Posted on Wednesday 30 April 2008

சிங்காரச் சென்னையை சீண்டமாட்டாள் நர்கீஸ்!
சென்னை: வங்கக்கடலில் உருவான நர்கீஸ் புயல் சின்னம் தீவிரம் அடைந்து வருகிறது. வட கிழக்கு திசையில் நகர்வதால், நர்கீஸ் புயலால் சென்னைக்கு ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் 3 உயர் கோபுரமின் விளக்குகளை இயக்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது,
பணவீக்க விகிதம்: குறைக்க நடவடிக்கை! ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
சென்னை : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பணவீக்க விகிதத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் வேணுகோபால் ரெட்டி கூறினார்.
சென்னை: மலேசியா நாட்டுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை கடத்த முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
எங்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆக்குங்கள்!: நாடார் சமுதாயத்திற்காக வசந்தகுமார் கோரிக்கை
சென்னை : மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், நாடார் சமுதாயத்தையும் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் கோரியுள்ளார்.
சமூகப் பிரச்னைகளின் தாய் மது!: அன்புமணியின் அடுத்த அட்டாக்
டெல்லி: ‘குடிப்பழக்கத்தால், பொருளாதாரம், சமூகம், சுகாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நடிகர், நடிகைகள் எந்தவொரு மதுபான வகையையும் ஆதரிக்கும் நேரடியான அல்லது மறைமுகமான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று மத்திய மந்திரி அன்புமணி தெரிவித்தார்.
வணிக வரி ரூ.98 கோடி தள்ளுபடி!: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: நலிந்த வணிகர்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய நிலுவை வரித்தொகையான ரூ.98 கோடியே 71 லட்சம் தள்ளுபடியாகிறது. இதற்காக தனி அரசாணை ஒன்று விரைவில் பிறப்பிக்கப்படுகிறது.
காஸ் விவகாரம்: பதவி விலக வேண்டிய அவசியமில்லை - டி.ஆர்.பாலு
டெல்லி: குடும்ப உறுப்பினர்களுக்காக பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் தான் பேசியதில் தவறு ஏதும் இல்லை என்றும் தவறே செய்யாதபோது ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் தனக்கு இல்லை என்றும் செய்யவும் மாட்டேன் என்றும் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு திட்டவட்டமாக தெரிவித்தார்.
நஷ்டஈடு அளிக்க 18 வருடங்கள் இழுத்தடிப்பு!:
தமிழக அரசை எதிர்த்து நீதிமன்றத்தினுள் விவசாயிகள் கோஷம்
சென்னை: தமிழக அரசின் மெத்தனத்தைக் கண்டித்து விவசாயிகள் எழுப்பிய கோஷத்தால் திருவள்ளுர் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.