவிலங்குகள்? பாம்புகள்?”

”அதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க சார். இவையெல்லாம் இருக்கா இல்லையான்னு உறுதியா சொல்ல முடியாததுக்குக் காரணம், நாங்க இந்த மாதிரி ஆபத்தான விலங்குகள் ஒண்ணுகூடப் பார்க்கலை.”

”எத்தனை நாள் மலை ஏற்றம், இறக்கம்!”

”மொத்தம் ஐந்து நாள்?”

”குளிர்?”

”கடுமையாகத்தான் இருந்துச்சு. ஆனா தக்கப் பாதுகாப்புடன் போனோம். அவ்வளவாகத் தெரியலை.”

”தங்குறது?”

”அங்கங்க டென்ட் அமைச்சுக்குவோம்.”

”பாதை தவறிப் போயிட வாய்ப்பு இருக்கா?”

”இங்கேயெல்லாம் அருமையான தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கு. யாரும் வழி தவறிப் போக வாய்ப்பு இல்லை. அங்கங்கே தகவல் பலகைகள் இருக்கும். வழி தவறிப் போயிட்டாக்கூட உதவ, வழி காட்ட நிறைய அமைப்புகள் இருக்காங்க. லாலாசான் மலையோட மூலை முடுக்கெல்லாம் தெரிஞ்சவங்களோட பேசிப் பேசி சரியான பாதைக்குத் திரும்பிடுவாங்க.”

”ரொம்ப வியப்பா இருக்கு சுரேஷ். இந்த நாட்டுக்காரங்க இரசனையும் செயல்பாடும்.”

”மேல போய் ஏதும் அதிசயம் கண்டீர்களா?”

”மலை உச்சியில் ஓர் அதிசயம் காத்திருந்துச்சுப் பாருங்க. அசந்துட்டேன்.”

”அப்படியா? என்ன அப்படி அதிசயம்?”

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Avarai

Friday, January 30th, 2009

avarai.jpgஆவாரை

மலைச்சரிவுகளிலும், சிலவகைப் பூமியிலும் அதிகம் கிடைக்கிறது. சீயக்காய் போன்று சிகையிலுள்ள அழுக்கைப் போக்கிவிடும். வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும். இச்செடியானது மத்திய இந்தியா, தென்னிந்தியா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் ஏராளமாக வளரும் குத்துச் செடி. இதன் இலை, பூ, வேர், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

இது பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது. இது செம்மண் பூமியில் தான் அதிக அளவில் பயிராகிறது. பெருஞ்செடியாக அடர்ந்து வளரும். முட்டை வடிவத்தில் குண்டு குண்டாக மொக்குகள் விட்டு பெரிய இதழுடன் மஞ்சள் நிறப் பூக்களுடன் காணப்படும். மழைக் காலத்தில் செழிப்பாகவும், கோடைகாலத்தில் செழுமை குன்றியும் காணப்படும். இலை அகத்திக் கீரையை ஒத்த வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும்.

ஆவாரஞ் செடியின் பட்டை தோல் பதனிட அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. மந்தமான கண் தெளிவடையும். மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். ஆவாரம் பூவின் இதழ்களை ஆய்ந்து எடுத்து பச்சைப் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து சமைத்து தொடர்ந்து 40 நாள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் நல்ல பலம் பெறும்.

உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது. பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம். உடலிலுள்ள அரிப்பு நீங்க நன் மருந்து. ஆவாரைக்கு ‘தங்க மங்கை’ என்ற சிற்ப்புப் பெயருண்டு. இதில் தங்க பஸ்பம் செய்வார்கள்.

வைத்தியத் துறையில் இதன் எல்லா பாகங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடலிலுள்ள துர்நீரை இறக்கி சிறு நீராக சுரக்கச் செய்து நீரை வெளியேற்றுகிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கி, வலிமையைக் கொடுக்கிறது.

ஆவாரம்பூவை நெய்யில் வதக்கி உட்கொண்டு வர உடலில் மறைந்திருக்கும் பல வியாதிகள் அகன்று விடும். பூவை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை, வெட்டை, மேக நோய்கள், சோர்வு, நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும். ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில் கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும் சேர்க்கலாம்.

