Friday, 5 Sep 2008

2008/09/05 Lenavin Parvayil

fishers-boat.jpgஇருபக்க இடைவெளிகள்!

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என இலங்கை அரசு அளித்துள்ள உறுதி ஆறுதலான விஷயமாகும்.

இந்திய - இலங்கை எல்லைகள் மிக நெருக்கமானவை. காற்றின் ஆதிக்கத்தினாலோ, மீன்பிடிக்கும் ஆசையிலோ பல நேரங்களில் தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கும்போது இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும் சுடப்படுவதும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

நம் கடல் எல்லைகளுக்குள் மீன்வளம் குறைவு. ஆனால் இலங்கையின் தலைப்பகுதியான வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் மீனவளம் அபாரமாக உள்ளது. ஆனால் இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு இலங்கை மீனவர்களே மீன்பிடிக்கக் கூடாது என்கிற தடை இன்னமும் இருந்து வருகிறது.

இலங்கை மீனவர்களால்கூடப் பயன்படுத்தப்படாத பகுதி என்பதால் நம் மீனவர்கள் இப்பகுதிவரை சென்று தங்கள் உயிரைப் பணயம் வைக்கவும் முன்வருகின்றனர்.

இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை நம் கப்பற்படை காத்து வருவதால், இந்த எல்லைகளுக்குள் இலங்கைக் கடற்படை உள்ளே நுழைந்து நம் மீனவர்களைத் தாக்கும் சம்பவம் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம்.

இரவு நேரங்களில் எல்லை தாண்டி வரும் படகுகள் மீன்பிடி படகுகளா அல்லது விடுதலைப் புலிகளின் படகுகளா என்று அறியாத நிலையில், பாதுகாப்புக் கோணத்தில் இலங்கைப் படைகள் சுடுவதும், நெருங்கி வந்து கைது செய்வதும் உண்டு. இச்சம்பவங்களின்போதுதான் அத்துமீறல்கள் நடப்பதாக நம் மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் மாத இறுதியில் தனுஷ்கோடி அருகே உள்ள 3ஆம் தீடைப்பகுதியில் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடந்த தாக்குதல் இத்தகைய இரகத்தைச் சேர்ந்ததுதான். இதில் மனிதாபிமானமற்ற செயல்கள் நடந்துள்ளதை நம் மீனவர்கள் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்திய இலங்கைப் பிரதமர்களின் சந்திப்பின்போது, தமிழன மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விரிவாக அலசப்பட்டதும் இதன்பிறகு இருநாட்டு அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளும் இப்பிரச்னையை நல்ல தீர்வை நோக்கி நகர்த்தியிருக்கின்றன என்று நாம் நம்ப இடமிருக்கிறது.

இது வெறும் மீன் சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல, இலங்கையின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், இலங்கை அரசு தீவிரம் காட்டியது. இப்போதுதான் பிரதமர்களின் அளவில் பேசப்பட்ட விஷயமாகியிருப்பதால் இனி இதில் உலக நாடுகளே உன்னிப்பாகப் பார்க்கும் நிலைமை உருவாகியிருக்கிறது.

எனவே, இலங்கைக் கடற்படை, இலங்கை அரசு அளித்துள்ள உறுதி மொழியை கண்ணியத்துடன் காக்கும் என நம்பலாம்.

தமிழக மீனவர்களும் தங்கள் பங்கிற்கு நம் கடல் எல்லைகளைத் தாண்டாதிருப்பதே பாதுகாப்பானது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Posts Title


One Response to “2008/09/05 Lenavin Parvayil”

  1. thurai

    எனவே, இலங்கைக் கடற்படை, இலங்கை அரசு அளித்துள்ள உறுதி மொழியை கண்ணியத்துடன் காக்கும் என நம்பலாம்.

    haahaahaaahaaaahaahahaaah

Leave a Reply