Wednesday, 13 Aug 2008

Hogenekkal scheme need our permission, yeddyurappa says

ஒகேனக்கல் திட்டம்: கர்நாடகத்தின் அனுமதி தேவை - எடியூரப்பா

டெல்லி: கர்நாடகா மாநிலத்தின் அனுமதி இன்றி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழகம் செயல்படுத்தக்கூடாது என்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறினார்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

”ஒகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்பது பற்றி தமிழகம், கர்நாடகம் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு, கர்நாடகா மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ கடிதம் அனுப்பத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
ஆனால் கர்நாடகத்தின் அனுமதியின்றி இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது என்று பிரதமரிடம் கூறியுள்ளேன். அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்துடன் எல்லைப் பிரச்னை உளள்து. அதனால் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்னைகளுக்கு சுமூகத் தீர்வு காணவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

Related Posts Title


Leave a Reply