ஆவாரம் பூவுக்கு உடலைப் பொலிவுடன் அமைக்கும் சக்தி உண்டு. விருப்பம் போல பக்குவம் செய்து, இதனை உணவோடு சேர்த்துக் கொண்டால் உடலில் நல்ல தளதளப்பும், சாந்தியும் ஏற்படும்.

பூவுடன் பச்சைப் பயிறு சேர்த்தரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இலைகள் குளிர்ச்சியுடையது. வெயிலில் வெகு தூரம் நடப்பவர்கள், இந்த இலையை தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகை கட்டி நடப்பார்கள். வெயிலின் வெப்பம் பாதிக்காது. நடையும் சுறுசுறுப்புடன் தோன்றும்.

ஆவாரைப் பிசின் நிரிழிவு, வெள்ளைப்படுதல் முதலிய சிறுநீர் கேடுகளைப் போக்கும். இலை குளிர்ச்சியுடையமையால், வெயிலில் வெகுதூரம் நடப்பவர்கள் இவ்விலைகளைத் தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகையிட்டு நடக்க வெயிலின் கடுமை தாக்காது. பூவைச் சமைத்துச் சாப்பிட, கற்றாழை மணம், நீரிழிவு, நீர் வேட்கை சமனப்படும்.

விதையின் தோலைப் போக்கி, நுண்ணியதாகப் பொடிசெய்து கண்ணில் தூவியாவது அல்லது தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்ணோய்க்கு இடல் வழக்கு. இதனால் சீழ்பிடிக்கும் கண்ணோய் தீரும்.

வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால் இத்துடன் கற்கண்டு, பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆவாரை வேர்ப்பட்டையை கஷாயஞ் செய்து அதற்கு நேர் வெள்ளாட்டுப் பால் அல்லது பசுவின் பால், எண்ணெய் இவற்றைக் கூட்டித் தைலம் செய்து தலைமுழுகி வர, உடல் வெப்பந் தணியும், கண் குளிரும்.

ஆவாரந்துளிர், கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும். ஆவாரம், சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர், இலை, தண்டு, பூ முதலியவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை, மாலை கொடுக்க நீரிழிவு போகும். நீரில் சர்க்கரை அளவும் குறையும்.

அழகுக்கூடும்…

அழகுக் குறிப்புகள்

2009/01/23 அறுகம்புல்

2009/01/16 அரைக்கீரை

2009/01/09 வல்லாரை

2009/01/02 பொடுதலை

2008/12/26 குப்பைமேனி, பொன்னாங்கண்ணி

2008/12/19 கரிசலாங்கண்ணி

2008/12/12 சாம்பிராணி இலை

2008/12/05 கொத்துமல்லி

2008/11/28 புதினா

2008/11/07 கறிவேப்பிலை

2008/10/31 வேப்பிலை (மார்கோசா, வேம்பு)

2008/10/24 மருதோன்றி

2008/10/17 கற்பூரவல்லி, ஓமவல்லி - விஜயகுமாரி பாஸ்கரன்

2008/10/10 திருநீற்றுப் பச்சை

2008/10/03 துளசி

2008/09/26 சோற்றுக் கற்றாழை

2008/09/19 தண்ணீர்

2008/09/12 அழகுக் குறிப்புகள் - புவனா

2008/09/05 அஜீரணத்தைத் தவிர்க்கலாமே!

2008/08/29 அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்

2008/08/22 அழகுக் குறிப்புகள்

2008/08/15 புகைப்பிடிப்பவர்களுக்கு

2008/08/08 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்

2008/08/01 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்

2008/07/25 நடையா, இது நடையா?

2008/07/18 ஆரோக்கியமாக வாழ…

2008/07/11 அழகுக் குறிப்புகள்

2008/07/04 அழகுக் குறிப்புகள்

2008/06/27 அழகுக் குறிப்புகள்

2008/06/20 ‘சண்டே’ ஸ்பெஷல்

2008/06/13 உடற்பயிற்சி கூடங்கள்

2008/06/06 ஆண்களும் அழகு செய்து கொள்ளலாமே!

