Wednesday, 30 Jul 2008
கதையே இல்லாத தசாவதாரம்!: பாரதிராஜா அட்டாக்

‘கமலின் தசாவதாரம் திரைப்படத்தில் கதை இல்லை. தொழில் நுட்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது’ என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
திருச்சூரில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது பாரதிராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
”தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நல்ல கதைகள் இல்லை. புதிய எண்ணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கதையை விட்டுவிட்டு தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் தமிழில் தற்போது திரைப்படம் தயாரிக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த கமலின் தசாவதாரத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கதை எழுதுபவர்கள் எல்லாம் இயக்குநர்களாக மாறிவிட்டதுதான் இதற்கு காரணம். தமிழ் திரையுலகில் தற்போது இயக்குநர்களின் முக்கியத்துவம் குறைந்துபோய் நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது” என்றார்.









































