Saturday, 30 Aug 2008
சிரஞ்சீவியின் சிக்கல் தீர்ந்தது!
டெல்லி: பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தவர் வாபஸ் பெற்றதால், சிரஞ்சீவி தனது பிரஜா ராஜ்யம் கட்சியைப் பதிவு செய்ய இருந்த தடை நீங்கியது.
சிரஞ்சீவி கடந்த 26ஆம் தேதி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து கட்சியைப் பதிவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அதே பெயரில் ஏற்கனவே சென்ன கிருஷ்ணா என்பவர் விண்ணப்பித்திருந்ததால் சிரஞ்சீவியின் கட்சிப் பெயரை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், சென்ன கிருஷ்ணா, தேர்தல் ஆணையத்தை அணுகி தனது விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக கூறி மனு செய்தார். இதையடுத்து சிரஞ்சீவி தனது கட்சியின் பிரஜா ராஜ்யம் பெயரை பதிவு செய்ய வழி பிறந்தது.
