2008/05/30 ‘சண்டே’ ஸ்பெஷல்

2008/05/23 புருவ அழகு

2008/05/16 தலைமுடிக்குச் சாயமிடுதல் (டை)

2008/05/09 மணப்பெண் ஆவதற்கு முன்

2008/05/02 தலைமுடிப் பாதுகாப்பு

2008/04/25 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 4

2008/04/18 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 3

2008/04/11 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 2

2008/04/04 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 1

2008/03/28 அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்

Simple & best way

Friday, January 30th, 2009

cigarette-smoking.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

நம்ம வழி எளிய வழி

சிகரெட்டை விட எளிய வழி!

டெக்ஸர்ஸ் புற்று நோய் மருத்துவ மையம் சிகரெட் பழக்கத்தைவிட ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளது. அது என்ன? நீங்கள் உண்மையிலேயே சிகரெட் பிடிப்பதை நிறுத்த விரும்பினால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை முதலில் மேற்கொள்ளவும். இடையில் அந்த நினைவு வந்தால் உடனே 12 மணிக்கு குடிக்கலாம் என்று சற்று உரத்துச் சொல்லுங்கள். இந்த இடைவெளிப்படி புகைத்தால் நான்கு வாரங்களில் சிகரெட் எண்ணிக்கை குறையும். தினமும் 3, 4 சிகரெட் மட்டுமே பிடிப்பவர்கள் காலையில் அல்லது மாலையில் என்று ஒரே ஒரு சிகரெட் மட்டும் புகைத்து வந்தால் போதும். இவர்களும் விரைவில் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். நிரூபிக்கப்பட்ட வழிமுறை என்பதால் இந்த வழியில் புகைக்கு விடை கொடுக்கலாம்.

சாப்பாட்டைக் குறைக்க எளிய வழி!

ரெஃப்ரிஜிரேட்டரின் வெளியேயும், உள்ளேயும் நீலநிறம் இருக்க வேண்டும். நீலநிற விளக்கு ரெஃப்ரிஜிரேட்டரின் உள்ளே எரிந்தால் இயற்கையான உணவுப் பொருட்கள் நீல ஒளியில் பார்க்கும் போது பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். சாப்பிடும் தட்டு சிறியதாகவும் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது சிவப்புநிற உடையை சீருடையாக அணிந்துவந்தால் சாப்பிடும் எண்ணம் குறைந்து, உடல் பருமனும் குறைய ஆரம்பிக்கும். சாப்பாட்டுக்கு முன்பு எலுமிச்சை அல்லது தக்காளி சாறு சாப்பிடுவது பசியை மட்டுப்படுத்தும், வண்ணங்கள், எண்ணங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களால் உணவு சாப்பிடுவது எந்த விதமான விருப்பு வெறுப்பின்றியும் குறையும்.

திறமை பெருக ஓர் எளிய வழி!

பள்ளி, கல்லூரி மாணவர்களில் மிகவும் திறமைசாலியாக உருவாக சூயிங் கம் சாப்பிட்டபடியே ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கேட்டால் போதுமாம். ஜெர்மனியில் எர்லான் ஜென் பல்கலைக்கழகத்தின் அறிவுத்திறம் பற்றிய ஆய்வாளர் சைக்ஃப்ரைட் லெஹரல் என்பவர்,  சூயிங்கம் சாப்பிட்டபடியே விரிவுரை கேட்ட மாணவர்கள் மற்ற மாணவர்களைவிட 40% கூடுதலாக தகவல்களைப் பெற்றிருந்தனர் என்கிறார். காரணம், சூயிங் கம் சாப்பிடும்போது மூளை தொடர்ச்சியாக ஆக்ஸிஜனைப் பெற்றுக்கொண்டே இருப்பதுதான் என்கிறார். இப்பழக்கத்தினால் முன்பைவிடத் திறமைசாலியாக ஒருவர் உருவாகிவிடுவாராம். வேலைபார்ப்பவர்களும், தொழில் செய்பவர்களும், கலைஞர்களும் இந்த சூயிங் கம் முறையை வேலை செய்யும்போது பின் பற்றலாம் என்கிறார் இந்த ஜெர்மனியர்.

