Posted on Monday 31 March 2008
பெங்களூரு…
தமிழர்கள் திருப்பித் தாக்கினால்?: தமிழ்ச் சங்கத் தலைவர் கேள்வி
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
பெங்களூரு…
தமிழர்கள் திருப்பித் தாக்கினால்?: தமிழ்ச் சங்கத் தலைவர் கேள்வி
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
ஒகேனக்’கல்’! பொறுமைக்கும் எல்லை உண்டு: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை: ’பஸ்களை அல்ல, எங்களது எலும்புகளை உடைத்தாலும் சரி. நாங்கள் அதற்காக கவலைப்படப் போவதில்லை. நிச்சயமாக ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்’ என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் ஆயுதக்காடு! - ஜெ., குற்றச்சாட்டு
சென்னை: ‘சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வரே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனது மகனுக்கு உதவி செய்வதால் தான் தீவிரவாதிகள் தமிழ்நாட்டை தங்களுடைய புகலிடமாக கருதுகிறார்கள்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
2011இல் ஆட்சி…உடனே மதுவிலக்கு!: ராமதாஸ்
சென்னை: ‘2011இல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைப்போம். ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்காகத்தான் இருக்கும்’ என்று தெளிவாக சொல்கிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
தமிழகத்தில் மது விலக்கு?- ராமதாசுக்கு கருணாநிதி சூடான பதில்!
சென்னை: ‘மதுவிலக்கு ஆவணத்தில் கையெழுத்து போடும் வாய்ப்பு பா.ம.க.விற்கே கிடைக்கட்டும் என்றுதான் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்கிறோம். அவர்களே ஆட்சிக்கு வந்து…
யோகம் இருந்தால் யோகா கிடைக்கும்!: சட்டமன்ற உறுப்பினர்களிடம் தங்கம் தென்னரசு தமாஷ்
சென்னை: ‘அடுத்தக் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாய பாடமாக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை…
நிறைவேறியது விக்ரமின் ‘மணி’ யான ஆசை!
சென்னை: நடிகர் விக்ரமின் நீண்டநாள் கனவு இப்போது ஈடேறிவிட்டது. அது…
* தோணி… இந்திய கிரிக்கெட்டின் ரஜினி!: முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பாராட்டு.
கோவையில் சர்வதேச பல்கலைக் கழகம்!
மத்திய பல்கலை, ஐ.ஐ.எம்.,மும் தமிழகத்திற்கு வருகிறது
டெல்லி: நாடு முழுவதும், புதிதாக எட்டு ஐ.ஐ.டி.,க்களும், ஏழு ஐ.ஐ.எம்.,களும், உலகத்தரம் வாய்ந்த 14 பல்கலைக் கழகங்களும், 16 மத்திய பல்கலைக் கழகங்களும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக தொகுதிகள் மறுசீரமைப்பு ஆய்வு: ஜூலைக்குள் புதிய வாக்காளர் பட்டியல்!
-தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், புதிய தொகுதிகளை தேர்தல் கமிஷன் இறுதி செய்துள்ளது.அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்படும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல்:விபரீதத்தை விலை கொடுத்து வாங்கவேண்டாம்! எடியூரப்பாவிற்கு வைகோ எச்சரிக்கை
சென்னை: மாநில எல்லையைத் தாண்டி வந்து, கோஷமிட்டு வீபரீதத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என கர்நாடக பா.ஜ.க. தலைவரான எடியூரப்பாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ.
சொத்து வரி… மக்கள் மீது நிதிச்சுமையை ஏற்றவேண்டாம்!-ஜெயலலிதா
சென்னை: ‘சொத்து வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும். மக்கள் மீது நிதிச் சுமையை ஏற்ற வேண்டாம்’ என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சர்க்காருக்குத் தயங்கி அரசாங்கத்திற்கு மாறிய கேப்டன்!
சென்னை: ‘அரசாங்கம் திரைப்படத்தில் அரசியல் கிடையாது. எனது கட்சியின் பெயரோ, கொடியோ படத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அடுத்து நான் நடிக்கும் எங்கள் ஆசான் படத்தில் நிச்சயம் அரசியல் இருக்கும்’ என்கிறார் கேப்டன்.
பி.ராஜேந்திரன் ஓய்வு: தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. கே.பி.ஜெயின்
சென்னை: தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த ராஜேந்திரன் ஓய்வு பெறுவதையொட்டி புதிய இயக்குனராக கே.பி.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் மத்திய பல்கலைக்கழகம்: காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மகிழ்ச்சி!
சென்னை: ‘கோவையில் உலகத்தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகம் அமைய இருப்பதால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகத் திகழும்’ என தனது வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி.
சொத்து வரி உயர்வு… ஜெயலலிதாவிற்கு முதல்வர் கருணாநிதி பதில்!
சென்னை: ‘இன்றைக்கு சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று அறிக்கை விடுகின்ற இதே ஜெயலலிதா தான், அவரது ஆட்சிக் காலத்தில் 200 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தி கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தவர்!’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
* ஒகேனக்கல் பிரச்னையில் போராட்டம் தேவையில்லை: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி.
முத்துராமலிங்கத்தை மிரட்டவேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை: ஜெயலலிதா புகாருக்கு டி.ஜி.பி. மறுப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான முத்துராமலிங்கம் மிரட்டப்படுகிறார், காவல்துறையினர் பொய் வழக்குப் போடுகின்றனர் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவதில் உண்மை இல்லை என்று தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா மகளுக்கு மலேசிய மணமகன். செப்-1இல் திருமணம்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகள் ஜனனிக்கும் மலேசியாவைச்சேர்ந்த ராஜ்குமாருக்கும் சென்னையில் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கிளாமராக நடிக்க சிம்ரன் தயார்!
சென்னை: ‘இன்றைக்கும் நான் கிளாமர் குயின்தான்.கிளாமராக நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை’ என்கிறார் தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் முன்னாள் கனவுக்கன்னி சிம்ரன்.
‘பிரபாகரனு’க்கு தடை!: திருமா, சீமான் வேண்டுகோள்
சென்னை: ‘இலங்கைத் தமிழர்களை இழிவாக சித்திரித்து எடுக்கப்பட்டுள்ள பிரபாகரன் படத்தை வெளியிட அனுமதி தரக்கூடாது’ என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குநர் சீமான், நடிகர் சத்யராஜ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைப் பிரச்னை-தமிழக அரசு விழித்து கொள்ள வேண்டும்!-ராமதாஸ் அறிவுரை
சென்னை: ‘இலங்கைப் பிரச்னையை தீர்ப்பதற்கான நேரம் வந்து விட்டது. முதல்வர் கருணாநிதி இதை நழுவவிடக்கூடாது. அதற்காக எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயார்’ என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
சட்டசபையில் அ.தி.மு.க., தி.மு.க., காரசார விவாதம்
சென்னை: நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விற்கும் பல்வேறு விஷயங்களில் காரசார விவாதம் ஏற்பட்டது.
* சென்னை கிரிக்கெட்…தென் ஆப்ரிக்காவை புரட்டி எடுத்த இந்தியப் புயல் சேவாக்- 309 அவுட்டில்லை! லாராவின் சாதனையை முறியடிப்பாரா நாளை?
உலகம் சுற்றும் வாலிபன் கேள்விப்பட்டிருக்கிறோம். வாலிபன் சுற்றும் உலகம்? ஏ.ஆர். லலிதசாமி என்பவர் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., அசோகன் உள்பட பழைய நடிகர்களின் சாயலில் உள்ள பலரையும் தேடிக்கண்டுபிடித்து நடிக்க வைத்திருக்கிறார் இந்தப் புதிய இயக்குநர். பாட்டில் கூட பழைய சாயல் அடிக்குமாம். வாலி எழுதியுள்ள ‘ராமாவரத்தின் தோட்டம் அது, வண்ண மலர்களின் ரோஜா கூட்டம் இது’ என்கிற பாட்டும் எம்.ஜி.ஆர். நடித்த முப்பது திரைப்பட பாடல்களின் தலைப்பை வைத்தே ஒரு பாடலை எழுதியிருக்கிறாராம் வார்த்தை வித்தகர் வாலி.

