Posted on Monday 30 June 2008
தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: மக்கள் வரிசையில் நின்று வாங்கும் அவலம்!
சென்னை: தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்தன.
தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: மக்கள் வரிசையில் நின்று வாங்கும் அவலம்!
சென்னை: தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்தன.
இன்று மருத்துவர்கள் தினம்!: பி.சி. ராய் விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்!
சென்னை: இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்குகிறது.
சன் டிவி…இந்த ஆண்டு லாபம் ரூ.367 கோடி. இது கடந்த ஆண்டை விட ரூ. 98.16 கோடி அதிகம். சன் நெட்வொர்க்கின் மொத்த வருமானம் இந்த ஆண்டு 27.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
காரைக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை: ஜெயலலிதா எதிர்ப்பு
சென்னை: காரைக்குடியில் அமையப்போகும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்: முதல்வர் கையால் தொடக்கம்
சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
நாளை நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது: தினசரி இழப்பு ரூ.150 கோடி!
சென்னை: நாளை நள்ளிரவு முதல் தென் மாநிலங்களில் 5 லட்சம் லாரிகள் இயங்காது. இதனால் தினமும் ரூ.150 கோடிக்கு இழப்பு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
21 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை: பரிவுத் தொகை வழங்கி முதல்வர் வாழ்த்து
சென்னை: இவ்வாண்டில் 21 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது. அவர்களின் மரபுரிமையர்க்கு ரூ.1.15 கோடி பரிவுத் தொகையை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்: தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு
சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தற்போதைய தலைவரான சீனிவாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
அரசு கேபிள் டி.வி. ஜூலை 15இல் தஞ்சையில் தொடக்கம்!
சென்னை: அரசு கேபிள் டி.வி. வரும் ஜூலை 15ஆம் தேதி தஞ்சையில் தொடங்கப்படுகிறது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் இதை விரிவுபடுத்தத் தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.