குளிர்காலத்தில் சரியான உணவைப் பெற ஓர் எளிய வழி!

மிகவும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மண்ணீரலும் வயிறும் சரியாகக் செயல்பட்டாலும் ஏதேனும் பிரச்னையைக் கொண்டு வந்துவிடும். இந்த நிலையில் குளிர்காலத்தில் சோளம், தினைமாவு, எள், இஞ்சி, பனைவெல்லம் முதலியவற்றை நன்கு சேர்த்து வந்தால் மண்ணீரலும் வயிற்று உறுப்புகளும் நன்கு பலப்பட்டுச் செயல்படும். குளிர்காலத்தில் அளவோடு சாப்பிடப்படும் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் முதலியவற்றால் இந்த உறுப்புகள் பழுதுபடாமல் இருக்கும். இது ஆயுர்வேதம் தரும் குறிப்பு.

ஜாக்கிங் மூலம் நல்ல உடல் நலன் பெற ஓர் எளிய வழி!

முதலில் 55 கஜதூரத்தை மட்டும் 4 தடவை மெல்லோட்டம் மூலம் நடங்கள். பிறகு இதே தூரத்தை 4 முறை சாதாரண நடை நடக்கவிடுங்கள். இந்த முறையில் மாற்றம் செய்யாமல் ஆறுவாரம் நடக்கவும். பிறகு 110 கஜ தூரத்தை 45 விநாடிகளில் மெல்லோட்டம் செய்து கடக்கவும். இதை ஒருவாரப் பயிற்சிக்குப் பிறகு 110 கஜ தூரத்தை 30 விநாடிகளில் கடக்கவும். கூடுதலாகவோ குறைவாகவோ செய்ய வேண்டாம். நம் கால்பாதங்களில் முக்கியமான 52 வகையான நரம்புகள் வந்து முடிகின்றன. இவை மெல்லோட்டம் செய்ய நன்கு தயார் ஆகும். இதற்குப் பிறகு ஒரு ஆறுமாதத்திற்கு ஒரு மைல் தூரத்தை ஒன்பது நிமிடங்களில் கடக்கும்படி மெல்லோட்டம் செய்யுங்கள். பிறகு வாழ்நாள் முழுவதும் ஒன்பது நிமிடங்கள் மட்டும் மெல்லோட்டம் செய்து வந்தால் போதும். அக்குபிரஷர் சிகிச்சைபோல 52 வகையான நரம்புகளும் உடலை முழுப் பாதுகாப்பில் வைத்திருக்கும். டெக்கான் ஹெரால்டு தரும் தகவல் இது.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Samayal

Friday, January 30th, 2009

samayal.jpgகொத்தவரங்காய் கூட்டு - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள் :

கொத்தவரை - 1/4 கிலோ
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
வெல்லம் - சின்னக்கட்டி
துவரம் பருப்பு - 2 கரண்டி (வேக வைத்து மசித்தது)
கடுகு - 1/2 தேக்கரண்டி
உ.பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
கூட்டுப்பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - 6 தேக்கரண்டி

செய்முறை :
கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி வேக வைத்து உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து புளியைக் கரைத்துவிட்டு வெல்லம் போட்டுக் கொதிக்க வைத்து கொதித்ததும் கூட்டுப்பொடி, பருப்பு இரண்டையும் கலந்து கொதிக்க வைக்கவும். எண்ணெய்யில் கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் தாளித்து தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கூட்டில் போடவும். அவரைக்காயையும் இதே போல் கூட்டு செய்யலாம்.

Chettinadu Samayal

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Junior Kelvi Pathil

Friday, January 30th, 2009
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்
husband-wife-fighting

எஸ்.செந்தில், சென்னை-77.

மனைவிகளுக்குப் பயப்பட வேண்டுமா?

ஆமாம்! மனைவிகளுக்குப் பயப்படவேண்டும்; மனைவிக்குப் பயப்படத் தேவையில்லை. அவளது அன்புக்கு மட்டும் கட்டுப்பட வேண்டும்.

earring-man

எல்.திவ்யா, சென்னை-118.

பெண்களைப் போல ஆண்களும் இப்போது முடி வளர்க்கிறார்கள். கம்மலை போட்டுக் கொள்கிறார்களே?