மருத்துவக் கருவிகளை விநியோகிக்கும் குருவி ஒன்று தமிழ்த் திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறது. பெயர் மாதவி ஷர்மா. பொறியியல் பட்டதாரியான இவர் அழகப்பன்.சி.இயக்கி விரைவில் வெளிவர உள்ள குழந்தைகளுக்கான திரைப்படமான வண்ணத்துபபூச்சியில் அறிமுகமாகி உள்ளார். அதுவும் ஒரு குழந்தையின் இளம் தாயாக. ஐம்பதிற்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கும் மாதவி ஷர்மாவிற்கு ப்ளாக் இந்திப்படத்தில் ராணி முகர்ஜி நடித்ததுப் போன்ற வேடங்களில் நடிக்க ஆசையாம்.

விஷால் நடிக்கும் சத்யம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஒரே ஒரு பாடல்காட்சி மட்டும் தான் பாக்கியாம். அதற்காக விஷாலையும் நயன்தாராவையும் அழைத்துக்கொண்டு விரைவில் துருக்கி நாட்டிற்கு பறக்க இருக்கிறார் இயக்குநர் ராஜசேகர். சத்யத்தை முடித்துவிட்டு ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் விஷால்.

புதிதாக திரைப்படத் தயாரிப்பில் இறங்கியிருக்கும் ஆனந்த விகடன் குழுமம் தயாரிக்கும் சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக புதுமுகம் அனுயா நடிக்கிறார். இவர் புனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். இந்தத் திரைப்படத்தை இயக்கும் எம்.ராஜேஷும் புதியவரே.

த்ரிஷா த்ரிஷாதான். தமிழில் குருவி, அபியும் நானும், தெலுங்கில் புஜ்ஜகாரு மேட் இன் சென்னை ஆகிய திரைப்படங்களை முடித்ததும் நான்கு பெரிய பட்ஜெட் திரைப்படங்களை ஒப்புக்கொள்ளப் போகிறார். கமல் நடிக்கும் மர்மயோகிக்கும் த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம்.

ஐஸ்வர்யா ராய் தனது சுயசரிதையை எழுது தயாராகிவிட்டார்.தினசரி டைரி எழுதும் பழக்கமுள்ள ஐஸ்வர்யாராய் அன்றன்றுநடந்ததை ஒன்று விடாமல் எழுதிவிடுவாராம். அப்படிஎழுதிக் குவிக்கப்பட்டிருந்த டைரிகளைப் பார்த்த சில நண்பர்கள் அவருடைய சுயசரிதையை எழுதஆசை தெரிவித்திருக்கிறார்கள்ஆனால் தானே எழுதினால் என்ன என்று நினைத்த ஐஸ் தன்னுடைய எழுத்தாளர் தாயிடம் விஷயத்தை சொல்லி இருக்கிறார். சரி எழுது ஆனால் உண்மைகள் எல்லாத்தையும் போட்டு உடைச்சிடாதே என்று அறிவுரை செய்திருக்கிறார். அப்ப பயசரிதைன்னு சொல்லுங்க.