Tuesday, 30 Sep 2008
அதிகாரமிக்க பெண்கள்: இந்திரா நூயிக்கு முதலிடம்

பெப்சி நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி, வர்த்தக உலகில் அதிகாரமிக்கவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டியலை பிரபல பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. வருகிற 13ஆம் தேதி வெளிவரும் இதழில் இப்பட்டியல் இடம்பெறும்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்திரா நூயி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். 52 வயதான இவர், சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தி, அமெரிக்க விற்பனையில் ஏற்படும் சரிவை சமாளித்து உள்ளதாக பார்ச்சூன் இதழ் குறிப்பிடுகிறது. இப்போது பெப்சி நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 26 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கிறது.
இந்திரா நூயிக்கு அடுத்த இடத்தில் கிராப்ட் புட்ஸ் நிறுவனத்தின் ரோசன் பெல்ட் உள்ளார்.










































September 30th, 2008 at 11:34 pm
Excellent Madam.
God bless you and keep always your place in 1st.
Really I’m very proud of be an Indian.