இவைமட்டும்தான் தெரிந்ததா உங்களுக்கு? ஷெர்வானியில் துப்பட்டாவும் போட்டுக் கொள்கிறார்களே, அது என்னவாம்? இந்த ஆண்களுக்குத் தங்களை எல்லோரும் உற்றுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வந்தவிட்டதா என்ன?

Jallikattu

ஆர்.குப்புசாமி, திருவண்ணாமலை.

ஜல்லிக்கட்டு மரணங்களும், காயங்களும் இவ்வருடம் மிக அதிகம். என்ன சொல்கிறீர்கள்?

உண்மை. ஜல்லிக்கட்டு எப்படி நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல பாதுகாப்பு விதிகளைச் சிபாரிசு செய்திருக்கிறது. இவற்றையெல்லாம் மதிக்காமல் தற்கொலைகளுக்கும் கொலைகளுக்கும் இரத்தக் களறிகளுக்கும் காரணமாக இருப்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

hudukka

ஆர்.பாபு, சென்னை.

குடுகுடுப்பைக்காரர்களை இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லையே?

நல்ல காலம் வருது. நல்ல காலம் வருது என்று சொல்லும் ஒரே சமூகம் தன் தொழிலை மாற்றிக் கொண்டு விட்டதா? ஐயகோ, இனி நமக்கு யார்தான் நம்பிக்கை ஊட்டுவார்கள்?

manmohan-singh

கே.முருகானந்தம், திருவேற்காடு.

தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்தாராமே மன்மோகன் சிங்?

எளிமை தேவைதான். ஆனாலும் இவ்வளவு கூடாது. பிரதமர், நேரத்தை இப்படிக் கரைக்கலாமா?

birth_death-certificate

எஸ்.குப்புசாமி, அரக்கோணம்.

பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை ஆன்லைனில் பெறலாமாமே?

டெட்லைன் ஆகாதவரை பாராட்டலாம்.

Ravindra-Singh-Jadeja

டி.சுரேஷ், வந்தவாசி.

இலங்கை செல்லும் கிரிக்கெட் அணிக்கென புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜடேஜா ஒளிவடுவாரா?

20-20 போட்டிகளில் சாதித்தவர்தான். 20 வயதுதான் ஆகிறது. இலங்கையில் மெண்டிஸின் பந்துகளைத் தடவோ தடவு என்று தடவாமல் ஆடுவாரா தெரியவில்லை. மெண்டிசின் பந்துகளைக் கிழிக்க ஓர் ஆள் வேண்டும். இதுதான் என் ஆசை!

alcohol

கே.கடற்கரை வடிவேல், சேலம்.

கள் வேண்டுவோர் அமைப்பின் போராட்டம் குறித்து?

போதையை விலை வடிவில் சற்று எட்டாத உயரத்தில் உயர்த்திப் பிடித்திருப்பது நல்லது. கள் என்றால் அஞ்சுக்கும் பத்துக்கும் கிடைத்து சர்வ சாதாரணமாகிப் போகும். இதில் அதிக போதையில்லை என்கிற வைகோவின் வாதம் ஏற்கத்தக்கது அன்று. நம்மவர்கள் வீணாய்ப் போக கள் போதையே போதுமானது. மதுவைத் திறந்தால் கூடவே கள்ளும் கிடைக்கும்படி செய்யுங்கள் என்கிற கோணம் வரவேற்கத்தக்கதுமல்ல! மாநில வருமானத்திற்கு டாஸ்மாக் அவசியம் என தமிழக அரசு நினைக்கிறது. கள் வந்தால் மிக ஏழை எளிய மக்களும் வீணாகிப் போவார்கள் என நான் நினைக்கிறேன்.

plant-tree

எம்.மணி, வெட்டுவாங்கேணி.

42 மரங்களை வெட்டியவருக்கு 210 மரக்கன்றுகளை நடச் சொல்லி, டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதே?

ஒரு மரத்திற்குப் பதில் ஐந்து மரக்கன்றுகளா? பிரமாதமா இருக்கே. நீதிமன்றத்திலும் கிராமப் பஞ்சாயத்துப் பாணி! வேண்டியதுதான்!

ltte-death

எஸ்.தேசிகன், புழல்.

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து ஐ.நா.சபையும் தனது கவலையைத் தெரிவித்துள்ளதே?

தெரிவிக்காதா பின்னே? நமக்கு மட்டும் ஊருக்கு வெளியில் சுடுகாடு. இவர்களுக்கு மட்டும் சுடுகாட்டுக்கு உள்ளே ஊர் என்றால், யார்தான் அக்கறை காட்டாமல் இருப்பார்கள்?

massage-center

பி.அன்வர், சென்னை.

மசாஜ் கிளப்புக்குப் போவீர்களா?

வீட்டில் சுளுக்கு எடுத்து விடுவார்கள்!

shiva-shankar-menon

டி.அப்பாசாமி, கரூர்.

சிவசங்கர் மேனன் பத்திரிகையாளர்களிடம் வாய் திறக்க மறுத்து விட்டாரே?

இந்த வெளிப்படையற்ற தன்மை மத்திய அரசு சிவசங்கர மேனனை இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கத்தையே சந்தேகம் கொள்ள வைக்கிறது. இவரது இலங்கை விஜயம் பற்றி வெள்ளை அறிக்கை உடனே தேவை!

nose

ஏ.அக்பர், பாளையங்கோட்டை.

மரணங்களுள் ஜீரணிக்க முடியாதது எது?

பேருந்தில் கடைசி இருக்கையில் அமர்ந்து பள்ளம் காரணமாகத் தூக்கி வீசப்பட்டு பேருந்தின் மேற்கூரையில் மோதி அண்மையில் ஒருவர் இறந்தாரே இதைச் சொல்லலாம். இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டு என் சல்லிமூக்கு உடைந்து இரத்தம் கொட்டியிருக்கிறது. பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்துப் பயணத்தைத் தவிர்ப்பதுடன் அவசியமானால் நடு இருக்கைகளில் பயணிப்பது ஓரளவு பாதுகாப்பு.

kolu

எல்.என்.லட்சுமி, ஆழ்வார்திருநகர்.

பொருட்காட்சியில் விற்கும் சமையல் சாதனங்களை வாங்கலாமா?

உங்கள் வீட்டில் கொலு வைப்பது பூஜை அறையிலா அல்லது பரணிலா? ஒரு எஜமான் விசுவாசத்தில் பொருட்காட்சியில் வேலை செய்யும் இந்தச் சாதனங்கள், நமது வீட்டுக்கு வந்தால், உடனே மக்கர் பண்ணும். அய்யாவுக்கு இதில் செம அனுபவம்! எனது வீட்டுக் கொலு இப்போது பரணில்தான்!

Raja-Kannappan

டி.ஜான், சென்னை-40.

அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்குப் போன இராஜ.கண்ணப்பன் மீண்டும் கட்சி மாறுவார் போலிருக்கிறதே?

தி.மு.க.வில் ‘கிளைமேட்’ ஒத்துக்கலையோ, என்னமோ?அதுதான் வெதுவெதுப்புக்காக வெளியே வரப் பார்க்கிறார்.


க.மணிமாறன், பெரம்பூர்.

சென்னை நகரின் புதிய காவல்துறை ஆணையர் எப்படி?

சிறந்த நிர்வாகியாகத் தெரிகிறார். சென்னை நகர ஆணையர் அலுவலகச் செயல்பாடுகள் இழுத்தடிப்பிற்குப் பெயர் போனவை. இதன் மீது இவர் கவனம் திரும்பியிருக்கிறது. கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறார். பார்ப்போம். இவரது உத்தரவு செல்லுபடியாகிறதா என!

back-cd

கே.முகமது அலி, ஆம்பூர்.

திருட்டு வி.சி.டி.க்கள் மீது காவல் துறையின் கவனம் திரும்பியிருப்பது பற்றி..?

பல ஊர்களில் பகிரங்கமாகப் புதுப்பட சி.டி.க்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. திரைத்துறையை நாசம் செய்யும் மோசமான நடவடிக்கை இது. தொடர்ந்த கண்காணிப்புத் தேவை. ஆடிக்கொரு தடவை நடவடிக்கை எடுக்கும் போக்கை மாற்றி, திரைத்துறையைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்.

karunas

டி.ஜோசப், புதுச்சேரி.

கருணாஸ் இசையமைப்பாளராகிறாராமே?

ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளை நடத்தியவர். தனி இசை ஆல்பங்களைத் தந்தவர். அண்மையில் நாயகனாகிக் கலக்கியவர். இசைத் துறைக்கும் வரட்டும். புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்போம். ஒரே பாணி இசையைக் கேட்டுக் கேட்டுப் புளித்தும் சலித்தும் போய்விட்டது.

feburary-30

ஜே.விஜயன், கோவை.

பிறந்த நாள் கொண்டாடாதவர்கள் யார்?

பிப்ரவரி 30ல் பிறந்தவர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே இந்த அனுபவம் கிடைக்கிறது. வரும் பிப்ரவரி 30இல் யார் பிறப்பார்களோ? அப்போது நமக்கு சாக்லேட்டும் கிடைக்காது. கேக்கும் கிடைக்காது.

money

டி.ரமேஷ், விழுப்புரம்.

அரசியல்வாதிகள் ஏன் ‘பினாமி’களையே சார்ந்திருக்கிறார்கள்?

இவர்களின் சொத்தே அவர்கள்தானே?

Himalaya

சி.எஸ்.ஏ, சென்னை-60.

நீங்கள் இமயமலைக்குப் போயிருக்கிறீர்களா?

ஊஹும்! நீங்களாகப் பார்த்து அனுப்பினால்தான் உண்டு!

tasmac

சி.ராமதாஸ், சென்னை-37.

டாஸ்மாக் பழக்கம் உண்டா?

அந்தக் கடைகள் என்றாலே, நான் ஆஃபாகி நிற்பேன் என்றுதானே நீங்கள் ஃபுல் ஆக நினைத்தீர்கள். உங்கள் நினைப்பில் குவார்ட்டர் கூட உண்மையில்லை.

23 January 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Carem champion puts complaint on a private tv

Friday, January 30th, 2009

தனியார் டிவியின் தில்லுமுல்லு: கேரம் சாம்பியன் இளவழகி புகா‌‌ர்

சென்னை : த‌னியா‌ர் தொலை‌க்கா‌ட்‌சி ‌நிறுவன‌ம் ஒன்றின்‌மீது கேர‌ம் சா‌‌ம்‌‌பிய‌ன் இளவழ‌கி, செ‌ன்னை கா‌வ‌ல்துறை ஆணைய‌ரிட‌ம் புகா‌ர் மனு கொடு‌த்து‌ள்ளா‌ர்.

உலக சீனியர் ‘கேரம்’ விளையாட்டு சாம்பியன் பட்டம் வென்ற இளவழகி, சென்னை மாநகர காவ‌ல்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்து‌ள்ளா‌ர்.

அ‌தி‌ல், ‘நான் சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், சாமந்திப்பூ காலனியில் வசித்து வருகிறேன். நான் தேசிய அளவில் ‘கேரம்’ விளையாட்டு போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளேன். பிரான்ஸ் நாட்டில் உலக அளவில் நடந்த போட்டியிலும் உலக சீனியர் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளேன்.

சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு கடந்த 2.3.2008 அன்று ஒரு தனியார் தொலை‌க்கா‌ட்‌சி நிறுவனத்தினர் என்னை அணுகி, உலக மகளிர் தினத்தையொட்டி பேட்டி கண்டனர். அந்த பேட்டியை அவர்களுடைய தொலை‌க்கா‌ட்‌சியில் ஒளிபரப்புவதாக கூறினார்கள். இதற்காக என்னை பல கோணங்களில் நிறுத்தி படம் பிடித்தனர். உலக மகளிர் தினத்தையொட்டி நான் பேட்டி கொடுத்தேன்.

இந்த நிலையில், நான் பேட்டி கொடுத்த நிகழ்ச்சி ‘பெப்சி’ குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் வெளியிடப்பட்டது. கிரிக்கெட் வீரர் டோனி நடித்துள்ள விளம்பர காட்சியோடு, நான் பேட்டி கொடுத்த நிகழ்ச்சியையும் இணைத்து விளம்பரமாக வெளியிட்டுவிட்டார்கள். இதை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட தொலை‌க்காட‌்‌சி நிறுவனத்தினர் என்னை ஏமாற்றிவிட்டனர். இதுபற்றி அந்த தொலை‌க்கா‌ட்‌சி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் பதில் அளிக்கவில்லை. நான் கொடுத்த பேட்டியை வர்த்தக ரீதியாக முறைகேடாக பயன்படுத்தி ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதித்துவிட்டார்கள்.

என்னை ஏமாற்றி, எனது பேட்டியை தவறாகப் பயன்படுத்திய சம்பந்தப்பட்ட தொலை‌க்கா‌ட்‌சி நிறுவனத்தின் மீதும், ‘பெப்சி’ குளிர்பான நிறுவனத்தின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எ‌ன்று புகார் மனுவில் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த புகார் மனுமீது விசாரணை நடத்த மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் ராதா‌கிரு‌ஷ்ண‌ன் உத்தரவி‌ட்டு‌ள்ளா‌ர்.

Srilanka: Take immediate action, says Sarathkumar

Friday, January 30th, 2009

இலங்கைப் பிரச்னையில் உடனடி முடிவு எடுங்கள்:
மத்திய,மாநில அரசுகளுக்கு சரத்குமார் வேண்டுகோள்

சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் உடனடி முடிவு எடுக்காவிட்டால் ஈழத் தமிழர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள் என்று ச.ம.க., தலைவர் சரத்குமார் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கை‌த் தமிழர் பிரச்னையை கையாள்வதில் மாநில அரசும், மத்திய அரசும் நிலைமையை உணராமல் காலம் கடத்தி வருகின்றன. ஏதோ நாடகம் அரங்கேறி வருகிறது என்றுகூட சொல்லலாம். அதன் உச்சகட்ட காட்சிதான் இந்திய வெளியுறவுத்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜியின் தற்போதைய இலங்கை பயணம். அவரது பயணம் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அதிபருடன் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.

காஸா பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்கிற அக்கறை இல்லாதது வேதனையளிப்பதாக இருக்கிறது. போர் நடைபெற்று வரும் இலங்கையின் வடக்கு பகுதிக்கு தமிழக தலைவர்கள், குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியும், எதிர்‌க்கட்சி தலைவர் ஜெயலலிதாவும் நேரில் வந்து பார்வையிடலாம் என்று இலங்கை அதிபர் அழைப்பு விடுத்திருப்பது, இந்த இருவருமே வரமாட்டார்கள் என்கின்ற நம்பிக்கையில் கூறியதாக எடுத்துக்கொள்ளலாம்.

விசாரணைக்காக பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களை காவல் முகாம்களில் அடைத்து வைத்து இலங்கை ராணுவத்தினர் கற்பழிப்பது, ஆண்களை நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்துவது என்ற செய்திகள் வெளிவந்திருப்பது இலங்கை ராணுவத்தின் அத்துமீறிய செயல்களை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் இப்படிப்பட்ட அவல நிலைக்காக மனமுடைந்து தமிழ் உணர்வுமிக்க முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து தன் இன்னுயிர் மாய்த்திருப்பது, இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மத்திய, மாநில அரசுகளின் இயலாமை தந்திருக்கும் ஏமாற்றத்தின் விளைவே என்பதை இரு அரசுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, காலம் தாழ்த்தும் ஒவ்வொரு வினாடியும் நம் தொப்புள் கொடி உறவுகள் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து உடனடியாக முடிவெடுக்காவிட்டால் ஈழத் தமிழர்கள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முத்துக்குமார் இன்று தொடங்கி வைத்த தீக்குளிப்பு யாகம் இனியும் தமிழகத்தில் தொடர்கதை ஆகிவிடக் கூடாது என்பதை அவசியம் இரு அரசுகளும் உணர்ந்தாக வேண்டும்.

தன் இனத்தை சேர்ந்தவர்கள் அழிந்து வருவது கண்டு தன்னுயிர் இழந்து முத்துக்குமார் குடும்பத்தினருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.